Tuesday, October 9, 2012

தோஷம் நீங்கியதா இல்லை இழி நிலை நீங்கியதா? மாற்றத்தின் மர்மம் என்ன கலைஞரே?





தமிழகத்தின் இழி நிலை நீங்கும் வரை கறுப்புச்சட்டைதான்
அணிந்து கொள்வேன் என்று சபதமேற்ற தமிழினக் காவலர்
மீண்டும் வெள்ளைச்சட்டைக்கே மாறி விட்டார்.

மஞ்சள் துண்டும் திரும்பி விட்டதா என்று நான் படித்த
பத்திரிக்கைகள் சொல்லவில்லை. விபரம் தெரிந்தவர்கள்
சொல்லுங்களேன்.

ஐந்தே நாட்களில் உங்கள் முடிவு மாறிப்போன மர்மம்
என்ன கலைஞரே?

தமிழகத்தின் இழிநிலை நீங்கி விட்டதா?
தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டதா?
அல்லது ஜோசியர் சொன்னதே ஐந்து நாட்களுக்கான
பிராயச்சித்தம்தானா?

பாவம், திமுக தொண்டர்கள்....

ஒரு சட்டை நிறம் விஷயத்திலேயே அவர்கள் தலைவர்
இப்படி தடுமாறுகிறார். மற்ற பிரச்சினைகளிலோ அல்லது
சகோதர யுத்த்ததிலோ மட்டும் எப்படி உறுதியான
முடிவெடுக்கப் போகின்றார்?

 

1 comment:

  1. அவரின் நடவடிக்கைகள் எல்லாம் யாரும் இப்பொழுது மதிப்பதில்லை. பகுத்தறிவுப்போர்வையில் மறையும் ஆன்மீகப் பசு அவர்.

    ReplyDelete