Tuesday, October 9, 2012

கொலைக் களமாய் மாறிப் போன வாஜ்பாய் கனவு





தேசிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளில் ஒன்றாக,  ஒளிரும் இந்தியாவிற்கான  அடையாளமாக மிக அதிகமான அளவில் விளம்பரப் படுத்தப்பட்டது தங்க நாற்கர சாலைத் திட்டம். வாஜ்பாய் அதை தனது சிறு வயது கனவு என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொண்ட காலம் உண்டு.

எந்த ஒரு தேசத்திற்கும் சாலை வசதிகள் என்பது மிகவும் முக்கியமான கட்டமைப்புத் தேவை. அந்த விதத்தில் தங்க நாற்கர சாலை என்பது பயனுள்ளதுதான்.  ஆனால் அதை முறையாக பயன்படுத்துபவர்களாக வாகன ஓட்டிகள் உள்ளனரா? தேவையான கட்டுப்பாடுகள் உள்ளதா? என்பதுதான் கேள்வி.

மற்ற இடங்களில் எப்படி என்று தெரியாது. வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சென்னை – பெங்களூர் தங்க நாற்கர சாலை அதிகமான விபத்துக்கள் நடைபெறும் பகுதியாக ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கிறது.

அதி வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் சாலையைக் கடப்பவர்கள் பற்றி கவலைப் படுவதே கிடையாது. பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடம் என்பது தெளிவான முறையில் எச்சரிக்கப்படவில்லை. எச்சரிக்கை பலகை இருந்தாலும் அதனை கவனிக்க முடியாத வேகத்தில்தான் கார்கள் விரைகின்றன.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் போதுதான் எவ்வளவு வேகமாக வண்டிகள் செல்கின்றன என்பதை உணர முடியும். விஷ்க் என்ற ஒலியோடு நம்மைக் கடக்கும் வண்டி ஒரு சில வினாடிகளில் தூரத்தில் ஒரு புள்ளியாகி மறைந்து விடும்.

அதி நவீன, அதி வேக கார்கள் வந்த பின்பு, மிதமான வேகத்தில் செல்வது என்பதே கௌரவக் குறைச்சலாகி விட்டது. நேற்று முன் தினம் வேலூர் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மேம்பாலத்தில் வேகமாக கடந்த கார் ஒன்று முன் சென்ற பைக் மீது மோத பைக்கில் பயணித்தவர்கள் மேம்பாலத்திலிருந்து அப்படியே கவிழ்ந்து விழுந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணமடைந்தார்.

இது தொடர்கதையாகி விட்டது.

வேகக் கட்டுப்பாடு நிர்ணயிப்பது,
அதை முறையாக கண்காணிப்பது,
மீறுபவர்கள் மீது டிரைவிங் லைசன்ஸை ரத்து செய்வது உள்ளிட்ட
நடவடிக்கைகளை எடுப்பது

ஆகியவை மட்டுமே தங்க நாற்கர சாலை விபத்துக்களை குறைக்க வழி வகுக்கும்.

இதை அரசு செய்யுமா?


2 comments:

  1. THESE ROADS ARE CALLED EXPRESS HIGHWAY. FOR THAT SPEED AND FAST ONLY THEY PAY MORE TOLLGATE TAX. BUT, THE PITY IS THE VILLAGE PEOPLE WHO NEVER CARE ABOUT THE TRAFFIC. TO AVOID THESE ACCIDENTS, SUFFICIENT SUB WAYS IN EVERY 2 KMS, MORE BRIDGES ARE THE REMEDIES. FROM CHENNAI TO TRICHY THE HIGHEST RATE OF DEATH BY ACCIDENTS OCCUR.

    ReplyDelete