Wednesday, October 24, 2012

பாவம் தா.பா! அம்மா இன்னும் எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தப் போறாங்களோ?

நேற்றா, இன்றா என்று நினைவில் இல்லை, தொலைக்காட்சி
சேனல்களை மாற்றிக் கொண்டு வந்த போது பார்த்தால்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
தோழர் தா.பாண்டியன் ஜெயா டி.வி யில் பட்டிமன்ற 
நடுவராக அமர்ந்து கொண்டிருந்தார்.

ஒரு இடதுசாரிக் கட்சித் தலைவரின் சரிவை பார்க்க
விருப்பமில்லாததால் அணைத்து விட்டேன். நேர்மையற்ற
ஒரு மனிதன் சொல்வதை எதற்குக் கேட்பது என்பதும்
ஒரு காரணம்.

ஒரு எம்.பி பதவிக்காக  இவ்வளவு மோசமாக,
அதிமுக அடிமைகளை விட பணிவாக தா.பா
மாறி விட்டார். 

அடுத்து என்ன வேலை கொடுத்து அம்மா அவரை
அசிங்கப் படுத்தப் போகின்றாரோ?

அதையும் அவர் வெட்கமில்லாமல் செய்வார் என்பது
வேறு விஷயம்.

பின் குறிப்பு : தா.பா விற்கு வக்காலத்து வாங்கி சி.மகேந்திரன்
ஜூனியர் விகடனிலும் குமுதம் ரிப்போர்ட்டரிலும்
புலம்பியுள்ளார். 

இவர்களின் யோக்கியதை பற்றி நேரம் கிடைக்கும் போது
அடுத்த பதிவில் எழுதுகிறேன்
 
 

2 comments:

  1. உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன்....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது உண்மை. தா.பா நாட்டில் நடக்கும் அநீதிகளை சுட்டி காட்டாமல் இப்படி துதி பாடி இருப்பது மிகவும் சங்கடமான விஷயம்.
    பேசாமல் அதிமுக வில் சேர்ந்து விடலாம்.

    ReplyDelete