Monday, September 12, 2011

யானை, யானை, எங்கெங்கும் யானை











சென்ற வாரம்  டெல்லி போயிருந்தேன்.  டெல்லியின் 
எல்லையும் உத்திரப் பிரதேசப் பகுதியுமான 
நோய்டாவில் தங்கியிருந்தேன். 


அங்கே மாயாவதி கட்டி வரும் பிரம்மாண்ட 
பூங்காவை  வெளியிலிருந்து பார்க்க 
நேர்ந்தது.  


685  கோடி ரூபாய் மதிப்பில் அண்ணல் 
அம்பேத்கார் பெயரில் கட்டி வரும்
அப்பூங்காவில்  எங்கெங்கு நோக்கினும் 
யானை, யானை, யானை சிலைகள்தான்.


நுழைவாயிலில் யானை , ஸ்தூபிகளில்
யானை , நீரூற்றுக்களில்  யானை
என எங்கே பார்த்தாலும் யானைகள்தான் 
அம்பேத்கர் பெயரில் பூங்கா எனச்
சொல்லி அதிலே தனது தேர்தல் 
சின்னத்தை  பிரபலப்படுத்தும் 
சாமர்த்தியசாலி மாயாவதி. 

மக்கள் பணத்தில் இப்படியெல்லாம்
சுயநலமாக  நடக்கும் அரசியல்வாதிகளை
என்ன செய்யலாம்?  

1 comment: