Saturday, December 17, 2022

பாகிஸ்தான் இல்லையென்றால் தேஷ் பக்தாள் ?????

 


பார்வையற்றவர்களுக்கான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் பார்வையற்றோர் அணிக்கு மட்டும் விசா கொடுக்க இந்திய உள்துறை அமைச்சகம் மறுத்து விட்டது. 

பாகிஸ்தான் அணியை ஆட அனுமதிக்க மாட்டோம் என்பதெல்லாம் அராஜகமன்றி வேறில்லை.

நிற்க

50 ஓவர் உலகக் கோப்பை அடுத்த வருடம் இந்தியாவில்தான் நடக்க உள்ளதாமே! அப்போதும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அனுமதிக்க மாட்டார்களா?

பாகிஸ்தான் இந்தியா அணிகள் மோதாவிட்டால் நம் சங்கிகள் எப்படி தங்கள் தேஷ் பக்தியை வெளிப்படுத்துவார்கள்?  அதற்காகவாவது அனுமதி கொடுங்களேன்

அப்புறம் அமித்ஷா மகனே, தம்பி ஜெய்ஷா, பாகிஸ்தான் இந்தியா மோதினாதானே கிரிக்கெட் வாரியத்துக்கு துட்டு கோடி கோடியா கொட்டும்! அப்படி கொட்டினாதானே நீயும் கல்லா கட்ட முடியும்!  பாகிஸ்தான் வரலைன்னா நமக்குதான் நைனா நஷ்டம்னு சொல்ல மாட்டியா! இல்லை மோடிக்கு செய்யற அளவுக்கு கவனிப்பை அதானி உங்களுக்கும் செய்யறாரா!

No comments:

Post a Comment