தினமலரின்
ஜால்ரா முடியல
கீழே
உள்ள தின மலர் செய்தியை ஒரு தோழர் மெனக்கெட்டு கொண்டு வந்து கொடுத்தார். எதுக்கு என்னை
டென்ஷன் செய்கிறாய் என்று கேட்டதற்கு நீங்க எழுத மேட்டர் கொடுத்திருக்கேன் என்றார்.
ஒரு
பிரதமராக உருப்படியாக எதையும் செய்ய துப்பில்லாத மோடி, மாறு வேடப் போட்டியில் கலந்து
கொள்வது போல விதம் விதமாக ஆடைகள் மட்டும் அணிந்து கொள்வார்.
அவர்
அணியும் ஆடைகள் எதுவும் எளிமையானது கிடையாது. இயல்பானது கிடையாது. யாருக்கோ வாழ்வு
வந்தால் அர்த்தராத்தியில் குடை பிடிப்பார்கள் என்று சொல்வார்களே, அந்த ரகம் இதெல்லாம்.
அந்த
அற்பத்தனத்தின் உச்சம்தான் அவர் பெயர் பொறிக்கப்பட்ட பத்து லட்ச ரூபாய் கோட்டை ஒபாமா
வந்த போது அணிந்தது. நாட்டில் உள்ள அனைவரும் கழுவி கழுவி ஊற்றிய பின்பு அந்த ஆடையை
ஏலம் போட்டார்கள்.
ஒரே
நாளில் நாலு முறை, ஐந்து முறை என்று உடை மாற்றுவதெல்லாம்
கொழுப்பன்றி வேறில்லை, அல்லது மோடிக்கு ஏதாவது தோல் வியாதி இருந்து பக்கத்தில் உள்ளவர்
மூக்கை சுளிப்பார்கள் என்பது காரணமாக இருக்கலாம்.
அப்படி
இருக்கையில் “உங்களில் ஒருவன் – உடை வழி உணர்த்தும்
பிரதமர்” என்றெல்லாம் தலைப்பு கொடுத்திருப்பதெல்லாம் தினமலரின் வழக்கமான அயோக்கியத்தனம்.
நியாயப்படிப்
பார்த்தால் மேலே உள்ள படத்தில் வடிவேலு கேட்பது போன்ற கேள்வியைத்தான் தின மலர் கேட்டிருக்க
வேண்டும்.
No comments:
Post a Comment