Saturday, March 21, 2026

நிலமே நடுங்கிப் போச்சு டாக்டரய்யா

 


நேற்று தமிழ்நாடு முழுதிலும் சிறிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தீர்களா?

ஆமாம்.

நான் கூட நடுங்கிப் போய் விட்டேன்.

காரணம் தெரியுமா?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

இதோ பாருங்கள்


இந்த தேர்தலின் முதல் காமெடி இது.

இன்னும் என்னென்ன வருமோ? ஆட்டுக்காரன் தயவு செய்தால் நிறைய காமெடி கிடைக்கும். 

Friday, March 20, 2026

பிரதமர்-ஜனாதிபதி. தூரத்திற்கான காரணம் என்ன?

 


இறையாண்மை கொண்ட சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசான இந்தியாவின் ஜனாதிபதி நேற்று அயோத்தி சென்று அங்கே ராமர் கோயிலில் வழிபட்டு, அதற்கான வாய்ப்பு கிடைத்தது தன் வாழ்நாள் பாக்கியம் என்று சொன்னதாக இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்தேன்.

ஜனாதிபதி கோயிலில் வழிபடும் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா என்று இணையத்தில் பார்த்தேன். குடியரசுத்தலைவரின் ட்விட்டர் பக்கத்திலேயே பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த புகைப்படம் கீழே


மனதுக்குள் ஏதோ மணி அடித்தது.

கோயில் திறப்பு விழா புகைப்படங்களை தேடினேன்.




மோடியும் ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் மோகன் பகவத்தும் எங்கே நிற்கிறார்கள் பாருங்கள்.

ஜனாதிபதி எங்கே நிறுத்தப்பட்டுள்ளார் என்று பாருங்கள். 

மோடி பிரதமர், மோகன் பகவத் எந்த அரச பதவியிலும் இல்லாதவர். அவர்கள் ராம் லல்லா விக்கிரகத்தின் அருகாமையில் நிற்க இந்தியாவின் முதல் குடிமகளான ஜனாதிபதி சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவர் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு மட்டுமல்ல, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவிற்குக் கூட அழைக்கப் படவில்லை.

காரணம் அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்.

அதனால்தான் சனாதனம் அவரை தூரத்தில் நிறுத்தி வைத்தது. 

Thursday, March 19, 2026

தவெக தொண்டர்களும் செந்தில் காமெடியும்

 


தற்போது தவெகவில் வாயை விற்றுக் கொண்டிருக்கிற நாஞ்சில் சம்பத் (ஆமாம், இங்கே இன்னோவா கார் கொடுத்தாங்களா?) தவெக தொண்டர்களின் செயல்திறன் (!) பற்றி வர்ணித்ததை படித்ததும் "நட்புக்காக" படத்தில் மலையை தூக்குவேன் என்று சொல்லி வசூல் செய்து பின்பு என் கையில் தூக்கி வையுங்கள், தூக்குவேன் என்று சொல்லி அடி வாங்குவார். அப்படி அடி வாங்குபவரை காப்பாற்றுகிற சாமியர் கே.எஸ்.ரவிகுமாரிடம் சொல்லும் வசனம்தான் நினைவுக்க்கு வந்தது. 


இதைக் கேட்டு உசுப்பேறி தவெக தற்குறிகள் மின்னலை பிடிக்க உலகம் சுற்றும் வாலிபன் முருகன் போல முயற்சித்தோ, மின்சார வயரைப் பிடித்தோ கருகிப் போகக்கூடாது என்பதுதான் என் விருப்பம். 

Wednesday, March 18, 2026

நிஜத்தில் அப்படியில்லையே நிர்மலா அம்மையாரே!

 


இன்சூரன்ஸ் துறை சம்பந்தமாக நேற்று நிர்மலா அம்மையார் மாநிலங்களவையில் பேசியிருக்கிறார். அதை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இன்சூரன்ஸ் ஒழுங்காற்று வளர்ச்சி ஆணையம் (IRDA) மிகவும் கறாராக பொதுத்துறை, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை கண்காணித்து பாலிசிதாரர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும்  தவறிழைக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மீது அபராதம் விதித்துள்ளதாகவும் சொல்லியுள்ளார்.


ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்.டி,ஃஎப்சி இன்சூரன்ஸ் ஆகியவைக்கு தலா இரண்டு கோடி ரூபாயும்  ராயல் சுந்தரம், எஸ்.பி.ஐ லைப் ஆகிய கம்பெனிகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது அமைச்சரின் அறிக்கை.

எல்.ஐ.சி யின் மீதோ, மற்ற நான்கு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் கம்பெனிகள் மீதோ அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதை மட்டும் அமைச்சர் ஏனோ சொல்லவில்லை. அதெப்படி பொதுத்துறையை அவரால் பாராட்ட முடியும்!

இதை படிக்கையில் ஐ.ஆர்.டி.ஏ ஏதோ சுத்த சுயம்பிரகாச நியாயவான் போல தோன்றும். ஆனால் உண்மை நிலவரம் வேறு.

இந்த அபராதம் எல்லாம் வேறு வழியில்லாமல், ஏராளமான புகார்கள் வந்து,  ஆம்புட்ஸ்மேன்,  நீதிமன்றம் குட்டி விதிக்கப்பட்டவை.

உன்மையின் ஐ.ஆர்.டி.ஏ எல்.ஐ.சி, பொதுத்துறை  பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ஒழுங்காற்று வாரியமாக, தனியார் கம்பெனிகளுக்கு வளர்ச்சி ஆணையமாக செயல்பட்டு வருகிறது.

எல்.ஐ.சி முகவர்களை தனியார் கம்பெனிகளுக்கு மடை மாற்றி விடக்கூடிய விதத்தில் இன்சூரன்ஸ் சட்டங்களில்  மாற்றம்,

எல்.ஐ.சி புதிய பாலிசிகளுக்கு அனுமதி கேட்கையில் இழுத்தடிப்பது, தனியார் கம்பெனிகளுக்கு சிவப்பு கம்பள மரியாதை கொடுப்பது,

முகவர்களின் கமிஷன் விகிதத்தை குறைத்து வணிகத்தை முடக்க முயல்வது (எல்.ஐ.சி யின் வணிகத்தில் 90 % முகவர்கள் மூலம் வருகிறது. தனியார் கம்பெனிகளில் 10 % வணிகம்தான் முகவர் மூலம் வருகிறது) 

ஐ.ஆர்.டி.ஏ அடிப்படையில் பொதுத்துறைக்கு வில்லன். அதற்கு மாறான ஒரு சித்திரத்தை நிர்மலா அம்மையார் கொடுத்துள்ளார்.

இந்த டுபாக்கூர் வேலைகள்தான் மோடி அரசின் அடையாளம். 

அசிங்கமா போயிடுச்சே ஜெயமோகன்

 


இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அகிலனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக் கடுமையாக எழுதினார். அகிலன் இன்று எவர் என்று தெரியாத நிலை. சு.ராவின் அக்கட்டுரை இன்றும் வாசிக்கப்படும் ஒரு ‘கிளாஸிக்’. சு.ரா சொன்னார் “ஜிப்பா தேசிய உடை ஆக்கப்படுவதை பிக்பாக்கெட்டுகள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது சோட்டா எழுத்தாளர்கள் கொண்டாடியது”. அந்த பிக்பாக்கெட்டுகளின் பெயர்களை இன்று தமிழ் விக்கியில்தான் தேடவேண்டும்.

இது ஓர் எழுத்தாளர் விருது பெறுவதற்கு எதிரான கண்டனம் அல்ல. இது அந்த ஓர் எழுத்தாளர் சார்ந்த விஷயமும் அல்ல. இந்த விருதோ, அந்த எழுத்தாளரோ எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

அகிலனுக்கு கிடைத்த ஞானபீடம் தமிழை சிறுமை செய்தது. ஐம்பதாண்டுகளாக தமிழ் இலக்கியத்தை எந்த இலக்கிய மேடையிலும் உரிய இடம் இல்லாததாக ஆக்கியது. அகிலன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்றால் மற்றவர்களின் எழுத்தை பொருட்படுத்தவேண்டியதில்லை என்று இந்தியா முடிவு செய்தது.

மேலே உள்ளது ஜெயமோகன் எழுதிய பதிவு. ஞானபீட விருது அகிலனுக்கு கொடுக்கப்பட்டதை ஜெயமோகனும் அவர் ஆசான் சுந்தர ராமசாமியும் கடுமையாக எதிர்த்தார்கள் என்பதையும் அகிலனை ஒரு எழுத்தாளராகவே ஜெமோ மதிக்கவில்லை என்பதையும் அந்த பதிவு சொல்கிறது.

ஜெயமோகன் எப்பேற்பட்ட பொய்யன், சந்தர்ப்பவாதி என்பதை எழுத்தாளரும் திரைக் கலைஞருமான தோழர் கவிதா பாரதி எழுதிய பதிவு லட்சமாவது முறையாக அம்பலப்படுத்துகிறது.

இதோ அந்த பதிவு

அகிலனுக்கு வழங்கப்பட்ட ஞானபீட விருது அரை நூற்றாண்டு காலம் தமிழ் நவீன இலக்கியத்தை இந்திய இலக்கிய சூழலில் மறைத்தது.
-இவ்வாறு ஒரு கோடி ரூபாய்
பம்பர் இலக்கியப் பரிசு அறிவிப்பில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்
சுவாரசியமானதொரு பிளாஷ்பேக் இதோ..
1990-ல் அகிலன் நினைவு நாவல்போட்டியினை அகிலன் அறக்கட்டளை நடத்தியது..

பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பினர்.. ரப்பர் என்னும் தனது நாவலின் கையெழுத்துப்பிரதியை ஜெயமோகனும் அனுப்பினார்

அதில் முதல் பரிசு பெற்றது ரப்பர்.. ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டு, அகிலன் நினைவு நாவல் போட்டியில் பரிசு பெற்றது என்னும் குறிப்போடு அகிலனின் மகன் அகிலன் கண்ணன் தனது தாகம் பதிப்பகத்தின் சார்பில் அந்த நாவலை வெளியிட்டார்.. அதுதான் ஜெயமோகனின் முதல் நாவல்..





தரமான இலக்கியத்துக்கு
ஒரு கோடி ரூபாய் பரிசறிவிக்கும்
ஜெயமோகனின் இலக்கிய அடையாளம், அவரது அளவுகோல்படி
'தரமற்ற எழுத்தாளர்' அகிலன் நினைவாக வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபாய் மூலமாகத்தான் வெளிப்பட்டது..

இதற்கெல்லாம் ஜெமோ அசந்து விடுவாரா என்ன? அவருடைய முழக்கமே "துப்பினால் துடைச்சுப்பேன்" என்பதுதானே!


Tuesday, March 17, 2026

முன்னாள் மந்திரி சண்முகத்தை விரட்டி அடியுங்கள்

 


இருபத்தி நான்கு  மணி நேரமும் போதையில் இருக்கிறாரா என்ற சந்தேகம் அதிமுகவின் முன்னாள் மந்திரி திண்டிவனம் சி.வி.சண்முகம் பேசுவதை கேட்கும் போதெல்லாம் வரும்.

சந்தேகமே தேவையில்லை. அவர் எப்போதும் அப்படித்தான் என்பதை அந்த ஜந்துவின் இன்றைய பேச்சு நிரூபித்துள்ளது.


இப்படிப்பட்ட கேவலமான ஜென்மங்கள் அமைச்சராக இருந்தது, எம்.எல்.ஏ ஆக இருப்பதெல்லாம் தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய அசிங்கம்.

தமிழ்நாட்டை விட்டு துரத்த வேண்டும். வேண்டுமானால் பாலியல் குற்றங்களின் சொர்க்கமான உத்திரப்பிரதேசத்திற்கு செல்லட்டும்.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் அந்த ஆள் பேசியது :பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்பதை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில்.

இது போன்ற ஜந்துக்கள் இருக்கும் வரை எப்படி பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் !

பாலியல் ஜல்சா கட்சியின் கூட்டாளி வேறெப்படி பேசுவார்!

வேடிக்கைக்காக தாக்குவாராம் மெண்டல் ட்ரம்ப்

 


நேற்றைய ஆங்கில இந்து இதழின் முதல் பக்க செய்தி கீழே . . .


இஸ்ரேல் புதிய தாக்குதல்களை தொடுத்துள்ளதால் இரான் மீதான போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் தனக்கில்லை என்று சொல்லியுள்ள டொனால்ட் ட்ரம்ப், இரானிற்கு பேச்சு வார்த்தை மேஜைக்கு வரும்  எண்ணம் இருந்தால் கூட நாங்கள் வேடிக்கைக்காக இரானின் "கார்க்" தீவின் மீது குண்டுகள் போடுவோம் என்று சொல்கிறார்.

சும்மா வேடிக்கைக்காக குண்டு போடுவோம் என்று சொல்கிற ஆளை "முற்றிப் போன பைத்தியக்காரன்" என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது!

பைத்தியக்காரனின் சினேகிதன்/அடிமை/எஜமான் மட்டும் நல்ல மன நிலை கொண்டவராகவா இருக்க முடியும்?

நான் இஸ்ரேலின் நெதன்யாஹூ வை சொல்கிறேன். 

நீங்கள் யாரை நினைத்தீர்கள்? 

Monday, March 16, 2026

பெருமையும் நிறைவும் அளித்த விருது

 


மோடி அரசின் கலாச்சாரத்துறையின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 2025 ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது ஒருவழியாக இன்று அறிவிக்கப்பட்டு விட்டது.

கால தாமதமானாலும் மிகச் சரியான ஒருவருக்கே இந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழின் முன்னணி எழுத்தாளரான தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு "தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்" நூலுக்காக அளிக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு சென்னை புத்தக விழாவில் வாங்கியுள்ளேன். விரைவில் படிப்பேன்.

தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர் மட்டுமல்ல, அரசியல், கலை, பண்பாடு என பல தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் அமைப்பாளர். முன்னாள் ராணுவ வீரரான அவர் அஞ்சல் தொழிற்சங்கத்தில் பொறுப்பாளராக செயல்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் ஆணி வேராக திகழும் தோழர்.

தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரப்புத்துவக் கொடுமைக்கு எதிராக நடைபெற்ற எழுச்சியை அவரது புதிய நூலான "திருப்பி அடித்த வரலாறு" சொல்லும். 

மிகச் சிறந்த சிறுகதைகளையும் பல்வேறு அர்த்தமிக்க நூல்களையும் எழுதியவர். அவரது தொழிற்சங்க அனுபவங்களை சொல்லும் "ஜிந்தாபாத், ஜிந்தாபாத்" நூல் எப்போதும் எனக்கு உணர்வூட்டும். எங்கள் வேலூர் கோட்டச்சங்க அனுபவங்களை அதன் வெள்ளி விழாவின் போது தொகுக்க எனக்கு வழிகாட்டியது அந்த நூல்தான்.

சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாத மிகச் சிறந்த மனிதர். எங்கள் சங்கத்தோடு நெருக்கமான உறவு கொண்டவர். எங்கள் கோட்டத்தின் மகளிர் மாநாடு, தொழிற்சங்க வகுப்பு ஆகியவற்றில் கலந்து கொண்டவர்.

தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


எங்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அளவில் நடைபெறும் வெண்மணி சங்கம நிகழ்வில் தோழர் தமிழ்ச்செல்வன். 



ஏலகிரியில் நடைபெற்ற எங்கள் கோட்டத்தின் தொழிற்சங்க பயிலரங்கில்  தோழர் தமிழ்ச்செல்வன்.  


பாலக்காட்டில் நடைபெற்ற தென் மண்டல பயிலரங்கில் வகுப்பெடுத்த தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகையில்.


மதுரையில் நடைபெற்ற தமிழ் மாநில மகளிர் கலை விழாவில் தோழர் தமிழ்ச்செல்வன். 

ஒரு கோடி தரப்போகும் புமா ஆஜான் ஜெமோ

 


ஞான பீட திராட்சை கிட்டாத புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகன், இன்று அதிகாலை 05 மணிக்கு முகநூலில் ஒரு பதிவு எழுதியுள்ளார்.  வைரமுத்து மீதும்  ஞானபீடம் கொடுப்பவர்கள் மீதுமான கடும் கண்டனம்தான் பதிவின் சாராம்சம்.

அந்த பதிவில் பார்த்த ஒரு காமெடி கீழே . . .

இந்த இரவு முழுக்க பெண்களின் அழைப்புகள். கண்ணீருடன், கொந்தளிப்புடன். ஏதோ தங்களுக்கு தனிப்பட்ட முறையில் அநீதி இழைக்கப்பட்டது போல. ஒரு தமிழ்ப்பெண்ணாகவே அவமானம் கொள்கிறார்கள் என்றனர். “ஏன் இந்த ஞானபீடைகளிடம் நாம் சென்று நிற்கவேண்டும்? நாம் உருவாக்குவோம் நமக்கான விருதை. அதை விட பெரிய விருதை. நான் என் நகைகளை முழுக்க தந்துவிடுகிறேன்” என்று பல பெண்கள் சொன்னார்கள். அவர்கள் கண்ணீருடன் சொன்னது ஓர் ஆணை.

அப்படி எத்தனை பெண்கள் கண்ணீரோடு அவருடன் பேசினார்கள் என்று தெரியவில்லை. ஒருவர் கூட சொல்லாமல் ஓராயிரம் பேர் சொன்னதாக கதை விடத் தெரியாதா ஆஜானுக்கு? அது ஏன் தமிழ்ப்பெண்ணாகவே அவமானம் கொள்ள வேண்டும்? அப்படியென்றால் அவர்கள் நிஜத்தில் தமிழ்ப்பெண்கள் கிடையாதா?

அடுத்து வருவது அவரது அறிவிப்பு

இதோ நாங்கள் அறிவிக்கிறோம், இந்திய வரலாற்றின் மிகப்பெரிய இலக்கிய விருது. உலக இலக்கியத்திலும் இந்திய இலக்கியத்திலும் சாதனைப் படைப்புக்கான LIVING TAMIL AWARD FOR WORLD LITERATURE . ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது டெல்லியிலும் நியூயார்க்கிலும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். விருதுத்தொகை இந்திய ரூபாயில் ஒரு கோடி. (ஏறத்தாழ ஒரு லட்சம் டாலர்)
இந்த செய்தி டெல்லியிலும், சென்னையிலும், நியூயார்க்கிலும் முறையாக அறிவிக்கப்படும்.


விருதின் பெயரைக் கூட தமிழில் வடிவமைக்க மனமில்லாத இந்த சுய மோக சங்கிதான் தமிழின் முதன்மையான எழுத்தாளர், தமிழ் இலக்கிய பாதுகாவலர் என்றால் சிரிப்பு மட்டும்தான் வருகிறது.

வருடம் தோறும் ஒரு கோடி ரூபாய் நீர், உமது கால்களில் விழுந்து கிடப்பவர்களுக்கு கொடுக்க எத்தனைப் பெண்களின் நகைகளை அறுக்கப் போகிறீர்களோ?

பிகு: ஜெமோ முக நூல் பதிவில் உள்ள இந்த வரிகளை கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அகிலனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக் கடுமையாக எழுதினார். அகிலன் இன்று எவர் என்று தெரியாத நிலை. சு.ராவின் அக்கட்டுரை இன்றும் வாசிக்கப்படும் ஒரு ‘கிளாஸிக்’. சு.ரா சொன்னார் “ஜிப்பா தேசிய உடை ஆக்கப்படுவதை பிக்பாக்கெட்டுகள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது சோட்டா எழுத்தாளர்கள் கொண்டாடியது”. அந்த பிக்பாக்கெட்டுகளின் பெயர்களை இன்று தமிழ் விக்கியில்தான் தேடவேண்டும்.
இது ஓர் எழுத்தாளர் விருது பெறுவதற்கு எதிரான கண்டனம் அல்ல. இது அந்த ஓர் எழுத்தாளர் சார்ந்த விஷயமும் அல்ல. இந்த விருதோ, அந்த எழுத்தாளரோ எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
அகிலனுக்கு கிடைத்த ஞானபீடம் தமிழை சிறுமை செய்தது. ஐம்பதாண்டுகளாக தமிழ் இலக்கியத்தை எந்த இலக்கிய மேடையிலும் உரிய இடம் இல்லாததாக ஆக்கியது. அகிலன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்றால் மற்றவர்களின் எழுத்தை பொருட்படுத்தவேண்டியதில்லை என்று இந்தியா முடிவு செய்தது.

இது தொடர்பாக எழுத்தாளரும் திரைக்கலைஞருமான தோழர் கவிதா பாரதி பகிர்ந்து கொண்ட ஒரு தகவல் ஆஜானின் தோலை உரிக்கும்.

Sunday, March 15, 2026

திராட்சை கிட்டா நரியான ஜெமோ

 


நேற்றைய பதிவில் சொன்னது போல தமிழ் இலக்கிய உலகில் பெரிய ரத்தக்களறி நடந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தால் இந்த சர்ச்சை பின்னுக்குப் போகும்.

வைரமுத்து ஞானபீடம் பெறுவதை நான் கேலிச்ச்சிரிப்புடன் பார்க்கிறேன். அதற்கான காரணங்கள்.

பல வருடங்களாக முயற்சி செய்து வாங்கப்பட்ட விருது.

இந்த விருது பெறுவதற்கான முயற்சிகளில் ஒன்றாக தருண் விஜய் என்ற பெரிய சங்கிக்கு தமிழ்நாட்டில் ரத்தினக் கம்பளம் விரித்து இறுதியில் திருவள்ளுவரின் சிலையை கறுப்பு ப்ளாஸ்டிக் பேப்பரில் சுற்றி ஹரித்வாரின் ஒரு சாக்கடை ஓரத்தில் கிடத்திய இழிவுக்கு காரணம் வைரமுத்து.

அவர் மீதான பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுக்கள். (அவர் மோசமாக நடந்து கொண்ட பின்னும் எதற்கு திருமணத்திற்கு அழைத்து காலில் விழ வேண்டும் என்ற கேள்வி சின்மயியைப் பார்த்து கேட்கப்படும்,)  ஆனால் மற்றவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கள்? 

ஜெயகாந்தன் கடைசியாக எழுதியது என்னை பாராட்டித்தான் என்றொரு நாடகம் போட அந்த கதையை ஜெயகாந்தனின் மகள் தோழர் தீபலட்சுமியே தகர்த்தெறிந்தார்.

அவரது சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. வியர்வையின் பெருமையை போற்றி எழுதுபவர் இவர். ஒரு தொலைக்காட்சி கேமரா உதவியாளரின் நெற்றி வியர்வையில் ஒரு சொட்டு இவரது சட்டையில் மைக் பொருத்துகையில் சிந்திய காரணத்தால் அவரை கன்னத்தில் அடித்து விட்டு தன் கையை டெட்டால் போட்டு கழுவிய சம்பவத்தை பல்லாண்டுகள் முன்பே பதிவு செய்துள்ளேன். 

"நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல " என்று நிர்மலா அம்மையாரை வர்ணித்ததை எல்லாம் மறந்து விட முடியவில்லை.

நான் எதிர்பார்த்தது போல மிகக் கடுமையான கண்டன இயக்கத்தை முன்னெடுத்துள்ளது புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகன்தான்.

அவரது கண்டனத்தை அப்படியே பகிர்ந்து உங்களை கொடுமை செய்ய நான் ஒன்றும் இரக்கமில்லாத கொடூரன் அல்ல.

அவரின் வெறுப்பின் பின்னணி என்பதை அவரது குண்டர் படை தளபதி போதைக்கவி லச்சூவின் பதிவு சொல்கிறது.


ஜெயமோகனின் அல்லக்கையே அவரை அற்பன் என்று விளிக்கும் நேரத்தில் ஜெமோ தன் பதிவில் தன்னை பாஜக, ஆர்.எஸ்.எஸ் அதிகார வட்டங்களுக்கு எதிரானவன் என்று சித்தரித்துக் கொள்ளும் சீன் மூலம் நம்மை சிரிக்கை வைத்து, அவரது கண்டனம், திராட்சை கிட்டா நரியின் புலம்பல் என்று அவரே நிரூபித்து விடுகிறார்.

அநேகமாக ஜெயமோகனுக்கு ஏதாவது பெரிய விருது கொடுங்கய்யா, புக்கர் விருது, மாகஸேசே விருது இப்படி ஏதாவது, இல்லையென்றால் அவரது புலம்பல் காதைகளிலிருந்து தமிழ்நாடு தப்ப முடியாது.


காந்தியைச் சொன்னவர் ஏன் நேருவை சொல்லவில்லை மோடி?

 


கீழேயுள்ள படத்தில் உள்ள ஜந்துவின் பெயர் சுதான்ஷு திரிவேதி. பாஜகவின் மூத்த ஊடகத் தொடர்பாளர், உபியிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்வான, பி.ஹெச்.டி பட்டம் பெற்றதாக சொல்லப்படும் முன்னாள் பேராசிரியர்.


எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயரும் மந்திரி பூரியின் பெயரும் இருப்பது பற்றிய கேள்விக்கு அந்த ஜந்து 

"ராஜீவ் காந்தியின் பெயர் உள்ளது, சோனியா காந்தியின் பெயர் உள்ளது, ராகுல் காந்தியின் பெயர் உள்ளது, மகாத்மா காந்தியின் பெயரும் உள்ளது" 

என்று கோபமாக பதில் சொல்கிறது. 

ஆனாலும் இந்த மகாத்மா காந்தி மிகவும் மோசமானவர். 1953 ல் எப்ஸ்டீன் பிறப்பதற்கு ஐந்தாண்டுகள் முன்பே இறந்து போய் சுதான்ஷு திரிவேதியை காமெடி பீஸாக்கி விட்டார்.

ஆனால் சுதான்ஷு திரிவேதியும் பாவம்தான்.

மகாத்மா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடைய பெயரையெல்லாம் சொன்ன அந்த ஜந்து மோடியின் பரம வைரி ஜவஹர்லால் நேருவின் பெயரை மட்டும் சொல்லவில்லை.

அது மறதியா? இல்லை திட்டமிட்டு தவிர்த்தாரா?

மோடிக்கு இந்த விஷயம் தெரிய வரும் போது திரிவேதிக்கு "ராஜ குலோத்துங்க" வை விட்டுவிட்ட வாயிற்காப்பாளருக்கு இம்சை அரசன் 23ம் புலிகேசி கொடுத்த தண்டனைதான் கிடைக்கும். 


Saturday, March 14, 2026

ஞான பீட விருதும் நம்மவர் சீனும்

 


ஏனென்று தெரியவில்லை. வைரமுத்து ஞானபீட விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்ததும் மேலே உள்ள நம்மவர் படக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. அந்த தகவல் ஜெமோவிற்கு பயனளிக்கலாம். இன்னும் கொஞ்ச நாள் இலக்கிய உலகத்தில் ரத்த ஆறு ஓடப் போகிறது. தேர்தல் நேரத்தில் இந்த விருது திமுகவிற்கு ஒரு தேவையில்லாத ஆணி. 

போரில் ட்ரம்ப் இன்று 😆😆😆😆


சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்னன் அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த காணொளி கீழே உள்ளது. கடைசி வரை கண்டிப்பாக பார்க்கவும். நாளைக்கு மோடிக்கும் இதெ நிலை வரப்போகிறது.



Friday, March 13, 2026

ஆரம்பிச்சிட்டாங்கய்யா, முடக்க ஆரம்பிச்சிட்டாங்க

 


சமீப காலமாக ட்விட்டர் அக்கவுண்டில் சிக்கல் இல்லாமல் இருந்தது.

நன்றி கெட்ட துரோக மோடி அரசு    என்ற பதிவை நேற்று எழுதி ட்விட்டரிலும் பகிர்ந்து கொண்டிருந்தேன். வழக்கம் போல சில சங்கிகளின் பதிவுகளில் பகிர்ந்து கொண்டேன்.

எந்த சங்கி ரிப்போர்ட் செய்ததோ!

இன்று காலை ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக காண்பித்தது.
அதற்கு பிறகு அவர்கள் கேட்டது போல
 "ரோபோ இல்லை, மனிதன்" என்று நிரூபித்த பின்பு,
ஓடிபி யை சரியாக பதிவு செய்த பின்பு
மீண்டும் கதவுகள் திறந்தது.
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.






இப்படியெல்லாம் முடக்கினால் மோடி பற்றி எழுதாமல் முடங்கி விடுவேனா என்ன!

நாமர்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்.


கண்ணதாசன் பாடலால் கதையளந்த மோடி

 


திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் எண்ணற்ற உருட்டுக்களை அர்ப்பணித்த மோடி, ஒரு கதை ஒன்றையும் அளந்துள்ளார்.

அதென்ன கதை?



மதுரை விவசாயி காலையில் விளைவிக்கும் மல்லியை  மாலையிலேயே நியூயார்க்கிலும்  பாரீஸிலும் விற்பது சாத்தியமா?

இப்போது சென்னையிலிருந்து நியூயார்க்கிற்கும் பாரீஸிற்கும் விமானங்கள் செல்கின்றன. அதன் பயண நேரம் என்ன என்பதை கீழே பாருங்கள். சென்னை நேரத்திற்கும் மதுரை நேரத்திற்கும் வித்தியாசம் அதிகபட்சம் ஒரு மணி நேரம் இருக்கலாம். அது கூட பயண நேரம் அதிகம்தான் ஆகும்.




சென்னையிலிருந்து நியூயார்க் செல்ல குறைந்த பட்சம்  23 மணி நேரமும் பாரீஸ் செல்ல குறைந்த பட்சம் 18 மணி நேரமும் ஆகிறது. 

பிறகு எப்படி காலையில் விளைவித்தது மாலையிலேயே விற்பனை ஆகும்? 

ஆனால்

தவறு மோடியுடையது அல்ல.

மோடிக்கு பேச்சு எழுதிக் கொடுக்கும் பூத எழுத்தாளர் (GHOST WRITER)  யாரோ, மூத்த்த்த்தவர் மாலனோ?) அவருக்கு "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் வரும் "எங்கேயும் எப்போதும்" பாடலில் வரும் "காலை ஜப்பானில் காஃபி, மாலை நியூயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி" வரிகள் நினைவுக்கு வந்து அந்த அடிப்படையில் மோடிக்கு உரை எழுதிக் கொடுத்திருப்பார்.

பாவம் மோடி, அவரை திட்டாதீங்க . . .

Thursday, March 12, 2026

நன்றி கெட்ட, துரோக மோடி அரசு . . .

 


சங்கிகள் பீற்றிக் கொண்டிருக்கிற ஒரு செய்தி கீழே உள்ளது.



இந்த செய்தியின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

அதை உண்மை என்றே எடுத்துக் கொள்வோம்.

இரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமெனியின் மறைவிற்கு மோடி ஒரு இரங்கல் செய்தி கூட விடுக்கவில்லை.

இரானின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அமெரிக்காவை கண்டிக்கவில்லை, கண்டிப்பதற்கான தைரியம் மோடிக்கு கிடையாது என்பது நாமறிந்த உண்மைதான். போரை நிறுத்துங்களேன் என்று ஒரு சின்ன வேண்டுகோள் கூட விடுக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் இந்தியக் கப்பல்களுக்கு இரான் அனுமதி கொடுத்தது என்றால் அது இரானின் பெருந்தன்மை. பாரம்பரியமாக நட்பு பாராட்டும் இந்திய மக்கள் மீது கொண்டுள்ள மரியாதை.

இந்திய அரசின்  சிக்கலுக்கு தீர்வு கொடுத்த இரானுக்கு இந்தியா செய்த பதில் மரியாதை என்ன?

இரான் மீதான கண்டனத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் வழிமொழிந்து இஸ்ரேல்-அமெரிக்கக் களவாணிகள் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் மோடி. இதையும் கூட ராஜதந்திரம் என்று  வெட்கமே இல்லாமல் பீற்றிக் கொள்வார்கள் சங்கி மூடர்கள்.

உதவிக்கரம் நீட்டுபவரின் முதுகில் குத்தும் நன்றி கெட்டவர்களின் ஆட்சியில் வாழ்கிறோம் என்று நினைக்கவே கடுப்பாக இருக்கிறது.

ஆட்சியாளர்களின் துரோகத்தால் நாம் என்னென்ன பிரச்சினைகளை அனுபவிக்கப்போகிறோமோ? 

அமெரிக்க ஜனாதிபதியாக? இந்திய பிரதமராக?

 


ப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் பக்கத்தில் பார்த்த காமெடி கீழே உள்ளது


அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக விரும்புகிறேன் என்று வெள்ளை மாளிகைக்கு ஒருவர் தொலைபேசியில் சொல்ல, "நீ என்ன பைத்தியமா?" என்று வெள்ளை மாளிகை ஊழியர் பதில் சொல்ல, முதலில் தொலைபேசி செய்தவர் கேட்கிறார் "அது கட்டாயமா?" என்று.

இதையே சில நாட்கள் முன்பாக வேறு மாதிரி படித்தேன்.

அடுத்த இந்தியப் பிரதமராக விரும்புகிறேன் என்று பிரதமர் அலுவலகத்திற்கு ஒருவர் தொலைபேசியில் கூற பிரதமர் அலுவலக அலுவலர் " நீ என்ன முட்டாளா?" என்று கேட்கிறார். பிரதமராக விரும்பியவர் கேட்கிறார் "அதுதான் அத்தியாவசிய தகுதியா" என்று.

டொனால்ட் ட்ரம்பும் மோடியும் அவர்கள் வகிக்கும் பதவிகளுக்கு மரியாதையே இல்லாமல் செய்து விட்டனர்,


Wednesday, March 11, 2026

உன் காலம் இருண்ட காலம்தான் ரெவி

 

தமிழ்நாட்டில் தான் பொற்காலத்தை அனுபவித்ததாக மேற்கு வங்கத்திற்கு ஓடிப் போகும் ஆரெஸெஸ் ரெவி சொல்லியுள்ளார்.

அவருக்கு வேண்டுமானால் அது பொற்காலமாக இருக்கலாம்.

அவர் பதவியில் இருந்த காலம் தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இருண்ட காலம்.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க அரசின் முடிவுகளை முடக்கியது, சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை முடக்கியது, ராஜ்பவனை மத வெறி நடவடிக்கைகளுக்கும் பொய்ப் பிரச்சாரத்திற்குமான களமாக மாற்றியது, தமிழ்நாட்டு மக்களின் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தியது, பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டை ஒடுக்கியது, பட்டங்களை மாணவர்கள் பெறுவதை தாமதித்தது, கற்பூரம் பற்றி அறியாத கழுதையாக சுதந்திரப் போராட்ட வீரர், மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களை இழிவு படுத்தியது, திருவள்ளுவர், வள்ளலார் போன்றவர்களுக்கு காவிச்சாயம் பூசியது

என தமிழ்நாடு கண்ட மிக மோசமான, கேவலமான ஆளுனர் ஆரெஸெஸ்.ரெவி என்றும் அவர் பதவிக்காலம் இருண்ட காலம் என்று மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் நினைவில் கொள்வர். 

கார்ட்டூனுக்கு அஞ்சும் மோடி

 


56 இஞ்ச் மார்பு கொண்ட வீரனாக தன்னைப் பற்றி பீற்றிக் கொண்ட மோடி கார்ட்டூனுக்கெல்லாம் அஞ்சி நடங்கும் கோழையாக உருவெடுத்துள்ளார். மோடி பயப்படும் கார்ட்டூன்களை முதலில் பாருங்கள்.



என்ன சம்பவம் என்று கேட்கிறீர்களா?

இதோ இந்த கார்ட்டூன்களை வரைந்த திரு சதீஷ் ஆச்சார்யா சொல்வதை பாருங்கள்.


அவர் சொல்வது மிக மிக சரி. 

தமிழிலேயே சமீபத்திய இரண்டு உதாரணங்கள் உண்டு. அதிகாரத்தை ஏவி முடக்க நினைத்தாலும் மக்கள் உற்சாகமாக பகிர்ந்து கொண்ட அந்த இரண்டு கார்ட்டூன்கள் கீழே