சங்கிகள் பீற்றிக் கொண்டிருக்கிற ஒரு செய்தி கீழே உள்ளது.
இந்த செய்தியின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
அதை உண்மை என்றே எடுத்துக் கொள்வோம்.
இரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமெனியின் மறைவிற்கு மோடி ஒரு இரங்கல் செய்தி கூட விடுக்கவில்லை.
இரானின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அமெரிக்காவை கண்டிக்கவில்லை, கண்டிப்பதற்கான தைரியம் மோடிக்கு கிடையாது என்பது நாமறிந்த உண்மைதான். போரை நிறுத்துங்களேன் என்று ஒரு சின்ன வேண்டுகோள் கூட விடுக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் இந்தியக் கப்பல்களுக்கு இரான் அனுமதி கொடுத்தது என்றால் அது இரானின் பெருந்தன்மை. பாரம்பரியமாக நட்பு பாராட்டும் இந்திய மக்கள் மீது கொண்டுள்ள மரியாதை.
இந்திய அரசின் சிக்கலுக்கு தீர்வு கொடுத்த இரானுக்கு இந்தியா செய்த பதில் மரியாதை என்ன?
இரான் மீதான கண்டனத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் வழிமொழிந்து இஸ்ரேல்-அமெரிக்கக் களவாணிகள் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் மோடி. இதையும் கூட ராஜதந்திரம் என்று வெட்கமே இல்லாமல் பீற்றிக் கொள்வார்கள் சங்கி மூடர்கள்.
உதவிக்கரம் நீட்டுபவரின் முதுகில் குத்தும் நன்றி கெட்டவர்களின் ஆட்சியில் வாழ்கிறோம் என்று நினைக்கவே கடுப்பாக இருக்கிறது.
ஆட்சியாளர்களின் துரோகத்தால் நாம் என்னென்ன பிரச்சினைகளை அனுபவிக்கப்போகிறோமோ?



No comments:
Post a Comment