Tuesday, February 17, 2026

மோடியின் ஆளும் மோடி மாதிரிதானே பேசுவான்!

 


பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் விஜய்யை மட்டம் தட்டுவதாக நினைத்து த்ரிஷாவை இழிவு படுத்தி பேசினார்.

அந்த சர்ச்சை அடங்கும் முன்பே பாஜகவின் கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், ஒரு பொதுக்கூட்டத்திலேயே கரூர் காங்கிரஸ் எம்.பி செல்வி ஜோதிமணியை ஆபாசமாக பேசுகிறார்.

இவர்கள் இப்படி பேசியது எனக்கு ஆச்சர்யமாகவோ அல்லது அதிர்ச்சியாகவோ இல்லை. 

சில காலம் முன்பாக பத்திரிக்கையாளர்களை மிக மிக கேவலமான, ஆபாசமான வார்த்தையில் ஆட்டுக்காரன் பேசியது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.

இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து தைரியம் வருகிறது?

கண்டிப்பாக மோடியிடமிருந்துதான்.

பாஜக கொலைகாரர்களால் துரத்தப்பட்டு வேறு வழியின்றி இஸ்லாமியர்கள் தங்கியிருந்த அகதிகள் முகாமை "குழந்தைகள் உற்பத்தி தொழிற்சாலை" என்று நக்கல் செய்ததையும் சோனியா காந்தியை கொச்சையான வார்த்தை கொடுத்து விவரித்ததையும் மறந்து விட முடியாது.

மோடியை அப்படி பேச வைப்பது எது?

அவர்களின் டி.என்.ஏ வில் ஊறியுள்ள ஆணாதிக்க சிந்தனை. அதை அவர்களுக்கு ஊட்டி வளர்ப்பது 

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

அதுதான் 

சனாதனம் . . .

No comments:

Post a Comment