Monday, July 8, 2024

ராஜினாமா செய்து விட்டு பேசவும் VP

 


இந்திய நாட்டின் மிகப் பெரிய துயரங்கள், சில உச்சகட்ட பதவிகளுக்கு விசுவாசம் காரணமாகவே சிலர் வருவதும் பதவிக்கு ஏற்றார் போல அவர்கள் நடந்து கொள்ளாமல் இருப்பதும்.

யானை மாலை போட்டு அரச பதவிக்கு வந்தாலும் சில பிச்சைக்காரர்களின் குணாம்சம் மாறுவது கிடையாது.

அப்படிப்பட்ட ஒரு நபர்தான் இன்றைய துணை ஜனாதிபதி...

ஆர்.எஸ்.எஸ் பற்றி மாநிலங்களவையில் விமர்சனம் வைக்கப்பட்டால், இவர் கோபம் பொத்துக் கொண்டு வந்து பதில் சொல்கிறார். நான் சின்னப்புள்ளையா இருக்கறப்பவே சேர்ந்துட்டேன் தெரியுமா என்றெல்லாம் விளக்கம் வேறு...

மூன்று புதிய சட்டங்கள் பற்றி "ஏதோ பகுதி நேர ஊழியர்களைக் கொண்டு அரைகுறையாக தயாரிக்க்ப்பட்டது போலிருக்கிறது" என்று ப.சிதம்பரம் சொன்னால் "நாங்கள் என்ன பகுதி நேர ஊழியர்களா? எங்களை இழிவு படுத்தாதே" என்று கத்துகிறார்.

யாராவது இவரிடம் சொல்லுங்கள்.

"இவர் துணை ஜனாதிபதி, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர், இந்தியாவின் இரண்டாம் குடிமகன். மாநிலங்களவையை பாரபட்சமின்றி, அமைதியாக நடத்துவதுதான் இவர் வேலை. அரசுக்கு ஜால்ரா அடிப்பதோ, அரசின் சார்பில் பதில் சொல்வதோ அல்ல. அப்படி விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டுமென்று இவர் இதயம் துடித்தால் அதை பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு நடந்து கொள்ளட்டும். 

No comments:

Post a Comment