Saturday, July 6, 2024

கொலைகார சாமியாரை பாதுகாக்கும் . . . .

 


உபியின் பாலியல் வன்முறைகளின் தலைநகர் ஹாத்ராஸில் 121 பக்தர்களின் உயிரை பலி கொண்ட சம்பவத்தில் ஆறு பேர் மீது போலீஸ் வழக்கு பதிந்துள்ளது. அவர்கள் எல்லோரும் அந்த போலிச்சாமியார் நடத்திய சத்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள்.

ஆனால் அந்த சத்சங்கத்தை நடத்தி மரணங்களுக்கு காரணமாக இருந்த போலே பாபா என்ற போலிச்சாமியார் மீது எந்த வழக்கும் கிடையாது.

அவரை விசாரிப்பீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு "ஒரு வேளை அவரை விசாரிக்க வேண்டிய அவசியம் உருவானால் மட்டுமே விசாரிப்போம்" என்று பதில் சொல்கிறார் உபியின் ஒரு ஐ.ஜி.

கொரோனா இரண்டாம் அலை காலகட்டத்தில் இந்த சாமியார் இது போன்ற சத்சங்கம் நடத்த அனுமதி கேட்ட போது 50 பேர் கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டதாம். ஆனால் 50,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையில் உ.பி யில் கொத்து கொத்தாக மரணங்கள் நிகழ்ந்ததும் சடலங்களை எரிக்க சுடுகாடுகள் போதவில்லை என்பதும் நினைவில் உள்ளதா? 50,000 பேர் கலந்து கொண்ட சத்சங்கம் எத்தனை பேரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததோ!

ஏன் இந்த சாமியார் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை?

அதெப்படி முடியும்!

மாநில முதல்வர் மொட்டைச்சாமியாரே ஒரு கொலைகார சாமியார்தானே!

ஒரு போலிச்சாமியாரால் எப்படி இன்னொரு போலிச்சாமியார் மீது நடவடிக்கை எடுக்க முடியும்!

இருவரும் ஒரே இனம் அல்லவா! 

No comments:

Post a Comment