Monday, April 24, 2023

நிறுத்த வேண்டாம். திரும்பப் பெறுக

 


எட்டு மணி நேர வேலை நிறுத்தத்தை 12 மணி நேரமாக உயர்த்திய சட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் கோபத்தை தெரியப் படுத்திய மக்களுக்கும் கிடைத்த வெற்றி இது.

இறுதித் தீர்வு என்பது நிறுத்தி வைத்தலில் கிடைக்காது. திரும்பப் பெறுவதில்தான் இருக்கிறது.

எனவே அதை தமிழ்நாட்டு அரசு உடனடியாக செய்ய வேண்டும்.

ஒரு கமா கூட மாற்றப்படாது என்று சொல்லப்பட்ட விவசாய சட்டங்களே திரும்பப் பெறப்பட்டது. அதனால் கௌரவம் பார்க்காமல் அந்த நடவடிக்கையை அரசு உடனே எடுக்க வேண்டும். 


2 comments:

  1. வேலூர் ராப்பிச்சைApril 25, 2023 at 2:01 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. வேலூர் ராப்பிச்சைApril 25, 2023 at 2:03 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete