Monday, January 30, 2023

சூடாய் காந்தியின் குருதி

 


கோட்சேவின் தோட்டாக்கள் துளைத்து
வெளியேற்றிய காந்தியின் குருதி

இன்னும் சூடாய் . . .

கோட்சேக்கள் இன்றும் பாய்ச்சுகிற
மதவெறி தோட்டாக்களில் 
பலியானவர்களின் குருதியும் கலந்ததால்....

நாற்காலிக்கான உத்திதான்
கோட்சேக்களின் தோட்டாக்கள் என்பதால்
குருதியாறு ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

அண்ணலை நினைவு கொண்டு
துப்பாக்கியை பறித்தால்தான்

குருதியாறு பாலையாகும் . . .

No comments:

Post a Comment