Saturday, October 9, 2021

உங்க வீட்டிலேயே கூடாது பேங்க் மேனேஜர்.

 


மதுரை எம்.பி தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் முக நூல் பக்கத்தில்தான் இந்த சுற்றறிக்கையை பார்த்தேன்.

மத வெறி தலைக்கேறிப் போன ஒரு மனிதனின் அபத்தமான உத்தரவு இது. நவராத்திரியை ஒன்பது நாளும் அவர் கொண்டாட வேண்டுமென்றால் அதை அவர் வீட்டில் கொண்டாடிக் கொள்ளட்டும். 

ஒவ்வொரு நாளைக்கும் ஒரு வண்ணம் என்ற உத்தரவெல்லாம் அவர் வீட்டிலேயே செல்லாது. "போய்யா வேலையை பாத்துக்கிட்டு" என்று சொல்லி விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர் வீட்டு ஆட்களுக்குக் கூட என்ன வண்ணத்தில் ஆடை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டால் அது கூட தவறுதான்.

இந்த உத்தரவின்படி ஆடை அணியாவிட்டால் அபராதமாம். அந்த வண்ணத்தில் உடை இல்லாவிட்டால் வங்கி வாங்கித் தருமா?

மூடச்சங்கிகள் இப்படித்தான் பொதுத்துறை நிறுவனங்களை நாசம் செய்கிறார்கள்.

இந்த உத்தரவிட்ட ராகவேந்திரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக அங்கே உள்ள வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் போராட வேண்டும். 

No comments:

Post a Comment