Saturday, October 2, 2021

தடியோடு மீண்டும் வா காந்தி



மீண்டும்  வா காந்தி

 

உன்னைக் கொன்றவர்கள் ஆட்சியில்
உன்னை கொன்றவனை
தியாகியென்றவரும் கூட ஆட்சியில்.

 

உன் உயிருக்கு 
 தோட்டாவால் சுதந்திரம்
கொடுத்து விட்டு
சுதந்திரத்தின் மீது
தோட்டாக்களை ஏவி விட்டார்கள்.

 

ஈஸ்வர அல்லா தேரே நாம்
பாடிய உனக்கு
ஈஸ்வரன் பெயரால்
அல்லாவின் சீடர்கள்
படும் பாடு தெரியுமோ?

 

வெள்ளையரை விரட்டி
விடுதலை பெற்ற தேசத்தில்
கொள்ளையர்கள் கோலோச்சுகிறார்கள்.

 

தீண்டாமை ஒழிக்கச் சொன்னாய்.
ஆணவக் கொலைகளை
ஆதரிக்கும் அரசு இங்கே!

 

மத நல்லிணக்கப் பூக்களால்
கட்டப்பட்ட ஒற்றுமை மாலை
சங்கிக் குரங்குகள் கைவசம் இன்று.

 

மீண்டும் வேண்டும்
இங்கே சுதந்திரம்.

 

கருத்தைச் சொல்லும் சுதந்திரம்
விரும்பியதை உண்ணும் சுதந்திரம்
கல்வி கற்கும் சுதந்திரம்
ஆடை உடுத்தும் சுதந்திரம்
உயிருடன் வாழ சுதந்திரம்
மானத்துடன் வாழ சுதந்திரம்
இந்தியனாய் வாழும் சுதந்திரம்.

 

வீர சுதந்திரம் வேண்டுகிறோம்,
இணைந்து போராட,
கையில் தடியோடு
மீண்டும் பிறந்து வா காந்தி.

 

No comments:

Post a Comment