Sunday, September 20, 2020

கதை விட்டு மாட்டிய கங்கணா


 பாலிவுட்டின் மாரிதாஸ் என்று நடிகை கங்கணா ரணாவத்தை சொல்வது பொருத்தமாக இருக்கும். வெறும் சத்தம் மட்டுமே போடும் சங்கி. சிவசேனாவுக்கு எதிராக மல்லு கட்டிக் கொண்டிருக்கும் கங்கணா, ஒரு கதை விட்டு மாட்டிக் கொண்டிருக்கிறார்.

பாஜக சிவசேனாவோடு கூட்டணி வைத்துத் தொலைத்ததாலேயே சிவசேனா கட்சிக்கு கடந்த சட்ட மன்ற தேர்தலிலும் மக்களவை தேர்தலிலும் ஓட்டு போட்டுத் தொலைக்கிற மாதிரியாயிடுச்சு என்று பில்ட் அப் கொடுத்துள்ளார் அம்மணியார்.

அவரது வாக்கு உள்ள பந்த்ரா தொகுதியில் சட்டப் பேரவையிலும் சரி, மக்களவையிலும் சரி, சிவசேனா வேட்பாளர் போட்டியிடவில்லை, பாஜக வேட்பாளர்தான் போட்டியிட்டார் என்றும் கங்கணா அம்மையார் கதை விடுகிறார் என்று இந்தியா டுடே அம்பலப்படுத்தி விட்டது.

ஆமாம்

பொய் பேசுவதால் இவர் மோடியை ஆதரிக்கிறாரா?

அல்லது

மோடியை ஆதரிப்பதால் பொய் பேசுகிறாரா?


No comments:

Post a Comment