Wednesday, December 5, 2018

மோடியின் முட்டாள் சீடனே, மூச்சு விடலாமா?



கும்ப மேளாவிற்கு வரும் சகல வித சாமியார்களுக்கும் (அது என்ன சகல விதம் என்ற எழவையெல்லாம் தனியாக வேறு எழுத வேண்டுமா என்ன?) சகல வசதிகளோடு தங்க வேண்டும் என்பதற்காக அலகாபாத் (நீ பெயரை மாற்றினால் மட்டும் அது மாறி விடுமா என்ன?)  நகரத்தில் மூன்று மாதம் யாருமே திருமணம் நடத்தக் கூடாது என்று தடை விதித்திருக்கும் மோடியின் பிரதான முரட்டு, முட்டாள் சிஷ்யனான மொட்டைச் சாமியார் யோகியே!

கும்பமேளா சமயத்தில் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு மூச்சு விடுவதற்காவது அனுமதி உண்டா?

இல்லை சாதாரண மக்களின் மூச்சு காற்று மண்டலத்தில் கலந்து அது சாமியார்கள் மீது பட்டு தோஷம் உண்டாகி விடும், சாஸ்திரக் குற்றம் உண்டாகி விடும் என்று சொல்லி அதற்கும் தடை விதிப்பீரா?

உம்மையெல்லாம் முதல்வராக்கிய குற்றத்திற்கு உ.பி மக்கள் இன்னும் எத்தனையெத்தனை கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருக்குமோ?

ஆனால் ஒன்றய்யா!

நீ மோடியையே நல்லவனாக்க முயற்சி செய்கிறாய்!!!

No comments:

Post a Comment