Saturday, November 29, 2014

மோடியின் காஷ்மீர் மௌனம் ஏனோ?

மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டதிலேயே  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்ட பிரிவு 370 ஐ அகற்றுவது பற்றி விவாதித்தோம் என்று ஒரு குட்டி மந்திரி மூலம் சொல்ல வைத்து பின்பு பல்டி அடித்த மோடி வித்தை நினைவில் உள்ளதல்லவா?

 http://i.telegraph.co.uk/multimedia/archive/02393/kashmir2_2393438b.jpg


அரசியல் சட்ட பிரிவு 370 ஐ அகற்றுவது என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய செயல் திட்டங்களில் ஒன்று. பாஜகவின் விருப்பமும் அதுவே. அரசியல் சட்ட பிரிவு 370 ஐ அகற்றுவது என்பது கிட்டத்தட்ட செத்த பாம்பை அடிப்பதற்க்கு சமம். ஏனென்றால் மற்ற மாநிலத்து ஆட்கள் காஷ்மீரில் நிலம் வாங்கக் கூடாது என்பதைத் தவிர வேறு எந்த பலனும் இல்லை. 

காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மோடி, ஏன்  370 ஐ அகற்றுவது  பற்றி வாய் திறக்கவே இல்லை. வீராதி வீரர், சூராதி சூரர், புஜபல பராக்கிரம தைரியசாலியான மோடி எதற்காக அங்கே மௌனம் அனுஷ்டிக்கிறார்? 370 ஐ அகற்றுவேன் என்று சொல்ல வேண்டியதுதானே? தேர்தல் கூட்டங்களில் அறிவிக்க வேண்டியதுதானே?

சொல்லுங்க மோடி சொல்லுங்க்


2 comments:

  1. Dear Pl wait. definately they will take this issue after the election. now they will keep quit only never say yes/no.

    but i am sure 370 act will be removed by this government.

    Seshan/Dubai

    ReplyDelete
  2. அதை காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்ல தைரியமில்லாத கோழைதானே மோடி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா திரு சேஷன்? அப்படி அப்பிரிவை நீக்கினால் அது காஷ்மீர் மக்களை இன்னும் இந்தியாவிடமிருந்து அன்னியப்படுத்தி விடும்

    ReplyDelete