Friday, November 14, 2014

மனமார்ந்த நன்றி




மழையின் காதலன் நான்.
எத்தனை நேரம் பொழிந்தாலும்
போதாது, போதாது என
ஏக்கம் கொள்பவன் நான்.

இன்று மட்டும் 
கொஞ்சம் நின்றால் என்ன?
மனதிற்குள் ஆசைப்பட்டேன்.


மக்கள் நிறுவனம் எல்.ஐ.சி யை
காத்திடவே, மக்களுக்கும்
சேதி சொல்லிடவே
மனிதச் சங்கிலி இயக்கத்தில்
கரம் கோர்த்து நின்றிடவே
மாலையிலே வேளை குறித்து
பதட்டத்தில் தவித்திருந்தோம்.

மனதிற்குள் மௌனமாய் 
ஒலித்த குரல் கூட
மழையின் செவிகளையும்
எட்டியது போலும்.

இன்று போய் நாளை வருவேன்
எனச் சொல்லி
மதியத்திலேயே 
விடை பெற்றுப் போனது.

நல்லவர் ஒருவருக்காய்
பெய்யெனப்  பெய்யும் மழை
நல்லதொரு  இயக்கத்தின்
நல்லதொரு நோக்கத்திற்கென
நிற்க மட்டும் செய்யாதா என்ன?




1 comment:

  1. Dear Do what ever you want, but donot allow the LIC will fall down. this is the only Public sector - supporting the people truly. ( all nationalize banks are away from the public support- only for salary they will open their mouth.)

    Seshan /Dubai

    ReplyDelete