Tuesday, February 10, 2026

சங்கிகளின் நடையே தனி!!!

 


முக நூலில் பார்த்து சிரித்த ஒரு காணொளியை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நேரடி பிரதிநிதியாக தமிழ்நாடு பாஜகவின் அமைப்புச் செயலாளராக இருந்த கேசவ வினாகத்தை அந்த பதவியிலிருந்து தூக்கியுள்ளார்கள். அதெல்லாம் அவர்களின் உட்கட்சி விஷயங்கள். அந்தாள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக நிச்சயம் நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள். காரணம் BJP என்பதன் விரிவே B.JOLLU.P தான்.



துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்பது போல பதவி பறிப்புதான் இந்த கிறுக்கு நடைக்கு காரணமாக இருக்குமோ?

மூவரைப் பெற்றால் சர்சங்சாலக் சோறு போடுவாரா?

 


இந்தியாவின் மிகப் பெரிய தீவிரவாத, அடிப்படைவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத் உதிர்த்த முத்து கீழே உள்ளது.


அவர் சொல்லும் முதல் விஷயம் விஷம். வழக்கமான விஷம். மத வெறியை தூண்டுவதை மட்டுமே நூறாண்டுகளாக செய்து கொண்டிருக்கும் கேவலமான அமைப்பு இது.

கடந்த பல பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் சிறுபான்மையினரின் சதவிகிதம் அதிகரிக்கவே இல்லை என்பதுதான். அது மட்டுமல்ல, கடைசி இரண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புக்கள் இஸ்லாமியர்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் இந்துக்களை விட குறைவாகவே இருந்திருக்கிறது. 

2021 ல் எடுக்கப்பட வேண்டிய மக்கட்தொகை கணக்கெடுப்பை இதுவரை துவக்காமல் இருப்பது கூட ஆர்.எஸ்.எஸ் அளந்து கொண்டிருக்கும் கட்டுக்கதை அவர்கள் ஆட்சியிலேயே அம்பலமாகி விடும் என்பதுதான்.

நிற்க

மூன்று பேரை பெற்றெடுக்க வேண்டும் என்று சொல்கிற மோகன் பகவத் திருமணமாகாதவர். அவருக்கு குடும்பத்தை நடத்துவதில் உள்ள சிரமங்கள் தெரியாது. வெங்காயம் சாப்பிடாதாதால் எனக்கு வெங்காய விலை உயர்வு பற்றி தெரியாது என்று சொன்ன நிர்மலா அம்மையார் கேடகிரிதான் இவர்.

இவருக்கு குழந்தைகளை வளர்ப்பதற்காக ஆகும் உணவுச் செலவு, கல்விச் செலவு, மருத்துவச் செலவு, திருமணச் செலவு ஆகியவற்றைப் பற்றி தெரியுமா?

வேலையின்மை பிரச்சினையைப் பற்றி தெரியுமா?

குடும்ப பாரம் சுமக்காத இவருக்கு குடும்பத்தை பெருக்கச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

மூன்று குழந்தைகளுக்கான செலவுகளை அரசு கொடுக்குமா? இது என்ன பழைய சோவியத் யூனியன் அரசா?

கார்ப்பரேட்டுகளிடம் லஞ்சம் வாங்கி கொழுத்துப் போயிருக்கும் பாஜக அளிக்குமா?

முடியாது அல்லவா?

SO SHUT UP MR MOHAN BHAGAWATH

Monday, February 9, 2026

மோடிக்கு இதெல்லாம் ஒரு பிழைப்பா சங்கிகளே?

 மலேசியாவில் மோடி தமிழை உயர்த்திப் பிடித்ததாக பாஜக ஐ.டி விங் எழுதிக் கொடுத்ததை அப்படியே பகிர்ந்து கொண்டு பீற்றிக் கொண்டிருக்கும் மருத்துவனையில் படுத்துக் கொண்டிருக்கும் ஹைகோர்ட் புகழ் எச்.ராசா உட்பட அனைத்து சங்கிகளுக்கும் கீழே உள்ள படம் சமர்ப்பணம். . . 



அஸ்ஸாம் முதல்வருக்கு கருணை கூடாது



 ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா - அஸ்ஸாமின் முதலமைச்சர், 2015 ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தவர். முதல்வர் கனவிலும் இருந்தவர். ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்களை பாஜக முன் வைக்க, பாஜகவிலேயே சேர்ந்து மோடி வாஷிங் மிஷின் மூலமாக புனிதராக மாறி பாஜக சார்பிலேயே முதலமைச்சராக ஐந்தாண்டுகளாக குப்பை கொட்டிக் கொண்டு இருப்பவர்.

அஸ்ஸாம் பாஜக நேற்று ஒரு காணொளி வெளியிட்டது. அந்த காணொளியில் ஹி.பி.சர்மா துப்பாக்கியால் சுடுகிறார். அவர் குறி பார்ப்பது இஸ்லாமியர்களை. NO MERCY கருணையே கிடையாது என்ற வாசகத்துடன் காணொளி முடிகிறது.



அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பின் வெளிப்பாடான இந்த காணொளியை அஸ்ஸாம் பாஜக இப்போது நீக்கி விட்டது.

இப்படிப்பட்ட காணொளி மூலம் ஹி.பி.சர்மா தன் தொ/குண்டர்களுக்கு என்ன சொல்கிறார்?

இஸ்லாமியர்களை அழித்தொழியுங்கள் என்பதைத்தான் மிகவும் வெளிப்படையாக சொல்கிறார்.

இப்படிப்பட்ட முதல்வர் மீது மோடி நடவடிக்கை எடுக்க மாட்டார்.

தெருநாய் பிரச்சினை போல உச்ச நீதிமன்றமும் தன்னியல்பாக நடவடிக்கை எடுக்காது.

அஸ்ஸாம் மக்கள்தான் தெருவில் இறங்கி போராட வேண்டும்,  பதவி விலகும் வரை போராட வேண்டும். ஹி.பி,சர்மாவுக்கு அவசியமே இல்லை, கருணை . . .

Sunday, February 8, 2026

ட்ரம்ப் இடத்தில் மோடியை நினைத்தால்

 


காலையில் முகநூலில் பார்த்த காணொளி கீழே உள்ளது.


டொனால்ட் ட்ரம்ப் இடத்தில் மோடியை நினைத்து பாருங்கள்.

கலாய்ப்பதற்கு ஏராளமான விஷயங்கள் உண்டு.

ஆனால் அப்படி கலாய்ப்பவர்கள் செல்லும் இடம் திஹார் சிறையாகவோ அல்லது போலி எண்கவுண்டராகவோ இருக்கும். 

Saturday, February 7, 2026

ஏலம் போகுது A1 மாளிகை

 


மேலே உள்ள மாளிகை யாருடையது தெரியுமா?

கீழே உள்ள படத்தை பாருங்கள்

இப்போது தெரிந்ததா?

ஆம்.

A1 ஆட்சி செய்த சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையம் மாளிகைதான் அது.

ஜெ இறந்த பிறகு அந்த மாளிகை அவரது அண்ணன் மகன், மகள் ஆன தீபக், தீபா ஆகியோர் வசம் சென்றது.

1991-92 நிதியாண்டு தொடங்கி 2006-2007 நிதியாண்டு வரை கட்ட வேண்டிய வருமான வரி, 1992-93 நிதியாண்டு தொடங்கி 2015-2016 வரை கட்ட வேண்டிய சொத்து வரி ஆகியவற்றின் பாக்கி, அதற்கான அபராத வட்டி எல்லாமுமாக சேர்த்து 13.69 கோடி கட்ட வேண்டும்.

சொத்துக்களின் வாரிசுகளான தீபக்கையும் தீபாவையும் கட்டச் சொன்னார்கள்.

ஆளுக்கு பாதியாக பிரிக்க வேண்டும், தவணை முறையில் கட்ட வேண்டும் என்று தீபக் நீதிமன்றம் செல்ல, தீர்ப்பும் அப்படியே வந்தது.

தான் கட்ட வேண்டிய தொகையில் இரண்டு தவனைகளோடு தீபக் நிறுத்திக் கொள்ள, தீபாவோ ஒரு பைசா கூட கட்டவில்லை.

அதனால் நீதிமன்ற அனுமதியோடு போயஸ் கார்டன் மாளிகையை ஏலம் போடப் போகிறார்கள்.

ஜெ அதிகாரம் செய்த இடம், ஊழல் செய்து வாங்கிய நகைகள் முதற்கொண்டு செருப்புகள் வரை அடுக்கி வைத்திருந்த இடம். வெள்ளத்தில் சென்னை மிதக்கும் நிலை  வந்தது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த இடம். ரஜினிகாந்தை நடந்து போகச் சொன்ன இடம்.

"ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள் போன கதை தெரியுமா?" என்று ஒரு சூர்யா பாட்டு உண்டு.

அதில் ஒரு கதை தான் ஜெ வின் கதை.

இப்போது ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் மோடி வகையறாக்களும் விஜய் வகையறாக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அனுபவம். 



மார்க்ஸை நாங்கள் மறக்கவில்லை, இந்தி இசையையும்

 


சென்னையில் பேராசான் காரல் மார்க்ஸின் சிலை கம்பீரமாக எழுந்துள்ளது.


காரல் மார்க்ஸின் சிலை சங்கிகளுக்கு பதற்றத்தையும் எரிச்சலையும் அளித்திருக்கிறது.கண்ட இடம் எல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலே இந்தி இசை அம்மையாரின் ஒப்பாரி ரொம்பவே அதிகமாக இருக்கிறது. 


அந்த அறிவு கெட்ட அம்மையாருக்கெல்லாம் விளக்கமாக பதில் சொல்வது வீண்.

தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேறு சில அமைப்புக்களும் கார்ல் மார்க்ஸை மறக்காத காரணத்தால்தான் அவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். 

ஆனால் இந்தியிசை அம்மையார்தான் கலைஞர் ஆட்சியில் தமிழறிஞர்களுக்கான இட ஒதுக்கீட்டில்  எம்.பி.பி.எஸ் படித்தார் என்பதை மறந்து விட்டார்.

அடுத்தவர் தயவில் வாழும் அளவிற்கு தன் வாழ்க்கைக்கு காரணமான தந்தையையே மறந்து விட்டார்.

குமரி அனந்தனின் கௌரவத்தை மீட்டெடுக்க திமுக அரசுதான் அவருக்கு வீடு கொடுத்தது என்பதையும் மறந்து விட்டார். 

பாவம்!

அப்புறம் முருகனை கும்பிட முடியவில்லையா? அறுபடை வீடுகளை மூடி விட்டார்களா என்ன? கோயில்களில் எப்போதும் பக்தர்கள் எப்போதும் போல வழிபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

முருகனை வைத்து கலவரம் செய்த நினைத்த சங்கிகள்தான் அசிங்கமாக நிற்கிறார்கள், முருகன் அணிந்த அந்த ஒற்றை ஆடை கூட இல்லாமல் . . .

Friday, February 6, 2026

அசிங்கமாக மாட்டிக் கொண்ட பாஜக ஐ.டி விங்

 


பத்திரிக்கையாளர்கள் என்றாலே பயந்து நடுங்கிப் போய் பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்கிற மோடி எண்ணற்ற பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசுவது போல ஒரு படத்தை பாஜக ஐ.டி விங் வெளியிட்டது.


இந்த படத்தினால் அசிங்கப்பட்டு நிற்கிறது.

பேட்டி கொடுப்பது மோடி என்று சொல்கிறது படம்,

ஆனால் படத்தில் உள்ள மொபைல் கேமராவிலோ ராகுல் காந்தி நிற்கிறார்.

அடுத்து GEMINI AI லோகாவையும் அகற்றாமல் விட்டு விட்டார்கள்.

ஏற்கனவே அசிங்கத்தில் குளித்துக் கொண்டிருக்கிற மோடிக்கு இன்னும் ஒரு அசிங்கம். அவர் இதிலிருந்து வெளிவர கங்கையில் குளித்தாலும் அழுக்கு போகாது. நைல் நதிக்கு வேண்டுமானால் செல்லட்டும். 

நாக்கு அழுகிடும் மோடி

 


பதில் சொல்ல முடியாமல் மோடி ஓடி ஒளிந்ததற்கு ஓம் பிர்லா அயோக்கியத்தனமான ஒரு பொய்யை சொன்னதைப் பற்றி எழுதி இருந்தேன்.

ஓம் பிர்லாவின் அயோக்கியத்தனமான பொய்க்கு அலிபி தேட மோடியும் ஒரு அபாண்டமான, அயோக்கியத்தனமான பொய்யை சொல்லியுள்ளார்.


தேவர் மகன் படத்தில் அபாண்டமான குற்றச்சாட்டு வைக்கிற போது நாசரைப் பார்த்து சிவாஜி "நாக்கு அழுகிடும்டா" என்று சொன்ன காட்சிதான் எனக்கு நினைவு வந்தது.

மோடி ஒரு வேளை இயற்கையான முறையில் பிறந்திருந்தால் அவரது பெற்றோர் "பொய் சொன்னால் போஜனம் கிடைக்காது" என்று சொல்லி வளர்த்திருப்பார்கள்.

ஆனால் இவர்தான் தெய்வக்குழந்தை ஆயிற்றே!

Thursday, February 5, 2026

ஓடி ஓளிவதைத் தவிர மோடிக்கு வேறு வழியில்லை . . .

 


குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி சொல்லும் தீர்மானம் பிரதமர் பதில் அளிக்காமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

சீனப் படைகள் முன் வந்த போது முடிவெடுக்க திராணியில்லாமல் நடுங்கியதை சொல்லும் ராணுவத் தளபதியின் புத்தகத்தைக் கொடுக்க ராகுல் காந்தி காத்திருக்கிறார்.

எங்கய்யா போச்சு உன் 56 இஞ்ச் மார்பு என்று எதிர்க்கட்சிகள் குடைவார்கள்.

டொனால்ட் ட்ரம்பின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து அவர் அடிமையாய் மாறி விட்டாயே என்ற கேள்விகள் வேறு.

இதைத் தவிர மோடிதான் முஜ்ரா நடனம்  (விபரங்களுக்கு  இந்த இணைப்பை பார்க்கவும்)   ஆடினார் என்று எப்ஸ்டீன் கோப்புகள் சொல்வதாக வேறு ஒரு தகவல்.

இப்படிப்பட்ட சூழலில் அவர் எப்போதுமே வெறுக்கும் நாடாளுமன்றத்திற்கு மோடி எப்படி வருவார்? 

ஓடி ஓளிவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.


அதற்கு ஓம் பிர்லா (சபாநாயகர் என்றெல்லாம் அந்த சங்கிக்கு மரியாதை அவசியமில்லை) சொல்லியுள்ள காரணம்.

வழக்கமான பாஜக அயோக்கியத்தனம்.

நாடாளுமன்றம் கூட பாதுகாப்பில்லை என்றால் உள்துறை அமைச்சர் பதவி எதற்கு? அமித் ஷா ராஜினாமா செய்யட்டும். 

பிகு : நான் பனையூரிலேயே பதுங்கி இருப்பதைப் பற்றி பாஜகவினர் யாரும் பேச முடியாது என்று விஜய்க்கு மகிழ்ச்சியாக இருக்கும். 

ஆஹா! அருமை!! அற்புதம் !!!

 


முக நூலில் பார்த்த ஒரு காணொளியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 


அழுத்தம் திருத்தமாக உணர்வுபூர்வமாக பாடும் அந்த மழலையை பாராட்ட பொருத்தமான வார்த்தைகள் என்னிடம் இல்லை.

எதிர்காலத்தில் சிறப்பாக வளரட்டும்.

மார்க்சியமே வெல்லும் . . .

அவர்கள் அவர்கள்தான். ஆனால் அவர்களா?

 


நேற்று மணிப்பூரில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

யும்மாம் கேம்சந்த்சிங் என்ற மெய்தி இனத்தவர் முதலமைச்சராகவும் நிம்சேன் கிப்கேன் என்ற குக்கி இனப் பெண் எம்.எல்.ஏ வும் லோசில் டிகோ என்ற நாகா இனத்தவரும் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். 

மணிப்பூரில் உள்ள அனைத்து குக்கி மற்றும் நாகா அமைப்புக்கள், அரசில் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இணையக்கூடாது என்றும் தாங்கள் வாழும் பகுதியை தனியான யூனியன் பிரதேசமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

அவர்களை பாஜக அரசு தாக்கியதன் ஒடுக்கியதன் விளைவு அது. மத்திய அரசின் மீதும் மோடியின் மீதும் அவர்கள் எப்போதோ நம்பிக்கை இழந்து விட்டனர். புதிதாக உருவான அமைச்சரவை ஒரு வெத்து வேட்டு என்பதையும் அவர்கள் அறிவார்கள். 

அவர்கள் சந்தித்த இன்னல்கள், கொடுமைகள், பெண்களுக்கு ஏற்பட்ட அராஜகங்கள், இழந்த உயிர்கள், அழிந்த உடமைகள் அப்படிப்பட்ட நிலைமைக்கு அவர்களை தள்ளியுள்ளன.

இந்த சூழலில் குக்கி இனத்தையும்  நாக இனத்தையும் சேர்ந்தவர்களை துணை முதலமைச்சராக்கினால் பிரச்சினை தீரும் என்று சாணக்கியத்தனமாக முடிவெடுத்துள்ளதாக  பாஜக  கருதுகிறது.

நிம்சேன் கிப்கேனும்  லோசில் டிகோவும் குக்கி, நாகா இனத்தவர்கள்தான். ஆனால் அந்த இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களா? அவர்களின் நியாயத்திற்காக குரல் கொடுத்தவர்களா? அம்மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களா?

இல்லை,

இல்லவே இல்லை.

இதுதான் யதார்த்தம். 

அந்த இனங்களை சேர்ந்தவர்களை துணை முதல்வராக்குவது என்பது பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டது அல்ல. எப்படி ராம்நாத் கோவிந்த் ஒரு பொம்மையாக இருந்தாரோ, எப்படி திரௌபதி முர்மு பொம்மையாக இருக்கிறாரோ, அது போன்ற பொம்மைகளாக இருக்க பதவி கொடுக்கப்பட்டவர்கள். 

அதனால் அமைதிக்கு வாய்ப்பில்லை.

பிகு: நேற்று மாநிலங்களவையில் கமலஹாசனின் உரை நன்றாக இருந்தது என்பதை இரண்டு மூன்று முறை பார்த்து கேட்ட பின்பே புரிந்தது. எளிய மொழியில் நேரடியாக இருந்திருந்தால் வீச்சு இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.

ஒரு குழப்பமான தலைப்பை வைக்க அவரது உரையே காரணமாக இருந்தது. 

 

Wednesday, February 4, 2026

தற்காலிக நீதிபதிகள் - அராஜகம்

 


நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு (Collegium) மிக மிக மோசமான முடிவொன்றை எடுத்துள்ளது.

ஓய்வு பெற்ற ஐந்து நீதிபதிகளை அலகாபாத் நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதிகளாக இரண்டாண்டு காலத்திற்கு நியமித்துள்ளார்கள்.

இதன் பொருள் என்ன?

புதிதாக நீதிபதிகளை தீர்ந்தெடுக்க உங்களுக்கு மனமில்லையா இல்லை புதிய நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதி உள்ளவர்கள் மொட்டைச் சாமியாரின் உபி மாநிலத்தில் யாரும் இல்லையா?

மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துப் போகக் கூடிய நீதிபதிகளை புதிதாக கண்டுபிடித்து பயிற்சி கொடுப்பதற்கு பதிலாக பழையவர்களே வசதி என்று நினைத்தார்களோ!

ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை கொடுப்பது என்பது அரசுத் துறையோ இல்லை  வேறு நிறுவனமோ  மிக மிக மோசமானது. இளைஞர்களுடைய வாய்ப்பை பறிக்கிற அராஜகம்.

இது மிக மிக மோசமான உதாரணம். . . .


எடப்பாடி துரத்தும் முன்பு ஆட்டுக்காரனே . . .

 


தன் தந்தையின் உடல் நலனை கவனித்துக் கொள்வதற்காக தெர்தல் பொறுப்புக்களிலிருந்து விலகுவதாக ஆட்டுக்காரனின் அறிவிப்பு வெளி வந்துள்ளது.


எங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டுமானால் ஆட்டுக்காரனை தலைவர் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்ற எடப்பாடியின் நிபந்தனைக்கு பாஜக ஏற்கனவே அடி பணிந்திருந்தது.

ஆனாலும் ஆட்டுக்காரனின் அல்லக்கைகள் ஆட்டுக்காரனை அடுத்த முதல்வர் என்ற ரேஞ்சில் பில்ட் அப் கொடுத்த வந்த போதே சிக்கல் வரும் என்று எதிர்பார்த்தேன்.

வந்து விட்டது என்றே தோன்றுகிறது.

 ஆட்டுக்காரனை கட்சியிலிருந்தே தூக்க வேண்டும் என்று எடப்பாடி வெளிப்படையாக சொல்வதற்கு முன்பாக, ஆட்டுக்காரனே உஷாராகி விலகியதுதான் யதார்த்தம் என்று சின்னக்குழந்தைகளுக்குக் கூட தெரியும்.


Tuesday, February 3, 2026

மீண்டும் மோடியை சிறைப்படுத்திய ட்ரம்ப்

 


இந்தியாவை மோடி மீண்டும் அமெரிக்காவிடம் அடமானம் வைத்துள்ளார். 

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதை நிறுத்தியதற்காகவும்
அமெரிக்காவிடமிருந்தும் எதிர்காலத்தில் வெனிசுலாவிடமிருந்து வாங்க ஒப்புக் கொண்டதற்காகவும்,
அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை பூஜ்ஜியமாக்குவதற்கு ஒப்புக் கொண்டதற்காகவும்

அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கான வரியை மனமிறங்கி 25 % லிருந்து  18 % ஆக குறைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இதை ட்ரம்ப் அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


இதெல்லாம் ஒரு டீலா மோடி?

இப்படி இந்திய நலனுக்கு எதிராக செயல்பட வெட்கமில்லையா?

இதிலே 56 இஞ்சர் என்று பெருமை வேறு.

அதாம்லே நிர்மலா சீத்தாராமன் !

 


நிர்மலா அம்மையார் பட்ஜெட்டில் கொடுத்துள்ள ஒரு அறிவிப்பு கீழே உள்ளது.


கடலே இல்லாத வாரணாசியிலும் பாட்னாவிலும் கப்பல் ரிப்பேர் மையம் எப்படி சாத்தியம் என்று எல்லோரும் கிண்டலடித்துள்ளார்கள்.

ஐடியா இல்லாத ஆளுங்க!

அவங்களுக்கு நிர்மலா அம்மையாரின் ப்ளானே தெரியலை.

வாரணாசியிலும் பாட்னாவிலும் கப்பல் ரிப்பேர் சென்டருக்கு கப்பல் வர வேண்டும். அதனால் அருகிலிருந்த கடலிருந்து கப்பல்கள் செல்லும் அளவிற்கு மிகப் பெரிய கால்வாய்கள் தோண்டப்படும். சேது சமுத்திர திட்டத்தை இவர்கள் சீரழித்தாலும் இதனை செயல்படுத்துவார்கள். 

அந்த கால்வாய்கள் தோண்டுவதற்கான ஒப்பந்தம் அதானி, அம்பானிக்கு வழங்கப்படும்.

அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக அதானி, அம்பானிக்கு ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அரசு வங்கிகள் கடன் தரும்.

எப்படி விமான நிலையங்களும் துறைமுகங்களும் அதானி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ, அது போல கப்பல் ரிப்பேர் சென்டர்களும் அதானிக்கு வழங்கப்படும். 

அதை வாங்குவதற்கான பணம்?

எதற்கு இருக்கின்றன அரசு வங்கிகள்!

வாங்கிய கடனை அதானி எப்படியும் திருப்பி கட்ட மாட்டார். அதனால் சில வருடங்கள் கழித்து அனைத்து கடனும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். 

அதானி, அம்பானிக்கு கொடுக்க எதுவும் இல்லாத போது இப்படி எதையாவது புதிதாக உருவாக்கித்தானே தர வேண்டும்!

அதனால்தான் கப்பல் ரிப்பேர் சென்டர்.

அங்கதான் நிக்கறாங்க நிர்மலா சீத்தாராமன். 

Monday, February 2, 2026

மரண பயத்தில் நடுங்கிய பாஜக . . .


 பாஜகவினர் இன்று மரண பயத்தில் நடுங்கிப் போய் விட்டனர். 

முன்னாள் ராணுவத் தளபதி இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய “விதியின் நான்கு நட்சத்திரங்கள்” (Four Stars of Destiny) என்ற புத்தகத்தின் ஐந்து வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் கடந்த ஒன்றரரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் போராடினர்.

அப்படி என்ன எழுதப்பட்டுள்ளது?

ஆகஸ்ட் 31, 2020 அன்று இரவு 8:15 மணிக்கு, சீனாவின் ஆர்மி மற்றும் அதன் நான்கு சீன டாங்கிகள் லடாக்கில் உள்ள ரெசின் லா நோக்கி முன்னேறி வருகின்றன! அவை ஏற்கனவே இந்திய எல்லையில் சில நூறு மீட்டருக்குள் வந்து விட்டன.

இந்திய ராணுவத் தளபதி, ஜெனரல் நரவனே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர அழைப்புகளை விடுத்து நமது ராணுவத்தை உடனே முன்னேறி, சீனாவின் ராணுவத்தை தடுத்து நிறுத்த அனுமதி கேட்கிறார்!
“நாங்கள் உத்தரவு தரும் வரை துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம்” என்று டெல்லியில் இருந்து கட்டளை வருகிறது! சீனராணுவம் தொடர்ந்து முன்னேறுகிறது! நமது ஆர்மி கமாண்டர் உச்ச கட்ட டென்ஷனில் என்ன செய்வதென்று தெரியாது விழி பிதுங்குகிறார்!
சீனர்கள் அவர்களது படைகள் முன்னேறி வருகின்றன! பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்துக்கு அவர் மீண்டும் மீண்டும் வெறித்தனமான அழைப்புகள் அனுப்புகின்றார் .
ஆனால் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவின் அரசியல் தலைமையிடமிருந்து எந்த தெளிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் எதுவும் டெல்லியில் இருந்து வரவில்லை!
சாத்தியமான அனைத்து வழிகளிலும் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கேட்டு எல்லையில் ராணுவ கமாண்ட் அலறுகிறது! ஆனால் ராணுவத் தளபதிக்கு இன்னும் தெளிவான நிர்வாக உத்தரவுகளை டெல்லியில் உள்ள உயர்மட்ட அரசாங்கக் குழு எந்த உத்தரவும் தராமல் மௌனம் காக்கிறது!
ஒருவழியாக இரவு 10:30 மணிக்கு, பிரதமரிடம் பேசிய பிறகு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தளபதி நரவனேவைத் திரும்ப அழைத்து, பிரதமரின் அறிவுறுத்தல் படி,
“உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அப்படிச் செய்து கொள்ளுங்கள்! என்று பொறுப்பில்லாத பதிலைத் தருகின்றார்!

ஆனால் அதற்குள் சீனாவின் ராணுவம் நம்மை ஒரு வழி பண்ணி விட்டது!

ராகுல் காந்தியை பேச விடாமல் எப்படி தடுக்கிறார்கள் என்பதை கீழே உள்ள காணொளியை பாருங்கள்.


குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல பாஜகவினர் தயாராக இல்லை. மாறாக பத்திரிக்கையில் சொல்லியதை படிக்கக் கூடாது. பிரசுரிக்கப் படாத புத்தகத்தை படிக்கக் கூடாது என்றெல்லாம்தான் பம்மாத்து செய்கிறார்கள்.

ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும்,

மோடி ஒரு வெற்று வேட்டு. யாரைக் கண்டாலும் நடுங்கிப் போவார் என்று.

அதனால்தான் ஒட்டு மொத்த பாஜகவினரும் "மரண பயத்தை காண்பிச்சுட்டாங்க பரமா" என்று கதறுகிறார்கள்.

இன்னும் கூட அவர்கள் கதறுவார்கள்.

பிகு" நீல நிறத்தில் இருப்பதை மதுரை தோழர் பகத்சிங்க் அவர்களின் பக்கத்திலிருந்து எடுத்து பகிர்ந்து கொண்டுள்ளேன்.

சங்கிகள் - திருந்த மாட்டார்கள்

 


பாஜகவின் பெரிய சங்கி எச்.ராசா ஒரு நிகழ்வில் பங்கேற்ற போது அவருக்கு உடல் நலன் பாதிக்கப்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மேடையில் சரிந்து விழும் போது திமுக வைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய மருத்துவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவரும் உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளனர். திமுக கொண்டு வந்த தமிழறிஞர் இட ஒதுக்கீட்டுத் திட்டம் மூலம் மருத்துவரான தமிழிசை அம்மையார் அவர்களும் தலையிட்டுள்ளார்.

தமிழிசை நீங்கலாக மற்றவர்களும் தலையிட்டுள்ளது காணொளி ஒன்றில் தெளிவாக தெரிகிறது.

எச்.ராசாவிற்கு மற்றவர்கள் உதவியதை பார்த்த சிலர் பதிவிட்டுள்ளனர். முதல்வர் சென்ற வாகனத்தின் டயர் வெடித்த போது அது முருகன் செயல் என்று உரக்கச் சிரித்த சங்கிகள் போல யாரும் எதுவும் எழுதவில்லை. தமிழ்நாட்டின் மனித நேய மரபை உணர்ந்து இனியாவது எச்.ராசா வெறுப்பரசியலை கைவிடுவார் என்ற நம்பிக்கையைத்தான் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் சங்கிகளால் இதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தலைவருக்கு ஒரு இஸ்லாமியரும் காங்கிரஸ் பெண்மணி ஒருவரும் உதவினார் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சில்லறை சங்கிகள் மட்டுமல்ல பெரிய சங்கி தமிழிசை கூட உண்மைகளை மூடி மறைத்து ஸ்டிக்கர் ஒட்டியதாக கதை விடத் தொடங்கினர்.

முதல்வர் சென்று நலன் விசாரித்ததைக் கூட கொச்சைப்படுத்தி உள்ளனர். 

சங்கிகள் மனித நேயம் என்பதற்கு அர்த்தம் தெரியாத, எந்த நாகரீகமும் அற்ற காட்டுமிராண்டிகள்,  

நாளை எச்.ராசா நலம் பெற்று வந்தால் கூட விஷம் போல வெறுப்பைத்தான் கக்குவார். 

அவர்கள் அனைவருமே என்றுமே  திருந்தாத ஜந்துக்கள். 



Sunday, February 1, 2026

இந்த வருஷ பட்ஜெட்டிலும் . . .

 


நிர்மலா அம்மையாரின் பட்ஜெட் குறித்து இரண்டாண்டுகள் முன்பு போட்ட படம்தான்.

அது இன்றைக்கும் பொருந்தும்.

அடுத்த வருடமும் பொருந்தும்.

வீணாகிப் போன மோடி பிரதமராக இருக்கும் வரை தொடரும்

கோட்சேவுக்காக மறைக்கப்படுகிறதா காந்தியின் உடல்?

 


நேற்று முன் தினம் மகாத்மாவை மறவோம், கோட்சேவையும் . . .  என்ற பதிவில் போடுவதற்காக மகாத்மாவின் சடலத்தை வைத்திருக்கும் படத்தை கூகிளில் தேடினேன்.

என்ன பதில் கிடைத்தது பாருங்கள்.


மகாத்மா காந்தியின் பெயரை வேலை உறுதிச்சட்டத்திலிருந்து நீக்கியவர்கள், இப்போது அவரது சடலத்தின் படத்தையும் இருட்டடிப்பு செய்கிறார்கள்.

கோட்சேவின் புகழ் பாடும் மோடி வகையறாக்களுக்கு அவனால் கொல்லப் பட்ட மகாத்மாவின் சடலம் பொது வெளியில் இருப்பது உறுத்தலாகத்தானே இருக்கும்!

பிகு: பழைய பதிவொன்றை தேடிப்பிடித்து கிடைத்த படத்தை பகிர்ந்து கொண்டேன்.


Saturday, January 31, 2026

எல்லா கவர்னருக்கும் இதே பிழைப்புதானா?

 


தமிழ்நாடு சட்டபேரவையிலிருந்து ஆரெஸெஸ் ரெவி ஓடிப் போன கதை நமக்குத் தெரியும்.

ரெவி மட்டுமல்ல,

கேரள ஆட்டுத்தாடி ஓடிப் போகவில்லை. ஆனால் மாநில அரசு தயாரித்த உரையில் சில ப்த்திகளை படிக்கவில்லை.

கர்னாடக ஆட்டுத்தாடியும் ஏற்கனவே தான் கொண்டு வந்திருந்த ஒரு அறிக்கையை படித்து விட்டு இரண்டு நிமிடங்களில் ஓடி விட்டது.

பாஜக ஆளாத மாநிலங்களின் ஆட்டுத்தாடிகள் அத்தனை பேரும் "ஒசாமா பின் லேடனின் விலாசம் கேட்கும் மனநிலம் பாதிக்கப்பட்டவர்கள்" போல சட்டப்பேரவையிலிருந்து ஓடுவதையே பிழைப்பாகக் கொண்டுள்ளனரே!

Friday, January 30, 2026

மகாத்மாவை மறவோம். கோட்சேவையும்

 


இந்தியாவின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சூழ்ச்சியால், கோழை சாவர்க்கர் போட்டுக் கொடுத்த திட்டத்தின் படி கோட்சேவின் தோட்டாக்களுக்கு மகாத்மா காந்தி தன் இன்னுயிரை அர்ப்பணித்த நாள் இன்று.

விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளின் கையில் ஆட்சி இருக்கும் கொழுப்பில் இன்று ஏராளமான பதிவுகளை பார்க்க முடிந்தது.

மகாத்மாவை கொச்சைப்படுத்தும் பதிவுகள் மட்டுமல்ல அது, கொலைகாரன் கோட்சேவை தேசப்பிதா என்று வர்ணிக்கும் அளவிற்கு எழுதப்பட்ட பதிவுகள் அது.

அவர்கள் விரும்பியபடி இந்தியா 'ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம்" என்று மாறாமல் இன்னும் பன்முகத் தன்மையோடு நீடிப்பதற்கான அடித்தளம் இட்டவர்கள் காந்தியும் நேருவும் என்பதால்தான் அவர்கள் இறந்து எத்தனையோ வருடங்கள் கடந்த பின்னும் இன்னும் வெறுக்கிறார்கள்.

இந்தியாவின் சிறப்பான பன்முகத்தன்மையையும் மத நல்லிணக்கத்தையும் மத சார்பின்மையையும் பாதுகாப்போம் என்று உறுதியேற்போம். அதன் மூலம் மகாத்மாவையும் மறக்காமல் இருப்போம். கோட்சே ஒரு கடைந்தெடுத்த கயவன் என்பதை அம்பலப்படுத்தும் ஒரு நூலின் அறிமுகத்தை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

கோட்சே கூட்டத்தின் சூழ்ச்சியும் சதியும்.

 



 

நூல் அறிமுகம்

 

நூல்                                                     : நாதுராம் கோட்சே –    உருவான வரலாறும்

                                                                இந்தியா குறித்த அவனது பார்வையும்

 

ஆசிரியர்                                          : திரேந்திர கே ஜா

தமிழில்                                             :  தமிழில் இ.பா.சிந்தன்

வெளியீடு                                         : எதிர் வெளியீடு

                                                                பொள்ளாச்சி

விலை                                                : ரூபாய் 500.00

 

 

ஆன்மீக அரசியல், நிழல் ராணுவங்கள் என்று சங் பரிவார அமைப்புக்களை, அவற்றின் சதிகளை செயல்பாடுகளை அம்பலப் படுத்திய நூல்களை எழுதிய திரேந்திர.கே.ஜா அவர்களின் நூல். முந்தைய நூல்களைப் போலவே இந்நூலும் பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் கடின உழைப்பால் நம்மிடம் தமிழில் பேசுகிறது.

 

இந்நூல் இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதி “சூழ்ச்சி” என்றும் இரண்டாம் பகுதி “சதி”  என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

 

முதல் பகுதியின் பக்கங்களை தள்ளுவதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதற்கு நூலாசிரியரோ, மொழி பெயர்ப்பாளரோ காரணம் அல்ல. ஏனென்றால் முதல் பகுதி கோட்சேவின் ஆரம்ப கால வாழ்வை சொல்கிறது. கோட்சேவின் மந்தம் நூலிலும் எதிரொலிக்கிறது.  எந்த ஒரு வேலையையும் செய்ய உடல் வணங்காத, ஆனால் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை கொண்ட மனிதனாகவே கோட்சே இருந்திருக்கிறான்.

 

மகாத்மா காந்தியின் சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டவனின் வாழ்க்கை சாவர்க்கரின் சகவாசத்தால் திசை மாறுகிறது.  மதவெறி மனதில் ஊறுகிறது. மகாராஷ்டிராவின் பேஷ்வாக்களைப் போல இந்து ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்று ஆசைப்படும் கோட்சே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சாவர்க்கரின் இந்து மகா சபை ஆகிய இரு அமைப்புக்களிலும் செயல்படுகிறான்.

 

ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபை ஆகிய இரண்டும் தனித்தனி அமைப்புக்கள் போல காட்சியளித்தாலும் இரண்டின் நோக்கங்களும் ஒன்றே என்பதையும் இந்துக்கள் மட்டுமே இந்தியக்குடிமகனாக இருக்க வேண்டும் என்பதையும் இதர மதச் சிறுபான்மையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இரண்டு அமைப்பிறகும் வேறுபாடுகள் கிடையாது என்பதை நூல் விரிவாக பேசுகிறது.

 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பாடப்படும் பாடலோடுதான் கோட்சே இந்து மகா சபை கூட்டத்தை துவக்குவான் என்பதையும் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களையும் நடத்துவான் என்பதும் ஆர்.எஸ்.எஸ் நிறுவனரான ஹெட்கேவர் இந்து மகா சபையின் துணைத்தலைவர் என்பதும் இரண்டு அமைப்புக்களும் வேறல்ல என்பதை உணர்த்தும்.

 

இந்து ராஜ்ஜியம் அமைவதற்கு காந்திதான் தடையாக இருப்பார் என்று கோட்சே நீண்ட நாட்களாகவே கருதி வந்தான் என்பதை ஆதாரங்களோடு எடுத்துரைக்கும் நூல், காந்தியே தற்கொலை செய்து கொள் என்று மகாத்மா காந்தி நடத்திய ஒரு போராட்டத்தின் போது கூச்சலிட்டான் என்பதையும் சொல்கிறது.

 

கோட்சேவைப் பற்றி மட்டும் இந்த நூல் பேசவில்லை, கோட்சேவுடன் மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட நாராயன் ஆப்தே, இருவருக்குளான நட்பு ஆகியவற்றைப் பற்றியும் பேசுகிறது. கோட்சே அடிப்படையில் பெண்களுக்கு எதிரானவன் என்றும் நாராயண் ஆப்தே பெண்களை வஞ்சிப்பவன் என்பதும் தெரிகிறது. சாவர்க்கரின் அரசியல் (மன்னிப்பு உட்பட) நூல் விவரிக்கிறது.  கோட்சே பத்திரிக்கையாளர் அவதாரமெடுத்து நச்சு பரப்பியதையும் நூல் முழுமையாக பதிவு செய்துள்ளது. அதிலே பிரச்சினை வந்த போது சாவர்க்கர் பாணியில் மன்னிப்பு கேட்கவும் அபராதம் செலுத்தவும் அவன் தயங்கவில்லை

 

நூலின் இரண்டாம் பகுதி ஒரு துப்பறியும் நூலுக்கு இணையான வேகத்தில் செல்கிறது. இந்தியாவை இந்து நாடாக உருவாக்க வேண்டும் என்பதற்காக மத வெறி கொண்டலைந்த கோட்சே ஆப்தே கூட்டாளிகள், ஜின்னாவை கொல்ல வேண்டும், பாகிஸ்தான் செல்லும் ரயிலை தகர்க்க வேண்டுமென்று திட்டமிட்டு நிதி சேகரிக்கிறார்கள், ஆனால் அவர்களால் அது முடியவில்லை அதனால் காந்தியை கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக ஆட்களை சேர்க்கிறார்கள்.

 

ஆப்தே இத்திட்டத்தில் தீவிரமாக இருக்க கோட்சேவோ பட்டும் படாமல்தான் இருக்கிறான். சாவர்க்கரை சந்தித்து ஆசி வாங்கிக் கொண்டு புறப்படுகின்றனர். மதன் லால் பக்வா என்பவனை அவனுக்கு தெரியாமலேயே காந்தியை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். கடைசி நேரத்தில் அவன் பயந்து போய் பின் வாங்க, கையெறி குண்டை அவன் வீசினால்  அந்த குழப்பத்தில் மற்றவர்கள் சுட்டு விடுவார்கள் என்று முடிவு செய்யப்படுகிறது. ஜனவரி 20 அன்று பக்வா குண்டை வீச, மற்றவர்கள் எதுவும் செய்யாமல் முயற்சி தோற்றுப் போகிறது. அவன் மட்டும் மாட்டிக் கொள்கிறான்.

 

அதன் பின்பு மகாத்மா காந்தியை சுடுவதென்று கோட்சே முடிவு செய்கிறான். அந்த கொடுமையையும் நிகழ்த்துகிறான். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்களின் வழக்கில் மக்களின் ஆதரவு கிடைத்தது போல தனக்கும் இந்துக்களின் ஆதரவு கிடைத்து பெரிய ஆளாகி விடலாம் என்பதுதான் கோட்சேவின் எண்ணம். ஆனால் அது நடக்கவில்லை. மக்களின் எதிர்ப்பு மட்டுமே கிடைத்தது.

 

அவனுக்கும் ஆர்.எஸ்.எஸ் ற்கும் சம்பந்தம் கிடையாது என்று சொன்னதெல்லாம் பொய் என்பது பின்பு நடைபெற்ற சோதனைகளில் கிடைத்த ஆவணங்களின் மூலம் அம்பலமானது என்பதை நூல் பதிவு செய்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் நடக்கப்போவது முன்பே தெரியும் என்பதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வாக்கர் ஒரு கூட்டத்தில் பேசிய போது பூடகமாக தெரிவித்துள்ளார் என்பதையும் நூல் பதிவு செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் பட்டியலையோ வரவு செலவு கணக்குகளையோ பராமரிக்காமல் இருப்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பதற்குத்தான் என்கிறது நூல்.  கோட்சே வைத்திருந்த கணக்கு நோட்டு கிடைத்ததால் அவனது கூட்டாளிகள் சிக்கிக் கொண்டனர் என்பதோடு இணைத்துப் பாருங்கள்.

 

காந்தியின் கொலை வழக்கின் போது  யாரோ ஆங்கிலத்தில் தயாரித்து கொடுத்த உரையைத்தான் கோட்சே படித்தான் என்றும் அதன் மூலம் தன்னை தியாகியாக காண்பித்துக் கொள்ள முயன்றான் என்பதையும் நூல் உணர்த்துகிறது.  தூக்கு மேடை ஏறுவதற்கு முன்பு கூட கடைசியாக கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரார்த்தனை பாடலை கோட்சே பாடியிருக்கிறான். அகண்ட பாரதம் உருவான பின்பே சிந்து நதியில் தன் அஸ்தியை கரைக்க வேண்டும் என்று கோட்சே சொன்னதால் அது இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று பரப்பட்டுள்ள செய்தியும் ஒரு கட்டுக்கதையே என்பதை நூல் சொல்கிறது. எப்படி? நூலை படித்து விடுங்களேன்.

 

இந்தியாவில் இந்துத்துவ கொள்கைகளின் தோற்றத்தையும் அது எப்படி மகாத்மா காந்தியின் கொலைக்கு இட்டுச் சென்றது என்பதையும் தன்னை ஒரு நாயகனாக உருவாக்கிக் கொல்லவே கோட்சே காந்தியை கொலை செய்தான் என்பதையும் மிகவும் விளக்கமாக சொல்கிறது இந்நூல்.  மொழியாக்கம் என்ற உணர்வே வராத அளவிற்கு சிறப்பாக தமிழில் தந்துள்ள தோழர் இ.பா.சிந்தனுக்கும் கருத்துக்களை முடக்கும் ஆட்சியாளர்கள் இருப்பினும் இந்த நூலை வெளியிட்ட எதிர் வெளியீடு தோழர் அனுஷிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

 

பின் குறிப்பு : திருமணம் ஆனவன் என்பதை மறைத்து நாராயண் ஆப்தேவால் ஏமாற்றப்பட்ட பெண் மனோரமா என்ற பெண்ணும் மதன்லால் பக்வாவை மிகவும் நேசித்த செவாந்தி என்ற பெண்ணும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் துயரத்தை அடிப்படையாகக் கொண்டே புனைவுகளை உருவாக்க வேண்டுமென்ற தூண்டுதல் வருகிறது.

 

பொறுப்பில்லாமல்,வெறுப்பில் பேசலாமா யுவர் ஆனர்?

 


தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களும் ஓய்வுக்குப் பிந்தைய பதவிக்கான நுழைவுத் தேர்வை எழுதி விட்டார் போல. வெறுமனே அரசை மட்டும் நம்பாமல் வெரும் வெளி வேண்டும் என்பதற்காக முதலாளிகளின் மனம் குளிரும் படி பேசியுள்ளார்.


மிக மிக அபத்தமாகவும் வன்மமாகவும் உளறியுள்ளார்.  இவர் சொன்ன அபத்தத்தை  சங்கிகள் பலர் வாந்தியெடுப்பார்கள். அப்படிப்பட்ட சுரண்டல்வாதிகள் சாம்சங் போராட்டத்தின் போதும் வாந்தி எடுத்தனர். அந்த மூடர்களுக்கு அறிவு வர வேண்டும் என்பதற்காக அப்போது எழுதிய மூன்று பதிவுகளின் இணைப்புக்கள் கீழே உள்ளது.

தொழிலாளர்களின் போராட்டம் - சங்கிகளின் பொய்க்கணக்கு . . .

டாடாவை வெளியேற்றிய குற்றவாளிகள் யார்?

தொழிற்சங்கம் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதை காலம் உடனடியாகவே உரக்கச் சொன்னது.

அது என்ன?

கீழேயுள்ள இணைப்பை பாருங்கள்.

தொழிற்சங்கங்கள் இருந்திருந்தால் ??? சங்கிகளே சொல்லுங்கள்

தலைமை நீதிபதி அவர்களே, தொழிற்சங்கப் போராட்டங்களால் எத்தனை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன? உங்களிடம் விபரம் உள்ளதா? ஆதாரங்கள் உள்ளதா? சங்கிகள் போல வாய்க்கு வந்ததை உளறக்கூடாது.

எங்கள் எல்.ஐ.சி நிறுவனத்தை அழிக்க ஆட்சியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். அதனை இன்று வரை பாதுகாத்து வருவது எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான். பல நிறுவனங்களுக்கும் காவல் அரண்  தொழிற்சங்கங்கள்தான். 

வீடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப் படக்கூடாதா? அப்படி நிர்ணயிக்கப்படுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? ஒரு வேளை அப்படி நிர்ணயிக்கப்பட்டால் அந்த ஊதியம் கொடுக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு உங்களுக்கு கிடையாதா? அரசு நிர்ணயிக்கும் ஊதியத்தை கொடுக்காமல் ஏமாற்றும் மோசடிப் பேர்வழிகளை கோர்ட்டுக்கு இழுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

மோடி போல, ஆட்டுக்காரன் போல நீங்கள் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது. 

நீங்கள்  படித்தவர். சுயேட்சையான அமைப்பு ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்.

இனியாவது உங்கள் பதவிக்குரிய கண்ணியத்தை காத்திடுங்கள். 

Thursday, January 29, 2026

எது உமது வாய் எடப்பாடி?


 
கரூர் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்த போது தவெக தற்குறிகள் போல செந்தில் பாலாஜி மீது பழி போட்டு, அதையே சட்டப்பேரவையிலும் பேசி, சி.பி.ஐ விசாரணை கேட்டு, ஏதோஒரு கூட்டத்தில் தவெக கொடியை ஒருவர் (அவர் அதிமுக ஆள் என்பது பிறகு தெரிந்த உண்மை) காண்பித்த போது புளகாங்கிதம் அடைந்த எடப்பாடி அவர்கள் இன்று தவெக வை தாக்கியுள்ளார்.



இரண்டில் உமது நிஜ வாய் எது எடப்பாடி அவர்களே?

யாருங்க அது! இரண்டுமே நாற வாய் என்று சொல்வது 😜😜😜😜😜😜😜

அரசியல் சாசனத்தை மதிக்க மாட்டீங்களா ஜட்ஜய்யா?

 


நம்ம திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் உதிர்த்த லேட்டஸ்ட் அரிய முத்து கீழே உள்ளது.


பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே பேதம் கற்பிக்கிற, பெண்களை ஒடுக்குகிற, ஜாதிய சிந்தனையை ஊக்குவிக்கிற, அறிவியல் சிந்தனைக்கு எதிரான சனாதன தர்மம், அடிப்படையில் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுவேன் என்று வெளிப்படையாகவே சொல்கிற திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர், நீதிபதி பதவியில் நீடிக்க அருகதை அற்றவர்.

கார் விபத்து வழக்கில் தன் சகோதரிக்காக ஆள் மாறாட்டம் செய்த குற்றவாளியை, அவர் வேதம் அறிந்தவர் என்பதால் விடுதலைக்கு வழி வகுத்தேன் என்று சொன்னவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.


Wednesday, January 28, 2026

அது ஆக்ஸிடென்ட் தானா?

 


மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற தனி விமானம் விபத்துக்குள்ளாகி இறந்து போயுள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அவர் பாஜக கூட்டணியில் போட்டியிடாமல் தன் சித்தப்பாவின் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார்.

அதனால் கேரட்கிறேன்.

இது விபத்துதானே?

Tuesday, January 27, 2026

அதானி டிவிக்காரன் கணக்கே தனிதான் . . .

 




அடுத்த கேரளா முதல்வர் யாரென்று அதானி முதலாளியாக உள்ள என்.டி. டிவி ஒரு கணக்கு போட்டுள்ளது.


அதில் 16.9 % ஐ விட 14.7% பெரியதாக இருக்கிறது.

அது மட்டுமல்ல மார்க்சிஸ்ட் கட்சிக்கு இரண்டு முதல்வர், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு முதல்வர் என்று பிரித்து பித்தலாட்டம் செய்துள்ளது.

அப்படி செய்தும் பாஜக முதல் இடத்திற்கு வர முடியலையே அதானி!

எப்படி இருந்த என்.டி, டிவி இப்படி ஆயிடுச்சே!

Monday, January 26, 2026

ஜெயலலிதா ஆகப்போகிறாரா விஜய்?

 


கீழேயுள்ள செய்தியை பாருங்கள்


2001 சட்டப்பேரவை தேர்தலின் போது டான்சி வழக்கிலும் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும் ஏ1 ஜெயலலிதாவிற்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருந்தது. அவர் வேட்பு மனு தாக்கல் செய்தால் அது கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்பது தெளிவாகவே தெரிந்தது.

அதனால் அவர் என்ன செய்தார்?

ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை, புவனகிரி, கிருஷ்ணகிரி என்று நான்கு தொகுதிகளில் வேட்பு மனு செய்தார்.

அதனால் அவர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதற்காக நிராகரிக்கப்பட்டது என்பதற்காக இரண்டிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததால் நிராகரிக்கப்பட்டது என்று வரலாற்றில் பதிவாகி விட்டது.

அது போல

தெர்தலில் போட்டியிட்டு தோற்றார் என்று வரலாற்றில் பதிவாகுவதற்கு பதிலாக வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் போட்டியிடவே முடியவில்லை என்று வரலாற்றில் பதிவு செய்ய விரும்புகிறாரா விஜய்?

புஸ்ஸி அதைத்தான் சொல்கிறாரா?

கொடி பறக்கட்டும்

 


இந்தியராய் பிறந்த அனைவருக்கும்
சமூக நீதி,
பொருளாதார சமத்துவம்,
அரசியல் சமத்துவம்
கிடைத்திடவும்


கருத்துரிமை, 
எழுத்துரிமை,
பேச்சுரிமை
வழிபாட்டுரிமை,
கிடைப்பதை உறுதி செய்திடவும்

சமத்துவமும் சம வாய்ப்பும் 
அனைவர் மத்தியில் நிலவிடவும்
உறுதியேற்ற
சோஷலிச, மதச்சார்பற்ற, இறையாண்மை கொண்ட,
இந்திய ஜனநாயகக் குடியரசு நாட்டின்
மூவர்ணக்கொடி 
அரசியல் சாசனத்தின் அனைத்து விழுமியங்களையும்
பறை சாற்றி உயரத்தில் பறக்கட்டும்.

பாழ்படுத்த நினைக்கும் வீணர்களை
வீழ்த்தட்டும் இந்திய ஜனநாயகம்.
காவிக்கொடியை புறந்தள்ளி 
ஜனநாயகத்தின் பாதுகாவலர்களின்

செங்கொடியும் பட்டொளியும் வீசி பறக்கட்டும்.

மீள் பதிவு