Monday, March 2, 2026

எடப்பாடி எங்கே நயினார்?

 


மதுரை என்.டி.ஏ கூட்ட அரங்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் படத்தை பாஜக கட்டளையின் பேரில் நீக்கியது பற்றி நேற்று எழுதியிருந்தேன்.

அந்த பதிவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பக்கத்தைப் பார்த்தேன்.

இன்று  நடைபெறவுள்ள கூட்டத்திற்கான பின்னணித்திரையின் படத்தை அவர் பகிர்ந்தார். 

அதையெல்லாம் பாருங்கள்.









ஒரு பக்கத்தில் மோடி படம் இருப்பது போல இன்னொரு பக்கத்தில் எடப்பாடியின் படமும் உள்ளது. ஆனால் நயினார் நாகேந்திரன் பகிர்ந்த எந்த ஒரு படத்திலும் எடப்பாடியை காணவில்லை.

முதல் கூட்டத்திலேயே ஒரு சாதாரண ட்விட்டர் பதிவில் கூட எடப்பாடியை மதிக்காத பாஜக மாநிலத்தலைவர் தயாராக இல்லை. போகப் போக இன்னும் என்னென்ன அவமானங்கள் எடப்பாடிக்கும் அதிமுகவிற்கும் காத்திருக்கிறதோ?

பாவம் அந்த கட்சியின் தொண்டர்கள் !!!!

பிகு: நேற்று பகிர்ந்து கொள்வதற்காக நேற்று முன் தினம் எழுதியது. தோழர் தயாநிதி அவர்களின் மறைவினால் இன்று பகிர்ந்து கொள்கிறேன். 

இம்சை அரசன் நடிப்பு மோடி

 


வல்லவராயனிடமிருந்து தன் உயிரை காத்துக் கொல்ல காலில் விழுந்த இம்சை அரசன் புலிகேசி வடிவேலுவின் நடிப்பை விட தமிழ்நாட்டு மக்களின் வோட்டுக்களை ஏய்த்துப் பறிக்க மோடி திருப்பரங்குன்றம் கோயில் விழுந்து கும்பிட்ட மோடியின் நடிப்பு சிறப்பு. . .

ஆமாம். கோயில் பிரகாரத்தில் இப்படி சிவப்புக் கம்பளம் விரிப்பதற்கு ஆகம விதிகள் இடம் தருகிறதா? கோயில் நடைமுறைகள் அனுமதிக்கிறதா? 

இதைப் பற்றியெல்லாம் சங்கிகள் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு கடவுள் வெறும் அரசியல் மட்டும்தான். ராசாவின் ஐகோர்ட் அளவிற்குக் கூட அவர்கள் கடவுளை மதிக்க மாட்டார்கள். 

Sunday, March 1, 2026

அவசரம் ஏன் தோழர்?


 இன்றைய காலைப் பொழுது ஒரு துயரச் செய்தியோடு விடிந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ன் மாவட்ட செயற்குழு உறுப்பினர், கட்சியின் முன்னாள் மாவட்டச்செயலாளர், தற்போதைய மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.டி.சங்கரி அவர்களின் கணவரரும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் ஆர்.தயாநிதி நேற்று நள்ளிரவு காலமானார்.

கடந்த ஜனவரி மாதம் இதய பை பாஸ் சர்ஜரி செய்து கொண்ட தோழர் தயாநிதி அவர்களை கடந்த புதன் கிழமையன்றுதான் நாங்கள் (இன்சூரன்ஸ் ஊழியர் சங்கப் பொறுப்பாளர்கள்) சந்தித்து நலன் விசாரித்து வந்தோம்.

மிகுந்த நம்பிக்கையோடு பேசிய தோழர் தயா விரைவிலேயே எப்போதும் போல இயக்கங்களுக்கு, களத்திற்கு வருவேன் என்று தெரிவித்தார். ஆனால் அவரது நம்பிக்கை பொய்த்துப் போனது கொடுமை. 63 வயது என்பது இறப்பதற்கான வயதா என்ன? 

நான் வேலூருக்கு வந்த காலம் முதல் அறிவேன்.  எங்களது எத்தனையோ கூட்டங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.  களத்தில் கடுமையாக உழைப்பவர், ஒன்றிணைந்த வேலூர் மாவட்டத்தை அங்குலம் அங்குலமாக அறிந்தவர்.  துல்லியமான திட்டமிடல் அவரது சிறப்பு. 

மிகச் சிறந்த ஓவியர். 1996 ல் எங்கள் தென் மண்டல மாநாடு வேலூரில் நடைபெற்ற போது அனைத்து விளம்பரப் பணிகளையும் அவர்தான் செய்தார். பிரம்மாண்டமான பேனர்கள், அலங்காரமான, அழகான பின்புலம், டயர் தட்டிகள் என்று பல வடிவங்களில் அவர் கைவண்ணம் மிளிர்ந்தது.

நல்ல வாசிப்பாளர். கடைசி சந்திப்பின் போது கூட தான் அப்போது படித்து முடித்த நூல்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

வேலூர் மாவட்ட கட்சிக்கென ஒரு மாதாந்திர செய்தி மடல் வெளியிட வேண்டும் என்பது அவர் நீண்ட நாள் விருப்பம். நாம் இது தொடர்பாக உட்கார்ந்து விவாதிக்க வேண்டும் என்று பலமுறை சொல்லியுள்ளார். அது ஏனோ கைகூடவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது உண்மையான செயல் வீரரை இழந்துள்ளது,  வாழ்வுக்குப் பிறகும் தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க, மக்களுக்கு பயன் கிடைக்கும் வண்ணம் தோழர் தயா உடல் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட உள்ளது. 

செவ்வணக்கம் தோழர் தயாநிதி . . .

பிகு: எங்கள் சங்க அலுவலகம் சரோஜ் இல்லத் திறப்பு விழாவில் தோழர் தயாநிதி வாழ்த்துரை வழங்கிய போது எடுக்கப்பட்ட படம் மேலே உள்ளது. 

Saturday, February 28, 2026

கட்சியின் பெயரை மாத்திடுங்க எடப்பாடி

 


நாளை மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் மோடி பேசுகிறார். அதற்காக அமைக்கப்பட்ட அரங்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படத்தை பாஜகவினரின் கட்டளைப்படி அதிமுக அகற்றியுள்ளது. 


இன்றைய எடப்பாடி திமுகவிற்கு தந்தை பெரியாரெல்லாம் தேவை இல்லை என்பதினால் கட்டளையை நிறைவேற்றி விட்டார். அவர்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெ கூட முக்கியமில்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டை கொண்டாடிய போது சேலத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ் ஆகியோரின் கட்டவுட்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்த போது எம்.ஜி.ஆர், ஜெ வின் கட்டவுட்டுகள் தம்மாத்தூண்டாக இருந்ததை நானே நேரில் பார்த்துள்ளேன். 

சங்கிகளுக்கு தந்தை பெரியாரை மட்டுமல்ல, அறிஞர் அண்ணாவையும் பிடிக்காது. அறிஞர் அண்ணாவை இழிவு படுத்தியவர்களோடு இனி எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று சொல்லித்தான் கடந்த மக்களவைத் தேர்தலின் போது என்.டி.ஏ விலிருந்து வெளியே வந்தார்கள். மக்கள் அதையெல்லாம் மறந்திருப்பார்கள் என்று நினைத்துத்தான் இப்போது மீண்டும் கூட்டணிக்குள் நுழைந்துள்ளார் எடப்பாடி.

இன்று தந்தை பெரியார் படத்தை நீக்கச் சொன்ன பாஜக உங்கள் கட்சியிலின் பெயரிலிருந்தும் கட்சியின் கொடியிலிருந்தும் அண்ணாவை நீக்கச் சொல்வார்கள். நீங்களும் வெட்கமில்லாமல் அதை செய்வீர்கள். பாஜக சொல்லி செய்வதற்குப் பதிலாக நீங்களே உங்கள் கட்சியின் பெயரை எ.தி.மு.க என மாற்றி விடுங்கள்.

எதிமுக என்றால் எடப்பாடி திமுக என்றும் சொல்லலாம். எட்டப்பன் திமுக என்றும் சொல்லலாம். 

ANTI INDIAN ஆக இருப்பதே பெருமை

 


பாஜகவின் பிஞ்சிலே வெம்பிப் போன, விமானத்தின் எமர்ஜென்சி கேட்டை ஆட்டுக்காரனோட திறக்க முயற்சித்த தேஜஸ்வி சூர்யா உதிர்த்த முத்து கீழே.


மோடியை ஆதரித்து இந்தியனாக இருப்பதற்கு பதிலாக மோடியின் கொள்கைகள், நடவடிக்கைகள், அராஜகங்கள் ஆகியவற்றுக்கு எதிராக நின்று தேசத்துரோகி பட்டம் பெறுவதே மேல் . . .

Friday, February 27, 2026

மோடிஷா அரசியல் செய்ய முடியாதே ஜட்ஜய்யா?

 


ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்,  துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி உயர் நீதிமன்றம் ஊழல் வழக்கிலிருந்து முற்றிலுமாக விடுவித்துள்ளது. 

மோடி, அமித்ஷாவின் ஏவல் நாய்களாக செயல்பட்டு வரும் சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு ஆகியவைகளுக்கு கிடைத்த சவுக்கடி இத்தீர்ப்பு.

தென் பகுதி மக்களை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைப் பிரயோகங்களுக்கு வேறு குட்டு வைத்துள்ளது. 


சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு போன்றவை இனியாவது தங்களது சுயேட்சைத் தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆட்சியாளர்களின் அடிமைகளாய் இருப்பதை நிறுத்த வேண்டும்.

அப்படி செயல்பட்டால் மட்டுமே மோடி-அமித்ஷா வகையறாக்களின் வாஷிங் மிஷின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


நெகிழ்ச்சியாய் இருந்தது முதல்வரே . . .


 

மறைந்த பொதுவுடமை இயக்கத் தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் முழக்கங்களை எழுப்பிய காட்சி  மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.


இது தேர்தல் கால செய்கை என்றெல்லாம் சிலர் நக்கலடிக்கலாம். அவருக்கு முதல்வராகும் யோகமே கிடையாது என்றெல்லாம் ஜாதகம் பார்த்து சொன்னவர்களால் அவர் முதல்வராக இருப்பதை இன்னமும் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அப்படிப்பட்ட சின்ன புத்திக்காரர்களை ஒதுக்கித் தள்ளுவோம்.

அவர் இன்று முழக்கம் எழுப்பியது இயல்பாக, மனதிலிருந்து வந்ததாகத்தான் நான் உணர்கிறேன். 

Thursday, February 26, 2026

நடுஜாமத்துல சுடுகாட்டுக்கு நீங்க போங்க மோடி

 

\இன்று காலை ஆங்கில இந்து நாளிதழை கையிலெடுத்ததுமே கடுப்பானது. 


இஸ்ரேல் நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, இஸ்ரேலோடு இந்தியா உறுதியாக நிற்கிறது என்று பேசியுள்ளார். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தை ஒழித்துக் கட்டுவதில் அவர் உறுதியாக இருக்கிறாராம். இஸ்ரேல் மீது 07, அக்டோபர், 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று வேறு சொல்லியுள்ளார்.

இஸ்ரேல் பற்றிய எந்த வித புரிதலும் இல்லாத ஆள் என்று மோடியை சொல்ல முடியாது. இந்தியாவில் ஊடகங்களையும் எதிர்க்கட்சியினரையும் உளவு பார்க்க பெகாஸஸ் மென் பொருளை இஸ்ரேலிடமிருந்துதானே அவர் வாங்கியிருந்தார்.

ஹமாஸிடம் அடி வாங்குமளவிற்கு இஸ்ரேல் என்ன அப்பாவி நாடா? மகாத்மா காந்தியின் அஹிம்சைக் கொள்கையை பின்பற்றும் நாடா அது?

இஸ்ரேலின் தோற்றமே அராஜகமானது. பாலஸ்தீனியர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து துரத்தி விட்டு அடாவடியாக ஆக்கிரமிப்பு செய்து உருவானதுதான் இஸ்ரேல்.

காஸா திட்டு, மேற்குக் கரை என்று இரு பகுதிகளோடு சுருங்கிப் போன பாலஸ்தீனத்தை அங்கேயாவது நிம்மதியாக வாழ விட்டார்களா?

மோடி சொல்கிற & அக்டோபர் 2023 தாக்குதலுக்குப் பிறகு எழுதிய பல பதிவுகளின் இணைப்பை கீழே அளித்துள்ளேன். தயவு செய்து பொறுமையாய் படியுங்கள்.










ஏற்கனவே பாலஸ்தீனியர்களில் பாதிப் பேரை கொன்று விட்ட இஸ்ரேல், ஹமாஸின் தாக்குதலுக்குப் பின்பு இன்னும் பல்லாயிரம் பேரை கொன்றுள்ளது. குழந்தைகளையும் பெண்களையும் கூச்சமின்றி கொன்றுள்ளது. மருத்துவமனைகளை குறி வைத்து தாக்கியுள்ளது. 

உலகின் மிகப் பெரிய தீவிரவாத நாடு, பேரழிவு சக்தி இஸ்ரேல்.

நீங்கள் அதனுடன்தான் நிற்பீர்கள்.
 
அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

இஸ்ரேலோடு போராடுபவர்களின் மதம் உங்களுக்கு பிடிக்காது.

உங்கள் எஜமானன் அமெரிக்காவின் நண்பன் இஸ்ரேல்.

அதனால் நீங்கள் இஸ்ரேலோடு நில்லுங்கள். 

ஏன் இந்தியா நிற்கிறது என்று சொல்லி எங்களையும் நடு ஜாமத்தில் சுடுகாட்டுக்கு அழைக்கிறீர்கள்? 

முந்தித்தருவதில் என்ன அவசரம்? ஆர்வம்?


 சமூக வலைத்தளக் காலம் வந்ததிலீருந்தே ஒரு மோசமான போக்கு உருவாகி விட்டது.

"உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" என்று தொலைக்காட்சிகள் அறிவிப்பது போல 

பல செய்திகளை தாங்கள்தான் முதலில் தெரிவித்தோம் என்று பெருமை பெற பலரும் ஆசைப்படுகிறார்கள்.

மொக்கை செய்தி தொடங்கி மரணச் செய்தி வரை முதலில் தெரிவித்து R.I.P போடுவதில் பயங்கர ஆர்வம்.

அதிலும் ஆளுமைகள் யாராவது மோசமான நிலைமையில் இருந்தால் அந்த ஆர்வம் கட்டுக்கடங்காமல் போய் விடுகிறது.

ஜெ விஷயத்தில் அந்த வேலையை ரங்கராஜ் பாண்டே செய்தார்.

தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு நேற்று முன் தினமே ஆர்.ஐ.பி போட ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படித்தான் டிசம்பர் இறுதியில்  இயக்குனர் பாரதிராஜா பற்றி வதந்தி பரப்பினார்கள். அவர் இன்னும்  மருத்துவமனையில் சிகிச்சையில்தான் உள்ளார்.

சமூக வலைத்தளத்தில் செயல்படுவோருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

நீங்கள் பதிவிடும் எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொண்டு பதியுங்கள்.

நீங்கள் ரங்கராஜ் பாண்டே கிடையாதல்லவா,  வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை இல்லாமல் முதலைத் தோலுடன் செயல்பட . . .

Wednesday, February 25, 2026

செவ்வணக்கம் தோழர் நல்லக்கண்ணு

 


மூத்த பொதுவுடமை இயக்கத்தலைவர்,

சுதந்திரப் போராட்ட வீரர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராய் செயல்பட்டவர்,

சிறை வாழ்வையும் தலைமறைவு வாழ்வையும் மகிழ்வாய் அனுபவித்தவர்.

இறுதி மூச்சு வரை போராளியாய் திகழ்ந்தவர், எளிமையாய் வாழ்ந்தவர், 

நூற்றாண்டு கண்ட தகைசால் தமிழர் 

தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு

நெஞ்சார்ந்த அஞ்சலி, செவ்வணக்கம் தோழர்.

அவரை ஒரே ஒரு முறைதான் பார்த்துள்ளேன். கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுக் கூட்டத்திற்கு செல்ல புகைவண்டியை பிடிக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த போது அங்கே வந்த அப்போதைய திருநெல்வேலி கோட்டப் பொதுச்செயலாளர் தோழர் டி.தேவபிரகாஷ், எனக்கு முன் இருந்த நாற்காலியைக் காண்பித்து யார் உட்கார்ந்திருக்கிறார் என்று பார்த்தாயா என்று கேட்டார்.

அங்கே அமர்ந்திருந்தது தோழர் ஆர்.நல்லக்கண்ணு.

தோழர் தேவபிரகாஷ் அவரோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். என்னையும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் மாநிலச் செயலாளர். ஆனால் தனியாகத்தான் இருந்தார். எந்த ஆரவாரமும் இல்லை. 

அவர்தான் தோழர் நல்லக்கண்ணு. 


கல்கோட்டியா நாய் ரோபோ - வட போச்சே மோடி

 


சீனாவிலிருந்து இறக்குமதி செய்த நாய் ரோபோவை தங்களுடைய திறன் மையம் உருவாக்கியது என்ற டுபாக்கூர் பீற்றல் அம்பலப்பட்டு அசிங்கப் படாமல் போயிருந்தால் ????

இது என் கற்பனை . . .

ஏஐ மாநாட்டின் இறுதி நாளன்று கல்கோட்டியா பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பை கொடுத்திருப்பார்கள்.

எங்கள் ஓரியான் நாய் ரோபோவை கண்டு பிடித்த விஞ்ஞானி யார் தெரியுமா? 

"பனிரெண்டாம் வகுப்பு படிக்கையிலேயே ரோபோவை உருவாக்கிய பிரதம மந்திரிதான் இந்த ரோபோவையும் வடிவமைத்தார்"

அரங்கம் எப்படி அதிர்ந்திருக்கும்!

சங்கிகள் எப்படியெல்லாம் கூச்சலிட்டிருப்பார்கள்!

அது மட்டுமா?

மோடியின் கண்டுபிடிப்புக்கள் என்று எவ்வளவு பெரிய பட்டியல் வந்திருக்கும்?



எந்திரன் சிட்டியைக் கூட அவர்தான் தயாரித்தார் என்று ஷங்கரைக் கூட சொல்ல வைத்திருக்கலாம்.

டுபாக்கூர் பல்கலைக்கழகம் மாட்டிக் கொண்டதால்

மோடி பாவம்! 

வட போச்சே !!!!

Tuesday, February 24, 2026

மோடி ரோபோ விஞ்ஞானியாம் . . .

 


 மோடியை ஒப்பிடுகையில் அண்டப்புளுகன், ஆகாயப்புளுகன் என்ற வார்த்தையெல்லாம் ஜுஜுபி. 

கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் அவருடைய லேட்டஸ்ட் பொய் ஒன்றை பாருங்கள்


நான் கூட  யாரோ மோடியை கலாய்க்க போட்டோஷாப் செய்தார்களோ என்று முதலில் யோசித்தேன்.

அந்த படத்தின் மேலே உள்ள கலாம் சென்டர் என்பதை வைத்து கொஞ்சம் இணையத்தில் தேடினேன்.

அது லக்னோவில் உள்ள ஒரு சங்கி என்.ஜி.ஓ. அங்கேதான் மோடி தான் பள்ளியில் படிக்கும் போதே ஒரு ரோபோவை உருவாக்கியதாகவும் அதற்காக பள்ளியில் அவருக்கு மெடல் கொடுத்ததாகவும் சொல்லி உள்ளார்.  அந்த கம்பி கட்டும் கதையை எப்படி விவரித்துள்ளார்கள் என்று பாருங்கள்.



நரேந்திர மோடி 1950 ல் பிறந்ததாக இப்போது சொல்கிறார்கள். ஒரு வேளை அவர் பனிரெண்டாவது படித்திருந்தால், பள்ளியில் படித்திருந்தால், 1968 ல் பனிரெண்டாவது படித்திருப்பார். 

இந்தியாவின் முதல் ரோபோ 1982 ல் உருவாக்கப்பட்டது என்றுதான் இணையம் சொல்கிறது. ஆனால் மோடி 14 வருடங்கள் முன்பாகவே ஒரு ரோபோவை தயார் செய்தார் என்று கூறினால், சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? 

மழை பெய்யும் போது போர் விமானங்கள் போனால் ரேடாரில் தெரியாது என்று விமானப்படைக்கு ஆலோசனை சொன்ன விஞ்ஞானி அல்லவா அவர்!

பிகு: இது தொடர்பாக இன்னொரு பதிவும் எழுதுவேன். 

சிந்துபைரவி பென்ஷன் காமெடியும் தவெக தற்குறிகளும்

 


சிந்துபைரவி திரைப்படத்தில் வரும் காமெடி காட்சியை முதலில் பாருங்கள்.


மத்தியரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை உயர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ள எட்டாவது ஊதியக் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள பணிகளில் (TERMS OF REFERENCE) என்பதில் ஓய்வூதியங்களை மாற்றி அமைப்பது என்பது இடம் பெறவில்லை. அதனை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய தர்ணாவில் வேலூரில் நான் பங்கேற்றேன். தர்ணாவை நிறைவு செய்து பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

அப்போது நான் இந்த திரைப்படக் காட்சியை குறிப்பிட்டு நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்த திரைப்படத்தில் பென்ஷனை நிறுத்துவது என்ற கருத்து நகைச்சுவைக்காக சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ அதனை நடைமுறைப்படுத்தும் அளவிற்கு மோசமானவர்கள் என்று பேசினேன்.

நேற்று வேறொரு காணொளியைக் கண்டேன்.

அது எங்கள் வேலூரில் சொல்லப்பட்டது என்பது ஒரு பெரிய கொடுமை.

அந்த கொடுமையை நீங்களும் பாருங்கள்.


தப்பித் தவறி, ஒரு மோசமான விபத்தாக இந்தக் கூட்டம் ஆட்சிக்கு வருமானால்  வயதானவர்களின் வாக்குரிமையை மட்டுமல்ல உயிர் வாழும் உரிமையைக் கூட பறித்து விடும் போல . . .

இப்படிப்பட்ட மோசமான புரிதல் காரணமாகத்தான் விஜய்யையும் அவர் கூட்டத்தையும் தற்குறிகள் என்று சொல்கிறோம். தாங்கள் ஏன் தற்குறிகளாக இருக்கிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத தற்குறிகள் அவர்கள். 

வம்புக்காக அலையும் திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர்

 


திருப்பரங்குன்றம் தீர்ப்பாளரை நீதிபதி பதவியிலிருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அளித்துள்ள முன்மொழிவு மிக மிக நியாயம் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.


ஆன்மீக குருக்களை கடவுளின் அம்சமாக பார்ப்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள்,  மூடர்கள், அயோக்கியர்கள், காட்டுமிராண்டிகள் என்று அவர் சொல்லியுள்ளார்.

பிரேமானந்தா, நித்தியானந்தா, ஆச்சாராம் பாபு, ராம்ரஹீம் சிங், சீசீ.ரவிசங்கர் உள்ளிட்ட ஏராளமான போலிகளை ஆன்மீகக் குருக்களாகவும் கடவுளின் அம்சமமாக கருதினால்தான் புத்திசாலி, உத்தமன், நாகரீக மனிதன் என்று இவர் சொல்வாரானால் அதை விட மூடராகவோ காட்டுமிராண்டியாகவோ, அயோக்கியனாக இருப்பதே மேல்.

தமிழ்நாட்டு மக்களை வெறுப்பேற்றி இவர் மீது மோசமாக பேச வைத்து அனுதாபம் தேட நினைக்கிறார். கலவரத்தை தூண்டும் எண்ணம் கூட இருக்கலாம்.

உச்ச நீதிமன்றம் இவர் மீது தன்னியல்பாக (SOU MOTU) நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று இல்லை என்பதால்தான் இவருக்கு தைரியம். 


பிகு: கடவுளின் அம்சமான ஆன்மீகக் குருக்கள் பற்றி கூடுதலாக அறிய, அவர்களின் நிழல் உலகம் பற்றி அறிய இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள் . .

Monday, February 23, 2026

இந்த லேடியா மோடியா என்பதையும் நினைவுகூர்வோமே மோடி

 


நேற்று குரங்குக் குளியலில் மோடி ஏ1 பற்றி உருகி உருகி பேசியுள்ளார்.  மோடிக்கும் ஏ 1 க்கும் ஒரு காலத்தில் நல்லுறவு இருந்திருக்கிறது. மோடி முதலமைச்சராக பதவியேற்ற போதெல்லாம் நேரில் போய் வாழ்த்தும் சொல்லியுள்ளார்.

ஆனால் அது 2014 மக்களவைத் தேர்தல் வரையில்தான்.

2014 தேர்தலில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் கூட்டணி கிடையாது. அதனால் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் தாக்கினார். இரு கட்சிகளாலும் தமிழ்நாட்டுக்கு வளர்ச்சியில்லை என்றெல்லாம் பேச கடுப்பான ஜெ மோடியை கடுமையாக தாக்கினார்.

குஜராத் மாடல் வளர்ச்சி என்பதெல்லாம் வெறும் மாயை என்றும் குஜராத் கலவரத்தையும் கண்டித்து இறுதியாக மக்களிடம் 

"நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள், மோடியையா, இந்த லேடியையா?" என்று கேட்டார்.

அதிமுக ஆட்களோ அந்த கேள்வியை லேடியா? கேடியா? என்று பரப்பினார்கள்.

மோடியின் உருக்கத்தை பார்க்கையில் "மோடியா, லேடியா" என்பதுதான் நினைவுக்கு வந்தது.

அதிமுகவினருக்கும் வந்திருக்கும்.

அவர்களுக்கான புதிய கேள்வி

"பழைய எஜமானியா? புதிய எஜமானனா?"

தொழிற்சங்கமாய் ஒன்றிணைவோம் - மோடியிடம் லூலா

 


இன்று காலையில் ஆங்கில இந்து நாளிதழின் முதல் பக்க தலைப்புச் செய்தியை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. கொஞ்சம் சிரிப்பும் வந்தது.

ஏன்?

முதலில் அந்த செய்தியை பாருங்கள்.


தொழிற்சங்கவாதியும் பிரேசில் தொழிலாளர்கள் கட்சியின் தலைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிகளை முறியடித்து ட்ரம்ப், மோடி போன்ற கிறுக்கு பிடித்த தலைவர்களின் வரிசையில் வரும் போல்சனரோவை தோற்கடித்து இப்போது பிரேசிலின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் லூலா பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மோடியை பக்கத்தில் வைத்துக் கொண்டு என்ன சொன்னார்?

டொனால்ட் ட்ரம்பின் அராஜக வரி விதிப்பால் பாதிக்கப்படும் நாடுகள், தனியாக அவரோடு பேசுவதற்குப் பதிலாக ஒரு தொழிற்சங்கம் போல ஒன்றிணைந்து பேசினால் நிச்சயம் பலன் கிடைக்கும். ஒரு தொழிற்சங்கவாதியாக என் அனுபவமும் இதுதான். ஒரு தனி தொழிலாளி, ஒரு கம்பெனி நிர்வாகத்தின் கொள்கைக்கு எதிராக பேசினால் எந்த பயனும் கிடைக்காது. அதுவே தொழிற்சங்கமாக ஒன்றிணைந்து போராடும் போது அந்த கூட்டு சக்தியால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

இதுதான் லூலா சொன்னது. 

அப்போது மோடியின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?

என் அனுமானங்கள் இரண்டு.

முதல் அனுமானம் மேலே உள்ள படத்தில் உள்ளது.

இரண்டாவது குரங்குக் குளியல் கீழே உள்ளது. 

"நானே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ட்ரம்பை குஷிப்படுத்த எனென்னம்மோ செஞ்சிக்கிட்டு இருக்கேன். இதிலே இந்த ஆளு பேசினது ட்ரம்புக்கு தெரிஞ்சா அதுக்கு என்ன திட்டுவாரோ?"


Sunday, February 22, 2026

ராமர் கோயில் திறந்து இரண்டாண்டுகள் ஆன பின்பும்

 


கடவுள் இட்ட கட்டளைப் படி நீதிபதி சந்திரசூட் எழுதிய தீர்ப்பில் இரண்டு அம்சங்கள். ஒன்று எவர் பாபர் மசூதியை இடித்தார்களோ அவர்களிடமே கோயில் கட்ட அந்த இடத்தை கொடுப்பது. அயோத்தியிலிருந்து சற்று தள்ளி ஒரு ஐந்து ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட கொடுப்பது.

அதில் முதல் அம்சம் முடிந்து விட்டது.

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயிலை மோடி திறந்து வைத்து விட்டார். இரண்டாண்டுகள் முடிந்து விட்டது.

மசூதி என்னாயிற்று?


இதுதான் மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம். அயோத்தியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்னிப்பூர் என்ற  கிராமத்தில் உள்ளது. 

இங்கே மசூதி கட்ட  முதலில் உருவாக்கப்பட்ட வரைபடங்களில் மசூதி என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருந்ததால் பெரும்பான்மை முஸ்லீம் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதற்கு பிறகு வேறு ஒரு மாதிரி தயாரித்தாலும் அதற்கு அனுமதி தர ஆயிரத்தெட்டு தடைகள். பாபரின் பெயரால் ஒரு மசூதி உருவாவதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று மொட்டைச்சாமியார் கூறிய காரணத்தால் புதிய மசூதியின் பெயரே முகமது-பின்-அப்துல்லா என்றுதான் அமையவுள்ளது.

எப்போது கட்டிடப் பணி தொடங்கும்? எப்போது முடியும்? எப்போது திறக்கப்படும்? 

மொட்டைச்சாமியாருக்கே வெளிச்சம் . . .

88 வயதில் தனிக்கட்சி தொடங்கிய தைரியத்தை . . .

 


கலைஞர் காலத்திலும் பின்பு எம்.ஜி.ஆர் காலத்திலும் அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் சில நாட்களுக்கு முன்பாக "எம்.ஜி.ஆர் அதிமுக" என்ற புதிய கட்சியை துவக்கியுள்ளார்.



எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

நெய்வேலியில் நான் பணியாற்றி வந்த போது ஒரு வளர்ச்சி அதிகாரியின் திருமணம் அவரது தலைமையில் நடந்தது. பெரும்பாலும் அது பண்ருட்டி ராமச்சந்திரன் புகழ் பாடும் கூட்டமாகவே அமைந்திருந்தது. 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு ஜெ-ஜா அணிகள் பிரிந்த பின்னர் நடந்ததால் அந்த அரசியல் தொடர்பான பேச்சுக்கள் திருமணத்திலும் ஒலித்தது. "நம்மவரின் பெருமை, அருமை பற்றி இந்தம்மாவிற்கும்  தெரியலை, அந்தம்மாவிற்கும் தெரியலை. அந்த அம்மாவிற்கு மட்டும்தான் புரியும்" என்று ஒருவர் பேசினார். அந்த அம்மா யார் தெரியுமா? இந்திரா காந்தி. . . 

அப்படியெல்லாம் இருந்த பண்ருட்டியார் பின்பு பா.ம.க, தனிக் கட்சி, பின்பு திமுக,  மீண்டும் அதிமுக,  என்றெல்லாம் கட்சி மாறி  கடைசியில் ஓ.பி.எஸ் அணி என்று வலம் வந்து 88 வயதில் தனிக்கட்சி துவங்கியுள்ளார்.

உலக வரலாற்றிலேயே 88 வயதில் தனிக்கட்சி தொடங்கியவர் இவர்தான்.

இந்த மன தைரியத்தைப் பாராட்டி குறைந்த பட்சம் அவருக்கு பண்ருட்டி தொகுதியில் டெபாசிட்டாவது மக்கள் கொடுக்க வேண்டும்.

பிகு: எம்.ஜி.ஆர் காலத்து மந்திரி ஹெச்.வி.ஹண்டே போல பாகஜகவில் சங்கமிக்காமல் பாஜக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்த அவரை பாராட்ட வேண்டும். 

Saturday, February 21, 2026

தர்மசங்கடமான நிலை! என்ன செய்வது?

 


சில நாட்களாகவே ஒரு குழப்பம்.

பல தோழர்கள் ஒரு நூலை சிலாகித்து எழுதியதை படிக்க நேர்ந்தது.


மேலே உள்ள புத்தகம்தான் அது. நீதியரசர் சந்துரு கூட நூலைப் பற்றி எழுதியுள்ளது அட்டையில் உள்ளது.

வழக்கமாக இது போன்ற அறிமுகங்களை படித்தால் உடனடியாக அந்த நூலை வரவழைத்து விடுவேன்.

ஆனால் இந்த நூலை வரவழைப்பதில் மட்டும் ஏனோ ஒரு மனத்தடை.

ஏன்?

அதனை வெளியிடுவது பத்ரி சேஷாத்ரியின் கிழக்கு பதிப்பகம். கடைந்தெடுத்த மக்கள் விரோதி, மத அடிப்படைவாதி, பிற்போக்கு சக்தி. 

சென்னை புத்தக விழாவிற்கு வருடம் தோறும் செல்வேன். ஆனால் கிழக்கு பதிப்பகத்திற்குள் மட்டும் நுழைய மாட்டேன். அதே போல  கிழக்கிலிருந்து பிரிந்து  தனியாக கடை திறந்த ஹரன் பிரசன்னாவின் சுவாசம் பதிப்பகத்திற்கும் செல்லக்கூடாது இன்று இந்த வருடம் கறாராக இருந்தேன். 

அதனால்தான் நம்முடைய பணம் பத்ரி சேஷாத்ரிக்கு செல்ல வேண்டுமா என்ற ஒரு கேள்வி, அது புத்தகம் வாங்குவதற்காக இருந்தாலும், மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. நல்ல நூலை தவற விடுகிறோமோ என்ற கேள்வியும் எழுகிறது.

என்ன செய்வது? ஒரே டெலிகேட் பொசிஷன் . . .

வேள்பாரி பாண்டியன் அரண்மனையும் நாடாளுமன்றக் கட்டிடமும் . . .

 


மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அளித்த ஒரு புதிய தகவல் கீழேயுள்ள காணொளியில் உள்ளது. அரசியல்வாதியை மீறி எழுத்தாளர் கம்பீரமாய் நிற்கும் தருணம் இது. 






Friday, February 20, 2026

புதிய பாபர் மசூதியைக் கூட . . .


 சங்கிகளால் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியைப் போல ஒரு மசூதியை மேற்கு வங்கத்தில் உருவாக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயுன் கபீர் அறிவித்து அந்த பணிகள் துவங்கியுள்ளன. அவரை மம்தா கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்துள்ளார். மம்தாவிற்கு விழும் முஸ்லீம் வாக்குகளை திசை திருப்ப சங்கிகளால்  ஏவி விடப்பட்டுள்ளவர் ஹுமாயுன் கபீர் என்பது அவரது சந்தேகம்.  ஒவைஸி உதாரணம் வேறு இருக்கிறதல்லவா! ரகசியம் விரைவில் தெரிய வரும்.

நிற்க

மேற்கு வங்கத்தில் கட்டப்படும் மசூதிக்கு பாபரின் பெயரை வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேவகி நந்தன் பாண்டே என்றொருவர் பொது நல வழக்கு தொடுக்க இன்று அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக பாபர் மசூதியை இடித்த கூட்டத்திற்கு பாபரின் பெயரில் இந்தியாவின் வேறு மூலையில் இன்னொரு மசூதி ஏற்படுவதை ஏற்க முடியவில்லை போல . . .

பிகு: புதிய மசூதி கட்ட அயோத்தியில் இடம் ஒதுக்கப்பட்டதே, அங்கே புதிய மசூதி கட்டியுள்ளார்களா? நாளை பார்ப்போம்.

பழம் நழுவி பாலில் விழ பத்தாண்டுகள்

 


தேமுதிக இப்போது திமுக கூட்டணியில் இணைந்து விட்டது. என்ன பேரம் என்பது தெரியவில்லை. சிவராத்திரி அன்று பாஜகவின் ராஜ்நாத்சிங், அதிமுகவின் தங்கமணி ஆகியோரோடு ஜக்கியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், இரண்டு தினங்களுக்குள் அறிவாலயம் வந்து விட்டார்.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போது பத்தாண்டுகளுக்கு முன்பாக கலைஞர் கூறியதுதான் நினைவுக்கு வந்தது.

"பழம் நழுவி பாலில் விழுந்து விடும்" என்று எதிர்பார்ப்பதாக அவர் பல முறை கூறிக்கொண்டிருந்தார். ஆனால் திமுக கூட்டணிக்கு வராத விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியோடு கரம் கோர்த்துக் கொண்டார். அதுதான் மக்கள் நலக்கூட்டணிக்கு மிகப் பெரிய பிரச்சினையாக போனது.

சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, மதிமுக, விசிக ஆகிய நான்கு  கட்சிகள் இணைந்து பல கூட்டியக்கங்கள் நடத்தி பின்பு அந்த போராட்ட ஒற்றுமை மக்கள் நலக் கூட்டணியாக மலர்ந்த போது மக்கள் ஆதரவு இருந்தது. ஊடகங்களும் பெரிய அளவில் ஆதரவு கொடுத்தது.

எப்போது விஜயகாந்தும் ஜி,கே.வாசனும் வந்தார்களோ, அதற்கு பிறகு எல்லாமே தலை கீழாக மாறியது. சமூல வலைத்தளங்களின் துவக்க காலமாக இருந்தாலும் அவையும் ஊடகங்களும் அக்கூட்டணியை ஒரு கேலிப் பொருளாக மாற்றி ஒரு மாற்று அரசியல் சக்தி உதயமாவதை கருக்கி விட்டார்கள்.

கலைஞர் காலத்தில் பால் கிண்ணத்தில் விழாத பழம் பத்தாண்டுகளுக்குப் பின்பு மு.க.ஸ்டாலின் காலத்தில் விழுந்து விட்டது.

Thursday, February 19, 2026

இந்தியாவை இழிவு படித்திய சங்கிப் பல்கலைக்கழகம்

 


சீனாவிலிருந்து காசு கொடுத்து வாங்கி வந்த ரோபோ நாயை, தங்கள் பல்கலைக்கழகத்தின் திறன் மையத்தில் கண்டுபிடித்தோம் என்று உத்திரப்பிரதேசத்தில் உள்ள கல்கோட்டியாஸ் பல்கலைகழகம், புதுடெல்லியில் நடைபெற்ற AI மாநாட்டில் பீற்றிக் கொள்ள அந்த பொய் மறு நாளே அம்பலமானது.

அந்த கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் மட்டும் அசிங்கப் படவில்லை. ஒட்டு மொத்த  இந்தியாவும் அசிங்கப்பட்டது. இந்திய அறிவியல் திறன் அசிங்கப்பட்டது. இந்தியாவின் சுயசார்பு உற்பத்தித் துறை அசிங்கப்பட்டது.

இந்த அசிங்கத்தைத்தான் ஓவியர் தோழர் ரவி பாலேட் அட்டகாசமான கார்ட்டூனாக மாற்றி விட்டார்.

இப்படி ஒரு வேலையைச் செய்ய அந்த கல்கோட்டியாஸ் பல்கலைக் கழகத்திற்கு எப்படி தைரியம் வந்தது?

கீழே உள்ள படங்கள் உண்மையைச் சொல்லும்.




இந்த புகைப்படங்களை வைத்து மட்டும் அது ஒரு சங்கிப் பல்கலைக்கழகன் என்று சொல்லி விட முடியுமா?

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அந்த பல்கலைக்கழகம், தன் மாணவர்களை வைத்து பாஜகவிற்கு ஆதரவாகவும் இந்தியா கூட்டணிக்கு எதிராகவும் பிரச்சாரப் பேரணி நடத்தியுள்ளார்கள்.



அறிவியலோ, அறவியலோ, இந்தியாவிற்கு எப்போதும் இழிவு சங்கிகளால்தான். 

C.B.I கரடியே காரி உமிழ்ந்த . . .

 


நான்காண்டுகளுக்கு முன்பாக ஆட்டுக்காரன் ஒரு மாணவியின் தற்கொலையை மத மாற்றத்தினால் நிகழ்ந்தது என்று கொளுத்திப் போட்டு கலவரத்துக்கு அடி போட, சங்கிகள் அனைத்து வித பொய்களையும் கட்டவிழ்த்து விட, திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் வழக்கம் போல சங்கிகள் விருப்பத்திற்கேற்ப சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

கடைசியில் சி.பி.ஐ விசாரித்து முடித்து அறிக்கையும் கொடுத்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறிக்கை விபரத்தைச் சொல்கிறது.


ஆனால் ஆட்டுக்காரனெல்லாம் மன்னிப்பு கேட்பான் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் சங்கிகளுக்கு வெ.மா.ரோ.சூ.சொ எதுவும் கிடையாது.

பிகு : அந்த சமயத்தில் நான் எழுதிய மூன்று பதிவுகள் கீழே உள்ளது.

அண்ணாமலையை கைது செய்யவும் என்ற பதிவின் இணைப்பு இங்கே

அண்ணாமலை, வானதி, சங்கிகள் கவனத்திற்கு என்ற பதிவின் இணைப்பு இங்கே

பொய் சொல்லி, பயந்தாங்குளி வானதி அம்மையார் என்ற பதிவின் இணைப்பு இங்கே