Wednesday, December 27, 2023

இறந்தவர் வருவார் முகநூலில், பணம் கேட்க

 



 

தோழர் சுப்பராயன், நெய்வேலியில் பணியில் சேர்ந்த என்னை தொழிற்சங்க இயக்கத்திற்கு கொண்டு வந்தவர். பின்பு அதிகாரியாக எங்கள் வேலூர் கோட்டத்திற்கே முதுநிலை கோட்ட மேலாளராக வந்தவர். 

 


கடந்த ஆண்டு இறந்து போன அவரது பெயரில் முகநூல் நட்பழைப்பு வந்தது. உள் பெட்டியில் உரையாடலும் தொடங்கியது.

 

“இப்போது எங்கே இருக்கிறீர்கள்? சொர்க்கத்திலா? நரகத்திலா? “  என்று நான் கேட்க

 

மோசடிப் பேர்வழியோ

 

“நான் நலம், நீங்கள் நலமா?

 

என்று நலம் விசாரிக்க

 

அடுத்த கேள்வியை இன்னும் காட்டமாக

 

“போன வருடம்தான் இறந்து போனீர்கள். எப்படி மறுபடியும் வந்தீர்கள்?” என்று கேட்க

 

அந்தாளோ தன் பணிதான் முக்கியம் என்பது போல

 

“கூகிள் பே இருக்கிறதா?”

 

என்று கேட்க

 

“ஹ்லோ ஃபிராடு”

 

என்று அழைத்த பின்பு ப்ளாக்கி விட்டு போய் விட்டான்.

 

இப்படி ஃபேக் அக்கவுண்ட் தொடங்கி  யாராவது ஏமாறுவார்களா என்பதையே வேலையாகக் கொண்டு அலைகிறார்கள் போல.

 

இந்த மாதம் மட்டும் இது போல நான்கு போலிக் கணக்குகளின் அழைப்பு.

 

நம்ம பெயரில் என்றைக்கு ஃபேக் அக்கவுண்ட் ஆரம்பிக்கப் போகிறானோ தெரியவில்லை.

 

அப்படி யாராவது பணம் கேட்டால் தராதீர்கள். எனக்கு தேவையென்றால் நானே நேரடியாக தொலை பேசியில் அழைத்து கேட்பேன்.

 

 

1 comment:

  1. Yes Raman. It has happened in my name 4 years back.

    ReplyDelete