Saturday, December 16, 2023

தந்தை பெரியாரை கடவுளாக்கும் காவிகள் ...

 


காவிச்சங்கிகள் தந்தை பெரியாரை இழிவு படுத்துவதாக நினைத்து ஒரு படத்தை உலவ விட்டுள்ளார்கள்.

பன்றியின் வடிவத்தில் அவரை வரைந்து கையில் யூரின் பேக்கேடு நிற்பது போல வரைந்துள்ளார்கள்.

சங்கிகளைப் பொறுத்தவரை எலி வினாயகரின் வாகனம், நாய் பைரவரின் வடிவம், பசு மாடு கோமாதா. அதே வரிசையில் பன்றி மகாவிஷ்ணுவின் வராக அவதாரம். ஆக சங்கிகள் தந்தை பெரியாரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதியுள்ளார்கள்.

அப்படியெல்லாம் இல்லை, இழிவுபடுத்தத்தான் வரைந்தோம் என்று சொல்வார்களா?

அப்படி சொன்னால் அது மகா விஷ்ணுவை இழிவு படுத்துவதாக அமைந்து விடாதா?

தசாவதாரம் படத்து பாட்டு நினைவுக்கு வருகிறதே!

"கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது"

சங்கிகள்தான் சொல்ல வேண்டும்.

உங்களுக்கு தெரிவது என்ன?

பன்றியா? வராக அவதாரக் கடவுளா?

பிகு : தந்தை பெரியாரை இழிவு படுத்துவதாக நினைத்து அவர் கையில் யூரின் பேக் பிடித்திருப்பதாக படம் போட்டுள்ளார்கள். சிறு நீரகக் கோளாறு உள்ளவர்களையெல்லாம் அசிங்கப்படுத்துகிறார்கள். ஆயிரக் கணக்கானவர்கள் இன்று சிறுநீர் பை பயன்படுத்தும் தேவை உள்ளவர்கள்தான். என் தந்தைக்குக் கூட பக்க வாதம் வந்த பின்பு அவர் வாழ்வின் கடைசி ஆறு மாதங்கள் சிறுநீர் பையுடன் தான் இருந்தார். இதில் வெட்கப்பட ஏதுமில்லை.

ஏபிவிபி யின் அகில இந்தியத் தலைவன் டாக்டர் சுப்பையா, பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததும் மத்தியப் பிரதேசத்தில் பாஜக பண்டிட் ஒருவன் ஒரு பழங்குடி மீது சிறுநீர் கழித்ததும்தான் அசிங்கம்.

No comments:

Post a Comment