Friday, December 29, 2023

ஊழல் சின்னத்தை எப்போ தூக்குவாங்க?

 


தேர்தல் ஆணையம் அப்போதாவது அகற்றிடுமா?

சந்திராயனை ஏவிய விண்வெளி விஞ்ஞானி போல போஸ் கொடுக்கும் டிமோ உடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது போல ஒரு ஏற்பாட்டை காட்பாடி ரயில் நிலையத்தில் வைத்துள்ளார்கள் என்று முன்பே எழுதியிருந்தேன்.

கடந்த திங்கள் அன்று மகனை ரயிலேற்றி விட காட்பாடி ரயில் நிலையம் சென்றிருந்த போது “ராசுக்குட்டி” டிமோ டிஜிட்டல் விஞ்ஞானி  ஆக காட்சி அளித்தார்.

 


இந்த விளம்பர மோகம் குறித்து எழுதி எழுதி வெறுப்பாகி விட்டது.

 என் கேள்வி ஒன்றுதான்.

 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அமலான பின்பாவது இந்த கருமத்தை எல்லாம் தேர்தல் ஆணையம் அகற்றிடுமா அல்லது டிமோவுக்கு இலவச விளம்பரத்தை தொடர்ந்து பெற்றுத்தருமா?

  

பிகு 1: பதிவை எழுதிய பின்புதான் ஒரு தகவல் கிடைத்தது. ஒரு செல்ஃபி பாய்ண்ட் அமைக்க ஆறே கால் லட்ச ரூபாயாம்.  அவ்வளவு ரூபாய் செலவு பிடிக்கும் விஷயமா இது? பார்த்தாலே தெரிகிறது இது ஊழல் சின்னம் என்று. இதையெல்லாம் சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு தோண்டாது.



 பிகு 2:  செப்டம்பர் மாதம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கோட்டச் சங்க மாநாட்டின் ஒரு பகுதியான மக்கள் ஒற்றுமை கலை விழாவில் “சந்திரனில் மகாராஜா” என்ற நாடகத்தை நடத்தினோம். அந்த ஸ்க்ரிப்டை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

பிகு 3 : படத்தில் கருப்பாக உள்ள இடத்தில்தான் டிமோவின் படம் இருந்தது. நாம் வேறு எதற்கு விளம்பரம் தர வேண்டும் என்று மை பூசி விட்டேன்.

 

No comments:

Post a Comment