Friday, December 8, 2023

போலியோடு மீண்டும் ஜாலியாய் . . .

 


நம்முடைய நண்பர்கள் பெயரில் போலி முகநூல் கணக்கு துவங்கி நம்மிடம் பணம் கேட்கும் மோசடிப்பேர்வழிகளோடு உரையாடுவது ஒரு ஜாலியான பொழுது போக்கு,

இந்திய வங்கி ஊழியர் சம்மேளம் (BEFI) யின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான தோழர் சி.பி.கிருஷ்ணன் பெயரில் அப்படி ஒரு போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்திருந்தார்.

அந்த போலியிடமிருந்து நேற்று நட்பழைப்பு வந்திருந்தது. சரி கொஞ்சம் விளையாடுவோம் என்று அதை ஏற்றுக் கொண்டேன்.

உடனடியாக இன் பாக்ஸில் உரையாடலை தொடங்கி விட்டது அந்த போலி. தான் யாருடைய பெயரில் கணக்கு தொடங்கியுள்ளோம் என்று ஏதாவது ஆராய்ந்து துவக்கியதா என்று அறிய வங்கி ஒப்பந்தம் தொடர்பாக

“ஐந்து நாள் வாரம் என்ன ஆனது?” என்று முதல் கேள்வியை கேட்க அந்த போலியோ “நன்று” என்று பதிலளித்தது.

“எப்போது கையெழுத்திடுவீர்கள்” என்ற கேள்விக்கோ “ஓகே” என்றது.

“உங்கள் மாநாடு எப்போது?” என்று நான் கேட்க

அந்த போலி  “ஜிபே உள்ளதா?” என்று கேட்டது.

“நான் இருக்கு ஆனா இல்லை” என்று சொல்ல

தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் போல

“என் நண்பருக்கு பணம் அனுப்ப வேண்டும். உதவ முடியுமா?” என்று தன் வேலையில் கவனமாக இருந்தது.

“உன் அப்பா பெயரை சொல்லவும்” என்று கேட்டேன். 

தோழர் சி.பி.கிருஷ்ணன் அவர்களின் தந்தை தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் அஞ்சல் ஊழியர் சங்கத்தின் முக்கியத் தலைவர். வேலூர் நகரத்தில் தொழிற்சங்கக் கூட்டமைப்பை உருவாக்கியவர். அவர் பெயரைச் சொன்னாலே எங்களின் மூத்த தலைவர்கள் நெகிழ்ந்து போவார்கள்.

 இந்த கேள்விக்கு பதில் இல்லை.

 அடுத்து “நான் யாருன்னாவது சொல்லுய்யா” என்று கேட்க

 





அந்த போலி என்னை ப்ளாக் செய்து விட்டது. ஃப்ராடு என்றெல்லாம் திட்டும் முன்பே அப்படி ப்ளாக் செய்து ஓடி விட்டது கொஞ்சம் வருத்தமாகவே உள்ளது.

 

பார்ப்போம். மீண்டும் ஒரு போலிக்கணக்கோடு வராமலா இருக்கப் போகிறது!

No comments:

Post a Comment