Tuesday, December 6, 2022

இதுதான் சங்கித் திமிர்

 


 பாஜகவுக்கு அடியாட்கள் சப்ளை செய்கிற அர்ஜூன் சம்பத் கட்சி இன்று அண்ணல் அம்பேத்கருக்கு தயாரித்துள்ள சுவரொட்டியை பாருங்கள்.



 இந்து மதமே வேண்டாம் என்று பௌத்த மதத்திற்கு மாறியவருக்கு காவி உடையும் விபூதியும் அணிவித்து காவித் தலைவரே என்று அழைப்பதெல்லாம் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

 திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட் அடித்த கூட்டம் இப்போது அண்ணல் அம்பேத்கருக்கும் செய்கிறது என்றால் இதனை திமிர், ஆணவம், அயோக்கியத்தனம், பொறுக்கித்தனம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.

 அர்ஜூன் சம்பத்திற்கு ஒரு சின்ன ஆலோசனை.

 அர்ஜூன் சம்பத், ஆட்டுக்காரன், எச்.ராசா மூவரும் ஒரே நேரத்தில் சங்கர மடத்திற்கு செல்லட்டும். மூவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை கிடைத்ததா என்பதை மனசாட்சிப் படி சொல்லட்டும்.

 அதன் பின்னும் அந்த மனிதன் காவியை உயர்த்திப் பிடித்தால் அந்தாள் எல்லாம் மனிதன் என்று மதிக்கப்பட லாயக்கில்லாத ஜந்து என்று அர்த்தம்.

 வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை, சுய மரியாதை இதெல்லாம் இருந்தால் அந்தாள் ஏன் சங்கியாக இருக்கப் போகிறார் என்றுதானே கேட்கிறீர்கள்.

 அதுவும் சரிதான் . . .

 பின் குறிப்பு

 டிசம்பர் ஆறு என்றால் இப்போதெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாள் என்பதுதான். படுபாவி சங்கிகள் திட்டமிட்டு தேர்ந்தெடுத்த நாளல்லவா! இந்தியாவின் ஒற்றுமையின் மீது நடந்த தாக்குதல் மசூதி இடிப்பு என்றால் இந்திய நீதித்துறை மீதான நம்பிக்கையின் மீது நடந்த தாக்குதல் இடித்தவர்களிடமே நிலத்தை ஒப்படைத்த தீர்ப்பு எனலாம்.

No comments:

Post a Comment