Tuesday, December 27, 2022

கயவர்களை கைது செய்

 




இன்று காலையில் பார்த்த இரண்டு செய்திகள் மிகவும் கோபத்தைக் கொடுத்த்து

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் என்ற கிராமத்தில் தலித் மக்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய மேல்நிலை குடிநீர் தொட்டியில் சில கயவர்கள் மனிதக் கழிவை கலந்துள்ளனர். சில குழந்தைகளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அதற்கு காரணம் மாசுபட்ட தண்ணீர் என்று மருத்துவர் கூறியதால் இந்த அராஜகம் தெரிய வந்துள்ளது. . 

சேலம் மாவட்டம் விருதசம்பட்டி என்ற கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆதிக்க சக்திகள் பேச்சு வார்த்தைக்கு ஒத்து வராததால் கோயில் இப்போது சீலிடப்பட்டுள்ளது.

இந்தியாவை காட்டுமிராண்டிக் காலத்திற்கு கொண்டு போக முயற்சிக்கும் இக்கயவர்களை கைது செய்ய வேண்டும், கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

தமிழக அரசு ஊசலாட்டம் இல்லாமல் செயல்பட வேண்டும். 

No comments:

Post a Comment