Monday, May 10, 2021

அவர்களை ஏன் கை விட்டீர் கடவுளே?

 அவர்கள்

உனக்கு நீ பிறந்ததாக அவர்கள் நம்பும் இடத்தில் கோயில் கட்ட அங்கே இருந்த வழிபாட்டுத் தளத்தை இடித்தார்கள்.ரத்த ஆற்றை நாடெங்கும் ஓட வைத்தார்கள். நீதி பரிபாலண அமைப்பையே கட்டப் பஞ்சாயத்தாக மாற்றினார்கள்.



அவர்கள் 

அந்த மசூதிக்கு கீழே கோயில் உள்ளதா பாருங்கள் என்று உனக்கான அடுத்த சேவையை தொடங்கி விட்டார்கள்.



அவர்கள்

பெண்கள் கோயிலுக்கு வந்தால் உன் புனிதம் கெட்டு விடும் என்று உன்னை பலவீனமான ஒருவராக சித்தரித்து கலவரம் செய்தார்கள்.



அவர்கள்

வேல் பூஜை என்ற பெயரில் அட்டை வேலுக்கு தெருவோரத்திலும் செருப்பு வைக்கும் இடத்திலும் சமையலறையிலும் பூஜை செய்து வேலின் பெருமை என்ன என்பதை உலகிற்கு எடுத்துச் சொன்னார்கள்.

வேல் யாத்திரை என்ற பெயரில் தினம் தினம் கைதாகி கைதாகி விளையாடினார்கள். அந்த விளையாட்டை மக்கள் தவற விடக்கூடாது என்பதற்காக குத்து டேன்ஸ் போட்டார்கள்.



இப்படி உனக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சங்கிகளையும் அவர்களின் அடிமைகளையும் ஜெயிக்க வைக்காமல் ஏன் கை விட்டீர்கள் கடவுளே?



உன் மீது நம்பிக்கையற்ற ஒருவரின் மனைவியின் வேண்டுதலை மட்டும் ஏற்றுக் கொண்டது தகுமோ?


No comments:

Post a Comment