Thursday, August 30, 2012

ஏமாற்று வேலை செய்ய எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்?



இரண்டு தினங்கள் முன்பாக கர்னாடக மாநிலம் குக்கே சுப்ரமணியர் கோயிலுக்கு விஜய் மல்லய்யா எண்பது லட்சம் ரூபாய் செலவில் தங்கக் கதவுகள் காணிக்கை என்ற பெயரில் கையூட்டு அளித்தது பற்றி எழுதியிருந்தேன். அந்தப் பதிவிற்காக அந்த கோயில் கடவுளின் படத்தையும் இணைத்து வெளியிடலாம் என்று கூகிளில் தேடிய போது கிடைத்த தகவல்கள் மற்றும் படங்கள் கீழே காண்பீர்.

ஐந்து தலை நாகத்தைப் பார்த்து பயப்படாதவர்கள் மற்றும் படங்களைப் பார்க்கவும்.











என்ன படங்களைப் பார்த்தீர்களா? சூர பத்மனை அழித்த பிறகு முருகன் இந்த இடத்தில்தான் தெய்வசேனையை திருமணம் செய்து கொண்டதாகவும் பாம்பின அரசி வாசுகியின் வேண்டுகோள்படி இங்கே முருகப் பெருமான் பாம்பு ரூபத்தில் அருள் பாலிப்பதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

சரி முருகன் தெய்வசேனையை திருத்தணியில் திருமணம் செய்து கொண்டதாக தமிழ்நாட்டு தகவல்கள் சொல்கிறதே, குக்கேயா? திருத்தணியா ? முருகன் தெய்வசேனையை எங்கே திருமணம் செய்து கொண்டார்? சரி சரி அப்துல் கலாம் சொன்னது போல கோயிலுக்கான அக்ரஸிவ் மார்க்கெட்டிங் உத்தி போல.

நம் பிரச்சினை திருமணம் அல்லவே, விஷயத்திற்கு வருவோம்.

படத்தில் பார்த்த ஐந்து தலை நாகம் குக்கே சுப்ரமணியர் கோயிலில் உலா வரும் ஐந்து தலை நாகம் என்றும் அது சாட்சாத் முருகப் பெருமானேதான் என்று உருகி உருகி எழுதியிருந்தார்கள்.

இது என்ன கேள்விப் படாத கதையாக இருக்கிறதே என்று மெனக்கெட்டு தேடினால் சில நிமிடங்களிலேயே உண்மை புலப்பட்டு விட்டது.

ஐந்து தலை நாகம் என்பது பொய் என்பதும் ஒற்றை தலை மட்டுமே உள்ள நாகத்திற்கு போட்டோ ஷாபில் கூடுதலாக நான்கு தலைகளை இணைத்து உலவ விட்ட போலிப்படம் என்பது தெரிந்து விட்டது. இதிலே இன்னும் சிறப்பு என்னவென்றால், அந்த ஒற்றைத் தலை நாகம் கூட குக்கே கோயில் உள்ள நாகம் அல்ல.

கொரியாவில் உள்ள ஒரு பாம்புப் பண்ணையில் உலவும் ஒரு பாம்பின் படம் அது. அதிலே ஒட்டு வேலை செய்து ஐந்து தலை நாகமாக்கி விட்டார்கள். ஒரிஜினல் ஒற்றைத் தலை நாகத்தின் புகைப் படங்களையும் கீழே பாருங்கள்.














பிள்ளையார் பால் குடித்தது போல வேப்ப மரங்களிலிருந்து அவ்வப்போது பால் கசிவது போல ஐந்து தலை நாகமும் வெறும் கட்டுக்கதைதான்.

மனிதர்களின் பக்தியை எப்படியெல்லாம் தங்களின் ஏமாற்று வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்..

இதிலே இன்னும் ஒரு கூடுதல் தகவல். குக்கே சுப்ரமணியர் ஆலயத்தில் மட்டுமல்ல, இன்போசீஸ் நிறுவனத்தின் மங்களூர் அலுவலகத்தில் இதே ஐந்து தலை நாகம் இருப்பதாகவும்  ஒரு கதை பார்த்தேன்.

எப்படியெல்லாம் திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகின்றார்கள் என்று பாருங்கள்.

1 comment:

  1. இன்னுமா இந்த வேலையை விடவில்லை. எத்தனை தடவை ... இப்படி செய்கின்றார்கள் !!! ஏமாற்றுவதையே சிலர் வேலையாக்கி உள்ளனர் !!!

    ReplyDelete