Sunday, January 9, 2011

ஐயோ கண்ணைக் கட்டுதே! தாங்க முடியலடா சாமி!

ஊழல் நீதிபதி ராமசாமிக்கு எதிரான பதவி பறிப்பு தீர்மானம்
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது அவருக்கு ஆதரவாக
ஒரு வழக்கறிஞராக  தோன்றி  ராமசாமி  போன்ற ஒரு புனிதரே 
கிடையாது என வாதாடியவர்  இன்றைய  தொலைதொடர்பு 
அமைச்சர் கபில் சிபல்.  புத்திசாலித்தனமான வக்கீலான அவர் 
மனித வள மேம்பாட்டு அமைச்சராக  இருந்த போது  வெளி நாட்டு
பல்கலைக் கழகங்களுக்கு நடைபாவாடை விரித்தவர். அப்போது
பத்தாம் வகுப்பிற்கு தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்ற
சர்ச்சையை அவர் கிளப்பி விட எல்லோரும் அதைப்பற்றியே
பேசிக் கொண்டிருக்க அன்னியப் பல்கலைக் கழகங்கள் நுழைவு
என்ற பிரச்சினையே அமுங்கி விட்டது.

அந்த வக்கீலின் புத்திசாலித்தனத்தை அண்ணன் இப்போது
ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் காண்பித்திருக்கிறார்.  எல்லாம்
ஒழுங்காகத்தான் உள்ளது, தலைமை தணிக்கை அதிகாரிக்குத்
தான் அறிவே இல்லை என கூறியுள்ளார்.  1 ,76 ,௦௦௦ 000  கோடி 
ரூபாய் இழப்பெல்லாம் இல்லை. குறைவு  என்று  வாதாடினால்
கூட ஏற்றுக் கொள்ளலாமா என யோசிக்கலாம். இவரோ ஒரு 
பைசா கூட இழப்பே  கிடையாது  என தடாலடியாக போடுகின்றார்.

2009 ம்   வருடத்து மதிப்பை வைத்து கணக்கிடலாமா என
கேட்டாரே ஒரு கேள்வி. ஐயா 2009 ம் வருடத்தின் மதிப்பை
2007  விற்பனைக்கு கணக்கிடாதே என்று சொல்வது நியாயமாக
இருந்தால் 2001 ல் நிர்ணயம் செய்த தொகைக்கே 2007 ல்
விற்றது மட்டும் எப்படி சரியாக இருக்கும்?

ஸ்பெக்ட்ரம் வாங்கிய நிறுவனங்கள் வாங்கிய இரண்டே
மாதங்களில் அதை விற்று பல மடங்கு லாபம் பார்த்தது
முறைகேடு இல்லையா?

வக்கீல் ஐயாவிற்கு இரண்டே கேள்விகள்

எந்த தவறுமே இல்லையென்றால் வெறும் எதிர்க்கட்சிகள்
நிர்ப்பந்தத்திற்காக மட்டுமே அ.ராசாவை ராஜினாமா
செய்ய வைத்தீர்களா? நீங்கள் தொலைதொடர்பு அமைச்சர்
பதவிக்கு வந்திருக்க வேண்டிய அவசியமே  இருக்காதே.

எந்த தவறுமே இல்லையென்றால்  எதிர்க்கட்சிகள் வைக்கும்
கோரிக்கையான நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை
மறுப்பது ஏன்?

கொசுறுக் கேள்விகள் ; எந்த தவறுமே இல்லையென்றால்  
எதற்கு சி.பி.ஐ. ரெய்டுகள். ஊழலை மறைக்கவா?  தொலைத்தொடர்பு
துறையை நிர்வகிப்பது பெரு முதலாளிகள்தானாமே, நீங்கள்
எல்லாமே வெறும் டம்மி தான்.

No comments:

Post a Comment