Tuesday, November 25, 2025

கோர்ட்டால் அசிங்கப்படுத்தப்பட்ட தவெக நிர்வாகி

 


கரூர் நெரிசல் மரணங்களுக்குப் பிறகு ஓடி ஒளிந்து கொண்ட விஜய் கட்சியின் கொ.ப.செ ஆதவ் அர்ஜூனா, உசுப்பேத்தும்படி ஒரு ட்வீட் போட்டு அடுத்த அரை மணி நேரத்தில் அதை பயந்து நடுங்கி நீக்கியது நினைவில் உள்ளதல்லவா?

அந்த ட்வீட்டிற்காக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

என்ன காரணம் தெரியுமா?



எஸ்,வி.சேகர் பல வருட அனுபவம் கொண்ட, மாநிலம் முழுதும் அறியப் பட்ட ஒரு கலைஞர். அவரது பதிவுகள் தாக்கத்தை உருவாக்கும்.

ஆனால் இந்த ஆதவ் அர்ஜூனா அரசியலுக்கு புதியவர். அவர் சொல்வதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது. ஆகவே வழக்கெல்லாம் தொடுக்க (வேண்டிய அளவு வொர்த்தில்லாத டம்மி பீஸ்) வேண்டாம் என்று காரணமும் சொல்லி விட்டார். (அடைப்புக்குள் இருந்தது மட்டும் என் வார்த்தைகள்). 

"ஆதவ் அர்ஜூனா ஒரு கத்துக்குட்டி, அந்தாள் பேச்சையெல்லாம் எவனும் மதிக்க மாட்டான்"  என்பதுதான் நீதிபதி சொன்னது.

Monday, November 24, 2025

விஜய் செல்லம் அது என் டயலாக் -பிரகாஷ்ராஜ்

 


நேற்று விஜய் காஞ்சிபுரத்தில் பேசிய வஜனம் அவருடைய பூத எழுத்தாளர் GHOST WRITER , சிங்கம் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசியதை காப்பி அடித்து எழுதிக் கொடுத்தது. சந்தேகமாக இருக்கிறதா? 

கீழே உள்ள காணொளியை பாருங்கள்



அப்பறம் மேலே உள்ள படத்தில் விஜயைத்தான் சொல்லி உள்ளார்கள் என்று தவெக தற்குறிகள் நியூஸ் 7 சேனலிடம் சண்டைக்கு போக வேண்டாம். அது ?நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு ஓடு ராஜா" படத்தில் வரும் காட்சி.

41 பேருடைய மரணத்துக்கு காரணமாக இருந்து கொண்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் ஆளுங்கட்சி மீது பழி போடும் தற்குறிகளின் தலைவனுக்கு அது பொருத்தமாக உள்ளதால் நான்தான் எடுத்துப் போட்டேன். 

வாயில் ரத்தம் வழியும் சங்கி ஓநாய் - கர்னாடக காங்கிரஸே எச்சரிக்கை

 


முன்னொரு காலத்தில் இந்தியாவில் இருந்த பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது கர்னாடகா, தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஆட்சியில் இருந்தது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், கோவா, பஞ்சாப், அஸ்ஸாம், ஹரியானா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கே உரிய மகத்தான சிறப்பான, கோஷ்டி மோதலால் அது ஆட்சியை பறி கொடுத்தது. 

இப்போது கர்னாடகாவில் கோஷ்டிப் பூசல் உச்சத்திற்கு வந்துள்ளது. 

முதலமைச்சர் சித்தராமையாவிற்கும் துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்குமான மோதல் இப்போது ஊடகங்களில் அடிபட தொடங்கி விட்டது. 

இதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பிரச்சினை. அடுத்த கட்சியின் உட்கட்சி பிரச்சினைகள் பற்றி எழுத மாட்டேன் என்று கொள்கை வைத்துள்ளதாக சொல்வாயே! இப்போது  அந்த  கொள்கை என்ன ஆனது என்று கேட்கிறீர்களா? அது நியாயமான கேள்விதான்.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் பார்த்த பதிவினால் காங்கிரஸாருக்கு அன்புடன் ஒரு எச்சரிக்கை கொடுக்க விரும்பினேன்.


வாயில் ரத்தம் சொட்ட சொட்ட, கர்னாடக ஆட்சியையும் கைப்பற்ற சங்கி ஓநாய்கள் ஆவலுடன் காத்திருப்பதை பார்த்தீர்களா!

இந்த பதிவை காணும் காங்கிரஸ் கட்சியினரே, காத்திருக்கும் அபாயத்தை உங்கள் தலைமையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். 

உங்கள் கட்சிக்குள் ஒற்றுமையை பலப்படுத்துங்கள், ஓநாய்களை துரத்தி அடியுங்கள்.

பதவிக்காக மோதிக் கொண்டு இருப்பதையும் இழக்காதீர்கள். ஆட்சியை இழப்பது உங்கள் பலவீனத்தை மேலும் அதிகரிக்கும் என்பதையும் மறக்காதீர்கள், ஜனநாயகத்தையும் பலவீனமாக்கும் . . .

Sunday, November 23, 2025

அவரை நான் எப்படி கூப்பிட?

 


தமிழ்நாட்டின் முக்கியமான இசையமைப்பாளர் அவர். இப்போது நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன உறுப்பினராகவும் இருக்கிறார். 

அவரிடம் அனுமதி வாங்காமல் அவருடைய பாடல்களை, இசை கோர்ப்புகளை பயன்படுத்தியும் அவரது புகைப்படத்தையும் பயன்படுத்தியும் பலர் பணம் பார்ப்பதால் அவரது பெயரையோ, புகைப்படத்தையோ, வழக்கமாக அவரை அழைக்கப்படும் பட்டங்களான இ..........னி, மே..........ரோ,  ரா........ன்,  ரா...........ர்  ஆகியவற்றையும் யாரும் திரைபடங்களிலோ, தொலைக்காட்சிகளிலோ, யூட்யூப் நிகழ்வுகளிலோ, எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலோ யாரும் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக்கூடாது என்று தடை வாங்கியுள்ளார்.

எங்கள் சங்கத்தின் அச்சுப்பணிகளை செய்யும் அச்சகத்தில் டிசைனராக இருந்தவர் பெயர் இ......ஜா. நல்ல வேளை இப்போது அவர் வேறு ஊரில் சொந்த அச்சகம் துவங்கி விட்டார். இல்லையென்றால் அவரை நான் எப்படி அழைப்பேன்?

உங்கள் பாடல்களை வணிக நோக்கில் அனுமதியின்றி பயன்படுத்த தடை வாங்குவது என்பது ஒரு பிரச்சினை. 

ஆனால் உங்கள் பெயர், புகைப்படம், உங்களுக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள் ஆகியவற்றைக் கூட யாரும் பயன்படுத்தக்கூடாது என்றால்

உங்களிடம் வேறு ஏதோ பெரிய சிக்கல் இருக்கிறது. அதை பயன்படுத்தி உங்கள் வக்கீல்கள் காசு பார்க்கிறார்கள். நீங்கள் உண்மையிலேயே விழித்துக் கொண்டால்  உங்களுக்கு நல்லது. 

ஒன்பது முறை எழுந்தவன்

 


தமிழ்நாட்டின் பெரும் கவி ஈரோடு தமிழன்பவன் அவர்கள் இயற்கை எய்தி விட்டார். அவரை ஒரு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகத்தான் முதன் முதலில் அறிந்து கொண்டேன். பின்பு தூர்தர்ஷனில் கலைஞர் தலைமை தாங்கிய ஒரு கவியரங்கத்தில் கவிதை வாசித்த போதுதான் அவர் கவிஞர் என்று அறிந்து கொண்டேன். 

இந்தி திணிப்பை எதிர்த்த "அசோகச் சக்கரத்தை அஜர்பைஜான் விசாரிக்கும்" என்ற கவிதையை சங்கிகள் "அஜர்பைஜான் எரிக்கும்" என்று மாற்றி அவரது செய்தியாளர் பணியை பறித்தார்கள் என்பது நாம் மறக்கக் கூடாத நிகழ்வு.

பாரதியின் "வீழ்வேன் என்று நினைத்தாயோ" போல அவரது :ஒன்பது முறை எழுந்தவனல்லாவா நீ" யும் சோர்வைப் போக்கி எழுச்சி தரும்.

அவர் தமிழாக்கம் செய்த பாப்லோ நெரூடாவின் கவிதைகளில் ஒன்றை மூன்றாண்டுகளுக்கு முன்பு எங்கள் கோட்டத்தின் காலண்டரில் பயன்படுத்தியுள்ளோம்.

முற்போக்கு சிந்தனையாளரான தோழர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலி.

அவரது மறைவை ஒட்டி அஞ்சலியாக அவரின் சில கவிதைகள்.

******************************************************************************


அறத்தில்
விழித்தது எதுவோ -
அன்பில்  தழைத்தது எதுவோ
அது தமிழ் உயிர்


இளகிக் 
கனிவது எதுவோ 
இரங்கிக் கரைவது எதுவோ 
அது தமிழ் உளம்


அணுவில் 
விரிவது எதுவோ
அண்டம் இணைப்பது எதுவோ
அது தமிழ் அறிவு

**********************************************************


“பத்து முறை விழுந்தவனைப் பார்த்து
நிலம் சொன்னது -
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ ?”

*****************************************************************************

"மாங்கல்யத்தின் மகிமையை
மனைவி அறிவாள்
மணவாளன் அறிவான்
அவர்கள் இருவரையும்விட
மார்வாடியே
அதிகம் அறிவான்"

*****************************************************************************
"கவிதை, தான் கவிதையாவதற்கு
வார்த்தைகளைக் காட்டிலும்,
அர்த்தங்களைக் காட்டிலும்
வாழ்க்கையையே நம்பி இருக்கிறது.
வாழ்க்கைக்கு அர்த்தம்
அனுபவங்களில் புரிந்தும்
புரியாமலும் தெரிந்தும்
தெரியாமலும்
சிதறிக் கிடக்கிறது."
*********************************************************************************
'சிலம்பை உடைத்து என்ன பயன்
அரியணையிலும்
அந்தக் கொல்லன்..'

******************************************************************************
"இமயப்பறவைகள் நாம்
எரிமலையின் உள்மனம்நாம்.
அக்கினிக் காற்றிலே
இதழ்விரிக்கும் அரும்புகள்நாம்.
திக்குகளின் புதல்வர்கள்
தேசவரம்பற்றவர்கள்”


Saturday, November 22, 2025

சங்கிகள் -தமிழ்நாட்டின் துரோகிகள்

 


மதுரை, கோவை நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்கள் கிடையாது என்று ஒன்றிய அரசு அனுமதி மறுத்து விட்டது. 2011 ல் எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த நகரங்களின் மக்கட்தொகை இருபது லட்சத்திற்கு குறைவாக இருப்பதால் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கட்தொகை இருபது லட்சத்திற்கு குறைவாக உள்ள நகரங்களில் மெட்ரோ செயல்படும் போது மதுரைக்கும் கோவைக்கும் மட்டும் மறுப்பது மோடியின் அப்பட்டமான தமிழ்நாட்டு விரோத அரசியல்.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் 2021 மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் நிச்சயம் இருபது லட்சம் கடந்திருக்கும். ஆக இவர்கள் மறுத்த காரணத்திற்கும் இவர்களே பொறுப்பு.

மத்தியரசின் செயலை சங்கிகள் கண்டிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நேர்மை இருந்தால் அந்த மூடர்கள் ஏன் சங்கிகளாக இருக்கப் போகிறார்கள்!

முதலில் செய்தி தவறு என்றார்கள்.

அடுத்து விளக்கம்தான் கேட்டுள்ளார்கள் என்றார்கள்.

தமிழ்நாடு அனுப்பிய திட்ட அறிக்கை தவறு என்று வியாக்யானம் கொடுத்தார்கள்.

ஆனால்  இவர்களை மக்கள் எள்ளி நகையாடுவதால்

கோவைக்கும் மதுரைக்கும் எதற்கு மெட்ரோ என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள். மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் எல்லாம் இப்போது அந்த ஒப்பாரியைத்தான் வைத்துக் கொண்டுள்ளார்கள்.

இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் எதிரிகள், துரோகிகள். அவர்களை இந்த மாநிலத்திலிருந்தே துரத்த வேண்டும். 


Friday, November 21, 2025

குற்ற உணர்ச்சியா நீதி(அற்ற) அரசர்களே!


 
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கோ, ஆளுனர்களுக்கோ எந்த காலவரையும் நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தீர்ப்பளித்து ஆரெஸெஸ் ரெவி போன்ற ஆட்டுத்தாடிகள் தங்கள் அயோக்கியத்தனத்தை தொடர ஊக்க டானிக் கொடுத்த தீர்ப்பை எழுதிய நீதியரசர் யார்?

தெரியாது.

யார் எழுதியது என்று அதில் குறிப்பிடப்படவில்லை.

ஒருவருக்கு மேற்பட்ட நீதிபதிகள் அமர்வென்றால் அத்தீர்ப்பை எழுதிய ஜட்ஜ் யார் என்பது அதிலே குறிப்பிடப் பட்டிருக்கும்.

ஆனால் ஐந்து நீதிபதிகள் அமர்வு அளித்த இத்தீர்ப்பில் அந்த விபரம் சொல்லப்படவில்லை.

ஏன்?

ஜனநாயகத்திற்கு எதிராக, ஆட்டுத்தாடிகளின் அராஜகத்திற்கு ஆதரவாக தீர்ப்பளிக்கிறோம் என்ற குற்ற உணர்வா?

இதற்கு முன்பும் இப்படி நிகழ்ந்திருக்கிறது.

பாபர் மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம். மசூதிக்கு கீழே ராமர் கோயில் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரம் எதுவும் இல்லை என்று சொல்லிக் கொண்டே பாபர் மசூதியை இடித்த கிரிமினல் குற்றவாளிகளிடமே பாபர் மசூதி நிலத்தை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஒப்படைத்த அந்த ஐவர் அமர்வு தீர்ப்பிலும் யார் எழுதியது என்பது சொல்லப்படவில்லை.

இதுதான் உச்ச நீதிமன்றத்தின் வெளிப்படைத்தான்.

"ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்யறான்" என்ற ரஜினி பட பஞ்ச் வஜனம் போல கடவுளைக்கேட்டேன், அவர் உத்தரவிட்டதை எழுதினேன் என்று மோடியை வீட்டுக்கு அழைத்து பூஜை செய்ய வைத்த முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்  பின்னாளில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது வேறு கதை. . . .