Tuesday, March 25, 2025

அநாகரீகம்-அசிங்கம்-அராஜகம்

 


சவுக்கு சங்கர் ஒரு அரசியல் தரகன், பிளாக் மெயிலர், பணத்திற்காக பொய்ப் பிரச்சாரம் செய்யும் கீழ்த்தரமான நபர்.

துப்புறவுத் தொழிலாளர்களைப் பற்றி அந்தாள் பேசியது கேவலமானது. 

அதற்கான எதிர்வினையாக அந்தாள் வீட்டில் கழிவு நீரையும் மனிதக் கழிவுகளையும் வீசியது என்பது மிகவும் அநாகரீகமான செயல்.

இதுதான் சரியான எதிர்வினை என்று சிலர் பாராட்டுவது அசிங்கமாக இருக்கிறது. சொல்லப்போனால் துப்புறவுத் தொழிலாளர்கள் மீது இந்த சம்பவம் ஏற்படுத்திய களங்கத்தை இவர்கள் அதிகமாக்குகிறார்கள்.

இந்த சம்பவத்தை கண்டித்தால் நீங்கள் சவுக்கு சங்கருக்கு நீங்களும் ஆதரவாக செயல்படும் தரகர்தான் என்று சில உ.பி க்கள் சொல்வது அராஜகமானது.

உங்கள் அராஜகத்தால் பாதிக்கப்படப் போவது திமுக மட்டுமே. இது கூட புரியாத முட்டாள்களா அவர்கள்! அல்லது அவர்கள் திமுகவில் உள்ள பாஜக ஸ்லீப்பர் செல்களா? 

Monday, March 24, 2025

அதை மட்டும் மன்னிக்க முடியாது டமில்மூசிக் மேடம்

 


மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் உங்கள் அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு முட்டு கொடுக்கும் உங்கள் தமிழ்த்துரோகத்தைக் கூட மன்னிப்பேன், டமில் மூசிக் மேடம் . . .


மோடி தமிழை அதிகம் பயன்படுத்தினார் என்று சொல்லியுள்ளீர்களே, அதை மட்டும் மன்னிக்க முடியாது.

ஏனென்றால் மோடி செய்தது.

தமிழ்க் கொலை.

பாஜக வில் சேர்ந்தாலே இப்படித்தான் மனசாட்சி இல்லாமல் அபாண்டமாக பொய் பேசனும் போல . . .

நீங்களும் ஒன்றும் செய்யவில்லையே யுவர் ஆனர்

 


நேற்று ஆங்கில இந்துவில் படித்த செய்தி கீழே . . .

"இந்திய குடிமக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள். ஏராளமான வழ்க்குகள் காலம்காலமாக நிலுவையில் உள்ளது. அதை சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. நீதித்துறை இந்தியமயமாக்கப் பட வேண்டும். சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் நீதிபதிகளை நியமிக்க வேண்டும். நீதிமன்றத்தின் மொழி அந்தந்த பகுதிகளின் மொழியாக இருக்க வேண்டும், வழக்காடிகளுக்கு தங்கள் வழக்கில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. முக்கியமான பல வழக்குகள் எடுக்கப்படுவதே இல்லை."

இவற்றைச் சொன்னது 24,பிப்ரவரி 2021 முதல் 26 ஆகஸ்ட், 2022 வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த திரு என்.வி.ரமணா. 17.02.2014 லில் இருந்தே அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்துள்ளார்.  அதனால் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் "கோலோஜியம்" உறுப்பினராகவும் நீண்ட காலம் இருந்திருப்பார்.

எனது கேள்வி எளிமையானது.

நீதித்துறையின் குறைகள் என்று பட்டியல் போடுகிற பிரச்சினைகளை தீர்க்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

வழக்கு மொழி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உங்களிடம் இருந்தும் ஏன் அதனை பயன்படுத்தவில்லை?

சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் நீதிபதிகளை நியமிக்க கொலோஜிய உறுப்பினராக என்ன செய்தீர்கள்?

தேங்கிக் கிடக்கும் வழக்குகளை பட்டுவாடா செய்ய எந்த நடவடிக்கையும் உங்களால் எடுக்கப்படவில்லையே, ஏன்?

தேர்தல் பத்திரம், காஷ்மீர் சிறப்புப்பிரிவு 370, உள்ளிட்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டிய 53 முக்கிய வழக்குகளை தொடாமல் அப்படியே ஓய்வில் சென்று விட்டீர்களமே, ஏன்?

பதில் சொல்வீங்களா யுவர் ஆனர்?

இன்று விழித்துக் கொண்டுள்ள உங்கள் மனசாட்சி, பதவியில் இருக்கும் போது ஏன் உறங்கியது? 


Sunday, March 23, 2025

காண்டோ பல்லால் – முதல் சங்கி மூடன்

 


நேற்றைய பதிவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது சர்சங்க்சாலக் சத்ரபதி சிவாஜியின் மகன் “சாம்பாஜியை குடிகாரன், பெண்களை வேட்டையாடுபவன், காண்டோ பல்லாலின் சகோதரி மீது சாம்பாஜியின் கொடிய பார்வை விழுந்ததும் அவன் தன் சகோதரியை தற்கொலை செய்யச் சொல்லி மானத்தை காப்பாற்றிக் கொள்ளச் செய்தான்” என்று எழுதியிருந்ததை குறிப்பிட்டிருந்தேன்.

 கோல்வாக்கரின் “சிந்தனைக் கொத்துக்கள்” நூலில் அந்த குறிப்பிட்ட பகுதி கீழே உள்ளது. காண்டோ பல்லாலை கோல்வால்க்கர் புகழோ புகழ் என்று புகழ்கிறார் என்பது அதை படித்தால் உங்களுக்கு புரியும்.

 யார் இந்த  காண்டோ பல்லால்?



 “சாம்பாஜியின் தீவிர விசுவாசி இந்த காண்டோ பல்லால். இவனின் தந்தை சத்ரபதி சிவாஜியின் எட்டு அமைச்சர்களில் ஒருவர். சிவாஜி இறந்து சாம்பாஜி அரியணைக்கு வந்த பிறகு  முந்தைய ஏதோ கசப்பின் காரணமாக அவருக்கு மரண தண்டனை அளித்து  கொன்று விட்டான். தன்னுடைய வலியையும் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் மௌனமாக விழுங்கிக் கொண்டு சாம்பாஜிக்கு சேவை புரிந்தான்.

 மதுவுக்கு அடிமையாகி பெண்களை வேட்டையாடுவதை வழக்கமாக்கிக் கொண்ட சாம்பாஜியின் தீய பார்வை தன் சகோதரி மீது படிவதை அறிந்ததும், கற்பை பாதுகாத்துக் கொள்ள அவளை தற்கொலை செய்து கொள்ள வைத்தான்.

 சாம்பாஜியின் மோசமான குணங்கள் பற்றி தெரிந்திருந்தாலும் இந்துக்களை ஒன்றினைக்கும் அடையாளமாக சாம்பாஜி இருந்ததால் இந்து தர்மத்திற்காக காண்டோ பல்லால் சாம்பாஜிக்கு துணையாக இருந்தான். ஔரங்கசீப்பால் சாம்பாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது தன் உயிரை பணயம் வைத்து மீட்டு வந்தான்.

 சாம்பாஜியின் மரணத்திற்கு பின்பு அரியணைக்கு வந்த சாம்பாஜியின் சகோதரன் ராஜாராமிற்கும் விசுவாசமாக இருந்தான் காண்டோ பல்லால். செஞ்சிக் கோட்டையில் சிக்கிக் கொண்ட ராஜாராமை காப்பாற்றும் பணியில் இறந்து போகிறான்.

 எப்பேற்பட்ட தியாக வாழ்வு காண்டோ பல்லால் உடையது!”

 இதுதான் கோல்வால்கர் காண்டோ பல்லால் பற்றி எழுதியது.

 தந்தையை கொன்று, சகோதரியை பாலியல் வன்புணர்ச்சி செய்ய திட்டமிட்டு தற்கொலை செய்ய வைத்த சாம்பாஜியின்மீது கொஞ்சமும் கோபப்படாமல் விசுவாகமாக இருப்பதற்கு என்ன் பெயர்?

 கையாலாகாதவன் …

கோழை,

 சுயநலவாதி

 மத வெறி கண்ணை மூடியதால்  தன் வாழ்வை அழித்த சாம்பாஜிக்கு எதிராக திரும்பாமல் ஆதரவாக செயல்பட்ட  காண்டோ பல்லாலை மூடன் என்றழைக்காமல் வேறெப்படி அழைப்பது!

அவன் காட்டிய பாதையில் இன்றும் ஆயிரக்கணக்கான சங்கிகள்  பாஜக அரசால் தங்கள் வாழ்வாதாரம் அழிந்து போவதைக் கூடப் பற்றி கவலைப்படாமல் உசுப்பேற்ற்றப்பட்ட மதவெறி காரணமாக மூடர்களாக தங்களையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். 

Saturday, March 22, 2025

சங்கி பெரும் கரடிகளே தூற்றிய சாம்பாஜி

 


சங்கிகள் இன்று சத்ரபதி  சிவாஜியின் மகன் சாம்பாஜி மீது  திடீரென பாசத்தை பொழிந்து கொண்டு ஔரங்கசீப்பின் மீது வெறுப்பை கக்கிக் கொண்டு கலவரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 சாம்பாஜி  பற்றி வரலாறு சொல்வது என்ன?

 வரலாற்றை விட்டுத்தள்ளுங்கள்

 சங்கிகளின் குருமார்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்?

 மகாத்மா காந்தி கொலை வழக்கு புகழ், தனக்குத்தானே வீரன் பட்டம் கொடுத்துக் கொண்ட சாவர்க்கர் என்ன சொல்லியுள்ளார் என்பது கீழே உள்ளது.

 

“மராத்தா சாம்ராஜ்யத்தை ஆள சாம்பாஜி தகுதியற்றவன், முன் கோபி, குடிகாரன், ஸ்த்ரீ லோலன்.”

 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது சர்சங்சாலக்கான கோல்வாக்கர் எழுதிய “சிந்தனைக் கொத்துக்கள்” என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கை பிரகடன நூலில் சாம்பாஜி பற்றி எழுதியுள்ளது கீழே உள்ளது.

 


சாம்பாஜி குடிகாரன், பெண்களை வேட்டையாடுபவன், காண்டோ பல்லாலின் சகோதரி மீது சாம்பாஜியின் கொடிய பார்வை விழுந்ததும் அவன் தன் சகோதரியை தற்கொலை செய்ய வைத்து மானத்தை காப்பாற்றிக் கொள்ளச் செய்தான்”

 ஆக சங்கிகளின் குருமார்களான கோழை சாவர்க்கர் மற்றும் கோல்வாக்கர் ஆகிய இருவரும் சாம்பாஜியை

 குடிகாரன், பெண்களை வேட்டையாடுபவன்

 என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

 அப்படிப்பட்ட ஒரு மோசமான ஆளை முன் வைத்து சங்கிகள் கலவரம் நடத்துகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் சாம்பாஜி  மீதான பாசம்  அல்ல, இஸ்லாமியர்கள் மீதான  வெறுப்புதான்.

 பிகு: அடுத்த பதிவு :  காண்டோ பல்லால் – முதல் சங்கி மூடன்

Friday, March 21, 2025

கலவரத்தை தூண்டும் காவி சினிமாக்கள்

 


சங்கிகள் இப்போதெல்லாம் சினிமாக்கள் எடுக்கத் தொடங்கி விட்டனர். கொஞ்சம் உண்மை, நிறைய பொய், முழுக்க முழுக்க வன்மம், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரம் என்பதுதான் அவர்கள் திரைப்படங்களின் செய்திகள்.

இதற்கு முன்பாக எடுத்த காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி ஆகியவை அவ்வளவாக எடுபடவில்லை.

ஆனால் இப்போது வந்துள்ள "சாவா" என்ற படம் அவர்கள் விரும்பிய விளைவை கொடுத்து விட்டது.

சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி பற்றிய படத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப் பற்றி வெறுப்பேற்றும் வகையில் காட்சிப்படுத்த மகாராஷ்டிர சங்கிகள் தங்கள் வேலையை தொடங்கி விட்டனர். மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்தில் உள்ள ஔரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என்று கிளம்பி விட்டார்கள். காவிக்கூட்ட தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் கலவரம் வெடிக்க அங்கே 144 உத்தரவு போடப்பட்டுள்ளது.

ஔரங்க்சீப் பற்றி நாம் பள்ளியில் படிக்கும் போதே ஒரு மோசமான தோற்றத்தை உருவாக்கும் வகையில்தான் பாடமே அமைந்திருந்தது. அது காட்சியாக திரையில் தோன்றுகிறபோது காவிக்கண்ணாடி அணிந்த சங்கிகளுக்கு கலவரத்தை தூண்ட காரணமாக அமைந்து விட்டது.

சமாதியை அகற்றலாம், காங்கிரஸ் கொண்டு வந்த தொல்லியல் சட்டத்தால்தான் அது முடியாமல் போய் விட்டது என்று பிரச்சினையை இன்னும் விசிறி விடுகிறார் முதலமைச்சர் பட்னாவிஸ். சட்டம் என்ன செய்யும் என்று ஆணவமாக பேசுகிறார் முதல்வராக இருந்து துணை முதல்வராக பதவி இறக்கம் பெற்ற ஏக்நாத் ஷிண்டே.

அவர்களைப் பொறுத்தவரை ஔரங்கசீப் என்பது வெறும் சாக்கு. மதவெறியை தீ போல பரப்புவதுதான் நோக்கம்.

அந்த வெறி அவ்வளவு சீக்கிரம் அடங்காது என்பதுதான் துயரமான யதார்த்தம்.

பிகு : அடுத்த பதிவு - சாம்பாஜியை தூற்றும் சங்கி மூலவர்கள். . .


நேற்று நாக்பூர், இன்று அலகாபாத்


அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி கொடுத்த தீர்ப்பு கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.


இப்படி ஒரு கேவலமான தீர்ப்பை ஒரு நீதிபதி அளிக்கிறார் என்றால் அவர் நிச்சயம் சங்கியாக மட்டுமே இருக்க முடியும். பெண்களை வெறும் போகப் பொருளாக அவர்கள் மட்டும்தான் பார்ப்பார்கள்.

இது போன்ற தீர்ப்பு இதற்கு முன்பாக வந்துள்ளது.

காவிகளின் தலைமையகம் நாக்பூரில் அமைந்துள்ள பம்பாய் உயர்நீதி மன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் ஒரு நீதிபதி இது போன்றதொரு தீர்ப்பை அளிக்க அதனை உச்ச நீதிமன்றம் அகற்றி விட்டது, அபத்தமான தீர்ப்பு என்று கண்டித்து அந்த நீதிபதி நிரந்தர நீதிபதியாவதையும் ரத்து செய்து விட்டது.

இந்த மனிதனை நீதிபதி பதவியிலிருந்து நீக்குவதுதான் சரியாக இருக்கும்.

முந்தைய வழக்கு பற்றி அப்போது எழுதப்பட்ட பதிவு கீழே உள்ளது.


அபத்தமான தீர்ப்பு அகற்றப்பட்டது

 19, நவம்பர், 2021


கடந்தாண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை ஒரு அபத்தமான  தீர்ப்பை அளித்தது.

 ஒரு சிறுமியை ஒரு கிழவன் பாலியல் சீண்டல் செய்தான் என்று போக்ஸோ சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில்

 அந்த சிறுமி ஆடைகள் அணிந்திருந்ததால், நேரடியான தொடுதல்  இல்லாத காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்தார் ஒரு பெண் நீதிபதி. 

 நல்ல வேளையாக அந்த தீர்ப்பிற்கு தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தற்காலிக நீதிபதியாக இருந்த அந்த அம்மையாரை நிரந்தர  நீதிபதியாக்காமல் பதவியிலிருந்து அகற்றினர்.

 நேற்று உச்ச நீதிமன்றம் நாக்பூர் தீர்ப்பை ரத்து செய்துள்ளது. அது  அபத்தமான ஒன்று என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 "ஆடைகள் இருந்ததா, நேரடி தொடுதல் இருந்ததா இல்லையா என்பதெல்லாம் முக்கியமே இல்லை, பாலியல் சீண்டல் நோக்கம்   இருந்ததா என்பது மட்டுமே முக்கியம்"

 என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

 குற்றவாளிகள் சட்டத்தின் குறைபாடுகளை பயன்படுத்தி தப்பிக்க அனுமதிக்கப் படக் கூடாது.