நேற்றைய
பதிவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது சர்சங்க்சாலக் சத்ரபதி சிவாஜியின் மகன் “சாம்பாஜியை
குடிகாரன், பெண்களை வேட்டையாடுபவன், காண்டோ பல்லாலின் சகோதரி மீது சாம்பாஜியின் கொடிய
பார்வை விழுந்ததும் அவன் தன் சகோதரியை தற்கொலை செய்யச் சொல்லி மானத்தை காப்பாற்றிக்
கொள்ளச் செய்தான்” என்று எழுதியிருந்ததை குறிப்பிட்டிருந்தேன்.
கோல்வாக்கரின்
“சிந்தனைக் கொத்துக்கள்” நூலில் அந்த குறிப்பிட்ட பகுதி கீழே உள்ளது. காண்டோ பல்லாலை
கோல்வால்க்கர் புகழோ புகழ் என்று புகழ்கிறார் என்பது அதை படித்தால் உங்களுக்கு புரியும்.
யார்
இந்த காண்டோ பல்லால்?
“சாம்பாஜியின்
தீவிர விசுவாசி இந்த காண்டோ பல்லால். இவனின் தந்தை சத்ரபதி சிவாஜியின் எட்டு அமைச்சர்களில்
ஒருவர். சிவாஜி இறந்து சாம்பாஜி அரியணைக்கு வந்த பிறகு முந்தைய ஏதோ கசப்பின் காரணமாக அவருக்கு மரண தண்டனை
அளித்து கொன்று விட்டான். தன்னுடைய வலியையும்
தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் மௌனமாக விழுங்கிக் கொண்டு சாம்பாஜிக்கு சேவை புரிந்தான்.
மதுவுக்கு
அடிமையாகி பெண்களை வேட்டையாடுவதை வழக்கமாக்கிக் கொண்ட சாம்பாஜியின் தீய பார்வை தன்
சகோதரி மீது படிவதை அறிந்ததும், கற்பை பாதுகாத்துக் கொள்ள அவளை தற்கொலை செய்து கொள்ள
வைத்தான்.
சாம்பாஜியின்
மோசமான குணங்கள் பற்றி தெரிந்திருந்தாலும் இந்துக்களை ஒன்றினைக்கும் அடையாளமாக சாம்பாஜி
இருந்ததால் இந்து தர்மத்திற்காக காண்டோ பல்லால் சாம்பாஜிக்கு துணையாக இருந்தான். ஔரங்கசீப்பால்
சாம்பாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது தன் உயிரை பணயம் வைத்து மீட்டு
வந்தான்.
சாம்பாஜியின்
மரணத்திற்கு பின்பு அரியணைக்கு வந்த சாம்பாஜியின் சகோதரன் ராஜாராமிற்கும் விசுவாசமாக
இருந்தான் காண்டோ பல்லால். செஞ்சிக் கோட்டையில் சிக்கிக் கொண்ட ராஜாராமை காப்பாற்றும்
பணியில் இறந்து போகிறான்.
எப்பேற்பட்ட
தியாக வாழ்வு காண்டோ பல்லால் உடையது!”
இதுதான்
கோல்வால்கர் காண்டோ பல்லால் பற்றி எழுதியது.
தந்தையை
கொன்று, சகோதரியை பாலியல் வன்புணர்ச்சி செய்ய திட்டமிட்டு தற்கொலை செய்ய வைத்த சாம்பாஜியின்மீது
கொஞ்சமும் கோபப்படாமல் விசுவாகமாக இருப்பதற்கு என்ன் பெயர்?
கையாலாகாதவன்
…
கோழை,
சுயநலவாதி
மத
வெறி கண்ணை மூடியதால் தன் வாழ்வை அழித்த சாம்பாஜிக்கு
எதிராக திரும்பாமல் ஆதரவாக செயல்பட்ட காண்டோ
பல்லாலை மூடன் என்றழைக்காமல் வேறெப்படி அழைப்பது!
அவன் காட்டிய பாதையில் இன்றும் ஆயிரக்கணக்கான சங்கிகள் பாஜக அரசால் தங்கள் வாழ்வாதாரம் அழிந்து போவதைக் கூடப் பற்றி கவலைப்படாமல் உசுப்பேற்ற்றப்பட்ட மதவெறி காரணமாக மூடர்களாக தங்களையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.