ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Tuesday, November 25, 2025
கோர்ட்டால் அசிங்கப்படுத்தப்பட்ட தவெக நிர்வாகி
Monday, November 24, 2025
விஜய் செல்லம் அது என் டயலாக் -பிரகாஷ்ராஜ்
நேற்று விஜய் காஞ்சிபுரத்தில் பேசிய வஜனம் அவருடைய பூத எழுத்தாளர் GHOST WRITER , சிங்கம் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசியதை காப்பி அடித்து எழுதிக் கொடுத்தது. சந்தேகமாக இருக்கிறதா?
கீழே உள்ள காணொளியை பாருங்கள்
அப்பறம் மேலே உள்ள படத்தில் விஜயைத்தான் சொல்லி உள்ளார்கள் என்று தவெக தற்குறிகள் நியூஸ் 7 சேனலிடம் சண்டைக்கு போக வேண்டாம். அது ?நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு ஓடு ராஜா" படத்தில் வரும் காட்சி.
41 பேருடைய மரணத்துக்கு காரணமாக இருந்து கொண்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் ஆளுங்கட்சி மீது பழி போடும் தற்குறிகளின் தலைவனுக்கு அது பொருத்தமாக உள்ளதால் நான்தான் எடுத்துப் போட்டேன்.
வாயில் ரத்தம் வழியும் சங்கி ஓநாய் - கர்னாடக காங்கிரஸே எச்சரிக்கை
வாயில் ரத்தம் சொட்ட சொட்ட, கர்னாடக ஆட்சியையும் கைப்பற்ற சங்கி ஓநாய்கள் ஆவலுடன் காத்திருப்பதை பார்த்தீர்களா!
Sunday, November 23, 2025
அவரை நான் எப்படி கூப்பிட?
ஒன்பது முறை எழுந்தவன்
தமிழ்நாட்டின் பெரும் கவி ஈரோடு தமிழன்பவன் அவர்கள் இயற்கை எய்தி விட்டார். அவரை ஒரு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகத்தான் முதன் முதலில் அறிந்து கொண்டேன். பின்பு தூர்தர்ஷனில் கலைஞர் தலைமை தாங்கிய ஒரு கவியரங்கத்தில் கவிதை வாசித்த போதுதான் அவர் கவிஞர் என்று அறிந்து கொண்டேன்.
இந்தி திணிப்பை எதிர்த்த "அசோகச் சக்கரத்தை அஜர்பைஜான் விசாரிக்கும்" என்ற கவிதையை சங்கிகள் "அஜர்பைஜான் எரிக்கும்" என்று மாற்றி அவரது செய்தியாளர் பணியை பறித்தார்கள் என்பது நாம் மறக்கக் கூடாத நிகழ்வு.
பாரதியின் "வீழ்வேன் என்று நினைத்தாயோ" போல அவரது :ஒன்பது முறை எழுந்தவனல்லாவா நீ" யும் சோர்வைப் போக்கி எழுச்சி தரும்.
அவர் தமிழாக்கம் செய்த பாப்லோ நெரூடாவின் கவிதைகளில் ஒன்றை மூன்றாண்டுகளுக்கு முன்பு எங்கள் கோட்டத்தின் காலண்டரில் பயன்படுத்தியுள்ளோம்.
முற்போக்கு சிந்தனையாளரான தோழர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலி.
அவரது மறைவை ஒட்டி அஞ்சலியாக அவரின் சில கவிதைகள்.
******************************************************************************
அன்பில் தழைத்தது எதுவோ
அது தமிழ் உயிர்
இளகிக்
அண்டம் இணைப்பது எதுவோ
அது தமிழ் அறிவு
**********************************************************
Saturday, November 22, 2025
சங்கிகள் -தமிழ்நாட்டின் துரோகிகள்
மதுரை, கோவை நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்கள் கிடையாது என்று ஒன்றிய அரசு அனுமதி மறுத்து விட்டது. 2011 ல் எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த நகரங்களின் மக்கட்தொகை இருபது லட்சத்திற்கு குறைவாக இருப்பதால் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கட்தொகை இருபது லட்சத்திற்கு குறைவாக உள்ள நகரங்களில் மெட்ரோ செயல்படும் போது மதுரைக்கும் கோவைக்கும் மட்டும் மறுப்பது மோடியின் அப்பட்டமான தமிழ்நாட்டு விரோத அரசியல்.
இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் 2021 மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் நிச்சயம் இருபது லட்சம் கடந்திருக்கும். ஆக இவர்கள் மறுத்த காரணத்திற்கும் இவர்களே பொறுப்பு.
மத்தியரசின் செயலை சங்கிகள் கண்டிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நேர்மை இருந்தால் அந்த மூடர்கள் ஏன் சங்கிகளாக இருக்கப் போகிறார்கள்!
முதலில் செய்தி தவறு என்றார்கள்.
அடுத்து விளக்கம்தான் கேட்டுள்ளார்கள் என்றார்கள்.
தமிழ்நாடு அனுப்பிய திட்ட அறிக்கை தவறு என்று வியாக்யானம் கொடுத்தார்கள்.
ஆனால் இவர்களை மக்கள் எள்ளி நகையாடுவதால்
கோவைக்கும் மதுரைக்கும் எதற்கு மெட்ரோ என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள். மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் எல்லாம் இப்போது அந்த ஒப்பாரியைத்தான் வைத்துக் கொண்டுள்ளார்கள்.
இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் எதிரிகள், துரோகிகள். அவர்களை இந்த மாநிலத்திலிருந்தே துரத்த வேண்டும்.







.jpg)
