Sunday, August 17, 2025

பழைய து.ஜ வே நல்லவருப்பா . . .

 


ஆமாம். ராஜினாமா செய்த/செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட முன்னாள் துணை ஜனாதிபதி ஜ்க்தீப் தன்கர்  இப்போது நல்லவராகி விட்டார். 

ஆமாம். 

அவர்கள் புதிய ஜனாதிபதியாக முன்மொழியப்பட்டுள்ளவரின் வரலாறு அப்படி . . .

அது சரி,

பாஜகவில் என்ன மகாத்மா காந்திகளா இருக்கிறார்கள்! எல்லோருமே ரத்தக்கறை படிந்த கிரிமினல்கள்தானே!

Saturday, August 16, 2025

ராஜ்பவனை இழுத்து மூடி ரெவியை . . .

 


சென்னை ராஜ்பவன் மக்கள் விரோதியின், மனித குல விரோதியின் வசிப்பிடமாகி விட்டது. ஆளுனர் பதவியில் அமர்ந்துள்ள ரெவி எனும் நச்சுப்பாம்பு தொடர்ந்து விஷத்தை கக்கிக் கொண்டிருக்கிறது. 

சுதந்திர தினத்திற்கு முன்பாக ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளது. அதை இங்கே பகிர்ந்து கொள்ள எனக்கு மிகவும் கூச்சமாக இருக்கிறது.

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைத் தூண்டும் விஷ(ம)ப் பிரச்சாரம் அது. பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு இன்று ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என்று செய்துள்ள சிறு மதி கொண்டவனின் சில்லறைச் செயல்.

ராஜ்பவனை இழுத்து மூடி ரெவியை பீகாருக்கு துரத்தாவிட்டால் ரெவியின் எண்ணம் பலித்து தமிழ்நாடு கலவரக்காடாகும்.

தூய்மைப் பணியாளர்களை ஒடுக்குவதிலும் அவர்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதிலும் காண்பித்த வீரத்தில் நூறில் ஒரு பங்கையாவது திமுக உடன் பிறப்புக்கள் ரெவி மீது காண்பிக்கட்டும். ஒரு மாணவியின் வீரம் மற்றவர்களுக்கு எப்போது வரும்?


Thursday, August 14, 2025

மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் முதல்வர்

 


என் பெயர் ஸ்டாலின், நான் ஒரு பாதி கம்யூனிஸ்ட் என்று முதல்வர் சொல்லலாம். அந்த மீதி முதலாளித்துவவாதிதான் தொழிலாளர்கள் பிரச்சினையில் செயல்படுகிறார் போல . . .

முதலில் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டம். கடுமையான போராட்டம் காரணமாக அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது.

அடுத்து சாம்சங் பிரச்சினையில் முதலாளியின் பிரதிநிதியாய் அரசின் அனைத்து இயந்திரங்களும் செயல்பட்டது. நீதிமன்ற உத்தரவு காரணமாக வேறு வழியின்றி சங்கம் பதிவு செய்யப்பட்டது.

இப்போது துப்புறவுப் பணியாளர்கள் பிரச்சினையில் தேவையற்ற ஈகோ காரணமாக தீர்வைக் காணாமல் போலீஸ் மூலம் அடக்குமுறையை ஏவி விட்டு உழைக்கும் மக்களின் கோபத்தை சம்பாதித்துள்ளார் முதல்வர். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

துப்புறவுப் பணியாளர்களுக்கு அதை செய்தோம், இதை செய்தோம் என்றெல்லாம் பட்டியல் போடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாகும்.

மீண்டும் மீண்டும் செய்யும் தவறுகள் ஆட்சிக்கு மீண்டும் வருவதற்கு அவரே போடும் முட்டுக்கட்டைகள் என்று முதல்வர் எப்போது உணரப் போகிறாரோ?

திமுக தோல்வியைத் தவிர்க்க வேண்டுமென்றால் மைத்ரேயன் போன்ற ஆர்.எஸ்.எஸ் ஆட்களை சேர்ப்பதை தவிர்ப்பது மட்டுமல்ல, சேகர்பாபுவை தள்ளி வைப்பதும் மிக முக்கியம். 

Wednesday, August 13, 2025

மனிதன் சினிமா போல நிஜத்திலும்

 


மனிதன் திரைப்படத்தில் "இறந்து போனதாக போலீஸால் கணக்கு காண்பிக்கப்பட்ட ஒருவர் க்ளைமாக்ஸில் வந்து சாட்சி சொல்லுவதாக காட்சி இறக்கும்.

பீகாரில் மரணமடைந்து விட்டார்கள்     என்று சொல்லி தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இரு வாக்காளர்களை டெல்லி முன்னாள் துணை முதல்வர் யோகேந்திர யாதவ் உச்ச நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளார்.

திரைப்படத்தை மிஞ்சும் இக்காட்சி தேர்தல் ஆணைய, மோடி கூட்டணியின் அயோக்கியத்தனத்திகுச் சான்று 


Saturday, August 9, 2025

இன்னும் நாலு ஜட்ஜுங்கள சேர்த்துக்குங்கய்யா . . .

 


இப்படி ஒரு போர்ட் விரைவில் எழுதப்பட்டால் அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. 

ஆமாம். நம்ம ஜட்ஜய்யா ஒருத்தரு இந்த வேலையைத்தான் நேத்து செஞ்சாரு. 


ஐய்யா, தலைமை நீதிபதி ஐய்யாங்களா, தமிழ்நாட்டில இந்த மாதிரி உதிரி கட்சிங்க நெறய இருக்கு! அதுக்குள்ள சண்டைங்களும் நெறய இருக்கு, அதனால டெல்லில சொல்லி கூட இன்னொரு நாலு ஜட்ஜுங்கள வேலைக்கு சேத்துக்குங்க. அவங்க பஞ்சாயத்துக்களை பாத்துக்கட்டும். இல்லாட்டி கேஸ் கட்டுங்க தேங்கிப் போய் கோர்ட்டுல இடம் பத்தாம போயிடப் போகுது. 

Thursday, August 7, 2025

இனிமே பத்ரி சேஷாத்ரி பேரு ????

 


கிழக்கு பதிப்பக சங்கி பத்ரி சேஷாத்ரிக்கு எதுக்கு இப்போ பாயசம் என்ற கேள்வி வரலாம்.

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயர் இருக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்த சமயத்தில் 01.08.2025 அன்று தெனாவெட்டாக " பாபர் மசூதியை இடிக்கும் போது அமெரிக்காவில் இருந்தேன். மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது" என்று சொல்லியிருந்த அந்த சங்கி ஒரு பதிவு போட்டு "எல்லாம் வல்ல" வில்சன் உச்ச நீதிமன்றம் போவாரா என்று வேறு கேட்டிருந்தார். 

நேற்று தீர்ப்பு வந்ததும் அப்படியே பல்டி அடித்து வில்சனுக்கு பாராட்டு வேறு சொல்கிறார்.


இவருக்கு பல்டி சேஷாத்ரி என்ற பெயர் கன கச்சிதமாக பொருந்துகிறது அல்லவா!

Wednesday, August 6, 2025

இதுதான் நெசம் முட்டாள் சங்கிகளே

 

இந்த கார்ட்டூனை நினைவு படுத்த வேண்டிய அவசியத்தை முட்டாள் சங்கிகள் உருவாக்கி விட்டார்கள்.

ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியது நான்தான் என்று  27 முறை ட்ரம்ப் சொல்லிவிட்டார். இந்தியப் பொருளாதாரத்தை செத்துப்போன பொருளாதாரம் என்று சொல்லி ஒரு வாரமாகிவிட்டது. ரஷ்யாவோடு எந்த வியாபாரமும் செய்யக்கூடாது என்று மிரட்டி மூன்று நாளாகி விட்டது. ஆனால் மோடியோ வாய் திறக்கவே இல்லை.

இந்த சூழலில் இப்படி ஒரு படத்தை சங்கிகள் பரப்புகிறார்கள்.


அதனால்தான் சொல்ல வேண்டியுள்ளது. அடேய் முட்டாள் சங்கிகளே, உங்க மோடி பில்டிங், பேஸ்மெண்ட் எல்லாம் பலவீனமாக இருக்கிற. மேல் மண்டையில ஒன்னும் இல்லாத  வெறும் டம்மி பீஸ்.  ட்ரம்பைப் பார்த்து நடுங்குபவர் என்பதுதான் யதார்த்தம்.

அதனால் இந்த பில்ட் அப் வேலையை எல்லாம் நிறுத்திக் கொள்ளுங்கள்.