Monday, May 6, 2024

மோடி பொய் சொன்னா ஆராயலாமா?

 


மோடி வாயைத் திறந்தால் வருவதெல்லாம் பொய் என்பது நிரூபணமான பிறகு அவர் சொல்வதை எல்லாம் ஆராயலாமா?

இந்த பொய்யை நம்பி "வாராது வந்த மாமணி" என்பது போல பல அடிமுட்டாள் சங்கிகள் போடும் பதிவுகள்தான் எரிச்சல் தருகிறது.

சங்கி என்றால் அயோக்கியர்களும் அடிமுட்டாள்களும்தான் என்பது தெரிந்தும் கூட எரிச்சல் வருகிறது. அரசியலில் மட்டுமல்ல, அன்றாட வாழ்வில் கூட  சில அயோக்கியர்களுக்கு முட்டு கொடுத்து முட்டாள்களாகிக் கொண்டிருக்கும் சிலரைக் கண்டும் இப்படித்தான் எரிச்சல் வருகிறது. 

என்ன செய்ய இதுதான் மனித இயல்பு!

விலகி நிற்பதே சில சமயம் தீர்வாகி விடுகிறது. 

Sunday, May 5, 2024

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் . . .

 


ஷங்கரின் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான "காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால், சின்ன தகரம் கூட தங்கமாகும்" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் கைவண்ணத்தில்

யூட்யூப்  இணைப்பு இங்கே . . .

Saturday, May 4, 2024

மோடி கூட நம்ப முடியாத பொய்

 


"ஒரு மனுஷன் பொய் சொல்லலாம், ஆனா ஏக்கர் கணக்கில பொய் சொல்லக்கூடாது" என்ற கவுண்டமணி வசனத்துக்கு பொருத்தமான பொய் கீழே உள்ளது.


ஒரு மந்திரி பதவி நிலைக்க வேண்டும் என்பதற்கு மனுசன் என்னமா கூவறாரு!


Friday, May 3, 2024

அப்பனுக்கு பதில் மகனா மோடி?

 


மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகள் செய்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சரண்சிங்கை நினைவில் உள்ளதா?

அந்த பாலியல் கொடூரனுக்கு பாஜக இம்முறை சீட் கொடுக்கவில்லை.

பரவாயில்லையே என்றெல்லாம் ஒரு நொடி கூட நினைக்காதீர்கள்.

பிரிஜ் பூஷன் சரண்சிங்கிற்கு பதிலாக அவனுடைய மகன் கரண் பூஷண் சிங்கிற்கு சீட் கொடுத்துள்ளார் மோடி. அந்த குடும்பத்தையோ பாலியல் குற்றவாளியையோ விட்டுக் கொடுக்க மோடி தயாரில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த லட்சணத்துல பெண்களுக்கு இவர்தான் கியாரண்டியாம்.

வெட்கம் கெட்ட ஜந்து ...


Wednesday, May 1, 2024

சன் டிவி - இதை மட்டும்

 

சன் டிவி ராமாயணம் தொடரை ஒளிபரப்பப் போகிறதாம். அது தொடர்பான விளம்பரம் கீழே . . .



சன் டிவி ராமாயணம் ஒளிபரப்புவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. காசுக்காக "மோடி கியாரண்டி" விளம்பரங்களை வெளியிட்டவர்கள்தான். டி.ஆர்.பி க்காக எந்த குப்பையையும் ஒளிபரப்புவார்கள்.

ஆனால்

மனைவியை தீக்குளிக்க வைத்து பின்பு காட்டுக்கு அனுப்பிய கதையை "இனிய காதல் காவியம்" என்று சொல்வதைத்தான் ஏற்றுக் கொள்ளவே முடியாது. 

எதிரிகளையும் துரோகிகளையும் முறியடித்து


 
எதிரிகள் நேரில் மோதுவர்,
துரோகிகள் முதுகில் குத்துவர்,
கோழைகளாய் சிலர் பதுங்கிக் கொள்வர்,
நமக்கென்ன என சிலர் ஒதுங்கிக் கொள்வர்,
சமரசம் செய்து கொள்ள சிலர் உபதேசம் செய்வர்,
தவறுகளுக்கு சிலர் சாமரம் வீசுவர்.
அத்தனையையும் தாண்டி
அனைத்தையும் சந்தித்து
உழைப்பாளி வர்க்கம் என்றும் முன்னேறும்.

புரட்சிகர மே தின வாழ்த்துக்கள். 


Tuesday, April 30, 2024

தப்பு பண்ணிட்டீங்க நேரு

 


ஆம்.

நேரு தவறு செய்து விட்டார்.

என்ன தவறு?

மோடி சொல்லும் தவறுதான்.


உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதிலும் நீர்ப்பாசனத்திற்காக அணைகளை கட்டுவதிலும் அடிப்படை கட்டமைப்புத் தேவைகளுக்காக பொதுத்துறை நிறுவனங்களை ஏற்படுத்தியதிலும் காண்பித்த அக்கறையை மோடி சொன்னது போல கோயில்களை கட்டியிருந்தால், நேரு உருவாக்கிய நிறுவனங்களை சிதைப்பது போல கோயில்களையும் பாபர் மசூதி போல இடித்திருப்பார் மோடி.

அதற்கு வாய்ப்பு தராமல் போய் விட்டீர்களே நேரு . . .