Monday, November 17, 2025

சபாஷ், சரியான தீர்ப்பு

 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளரும் தற்போதைய துணைத்தலைவருமான தோழர் கே.சாமுவேல்ராஜ் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நீதித்துறை மீது அவ்வப்போது நம்பிக்கை இது போன்ற தீர்ப்புக்கள் அளிக்கிறது. 






சாதி வெறியன் தண்டபாணிக்கு

மற்றும் 10 ஆண்டுகள் தண்டனை!
அனுசுயா என்கிற தலித் பெண்ணை
வாழ்க்கை துணையாக தெரிவு செய்து கொண்டதற்காக 14.04.2023 அன்று
தான் பெற்ற மகன் சுபாசையும்,
தன்னை பெற்ற தாய் கண்ணம்மாவையும்
படுகொலை செய்து
அனுசுயாவையும் கொடுங்காயப்படுத்திய
சாதி வெறியன் தண்டபாணிக்கு
இரட்டை ஆயுள் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

அனுசுயாவிற்கு மாவட்ட நிர்வாகம் இரண்டரை லட்சம் ரூயாய் வழங்கிட
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை
அமர்வு நீதிமன்றம் 10 நிமிடங்களுக்கு முன்பு உத்தரவு!

கொலை பாதகன் வெறி கொண்டு வீசிய ஒவ்வொரு அரிவாள் வீச்சையும்
தனது கைகளால் தாங்கி
விரல்கள் அனைத்தும் சேதாரமாகி
முகத்திலும் தலையிலும்
கொடுங்காயங்களைத் தாங்கி
உடலில்,மனதில் தீராத வடுக்களுடன்
மகள் அனுசுயா மன உறுதியால் நம்முன் கம்பீரமாக நிர்கிறார்.

உடலில் 10 அறுவை சிகிச்சைகள்
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அனுசுயாவிற்கு மருத்துவத்தோடு அன்பையும் கலந்து கொடுத்தனர்.அவர்கள்
போற்றதலுக்குறியவர்கள்.

நிறைய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தார்கள்.உளப்பூர்வமாக ஆறுதலை பகிர்ந்தார்கள்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆறுதலுடன் நிதியும் அனுசுயாவிற்கு வழங்கியது நினைவு கொள்ளத்தக்கது.

இந்த படுபாதகம் நிகழ்ந்தப்பட்ட நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளது.வழக்கின் ஒவ்வொரு திருப்பத்திலும் உடன் பயணம் செய்தோம்.

போராட்டங்கள்,பயணங்கள்,வழக்கறிஞர் சந்திப்புகள்,விவாதங்கள் நம் கண் முன்னால் வானமாக விரிகிறது.

மருத்துவர்கள்,மருத்துவ மனையில் உதவிய சேலம் தோழர்கள்,கல்விக்கு உதவிய இன்சூரன்ஸ் சங்கத்தின் தோழர்கள்,ஒவ்வொரு வாய்தாவிலும் அணிவகுத்து வருகை தந்து வழி செலவுகளையும்,வயிற்றுக்கு உணவும் வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத் தோழர்கள்,மாநில மையத் தோழர்கள் எல்லோருக்கும் இயதபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

சி.பி.எம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மேற்கொண்டு வரும் ஆற்றல் மிகுந்த எங்களது பயணம் தொடரும்...

பிகு: இந்தப் பெண்ணின் கல்விக்கு உதவ ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அது பற்றி தனியாக எழுதுகிறேன்.

Sunday, November 16, 2025

விளம்பரம்னாலும் நியாயம் வேணாமாடா?


 இன்று காலையில் நாளிதழ் தாமதமாகத்தான் வந்தது. புதிதாக வெளியான திரைப்படத்தின் முதல் நாள், முதல் காட்சி பார்க்க கல்லூரி முதல்வர் கட் அடித்து விட்டு போனார் என்பது தலைப்புச்செய்தி.

இதெல்லாம் ஒரு தலைப்புச் செய்தியா என்று எரிச்சலுடன் பார்த்தால் முதல் பக்கத்தில் வந்தது ஒரு நூடுல்ஸின் விளம்பரம்  என்றும் எல்லா செய்திகளுமே கிறுக்குத்தனமான செய்திகளாகத்தான் இருந்தன.


மத்த செய்தியை எல்லாம் கூட ஏத்துக்கலாம். இந்தியாவோட ஒட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி) வரலாறு காணாத அளவு உயர்ந்தது என்ற செய்தியை மட்டும் என்னால் மன்னிக்கவே முடியவில்லை.

மோடியோட ஆட்சியில பொருளாதாரத்தின் எல்லா அளவுகோள்களிலும் வீழ்ச்சிதான் ஏற்பட்டுள்ளதே தவிர எந்நாளும் உயர்ந்ததில்லை. உயரப் போவதும் இல்லை.

விளம்பரம்னாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா?

Saturday, November 15, 2025

கவலைக்கிடமாய் . . .

 


தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லு,

வாக்குத் திருட்டு,

மத வெறி பிரச்சாரம்,

தேர்தலுக்கு முதல் நாள் வெடித்த வெடிகுண்டு,

தமிழ்நாட்டில் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதை பிச்சை கொடுப்பது என்று இழிந்து பேசிக் கொண்டே பத்தாயிரம் ரூபாய் அளித்தது,

என்று ஏராளமான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதெல்லாம் நமக்கு   நாமே ஆறுதல் சொல்லிக் கொள்வதாகத்தான் இருக்கும். 

அயோக்கியத்தனம் செய்வதையே வாழ்வியலாகக் கொண்டவர்களால் மீண்டும் மீண்டும் வாக்குகளைக் குவிக்க முடிகிறது என்றால்

நம் மக்களிடமும் ஏதோ கோளாறு இருக்கிறது. தங்கள் வாழ்வைப் பறிக்கிறவர்களையே விரும்புகிற அளவிற்கு மோசமாகி விட்டார்கள்.

அவர்களின் நம்பிக்கையை "இந்தியா" எப்படி வெல்லப் போகிறது?

இப்போது இந்திய ஜனநாயகத்தின் நிலைமை தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக உள்ளது. அது மீளுமா அல்லது மீளாத்துயரை நமக்கு அளிக்குமா?

சிகிச்சை தர வேண்டிய பொறுப்பில் உள்ள "இந்தியா" அணி தங்களுக்குள் உண்மையான பரிசீலனை செய்ய வேண்டும். 

அநேகமாக "இந்தியா" அணியின் அனைத்து கட்சிகளுக்குள்ளும் சங்கிகள் ஸ்லீப்பர் செல்களாக ஊடுறுவியுள்ளனர். அவர்கள் கண்டறியப்பட்டு தூக்கி வீசப்பட வேண்டும். 

பல கட்சிகளிலும் (இடதுசாரிகள் உட்பட) களைகள் மண்டிக் கிடக்கின்றன. கொஞ்சம் கூட தயவு தாட்சண்யமின்றி அந்த களைகள் அகற்றப்பட வேண்டும்.

மக்களின் உண்மையான பிரச்சினைகளை உணர்ந்து கொண்டு அவற்றின் தீர்வுக்கான போராட்டங்களை நடத்த வேண்டும். 

இவற்றையெல்லாம் செய்தால் ஜனநாயகம் பிழைக்கும். இல்லையென்றால் புலம்பலே வாழ்வாகும். 

Thursday, November 13, 2025

அந்த ஆட்டுக்குட்டி கதை பொய்யா?

 


நேற்று ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி ஒன்று.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை "தேசியத் தலைவர்" என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளதாம்.

காமராஜர் பற்றி தவறாக சித்தரித்துள்ளதால் அத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஒரு நாடார் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை செய்யக் கோரியுள்ளது என்பதுதான் அந்த செய்தி. 

அப்படி என்ன தவறான செய்தி அத்திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ளதாம்?

அந்த காலத்தில் தேர்தலில் நிற்க சொத்து வேண்டுமாம். காமராஜரிடம் எதுவும் சொத்து கிடையாது. காமராஜரின் அன்னை பெயரில் இருந்த நிலத்தை காமராஜர் பெயருக்கு மாற்றித் தர தேவர் சொன்ன போது அவர் தன் மகள் திருமணத்துக்கு அந்த நிலம் தேவை என்பதால் மறுத்து விட்டாராம். ஏனவே முத்துராமலிங்க தேவர் காமராஜருக்காக ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி  அதற்கு காமராஜர் பெயரில் ரசீது வாங்கினார். அந்த அடிப்படையில்தான் காமராஜர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

இந்த தகவலை இதற்கு முன்பு வாட்ஸப்பில் உலா வந்திருக்கிறது. 

இந்த தகவல் பொய்யானது, ஆதாரமற்றது, காமராஜர் மீது அவதூறு பரப்புகிறது என்பது வழக்கின் மையக்கருத்து. 

நான் கூட 

தலித் தலைவர் இமானுவேல் சேகரன் கொலை தொடர்பாக முதல்வராக இருந்த காமராஜர் முத்து ராமலிங்கத் தேவரை கைது செய்ய உத்தரவிட்டது,

முதுகளத்தூர் கலவரங்களை அடக்காமல் வேடிக்கை பார்த்தது.

கீழ்த்தூவல் என்ற இடத்தில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களின் கண்களைக் கட்டி போலீஸ் சுட்டது என்ற குற்றச்சாட்டு ஆகியவை பற்றிதான் திரைப்படம் காமராஜரை உண்மயாகவோ, தவறாகவோ சித்தரித்துள்ளதோ என்று நினைத்தேன்.

கடைசியில் பார்த்தால் "ஆட்டுக்குட்டி" பிரச்சினை!

பிகு: மேலே உள்ள படத்தில் ஆட்டுக்குட்டியை கையில் வைத்துள்ள ஆள்தான் டுபாக்கூர் என்பது இன்றைய நிலவரம் என்றால் அந்த காலத்திலும் ஆட்டுக்குட்டி கதை டுபாக்கூர்தான் போல . . .


Wednesday, November 12, 2025

அரசியல் அடிமையின் ஒப்புதல் வாக்குமூலம்

 


அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொன்னதை "ஒப்புதல் வாக்குமூலம்" என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்.


இதிலே "சசிகலா ஜெயிலுக்கு போன பிறகு" என்று ஏன் சேர்க்கவில்லை என்று தெரியவில்லை. அவரிடம் அடிமையாக இன்னும் வாய்ப்பு இருப்பதால் சாய்ஸில் விட்டு விட்டாரோ!

பிகு: "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" நூலின் தலைப்பையும் அட்டைப்படத்தையும் உல்டா செய்தமைக்கு வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் மன்னிப்பாராக . . .

Tuesday, November 11, 2025

நேருவின் பெயர் என்பதால் இடிப்பா மோடி?

 







மேலே உள்ள படங்களை பார்த்துக் கொள்ளுங்கள், நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த கம்பீரமான விளையாட்டு அரங்கை புதுடெல்லிக்கு சென்று நீங்கள் நேரில் பார்க்க விரும்பினாலும் அதற்கு வாய்ப்பு கிடையாது.

ஏனென்றால் இந்த விளையாட்டு அரங்கம் இடிக்கப்படவுள்ளது.

இதுதான் புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம். எண்பதுகளில் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்திய போது கட்டப்பட்ட அரங்கம்.

அப்படி என்றால் இது பழைய அரங்கமாகத்தானே இருக்கும்! பலவீனமாகி இருக்குமே! இடித்தால் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம்.

இந்த அரங்கம் 1982 ல்  கட்டப்பட்டாலும்  அது மீண்டும் 2010 ல் இந்தியா, காமன்வெல்த் போட்டிகளை நடத்திய போது 961 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டது. 

அது மட்டுமல்ல 27 செப்டம்பர் 2025 முதல் 5 அக்டோபர் 2025 வரை மாற்றுத் திறனாளிகளுக்காக உலக சேம்பியன்ஷிப் போட்டிகள் இதே அரங்கில்தான் நடந்தது. அதற்காக பல வசதிகளை அதிகரிக்க ஐம்பது கோடி ரூபாய் இப்போதுதான் செலவழிக்கப்பட்டுள்ளது.

ஆக இப்போது இந்த ஸ்டேடியத்தை இடிக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது?

புதிய விளையாட்டு மையத்தை உருவாக்கப் போவதாக சொல்கிறார்கள்.

அதற்கான திட்டம் தயாராக உள்ளதா?

இல்லைங்க.

எவ்வளவு செலவாகும் என்ற மதிப்பீடு உள்ளதா?

இல்லைங்க.

இப்போது கால்பந்து விளையாடலாம். தட களப் போட்டி நடத்தலாம், குதிரை சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கள் நடத்தலாம். ஊக்க மருந்து சோதனை மையம் உள்ளது. இந்திய விளையாட்டு முன்னேற்ற ஆணையத்தின் அலுவலகம் உள்ளது. வேறு ஏதாவது புதிய விளையாட்டு இணைக்க வாய்ப்பு உண்டா?

தெரியாதுங்க.

ஸ்டேடியம் இடிக்கப்பட்டால் மேலே சொன்னவை எல்லாம் எங்கே செல்லும்?

தெரியாதுங்க.

அப்பறம் என்னதான்யா தெரியும்?

இந்த ஸ்டேடியம் மோடிக்கு பிடிக்காத நேருவின் பெயரில் உள்ளது.

அதனால்தானா?

ஆமாங்க. அதனால்தான் ஸ்டேடியத்தை இடிக்கறோம்., 

புதுசா கட்டுவீங்களா?

கட்டினாலும் கட்டுவோம். மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மாதிரி கிடப்பில போட்டாலும் போடுவோம். ஆனா?

என்ன ஆனா?

ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் பெயரில இனி டெல்லியில் ஸ்டேடியம் கிடையாது.

அப்படியா?

நேருவுக்கு பதிலா மோடி தூக்கி வச்சுக்கற சர்தார் படேல் பெயரில் அகமதாபாத்தில் இருந்த ஸ்டேடியத்தை லைட்டா புதுசாக்கிட்டு படேல் பெயரை தூக்கிட்டு மோடி அவரு பெயரையே வச்சுக்கிட்டவரு. படேலுக்கே இதான் மோடி மரியாதைன்னா, நேருவுக்கு ????????


பூடானில்தான் வாய் தொறப்பீங்களா மோடி?

 


மேலேயுள்ள படத்திற்கும் அதில் உள்ள கேள்விகளுக்கும் கீழே உள்ள தகவல்தான் காரணம்.



இதில் என்ன கொடுமை என்றால் 56 இஞ்ச் கோழையின் இந்த காமெடியை நம்பி இரண்டாவது ஆபரேஷன் சங்கி வரப்போவதாக மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் மூடச்சங்கிகள் சில்லறையை சிதற விட்டுக் கொண்டிருக்கிறார்கள். . ..