Wednesday, December 24, 2025

இது எந்த வில்லனின் சிலை?

 


கீழே உள்ள படத்தை முதலில் பாருங்கள்.


சாமி 2 படத்தில் பெருமாள் பிச்சைக்காக செய்யப்பட்ட சிலை மாதிரியே உள்ளதல்லவா? சமீபத்தில் இறந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவிற்குத்தான் சிலை அமைத்துள்ளார்கள் என்று முதலில் நினைத்தேன். ஒரு தமிழ்நாட்டுத் தலைவரின் சிலை என்பது அந்த பீடத்தை பார்த்த  பின்புதான்  தெரிந்தது. 

யாருடைய சிலை என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா?

.

.


















இதோ பாருங்கள்


அதிமுக அலுவலகத்தில் முதன் முதலில் திறந்த ஏ1 சிலையை விட கொஞ்சம் பெட்டர் 



என்றாலும் அது கருப்பையா மூப்பனாரின் சிலை என்பது சொன்னால்தான் தெரிகிறது. 

வந்தே பாரத் ஓசி ட்ரெயினா நயினார்?

 


பாஜகவின் தற்காலிக மாநிலத் தலைவர் (ஆட்டுக்காரன் மீண்டும் கடுமையாக முயற்சிப்பதாக தெரிகிறது) நயினார் நாகேந்திரன் உதிர்த்த முத்து கீழே உள்ளது.


ஆமாம் மிஸ்டர் நயினார், மத்திய அரசு பணத்திலிருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது என்றால் அந்த ரயில்களில் கட்டணம் வசூலிக்கப் படுவதில்லையா? 

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அது போல் வந்தே பாரத் ரயிலில் பயணிகள் கட்டணம் இல்லாமலா செல்கிறார்கள்?

வந்தேபாரத் மத்தியரசு பணம் என்றால் மற்ற ரயில்கள் மாநில அரசுகள் பணத்தில் ஓடுகிறதா?

ஜால்ரா அடிக்கவும் ஒரு அளவு இல்லையா? 

Tuesday, December 23, 2025

ஆஹா, அந்த சிரிப்பு . . .

 


நேற்று முகநூலில் பார்த்த ஒரு காணொளி கீழே. . .


விஜய் கூட கூட்டணி வைப்பீர்களா என்ற ஊடகக்காரர்களின் கேள்விக்கு தோழர் தொல்.திருமாவளவன் பதிலேதும் சொல்லாமல் நக்கலான சிரிப்போடு கையெடுத்து கும்பிட்டு கிளம்பியது மிகவும் அருமையாக இருந்தது.

"அவனெல்லாம் ஒரு ஆளு. அவன் கூட நான் போய் கூட்டணி வைக்கனுமா? வேலையைப் பாருய்யா" 

என்ற பதிலை அந்த சிரிப்பு சொல்லி விட்டது.


Monday, December 22, 2025

அந்த கடத்தல்காரனுக்கு சரியான இடம் பாஜக தான்

 


கீழேயுள்ள செய்தியை முதலில் படியுங்கள்.


இதென்ன நியாயம்!

இவரை ஏன் இந்து மக்கள் கட்சியில் வைத்துள்ளார்கள்/ பாஜகவிற்கு அடியாள் வேலை பார்த்து கலவரம் செய்வதற்குத்தானே அர்ஜுன் சம்பத் தலைமையில் தனியாக கட்சி வைத்துள்ளார்கள்.

போதைப் பொருள் கடத்தல், கூலிப்படை கொலைகள், ஆள் மாறாட்ட மோசடிகள், பாலியல் குற்றங்கள் போன்ற பெரிய கிரிமினல் வேலைகள் செய்பவர்கள் மெயின் அலுவலகமான பாஜகவில்தானே இருக்க வேண்டும்.

ஆகவே இவர் ஜாமீனில் வெளி வந்ததும் நயினார் நாகேந்திரன் அவரை பாஜகவிலேயே சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாதிரி கிரிமினல்களை கட்சியில் இணைப்பதில் ஆட்டுக்காரனுக்கு ஈடு இணை யாருமே கிடையாது. 

சங்கி (மனசை) ங்களை புண்படுத்திக்கிட்டே இருக்காங்க

 


தோழர் ச.தமிழ்ச்செல்வன் சாகித்ய அகாடமி விருது பெறுவதை சகித்துக் கொள்ள முடியாத சங்கிகள் கலாச்சாரத்துறை அமைச்சகம் மூலம் தடுத்து நிறுத்தியுள்ள சூழலில் இந்த பபாசி வேறு அவர்கள் மனதை மேலும் புண்படுத்துவது போல இன்னொரு இடதுசாரி எழுத்தாளர், தமுஎகச தலைவர் தோழர் ஆதவன் தீட்சண்யாவிற்கு பொற்கிழி அளிக்கிறதே. 


அவருக்கு மட்டுமா?



முக்கிய மார்க்சிய நூல்களை மார்க்சிய அறிஞர் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களுடன் இணைந்து தமிழாக்கம் செய்துள்ள தோழர் வ.கீதா அவர்களுக்கு வேறு பொற்கிழி.

இப்படி அறிவானவர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் கொடுத்தால் மூடர் கூட்டத்தைச் சேர்ந்த சங்கிகள் மனம் புண்பட மாட்டார்களா?

அதிலும் சாகித்ய அகாடமி போல இதனை தடுக்க வேறு முடியாது. 

Sunday, December 21, 2025

என்னடா இது கந்தன்மலைக்கு வந்த சோதனை?

 


ஐகோர்ட் எச்.ராசா கதாநாயகனாக நடிக்க கந்தன்மலை என்றொரு படத்தை தயாரித்துள்ளார்கள். 

பாவம் அது விலை போகவில்லை போல.

அதனால் ஒரு யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளார்கள். 



மொக்கைப் படங்களைக் கூட பார்க்கும் சினிமா வெறியர்கள் கூட ராசா நடித்த படத்தை பார்க்க துணிய மாட்டார்கள்.

பாவம் அந்த தயாரிப்பாளர்கள்!

"காக்கா பிரியாணி துன்னா உண்ணிகிருஷ்ணன் குரலா வரும்" என்பது போல  கந்தன்மலை என்ற பெயரில் ராசா நடித்தால் மத வெறி பிரச்சாரம் இல்லாமல் வேறென்ன படத்தில் இருக்கப் போகிறது!

அதற்கு சென்சார் அனுமதி கிடைத்ததா?

எனக்கு இன்னொரு அச்சமும் இருக்கிறது.

காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா டைரி போன்ற மத வெறி குப்பைகள் போல மோடி அரசு இந்த படத்திற்கும் தேசிய விருது கொடுத்து விடுமோ என்பதுதான் அந்த அச்சம். 


Saturday, December 20, 2025

இது இன்னொரு விருது சர்ச்சை

 


சாகித்ய அகாடமி விருது சர்ச்சை நடப்பில் இருக்கும் போதே அடுத்த விருது சர்ச்சை வந்து விட்டது.

மியூசிக் அகாடமி இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருது வயலின் இசைக் கலைஞர் ஸ்ரீராம்குமார் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு விருதளிக்கப்பட்டதில் எந்த சர்ச்சையும் வந்ததாக நான் படிக்கவில்லை.

பின்?

விருது கொடுத்தவரை வைத்துதான் சர்ச்சையே!

யார் கொடுத்தது?

ஏ.ஆர்.ரஹ்மான்.

மியூசிக் அகாடமியின் அழைப்பிதழை முகநூலில் பார்த்த போதே சிக்கல் வரும் என்று எதிர்பார்த்தேன். அது போலவே நடந்து விட்டது.

மியூசிக் அகாடமி கம்மிகளின் கையில் போய் விட்டது, நாத்தீகர்கள் கையில் போய் விட்டது. ரஹ்மானுக்கு கர்னாடக இசை பற்றி தெரியுமா? கர்னாடக இசையின் அடிப்படை பக்தி. ரஹ்மானுக்கும் பக்திக்கும் என்ன தொடர்பு?

இதெல்லாம்தான் நான் பார்த்த கருத்துக்கள்.

முதல் கருத்து அபத்தம். மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி ஒன்றும் அவரது சகோதரர் என்.ராம் போல இடதுசாரி சித்தாந்தம் கொண்டவர் கிடையாது.  அதனால் முதல் இரண்டு கருத்துக்களும் அபத்தம்.

"கண்ணோடு காண்பதெல்லாம்" "சௌக்கியமா கண்ணே சௌக்கியமா" ஆகிய இரண்டு பாடல்கள் போதும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கர்னாடக இசை தெரியுமா இல்லையா என்று சொல்ல . . .

ஆஸ்கர் விருது மேடையில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று சொன்னவருக்கா இவர்கள் பக்தி பற்றி பாடம் எடுக்கிறார்கள்!

பிறகு உண்மையில் என்ன பிரச்சினை?

திருவையாறு தியாகராஜர் ஆராதனையின் போது கே.ஜே.யேசுதாஸ் பாட வருகையில் மக்கள் திரள்கையில் ஒரு கூட்டம் "கிறிஸ்துவன் பாடறதை கேட்க இப்படி போறாங்களே" என்று திட்டிக் கொண்டு வெளியேறும். இது நான் நேரடியாக பல வருடங்கள் பார்த்த அனுபவம். முன்பே இதனை எழுதியிருக்கிறேன்.

இப்போது புரிகிறதா?

பிரச்சினை ரஹ்மானின் கர்னாடக இசை ஞானமோ, பக்தியோ கிடையாது. 

அவரது மதம்தான் பிரச்சினை. 

பிகு 1 : கடந்த வருடம் விருது பெற்றமைக்காக கடுமையாக திட்டப்பட்ட டி.எம்.கிருஷ்ணாவிற்கு பல கச்சேரிகளில் பக்க வாத்தியமாக வயலின் வாசிப்பவர் ஸ்ரீராம்குமார்.

பிகு 2 : கடந்த வருடம் பிரச்சினையை முதலில் உருவாக்கிய ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் ஏதாவது சொல்லியுள்ளார்களா என்று அவர்களின் முக நூல் பக்கம் பார்த்தேன். ராமர் கோயிலில் காவிக் கொடி ஏற்றுகையில் பாட வாய்ப்பு கிடைத்தமைக்காக புளகாங்கிதமடைந்திருந்தார்கள். அவர்கள் டி.எம்.கிருஷ்ணாவை எதிர்ப்பது இயல்பானது, சங்கி இயல்பானது.

பிகு 3 : தோழர் தமிழ்ச்செல்வனுக்கு இன்னும் விருது அறிவிக்கப்படவே இல்லை. அதற்குள்ளாகவே வன்ம வாந்திகளை எடுக்கத் தொடங்கி விட்டனர். அவர்கள் ஆசானின் அல்லக்கைகளாகவே இருப்பது யதேச்சையானதாக தெரியவில்லை.