மேலே உள்ள படங்களை பார்த்துக் கொள்ளுங்கள், நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த கம்பீரமான விளையாட்டு அரங்கை புதுடெல்லிக்கு சென்று நீங்கள் நேரில் பார்க்க விரும்பினாலும் அதற்கு வாய்ப்பு கிடையாது.
ஏனென்றால் இந்த விளையாட்டு அரங்கம் இடிக்கப்படவுள்ளது.
இதுதான் புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம். எண்பதுகளில் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்திய போது கட்டப்பட்ட அரங்கம்.
அப்படி என்றால் இது பழைய அரங்கமாகத்தானே இருக்கும்! பலவீனமாகி இருக்குமே! இடித்தால் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம்.
இந்த அரங்கம் 1982 ல் கட்டப்பட்டாலும் அது மீண்டும் 2010 ல் இந்தியா, காமன்வெல்த் போட்டிகளை நடத்திய போது 961 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டது.
அது மட்டுமல்ல 27 செப்டம்பர் 2025 முதல் 5 அக்டோபர் 2025 வரை மாற்றுத் திறனாளிகளுக்காக உலக சேம்பியன்ஷிப் போட்டிகள் இதே அரங்கில்தான் நடந்தது. அதற்காக பல வசதிகளை அதிகரிக்க ஐம்பது கோடி ரூபாய் இப்போதுதான் செலவழிக்கப்பட்டுள்ளது.
ஆக இப்போது இந்த ஸ்டேடியத்தை இடிக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது?
புதிய விளையாட்டு மையத்தை உருவாக்கப் போவதாக சொல்கிறார்கள்.
அதற்கான திட்டம் தயாராக உள்ளதா?
இல்லைங்க.
எவ்வளவு செலவாகும் என்ற மதிப்பீடு உள்ளதா?
இல்லைங்க.
இப்போது கால்பந்து விளையாடலாம். தட களப் போட்டி நடத்தலாம், குதிரை சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கள் நடத்தலாம். ஊக்க மருந்து சோதனை மையம் உள்ளது. இந்திய விளையாட்டு முன்னேற்ற ஆணையத்தின் அலுவலகம் உள்ளது. வேறு ஏதாவது புதிய விளையாட்டு இணைக்க வாய்ப்பு உண்டா?
தெரியாதுங்க.
ஸ்டேடியம் இடிக்கப்பட்டால் மேலே சொன்னவை எல்லாம் எங்கே செல்லும்?
தெரியாதுங்க.
அப்பறம் என்னதான்யா தெரியும்?
இந்த ஸ்டேடியம் மோடிக்கு பிடிக்காத நேருவின் பெயரில் உள்ளது.
அதனால்தானா?
ஆமாங்க. அதனால்தான் ஸ்டேடியத்தை இடிக்கறோம்.,
புதுசா கட்டுவீங்களா?
கட்டினாலும் கட்டுவோம். மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மாதிரி கிடப்பில போட்டாலும் போடுவோம். ஆனா?
என்ன ஆனா?
ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் பெயரில இனி டெல்லியில் ஸ்டேடியம் கிடையாது.
அப்படியா?
நேருவுக்கு பதிலா மோடி தூக்கி வச்சுக்கற சர்தார் படேல் பெயரில் அகமதாபாத்தில் இருந்த ஸ்டேடியத்தை லைட்டா புதுசாக்கிட்டு படேல் பெயரை தூக்கிட்டு மோடி அவரு பெயரையே வச்சுக்கிட்டவரு. படேலுக்கே இதான் மோடி மரியாதைன்னா, நேருவுக்கு ????????