Saturday, November 8, 2025

சங்கிகளோடு சண்டை ஏன்?

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நேற்று ஒரு பதிவும் அதற்கு ஒரு போலி ஐ.டி (ஆண்டாளை வைரமுத்து இழிவுபடுத்துகிறார் என்று உருவான சர்ச்சையின் போது உருவான போலி இவர்) போட்ட பின்னூட்டமும் அதற்கு நான் கொடுத்த பதிலும் கீழே உள்ளது.





கௌரி கிஷன் பிரச்சினை உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் போதே இப்படி உருவக் கேலி செய்கிறார் என்றால், சுட்டிக்காட்டிய பின்பும் அதையே மாற்றிச் சொல்லும் அளவிற்கு ஆணவம் தலைக்கேறியுள்ளது.

சங்கிகளுக்கு சிக்கல் என்றால் பாய்ந்தோடி வரும் நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை பின்பற்றும் மாடரேட்டர் வழக்கம் போல காணாமல் போகி விட்டார்.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நான் ஏன் தொடர்ந்து சண்டை செய்கிறேன்?

மேலே பராசக்தி சிவாஜி பதில்  சொல்கிறார் . . . 

தெரு நாய்கள்-தெளிவா சொல்லுங்க ஜட்ஜய்யா

 


தெரு நாய்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு பற்றி இன்று ஆங்கில இந்துவில் வந்துள்ள செய்தியை படித்து நான் புரிந்து கொண்டவை

கல்வி நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவ மனைகள், பேருந்து நிலையங்கள், பேருந்து டெப்போக்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் திரியும் தெருநாய்களை

உள்ளாட்சி அமைப்புக்கள் பிடித்து அவற்றுக்கு என ஒரு அடைப்பிடம் உருவாக்கி கருத்தடை செய்து . . . .

எந்த பகுதியிலிருந்து தெரு நாய்கள் பிடித்துக் கொண்டு வரப்பட்டதோ, அதே பகுதியில் அவை மீண்டும் விடப்படக்கூடாது, இதை நாங்கள் மிகவும் தெளிவோடு சொல்கிறோம். எந்த பகுதியிலிருந்து பிடிக்கப்பட்டதோ அதே பகுதியில் மீண்டும் விடுவது எங்கள் ஆணைக்கே முரணாகி விடும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

இவைதான் தீர்ப்பில் உள்ளவை.

மேலே உள்ள பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் உள்ள தெரு நாய்களை எதுவும் செய்ய வேண்டாமா? அவைகள் எப்போதும் போல சுதந்திரமாக திரியலாமா? அவற்றை பிடிக்க மாட்டீர்களா? 

நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளை விட ஆயிரம் மடங்கு தெரு நாய்கள் மற்ற பகுதிகளில்தான் இருக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்தாமல் தெரு நாய் பிரச்சினை எப்படி தீரும்?

பிடித்து கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களை பிடிக்கப்பட்ட பகுதியில் விடக்கூடாது என்றால் பின் எங்கே விடுவீர்கள்? ஏற்கனவே பிரச்சினை பெரிதாக உள்ள இடங்களிலா? 

தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும்தான் கால்நடைகளினால் விபத்துக்கள் ஏற்படுகிறதா?

கொஞ்சம் நிதானமாக யோசித்து அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்படி தெளிவான உத்தரவுகளை பிறப்பியுங்கள் நீதியரசர்களே!




மேலே உள்ள இரண்டு படங்களும் இன்று காலை எடுக்கப்பட்டவை. என் வீட்டு வாசலில் உலா வரும் தெருநாய்கள் கோஷ்டி சண்டை ஒன்றை முடித்து விட்டு திரும்பிய போது பாதுகாப்பாக காம்பவுண்டுக்குள் நின்று எடுத்தது.

செய்தித்தாளிலிருந்து நான் புரிந்து கொண்டது சரியென்றால் இந்த பிரச்சினைக்கு தீர்வே இல்லை. 



Friday, November 7, 2025

பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு பாராட்டுக்கள், ஆனால்

 


இன்று சமூக ஊடகத்தின் வைரல் செய்தி, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரைக்கலைஞர் கௌரி கிஷன் அவர்களிடம் கீழே தொப்பி அணிந்துள்ள பத்திரிக்கையாளர் (யூ டூயுபராம்) அநாகரீகமாக கேள்வி கேட்டதும் அதற்கு அவர் தக்க பதிலடி கொடுத்ததும்தான். அந்த காணொளியை நான் முழுமையாக பார்த்தேன். 

அந்த நபர் மீண்டும் மீண்டும் கூச்சலிடுகிறான், தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறுகிறான். அந்தப் பெண் இறுதிவரை உறுதியாக சமாளித்தார்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அந்த யூடூயுபரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


இந்த அறிக்கை பாராட்டத்தக்கது.

அதே நேரம்

இந்த அறிக்கையில் அந்த யூடூயுபரின் பெயரையும் அந்த சேனலையும் பெயரின் சேர்த்திருக்க வேண்டும். அந்த சமயத்தில் அந்த கார்த்திக்கின் நடவடிக்கையை கண்டிக்காமல் மௌனம் காத்திருந்த இதர பத்திரிக்கையாளர்களையும் சேர்த்து கண்டித்திருக்க வேண்டும். அறிவுரை மட்டும் போதுமானது அல்ல.

லேளா மரங்களாக இருந்தவர்கள் அந்த பத்திரிக்கையாளர்கள் மட்டும் அல்ல, அந்த திரைப்படக்குழுவினரும்தான். அவர்களும் கண்டனத்துக்கு உரியவர்கள். 

Thursday, November 6, 2025

மீண்டும் முழுமையாக சிவந்த JNU

 


சங் பரிவாரம் சிதைக்க நினைக்கிற ஏராளமான நிறுவனங்களில் முக்கியமான ஒன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இடதுசாரி சிந்தனையாளர்களின் கோட்டையாக திகழ்வதால் அதன் மீது மோடி அரசு தொடர்ந்து பல விதமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

நிதி ஒதுக்கீடு வெட்டு, மோசமான ஆசிரியர்கள், துணை வேந்தரை நியமிப்பது, காவல்துறை நடவடிக்கை, இன்று எம்.பி யாகவும் அமைச்சராகவும் இருக்கிற ரௌடிகளைக் கொண்டு தாக்குதல், ஜேஎன்யு மாணவர்கள் மீது அவதூறுப் பிரச்சாரம் என்று பல பரிமாணங்களில் மோடி அரசு வேட்டையாடுகிறது. 

ஜேஎன்யு மாணவர் பேரவையின் தலைவராக இருந்த தோழர் உமர் காலித் , டெல்லி கலவரங்களை தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் ஐந்தாண்டுகளாக பிணையில் உள்ளார். பிணை கூட மறுக்கப்படவில்லை. துப்பாக்கியை காண்பித்த பொறுக்கி அனுராக் தாகூருக்கு மந்திரி பதவியே கொடுக்கப்பட்டது. அது போலத்தான் இன்னொரு பொறுக்கி கபில் மிஸ்ராவுக்கும் பரிசு கிடைத்தது.

இப்படிப்பட்ட சூழலில் இந்தாண்டு நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி மாணவர் சங்கங்களின் கூட்டணி தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர்,  ஆகிய நான்கு  பொறுப்புக்களையும் இடது அணி வென்றுள்ளது.

கடந்தாண்டு இணைச்செயலாளர் பொறுப்பில் மட்டும் பாஜக குண்டர் படை ஏ.பி.வி.பி வென்றது. ஜே.என்.யு கோட்டையில் ஓட்டை விழுந்து விட்டது. இனி கோட்டை மொத்தமாக சரியும் என்று கொக்கரித்தார்கள்.

இந்த ஆண்டு அந்த கணக்கையெல்லாம் பொய்க் கணக்காக்கி விட்டு இடது அணி முழுமையாக வென்றுள்ளது.

மத்திய அரசின் ஆதரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆதரவு, பண பலம், ஊடக பலம், ரௌடிகள் பலம் ஆகியவற்றையெல்லாம் முறியடித்து

ஜேஎன்யு வளாகத்தில் இன்று பறக்கும் செங்கொடி நாளை தேசமெங்கும் பறக்கும். 


மோடியின் மௌனம் ட்ரம்பிற்கு பயந்தா?

 


நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சோஹ்ரான் மம்தானியின் தந்தை மகமது மம்தானியின் பூர்வீகம் குஜராத்.  அவர் பிறந்ததே பம்பாயில்தான். 

அதே போல் தாய் மீரா நாயர் பிறந்ததும் ஒடிஷாவில். திருமணம் வரை இந்தியாவில்தான் இருந்துள்ளார். உலகின் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் அவர். கேன்ஸ் திரைப்பட விழாவில் இரு முறை சிறந்த இயக்குனராக விருதும் பெற்றுள்ளார்.

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த யாராவது சின்னஞ்சிறிய வெற்றி பெற்றால் கூட அவரை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் மோடி நியூயார்க் மேயர் என்ற மிக முக்கியமான பொறுப்பை வென்றுள்ள ஸொஹ்ரான் மம்தானியை பாராட்டி ஒரு வார்த்தையாவது எழுதியுள்ளாரா என்று அவர் ட்விட்டர் பக்கத்தை தேடித் தேடிப் பார்த்தேன். எதுவுமே இல்லை.

டொனால்ட் ட்ரம்பால் வெளிப்படையாக எதிர்க்கப்பட்ட, தன்னை ஒரு சோஷலிஸ்ட் என்றும் பாலஸ்தீன ஆதரவாளர் என்றும் அறிவித்துக் கொண்ட ஒருவரை இந்திய வம்சாவழியினர் என்று வாழ்த்தும் அளவிற்கு மோடிக்கு தைரியம் இருக்கிறதா என்ன?

மோடி தன்னை 56  இஞ்ச் மாவீரன் என்று வெளியில் பீற்றிக் கொண்டாலும் பேஸ்மெண்ட் வீக்கான படு கோழைதான்.

பிகு: இன்னும் கூட ஒரு தகவல் உள்ளது. அது பிறகு . . .

மக்கள் மதிக்கலை ட்ரம்பே, மஸ்கே

 


கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நியூயார்க் நகர மேயர் தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்து விட்டன.

ஜனாதிபதி ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பாக  குர்டிஸ் என்றொருவரையும் ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பை ஆதரித்த பெரும் பணக்காரன் எலான் மஸ்க் குவாமோ என்றொருவரை நிற்க வைக்க ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய வம்சாவழி இஸ்லாமியர் ஸோஹ்ரான் மம்தானி என்பவரும் களத்தில் இருந்துள்ளனர்.

மம்தானி ஒரு கம்யூனிஸ்ட். அவரை மேயராக தேர்ந்தெடுத்தால் நியுயார்க் நகருக்கு நிதி ஒதுக்க மாட்டேன் என்று ட்ரம்ப் அறிவித்தார். குர்டிஸ்ற்கு வாக்களிப்பது மும்துமியோ இல்லை வேறு என்ன பெயரோ, அந்தாளுக்கு வாக்களித்தது போலாகும் என்பது எலான் மஸ்கின் பிரச்சாரம்.





ஆனால் நியூயார்க் நகர மக்கள் இந்த இருவரையும் மதிக்கவில்லை.  ஸோஹ்ரான் மம்தானிக்கு  வாக்களித்து  அவரை மேயராக தேர்ந்தெடுத்து விட்டனர்.


இவரது வெற்றி முக்கியமானது.

ஏனெனில்

ஸோஹ்ரான் மம்தானி  தன்னை சோஷலிஸ்ட் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர். முதலாளித்துவத்துற்கு எதிரானவர் என்றும் சொல்லியுள்ளார். பாலஸ்தீன மக்களுக்கும் புலம் பெயர்ந்து வந்த மக்களுக்கும் ஆதரவாக உள்ளவர்.

அமெரிக்காவில் மற்ற இடங்களில் நடந்த இடைத் தேர்தல்களிலும் ட்ரம்பிற்கு செமத்தியான அடி கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சிகரமானது.

நியூயார்க் நகர மேயராக ஒரு இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் அதுவும் அமெரிக்க பெரும்பான்மை மக்களுக்கு ஒத்துவராத கொள்கைகளைக் கொண்டவர் வென்றுள்ளது சிறப்பானது.

ஸோஹ்ரான் மம்தானிக்கு வாழ்த்துக்கள்.

பிகு: இன்னும் ஒரு விஷயம் எழுத வேண்டும். என் சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொண்டு மாலை எழுதுகிறேன். 




Wednesday, November 5, 2025

ஜாக்கிரதையா இருப்பா விஜய் !!!

 


தம்பி விஜய் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கப்பா! மூணு கட்சி மாறி ஆதவன் அர்ஜூனா வடிவேல் தன்னோட குருநாதனை உசுப்பேத்தி விட்ட மாதிரி உன்னை உசுப்பேத்தி விடறான்.


அதை நம்பி நீ ஓவரா சீன் போடாதே! கரூர் நெரிசல் மரணங்களில் உன்னை மாட்டி விட்ட மாதிரி வேற எதிலாவது மாட்டி விட்றப் போறான்.

குருநாதனுக்கு என்ன ஆச்சுன்னு ஞாபகம் இருக்குல்ல? இல்லாட்டி கீழே இருக்கற படத்தை பார்த்துக்க . . .