எல்.ஐ.சி இன்று 54 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள பெரும் நிறுவனமாக, இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, பாலிசிதாரர்களின் நம்பிக்கையாக திகழ்கின்றதென்றால் அது ஒரே நிறுவனமாக நீடிப்பதால்தான் சாத்தியமானது. ஐந்து கூறுகளாக பிரிக்கும் சதி முறியடிக்கப்பட்டதன் காரணமாக மட்டும் எல்.ஐ.சி ஒரே நிறுவனமாக நீடிக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் தோழர் சுனில் மைத்ரா என்பதற்கு ராஜீவ் காந்தியின் கடிதமே சான்று.
ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Wednesday, September 17, 2025
எல்.ஐ.சி யை, எல்.ஐ.சி யாகவே நீடிக்க வைத்தவர்
எல்.ஐ.சி இன்று 54 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள பெரும் நிறுவனமாக, இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, பாலிசிதாரர்களின் நம்பிக்கையாக திகழ்கின்றதென்றால் அது ஒரே நிறுவனமாக நீடிப்பதால்தான் சாத்தியமானது. ஐந்து கூறுகளாக பிரிக்கும் சதி முறியடிக்கப்பட்டதன் காரணமாக மட்டும் எல்.ஐ.சி ஒரே நிறுவனமாக நீடிக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் தோழர் சுனில் மைத்ரா என்பதற்கு ராஜீவ் காந்தியின் கடிதமே சான்று.
மோடியை பெரியாராக்கும் பாஜக
தந்தை பெரியார் பெயரை பயன்படுத்தினால்தான் அவர்கள் ஒட்டிய சுவரொட்டியை மக்கள் பார்ப்பார்கள் என்ற அறிவு பாஜகவில் உள்ள ஏதோ ஒரு கோஷ்டிக்கு தெரிந்திருக்கிறது.
மோடியை பெரியார் என்று அழைத்ததைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சமூக நல்லிணக்க பெரியார் என்று விளிப்பதெல்லாம் அநியாயம்.
மோடிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் என்னய்யா சம்பந்தம்?
சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் விஷமல்லவா அவர்!
Tuesday, September 16, 2025
ஆட்டுக்காரன் குழுவின் திருந்தாத ஜென்மங்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கடந்தாண்டு மறைந்த போது அவரது உடல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு சங்கிகள் தோழர் யெச்சூரி மீது ஒரு அவதூறு பிரச்சாரத்தை செய்தனர். அதாவது அவர் கிறிஸ்துவராக மதம் மாறினாலும் சீத்தாராம் என்ற பெயரை மாற்றிக் கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார் என்பது அந்த பொய்ப்பிரச்சாரம்.
அதனை மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நான்கைந்து சங்கிகள் பதிவு போட்டு விஷத்தை கக்கியிருந்தனர்.
கடுமையாக சண்டை போட்டதால் என்னை ஒரு வாரம் குழுவிலிருந்து இடை நீக்கம் வேறு செய்திருந்தார்கள்.
அப்போது எழுதிய இரு பதிவுகளின் இணைப்பை கீழே அளித்துள்ளேன்.
அவசியம் படியுங்கள்.
கேவலமான, அயோக்கிய, அடி முட்டாள் சங்கிகள்
மத்யமர் சங்கிகளுடனான சண்டை ஓயவில்லை
இதோ ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் அதே பொய்யை பரப்பத் தொடங்கியுள்ளனர்.
இந்த பதிவிற்கு ஒரு சங்கி ஆபாசமாக ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தான். இதுதான் உங்கள் குழுவில் கடைபிடிக்கும் நாகரீகமா என்று அந்த சங்கி மாடரேட்டரை கேட்டவுடன் அந்த ஆபாச பின்னூட்டத்தை நீக்கி விட்டார்கள்.
ஒரே பொய்யை எவ்வளவு முறை பரப்புவீர்கள்? இந்த குழு பொய்களை, வெறுப்பை, விஷத்தைத்தான் பரப்புகிறது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா என்று அட்மினிடம் கேட்டதற்கு மட்டும் எந்த பதிலும் இல்லை.
இவர்களுக்காகத்தான் அன்று வாலி
அஸ்ஸாமில் மோடியின் அற்ப அரசியல்
பபூபென் ஹசாரிகா - இந்தியாவின் மிகச் சிறந்த திரைக் கலைஞர்களில் ஒருவர். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அவர் பாடகராக, இசை அமைப்பாளராக, இயக்குனராக முத்திரை பதித்தவர். 2011 ல் இறந்து போனவர்.
2019 ல் அவருக்கு மோடி அரசு பாரத ரத்னா விருது கொடுத்தது. 2021 ல் அஸ்ஸாமில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
நேற்று முன் தினம் பச்சைக் கொடி ஆட்டி ரிப்பன் வெட்ட அஸ்ஸாம் போன மோடி புதிதாக ஒரு கதை விட்டார்.
"பூபென் ஹசாரிகாவிற்கு பாரத ரத்னா விருது கொடுத்த போது பாடகர்களுக்கும் நடனம் ஆடுபவர்களுக்கும் பாரத ரத்னா விருது கொடுக்கிறார் மோடி" என்று காங்கிரஸ் தலைவர் பேசிய காணொளியை அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் காண்பித்தார்" என்று பேசிய மோடி பூபென் ஹசாரிகாவை காங்கிரஸ் இழிவு படுத்தி விட்டது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
எந்த தலைவர்? எப்போது பேசினார்? என்றெல்லாம் மோடி சொல்லவில்லை. மோடிக்கு காணொளியை காண்பித்ததாக சொல்லப் பட்ட ஹிமாந்த பிஸ்வாஸ் மிகப் பெரிய மோசடிப் பேர்வழி. அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது ஊழல்வாதி என்று மோடியால் குற்றம் சுமத்தப்பட்டு கட்சி மாறிய பின் பாஜக வாஷிங் மெஷினில் புனிதமாக்கப் பட்டு முதலமைச்சர் பதவி பெற்றவர். அவர் யோக்கியதையே பெரிய கேள்விக்குறி.
பூபென் ஹசாரிகா உயிருடன் இருக்கையில் காங்கிரஸ் அவருக்கு
பத்மபூஷன்,
தாதா சாஹேப் பால்கே விருது,
சங்கீத நாடக அகாடமி விருது,
நியமன மாநிலங்களவை விருது
ஆகியவற்றை அளித்துள்ளது.
அவர் 2011 ல் இறந்த பின்பு 2012 ல் பத்ம விபூஷன் விருதும் அளித்துள்ளது.
இத்தனை விருதுகளை அளித்த காங்கிரஸ் எப்படி அவரை இழிவுபடுத்தும்?
மேலும்
பண்டிட் ரவிசங்கர்,
பீம்சென் ஜோஷி,
எம்.எஸ்.சுப்புலட்சுமி
பிஸ்மில்லாகான்
லதா மங்கேஷ்கர்
போன்ற இசைக் கலைஞர்களுக்கு பாரத் ரத்னா விருது கொடுத்துள்ளது. அவர்கள் எப்படி பாடகர்களுக்கும் நடனமாடுபவர்களுக்கும் விருது கொடுப்பதை இழிவு படுத்துவார்கள்.
மொத்தத்தில் இது மோடியின் வழக்கமான அற்ப அரசியல்...
Monday, September 15, 2025
மோடியின் அடுத்த அவதாரம் ??????
அஸ்ஸாமில் விஷம் கக்கும் மோடி
அஸ்ஸாம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ளது. அதனால் அங்கே மக்களை பிளவு படுத்த விஷம் கக்குவதை மோடி தொடங்கி விட்டார்.
வட கிழக்கு மாநிலங்களில் ஊடுறுவல்கள் அதிகமாகி விட்டதாகவும் அதனால் அந்த மாநிலங்களில் சிறுபான்மை மதத்தினர் அதிகமாகி விட்டதாகவும் பெரும்பான்மை மதத்தினரான இந்துக்களின் எண்ணிக்கையை விட மற்றவர்கள் அதிகமாகி விட்டார்கள்.
காங்கிரஸ் கட்சி இந்த ஊடுறுவல்களை வாக்குகளுக்காக வேடிக்கை பார்க்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்,
மத்தியில் பாஜக 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. அநேகமாக அனைத்து வட கிழக்கு மாநிலங்களிலும் பாஜகதான் தேர்தலின் மூலமாகவோ அல்லது வெற்றி பெற்ற எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கியோ ஆட்சியில் உள்ளது.
சமீப ஆண்டுகளில் ஊடுறுவல் அதிகமாகி உள்ளது என்பதற்கு எந்த ஆதாரத்தையோ புள்ளி விபரத்தையோ மோடி தரவில்லை. வழக்கம் போல வாய்க்கு வந்ததை அடித்து விட்டுள்ளார்.
ஊடுறவல் அதிகமாகி உள்ளதென்றால் அதை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பாஜகவின் மத்தியரசும் மாநில அரசுகளும் தோல்வி அடைந்துள்ளது என்பதுதானே அர்த்தம்!
தன்னுடைய தோல்விக்கு அடுத்தவர்கள் மீது பழி போடுவது என்ன நியாயம்?
தேர்தல் ஆதாயத்திற்காக மத வெறி நச்சை உமிழும் கேவலமான உத்தியை மோடி துவக்கியுள்ளார்.
பிரதமர் என்ற பொறுப்பிற்கு கொஞ்சமும் தகுதியற்றவர் என்பதைத்தான் அவரது விஷப்பிரச்சாரம் காண்பிக்கிறது.
பிகு: இன்னொரு பொய்யும் மோடியால் சொல்லப்பட்டுள்ளது. அது நாளை.
Saturday, September 13, 2025
பெருமையில்லை து.ஜ, அசிங்கம்
மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்குகளில் பவனி வருவது இழிவாக பார்க்கப்படும் காலகட்டம் இது.
ஏதோ ஒரு ஆதீனம் பல்லக்கில்தான் பட்டிணப் பிரவேசம் செய்வேன் என்று அடம் பிடித்ததையும் அதற்கு வக்காலத்து வாங்கிய ஆட்டுக்காரன் நானே பல்லக்கை தூக்கி வருவேன் என்று சொன்னதை எள்ளி நகையாடிய மாநிலம் தமிழ்நாடு.
சடலங்களை நான்கு பேர் சுமப்பது என்பது கூட காலப்போக்கில் மிகவும் குறைந்து விட்டது.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு காணொளியை பார்க்கையில் எரிச்சலாக இருந்தது.
அதிலிருந்து இரண்டு படங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
வேலூருக்கு அருகாமையில் உள்ள மகாதேவமலை என்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இப்படிப்பட்ட தேர்ப்பவனியை, தங்களை மனிதர்கள் இழுத்துச் செல்வதை இந்தியாவின் இரண்டாம் குடிமகன் அனுமதிக்கலாமா?
அசிங்கமாக இருக்கிறது.
இவ்வளவு பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்டவருக்கு தமிழ்நாட்டு எம்.பிக்கள் ஓட்டு போடவில்லை என்று மோடி ஆதரவாளர்கள் ஒப்பாரி வேறு வைக்கிறார்கள்.