நேற்று முகநூலில் பார்த்த ஒரு காணொளி கீழே. . .
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
நேற்று முகநூலில் பார்த்த ஒரு காணொளி கீழே. . .
கீழேயுள்ள செய்தியை முதலில் படியுங்கள்.
இவரை ஏன் இந்து மக்கள் கட்சியில் வைத்துள்ளார்கள்/ பாஜகவிற்கு அடியாள் வேலை பார்த்து கலவரம் செய்வதற்குத்தானே அர்ஜுன் சம்பத் தலைமையில் தனியாக கட்சி வைத்துள்ளார்கள்.
போதைப் பொருள் கடத்தல், கூலிப்படை கொலைகள், ஆள் மாறாட்ட மோசடிகள், பாலியல் குற்றங்கள் போன்ற பெரிய கிரிமினல் வேலைகள் செய்பவர்கள் மெயின் அலுவலகமான பாஜகவில்தானே இருக்க வேண்டும்.
ஆகவே இவர் ஜாமீனில் வெளி வந்ததும் நயினார் நாகேந்திரன் அவரை பாஜகவிலேயே சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாதிரி கிரிமினல்களை கட்சியில் இணைப்பதில் ஆட்டுக்காரனுக்கு ஈடு இணை யாருமே கிடையாது.
தோழர் ச.தமிழ்ச்செல்வன் சாகித்ய அகாடமி விருது பெறுவதை சகித்துக் கொள்ள முடியாத சங்கிகள் கலாச்சாரத்துறை அமைச்சகம் மூலம் தடுத்து நிறுத்தியுள்ள சூழலில் இந்த பபாசி வேறு அவர்கள் மனதை மேலும் புண்படுத்துவது போல இன்னொரு இடதுசாரி எழுத்தாளர், தமுஎகச தலைவர் தோழர் ஆதவன் தீட்சண்யாவிற்கு பொற்கிழி அளிக்கிறதே.
முக்கிய மார்க்சிய நூல்களை மார்க்சிய அறிஞர் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களுடன் இணைந்து தமிழாக்கம் செய்துள்ள தோழர் வ.கீதா அவர்களுக்கு வேறு பொற்கிழி.
இப்படி அறிவானவர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் கொடுத்தால் மூடர் கூட்டத்தைச் சேர்ந்த சங்கிகள் மனம் புண்பட மாட்டார்களா?
அதிலும் சாகித்ய அகாடமி போல இதனை தடுக்க வேறு முடியாது.
ஐகோர்ட் எச்.ராசா கதாநாயகனாக நடிக்க கந்தன்மலை என்றொரு படத்தை தயாரித்துள்ளார்கள்.
பாவம் அது விலை போகவில்லை போல.
அதனால் ஒரு யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளார்கள்.
மொக்கைப் படங்களைக் கூட பார்க்கும் சினிமா வெறியர்கள் கூட ராசா நடித்த படத்தை பார்க்க துணிய மாட்டார்கள்.
பாவம் அந்த தயாரிப்பாளர்கள்!
"காக்கா பிரியாணி துன்னா உண்ணிகிருஷ்ணன் குரலா வரும்" என்பது போல கந்தன்மலை என்ற பெயரில் ராசா நடித்தால் மத வெறி பிரச்சாரம் இல்லாமல் வேறென்ன படத்தில் இருக்கப் போகிறது!
அதற்கு சென்சார் அனுமதி கிடைத்ததா?
எனக்கு இன்னொரு அச்சமும் இருக்கிறது.
காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா டைரி போன்ற மத வெறி குப்பைகள் போல மோடி அரசு இந்த படத்திற்கும் தேசிய விருது கொடுத்து விடுமோ என்பதுதான் அந்த அச்சம்.
சாகித்ய அகாடமி விருது சர்ச்சை நடப்பில் இருக்கும் போதே அடுத்த விருது சர்ச்சை வந்து விட்டது.
மியூசிக் அகாடமி இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருது வயலின் இசைக் கலைஞர் ஸ்ரீராம்குமார் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு விருதளிக்கப்பட்டதில் எந்த சர்ச்சையும் வந்ததாக நான் படிக்கவில்லை.
பின்?
விருது கொடுத்தவரை வைத்துதான் சர்ச்சையே!
யார் கொடுத்தது?
ஏ.ஆர்.ரஹ்மான்.
மியூசிக் அகாடமியின் அழைப்பிதழை முகநூலில் பார்த்த போதே சிக்கல் வரும் என்று எதிர்பார்த்தேன். அது போலவே நடந்து விட்டது.
மியூசிக் அகாடமி கம்மிகளின் கையில் போய் விட்டது, நாத்தீகர்கள் கையில் போய் விட்டது. ரஹ்மானுக்கு கர்னாடக இசை பற்றி தெரியுமா? கர்னாடக இசையின் அடிப்படை பக்தி. ரஹ்மானுக்கும் பக்திக்கும் என்ன தொடர்பு?
இதெல்லாம்தான் நான் பார்த்த கருத்துக்கள்.
முதல் கருத்து அபத்தம். மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி ஒன்றும் அவரது சகோதரர் என்.ராம் போல இடதுசாரி சித்தாந்தம் கொண்டவர் கிடையாது. அதனால் முதல் இரண்டு கருத்துக்களும் அபத்தம்.
"கண்ணோடு காண்பதெல்லாம்" "சௌக்கியமா கண்ணே சௌக்கியமா" ஆகிய இரண்டு பாடல்கள் போதும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கர்னாடக இசை தெரியுமா இல்லையா என்று சொல்ல . . .
ஆஸ்கர் விருது மேடையில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று சொன்னவருக்கா இவர்கள் பக்தி பற்றி பாடம் எடுக்கிறார்கள்!
பிறகு உண்மையில் என்ன பிரச்சினை?
திருவையாறு தியாகராஜர் ஆராதனையின் போது கே.ஜே.யேசுதாஸ் பாட வருகையில் மக்கள் திரள்கையில் ஒரு கூட்டம் "கிறிஸ்துவன் பாடறதை கேட்க இப்படி போறாங்களே" என்று திட்டிக் கொண்டு வெளியேறும். இது நான் நேரடியாக பல வருடங்கள் பார்த்த அனுபவம். முன்பே இதனை எழுதியிருக்கிறேன்.
இப்போது புரிகிறதா?
பிரச்சினை ரஹ்மானின் கர்னாடக இசை ஞானமோ, பக்தியோ கிடையாது.
அவரது மதம்தான் பிரச்சினை.
பிகு 1 : கடந்த வருடம் விருது பெற்றமைக்காக கடுமையாக திட்டப்பட்ட டி.எம்.கிருஷ்ணாவிற்கு பல கச்சேரிகளில் பக்க வாத்தியமாக வயலின் வாசிப்பவர் ஸ்ரீராம்குமார்.
பிகு 2 : கடந்த வருடம் பிரச்சினையை முதலில் உருவாக்கிய ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் ஏதாவது சொல்லியுள்ளார்களா என்று அவர்களின் முக நூல் பக்கம் பார்த்தேன். ராமர் கோயிலில் காவிக் கொடி ஏற்றுகையில் பாட வாய்ப்பு கிடைத்தமைக்காக புளகாங்கிதமடைந்திருந்தார்கள். அவர்கள் டி.எம்.கிருஷ்ணாவை எதிர்ப்பது இயல்பானது, சங்கி இயல்பானது.
பிகு 3 : தோழர் தமிழ்ச்செல்வனுக்கு இன்னும் விருது அறிவிக்கப்படவே இல்லை. அதற்குள்ளாகவே வன்ம வாந்திகளை எடுக்கத் தொடங்கி விட்டனர். அவர்கள் ஆசானின் அல்லக்கைகளாகவே இருப்பது யதேச்சையானதாக தெரியவில்லை.
வழக்கமாக சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்புதான் சர்ச்சை வரும். இந்தாண்டு முன்பே வந்து விட்டது.
நேற்று மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி விருதுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் அது ரத்து செய்யப்பட்டதாக பின்பு அறிவிக்கிறார்கள்.
காரணம் என்ன என்பதை கீழே உள்ள தமுஎகச அறிக்கை சொல்லும்.
நேற்றைய விஜய் கூட்டத்தின் ஈரோடு கூட்டத்தின் காணொளியை நேற்று பகிர்ந்து கொண்டிருந்தேன். அதை மறுபடியும் ஒரு முறை பார்த்த போது ஒரு விஷயம் கண்ணில் பட்டது.
அது
நான் கூட முதலில் மோடி போல டெலிப்ராம்ப்டர் பயன்படுத்துகின்றார் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது. ஒரு அட்டையில் க்ளிப் போட்டு பேசுவதற்கான ஸ்க்ரிப்டை வைத்துள்ளார் என்று.
ஏன் விஜய், இப்போ தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. அழகழகான, நவீன க்ளிப்புகள் வந்து விட்டது. அதையெல்லாம் விட்டுவிட்டு அந்த காலத்தில் நாங்கள் பள்ளியில் படிக்கும் போது பயன்படுத்திய ஆதி காலத்து க்ளிப்பை பயன்படுத்துகிறீர்களே?
உங்கள் வசதிக்கு மோடி போல நீங்களும் டெலி ப்ராம்ப்டரையே பயன்படுத்தலாம்.
ஒரே ஒரு பிரச்சினைதான்.
என்ன அது?
மேலே உள்ள படத்தை பார்க்கவும். . . .