நம்ம திருப்பரங்குன்றம் புகழாளர் மட்டும் சென்சார் அதிகாரியாக இருந்திருந்தால் ???
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கல்தூண் திரைப்படத்தின் பெயரை மேலே உள்ளது போல மாற்றி அமைக்க உத்தரவிட்டிருப்பார்.
அணிந்துள்ளது காவிக்கண்ணாடி அல்லவா!
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
நம்ம திருப்பரங்குன்றம் புகழாளர் மட்டும் சென்சார் அதிகாரியாக இருந்திருந்தால் ???
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கல்தூண் திரைப்படத்தின் பெயரை மேலே உள்ளது போல மாற்றி அமைக்க உத்தரவிட்டிருப்பார்.
அணிந்துள்ளது காவிக்கண்ணாடி அல்லவா!
இன்றைய "ஆங்கில இந்து" நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியான படம்தான் மே#லே உள்ளது.
காஷ்மீர் தால் ஏரியின் அழகான காட்சி.
காஷ்மீர் எழில் மிகுந்த அழகான இடம்.
அமைதியான இடமா?
மோடி ஆட்சி அதை அமைதியாய் இருக்க அனுமதிக்காது என்பது சோகமான உண்மை.
திருப்பரங்குன்றம் புகழாளர் நேற்று கொடுத்த ஒரு தீர்ப்பை படித்தவுடன் மனதில் தோன்றிய காட்சிதான் மேலே உள்ளது.
பிகு: இதே வேலையாதான் இருக்காரோ என்ற வசனத்திற்காக மட்டும்தான் அந்த படத்தை பயன்படுத்தியுள்ளேனே தவிர, விலாசம் கேட்டு வடிவேலை டார்ச்சர் செய்யும் நபருடைய குணாம்சத்திற்காக அல்ல.
கீழேயுள்ள செய்தியை படிக்கையில் சிரிப்பும் வந்தது. கோபமும் வந்தது. பாஜக "பொறுக்கி" எடுத்ததால் அதன் விசுவாசியாக வாலை ஆட்டிக் கொண்டு செயல்பட்டு இந்திய ஜனநாயகத்தையே கொலை செய்து கொண்டிருக்கும் ஒரு அயோக்கியப் பதரை "நடுநிலையாக வெளிப்படைத்தன்மையுடன் நடத்துபவர்" என்று சொல்வது எவ்வளவு மோசமானது!!!!
தமிழ்நாட்டின் கலவர மையமாக திருப்பரங்குன்றத்தை மாற்ற சங்கிகள் முயற்சிக்கின்றனர். ராமரை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்பதால் முருகரை கையில் எடுத்துள்ளனர். வேல் யாத்திரை, முருகர் மாநாடு ஆகியவை காமெடிகளாக முடிந்து போனதால் ரத யாத்திரை என்ற பெயரில் ரத்தத்தை ஓட விட்டது போல இங்கேயும் கலவரத்தை தூண்டி மக்களை மத ரீதியில் மோத வைக்க முயல்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் கோயில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதை அங்கே உள்ள தர்காவின் வாசலில் உள்ள தூணில்தான் ஏற்றுவோம் என்று கலவர நோக்கில் சங்கிகள் பிரச்சினை எழுப்பி வருகின்றனர். அதை தீபத்தூண் என்று சொல்வதே தவறு, நில அளவைக் கல் என்று பலரால் சொல்லப்படுகிறது.
இப்போது பிரச்சினை ஏன் தீவிரமானது? கலவரம் வெடிக்கும் சூழல் யாரால் உருவானது?
சாமி படத்தில் விக்ரம் பேசும் பிரபலமான வசனம் ஒன்று உண்டு. அதையே "நான் நீதிபதி இல்லை சங்கி" என்று பேசுவதற்குப் பதிலாக நடவடிக்கைகளில் காண்பித்துக் கொண்டிருக்கிற ஒருவர். அந்த மனிதருக்கு என் அப்பாவின் பெயர். எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் பெயரும் அதுதான். அவர்களால் சுவாமிநாதன் என்ற பெயருக்கு பெருமை. இவராலோ?
கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற அவர் வழி வகுக்கிறார். தர்காவின் வாசலில் உள்ள தூணில் இன்று முதல் தீபம் ஏற்றுங்கள் எம்று தீர்ப்பளிக்கிறார். தர்கா வழிபாட்டை எல்லாம் முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளலலாமா? அது குரானுக்கு முரணானது இல்லையா என்றும் முஸ்லீம்களுக்குள் சிண்டு முடிய முயற்சி செய்தார்.
அவர் அளித்த தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கின் நோக்கமும் தீர்ப்பின் நோக்கமும் பக்தியின் அடிப்படையில் ஆனது என்ற தெளிவு இருந்ததால் அத்தீர்ப்பை அமலாக்கவில்லை. தமிழ்நாட்டை குஜராத் ஆக மாற்ற நடந்த முயற்சியும் வெற்றி பெறவில்லையும்.
அதனால் வெகுண்டெழுந்து வழக்கு போட்டவர் பத்து பேரோடு போய் மத்திய தொழிற்சாலை காவல் படையின் துணையோடு அந்த தூணில்தான் விளக்கேற்ற வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். 144 தடை உத்தரவு இருந்ததால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
மத்திய , மாநில காவல் படைகளுக்குள் மோதலை உருவாக்க நினைத்ததும் நடக்கவில்லை.
"நான் மட்டும் நீதிபதியாக இல்லாமல் இருந்திருந்தால் நானே அங்கே தீபமேற்றியிருப்பேன்" என்று வஜனம் பேசியதாக வேறு சொல்கிறார்கள்.
அவருக்கு சிலவற்றை பணிவோடு சொல்ல ஆசைப்படுகின்றேன்.
நீங்கள் நீதிபதியாக இல்லாதிருந்தால்
144 தடைச்சட்டத்தின் படி நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்.
மத மோதல்களை தூண்டிய குற்றத்திற்காக உங்களைப் போல அல்லாமல் வேறு நியாயமான நீதிபதி முன்பாக நிறுத்தப்பட்டிருந்தால் சிறைத் தண்டனை கூட வழங்கப்பட்டிருக்கலாம்.
உங்களை பாதுகாத்து வருவது உங்கள் நீதிபதி பதவிதான், அதற்கு நீங்கள் கொஞ்சமும் அருகதை அற்றவர் என்ற போதிலும் . . . .
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் செய்தி ஒன்று.
புது டெல்லியில் உள்ள 1500 ஆண்டு பழமையான கோரக்நாதர் கோயிலை டெல்லி பாஜக அரசு இடித்து விட்டதாகத்தான் அந்த செய்தி சொல்கிறது.
அந்த கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு வாகன நிறுத்தமிடம் வேண்டுமென்பதற்காக கோயில் இடிக்கப்பட்டதற்காகவும் அந்த செய்தி சொல்கிறது.
முக்கிய ஊடகங்கள் எதுவும் இதைப் பற்றி வாய் திறக்கவே இல்லை.
ஏன்?
பாஜகவின் போலித்தனத்தை அம்பலப்படுத்த அச்சமா?
செய்தி வதந்தி என்றால் அதை ஏன் சொல்லவில்லை?
என்னமோ நடக்குது . . .மர்மமா இருக்குது . . .
பிகு: கோரக்நாதர் என்பவர் சிவனின் சிஷ்யர்களின் ஒருவர், சித்தர், முனிவர் என்று சொல்கிறார்கள். அவருக்கான முக்கியமான கோயில் உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருக்கிறது. உபி முதல்வர் மொட்டைச்சாமியார்தான் அந்த கோயிலின் தலைமைப் பூசாரி.