Sunday, April 12, 2026

பிரகாஷ்ராஜ் சீனை கிறுக்குத்தனமாய் காப்பியடித்த விஜய்

 


"கோ" திரைப்படத்தில் ஒரு காட்சியில் காரில் வரும் முதலமைச்சர் பிரகாஷ்ராஜ், பேட்டியெடுக்கும் கார்த்திகாவிடம் கடுப்படித்தபடி சாலையில் இறங்கி நடக்கத் தொடங்குவார். மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் உருவாகும். "என் கெத்தை பாத்தியா, மக்கள் மத்தியில எனக்கு இருக்கிற மரியாதையை கவனிச்சியா" என்ற படி மீண்டும் காரில் உட்கார்ந்து கொள்வார்.

அது திரைப்படக் காட்சி.

அந்த காட்சியை இன்று காப்பியடித்தார் தமிழக ரத்துக் கழகத்தின் தலைவர் விஜய்.

திடீரென (முன் கூட்டியே திட்டமிட்ட படி) சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து விட்டார்.


கேரவனில் போனாலே பின்னால் தொடரும் மூட ரசிகர்கள் கூட்டம் சைக்கிளில் போனால் சும்மா விடுமா?

விபத்துக்களும் நெரிசல் மரணங்களும் நடப்பதற்கான வாய்ப்புக்கள் தோன்றினாலும் அதிர்ஷ்டவசமாக எதுவும் நடக்கவில்லை.

சினிமா சீன் போல கிறுக்குத்தனம் செய்த விஜயின் சைக்கிள் பயணம், அவரது தற்குறிகளில் ஒருவர் பட்டாசு கொளுத்துப் போக அவர் பயந்து போய் கேரவனில் ஏற நிறைவுக்கு வந்தது.

துரதிர்ஷ்டவசமாக ஏதாவது நடந்திருந்தால் தன் கிறுக்குத்தனத்தை மூடி மறைக்க திமுக மீது பழி போட்டிருப்பார் விஜய். 

தமிழ்நாட்டு அரசியலின் துயரம் விஜய்

விஜய் கட்சியின் பெயர் இனி . . .

 தனியாக விளக்கம் அவசியமில்லை. படமே போதும் . . .



Saturday, April 11, 2026

சீமான் அவ்வளவு நல்லவரில்லையே!

 


கீழேயுள்ள காணொளியை பாருங்கள். நீங்களும் கண்டிப்பாக சிரிப்பீர்கள். 


2000  கோடி ரூபாயும் துணை முதல்வர் பதவியும் கிடைப்பதாக இருந்தால் முதலில் ஓடிப் போய் அந்த புரவலர்களோடு கை கோர்த்துக் கொண்டிருப்பார். இப்போதும் அவர் ஏதோ வஜனம் பேஸ்ய்கிறாரே தவிர, அவற்றையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்பது உலகறிந்த உண்மை. 

எரிந்த ரூபாய் நோட்டுக்களும் புனிதமாகும் முயற்சியும்

 


டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த தீ விபத்தின் போது சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் எரிந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. 

அவரை இடை நீக்கம் செய்வதற்குப் பதிலாக அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றினார்கள்.

உச்ச நீதிமன்றம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது. அவரை பதவி நீக்கம் செய்யும் நடைமுறையை நாடாளுமன்றம் தொடங்கியது. இதில் ஏதோ சிக்கல் வர துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தாங்கர் பதவி விலகினார். அந்த மர்மம் என்ன என்பதை இன்று வரை தெரியவில்லை.

இப்போது தன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தன் ஆத்திரத்தையும் வருத்தத்தையும் விவரித்து ஜனாதிபதிக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதால் காரணங்களை தெரிவிக்கவில்லை என்று அக்கடிதத்தில் எழுதியுள்ளாராம்.

இது அவர் தன்னை ஒரு புனிதனாக காண்பித்துக் கொள்ளும் முயற்சி.  எந்த கேள்விக்கும் விசாரணைக்கும் உட்படாமல் தப்பித்துக் கொள்வதற்கான உத்தி.

ஜனாதிபதி இந்த ராஜினாமாவை நிராகரிக்க வேண்டும். ஏற்றுக் கொண்டால் யஷ்வந்த் வர்மாவின் புரவலர்கள் மோடி வகையறாக்கள், மோகன் பகவத் கூட்டத்தினர் என்பது தெளிவாகும்.

Friday, April 10, 2026

எச்.ராசா அரசியலிலிருந்து விலகலா?


 மேலே உள்ள படத்திற்கு என்ன அவசியம்?

கீழேயுள்ள செய்தியை பாருங்கள்.


மிகவும் பழைய செய்திதான் இது. இதை வைத்துக் கொண்டு பலர், எச்.ராசா ஏதோ அரசியலிலிருந்தே விலகி விட்டதாக நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர் நான்கு முறை மக்களவைத் தேர்தலிலும் நான்கு முறை சட்டப்பேரவை தேர்தலிலும்  போட்டியிட்டு ஏழு முறை தோற்றுப் போயுள்ளார். ஒரே ஒரு முறை கலைஞர் புண்ணியத்தில் எம்.எல்.ஏ ஆனார். சாரணர் அமைப்பின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு பரிதாபமாக தோற்றுப் போனார். போன முறை சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சி கொடுத்த காசை செலவழிக்காமல் ஆடம்பர மாளிகை கட்டி விட்டதாக சொந்தக்கட்சிக்காரர்களே போராட்டம் நடத்தினார்கள். அதனால் அப்போது வஜனம் பேசியிருப்பார் போல . . .

அப்போது அவர் மனதில் என்ன நினைத்திருப்பார் என்பதுதான் மேலே உள்ள படம். 

கலவர அரசியலை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதானே உண்மை!


பொய்ப்பிரச்சாரமா மாலன்?????

 


நேற்று முகநூலில் பார்த்த ஒரு செய்தி. ஒரு வயதானவர், அவருக்கு திராவிட இயக்கமும் பிடிக்காது, சங்கிகளையும் பிடிக்காது. மோடியை திட்டுவார். அதை விட அதிகமாக தந்தை பெரியாரை திட்டுவார். கருத்துக் கணிப்புக்கள் என்ன சொல்கிறது என்று அவர் கேள்வி கேட்க, மூத்த்த்த்த்ஹ்த்த்த்த்த்த்த்த  பத்திரிக்கையாளர் என்று கருதப்படுகிற மாலன் உடனடியாக ஒரு பட்டியலை போடுகிறார்.

பாஜக கூட்டணிதான் வெற்றி பெறப்போவதாக எல்லா தொலைக்காட்சிகளும் சொல்வதாக அந்த பட்டியலில் இருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான இன்னொரு சங்கி உடனடியாக அதை மறுத்து அது பொய் செய்தி என்றும் ஒரு தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு திமுக கூட்டணி வெல்லும் என்று போட்ட பட்டியலை பகிர்ந்தார்.


செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இப்படி கருத்துத்திணிப்பு பொய்ப்பிரச்சாரம் செய்யலாமா மிஸ்டர் மாலன்? இது கேவலமாக இல்லையா? காலம் போல காலத்தில் ஓய்வெடுக்காமல் இவ்வளவு தரம் தாழ்ந்து போகலாமா? 

Thursday, April 9, 2026

திருப்பரங்குன்றம் - தீர்ப்புகள் திசை மாறுது

 


திருப்பரங்குன்றத்தை முன்வைத்து தமிழ்நாட்டை கலவர பூமியாக்க சங்கிகள் எடுத்த முயற்சிகள் மதுரை மக்கள் மத்தியில் எடுபடவில்லை. மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நடத்திய போட்டோ ஷூட் கூட வழக்கம் போல காமெடி ஷோ வாகத்தான் முடிந்து போயிருந்தது.

ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத தீர்ப்பாளர் மட்டும் அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

நேற்றும் இன்றும் அதே உயர் நீதி மன்றத்தில் வந்த தீர்ப்புகள், அந்த மிரட்டலுக்கும் இனி அவசியம் இருக்காது என்பதை உணர்த்தியுள்ளது.

நேற்று வந்த தீர்ப்பு, தீர்ப்பாளர்  இனிமே வழக்கை விசாரிக்க தடை போட்டு விட்டது, அவர் கொடுத்த தீர்ப்புக்களுக்கும் கூட. . .


தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என்று தொடுக்கப்பட்ட புது வழக்கை "வேற பிழைப்பே உங்களுக்கு இல்லையாடா" என்ற ரேஞ்சில் திட்டி ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து துரத்தி விட்டு விட்டார்கள். இது நடந்தது இன்று.


திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தி ஆக்கும் முயற்சியை இனியாவது சங்கிகள் கை விடுவார்கள். உடனடி வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததால்தான் திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை. எப்போதும் போல தோற்கப் போகும் போலிப் பேராசிரியன் காம.சீனிவாசனுக்குக் கூட திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தைரியம் இல்லை.

ஆனாலும் சங்கிகள் மீண்டும் முயற்சிப்பார்கள்.

மீண்டும் தோற்றுப் போவார்கள்.