Thursday, February 19, 2026

C.B.I கரடியே காரி உமிழ்ந்த . . .

 


நான்காண்டுகளுக்கு முன்பாக ஆட்டுக்காரன் ஒரு மாணவியின் தற்கொலையை மத மாற்றத்தினால் நிகழ்ந்தது என்று கொளுத்திப் போட்டு கலவரத்துக்கு அடி போட, சங்கிகள் அனைத்து வித பொய்களையும் கட்டவிழ்த்து விட, திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் வழக்கம் போல சங்கிகள் விருப்பத்திற்கேற்ப சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

கடைசியில் சி.பி.ஐ விசாரித்து முடித்து அறிக்கையும் கொடுத்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறிக்கை விபரத்தைச் சொல்கிறது.


ஆனால் ஆட்டுக்காரனெல்லாம் மன்னிப்பு கேட்பான் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் சங்கிகளுக்கு வெ.மா.ரோ.சூ.சொ எதுவும் கிடையாது.

பிகு : அந்த சமயத்தில் நான் எழுதிய மூன்று பதிவுகள் கீழே உள்ளது.

அண்ணாமலையை கைது செய்யவும் என்ற பதிவின் இணைப்பு இங்கே

அண்ணாமலை, வானதி, சங்கிகள் கவனத்திற்கு என்ற பதிவின் இணைப்பு இங்கே

பொய் சொல்லி, பயந்தாங்குளி வானதி அம்மையார் என்ற பதிவின் இணைப்பு இங்கே

Wednesday, February 18, 2026

நாங்களும் முதலமைச்சர்கள்தான் . . .


 திரு பர்கலா பிரபாகர் எழுதி ஃப்ரண்ட்லைன் இதழின் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் தமிழாக்கம் செய்த "புதிய இந்தியா எனும் கோணல் மரம்"  நூலை படித்துக் கொண்டிருக்கிறேன். முழுமையாக முடித்த பின்பு விரிவாக எழுதுவேன். "வச்சு செய்யறது" என்பதற்கு உதாரணம் இந்த நூல்.




அந்த நூலிலே "அசாதாரணமாக்கு, காட்சிப்படுத்து" என்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம் கீழே உள்ளது.





இந்த செய்தியை இதற்கு முன்பு கூட படித்த நினைவு. ராஜ்நாத்சிங்கோ, அருண் ஜெய்ட்லியோ சொன்னார்கள் என்று நினைவு.


மொரார்ஜி தேசாய் மஹாராஷ்டிர (முந்தைய பம்பாய் மாநிலம்) மாநில முதலமைச்சராகவும்

சவுத்ரி சரண் சிங்கும், விஸ்வநாத் சிங்கும் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராகவும்

பி.வி.நரசிம்மராவ் ஆந்திராவின் முதல்வராகவும்

ஹெச்,டி,தேவே கௌடா, கர்னாடகாவின் முதல்வராகவும்

இருந்திருக்கிறார்கள்.

மோடியை உயர்த்திப் பிடிப்பதற்காக அவர்கள் எப்படி வரலாற்றை மறைக்கிறார்கள் பாருங்கள்! 

இதை மூடச்சங்கிகள் நம்ப வேறு நம்புவார்கள்.




அழிவை அழைக்கும் அழகிய நிக்கோபார் தீவுகள்


 












மேலே உள்ள அழகான படங்களை நன்றாக இன்னொரு முறை கூட பார்த்துக் கொள்ளுங்கள்.

அழகு சொட்டும் இந்த இடங்கள் இனி இதே போல இருக்குமா என்பது ஐயே.

பத்து லட்சம் மரங்களை வெட்டி, 130 ஏக்கர் காட்டை காலி செய்து 166 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு துறைமுகம், ஒரு விமான நிலையம், ஒரு மின் உற்பத்தி நிலையம், ஒரு பிரம்மாண்ட மால் உள்ளிட்ட நகரியம் கொண்ட 82,000 கோடி மதிப்பிலான மெகா திட்டத்தில் தாங்கள் தலையிட எந்த அவசியமும் இல்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாணையம் திட்டவட்டமாக கூறி விட்டது.

அதன் பொருள் என்ன?

நிக்கோபார் தீவுகளை உங்கள் இஷ்டத்திற்கு எப்படி வேண்டுமானால் அழித்துக் கொள்ளுங்கள் என்று பச்சைக் கொடி காட்டி விட்டார்கள்.

விமான நிலையம், துறைமுகம், மின் உற்பத்தி நிலையம் ஆகிய மூன்றுமே அதானி நடத்தும் முக்கியத் தொழில்கள் என்பதை நினைவில் கொள்க.

சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்களின் ஆட்சேபத்திற்கு அரசு என்ன விளக்கம் கொடுத்தது என்பதைக் கூட சொல்ல அவசியமில்லை என்று தேசிய பசுமை ஆணையம் சொல்லி விட்டது.

கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல இயற்கையை அழித்து விட்டு சுற்றுலாவை மேம்படுத்தப் போகிறார்களாம்! என்ன கேலிக்கூத்து இது!

புவி வெப்பமயமாதல் காரணமாக அந்தமான்-நிக்கோபார் தீவுகள், மாலத்தீவுகள்  ஆகியவை கடலில் முழுகிப் போகும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் விற்பன்னர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். 

பத்து லட்சம் மரங்களை வெட்டி அந்த அழிவை முன் கூட்டியே வரவேற்கிறது மோடி அரசு.

பிகு: ஒரு புறத்தில் பத்து லட்சம் மரங்களை வெட்டும் மத்திய அரசு இன்னொரு புறம் அழிவதற்காகவே பிறந்தது என்று மோடியால் சொல்லப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ ஆகியவற்றை "மரங்களை நடுங்கள்"  என்று அழுத்தம் கொடுப்பார்கள். அரசின் அரசியல் புரியாத இந்நிறுவனங்களும் தங்களது முன்னுரிமைப் பணிகளை கோட்டை விட்டு விட்டு "கிடப்பது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மனையில் வை" என்பது போல எம் கடன் மரம் நடுவதே என்று அலைந்து கொண்டிருக்கின்றன. 

Tuesday, February 17, 2026

இதுதான் கிரிக்கெட் உணர்வு

 


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் சிறையில் இருப்பது நாம் அறிந்ததே. அவருடைய பார்வைத் திறனில் 85 % ஐ இழந்து விட்டார் என்றும் சிறையில் அவருக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிப்பதில்லை என்றும் காலையில்தான் படித்தேன்.

இப்போது வந்த ஒரு செய்தி நெகிழ்ச்சியளித்தது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த . ஒரு மகளிர் அணி கேப்டன் உட்பட முன்னாள் கேப்டன்கள்  பாகிஸ்தான் அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு பெருமை சேர்த்த இம்ரான் கானுக்கு சட்டத்திற்கு உட்பட்ட நியாயமான, கௌரவமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் அந்த கடிதத்தின் சாராம்சம்.

நம் இந்திய அணியின் அடையாளங்களாக திகழும் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோர் கையெழுத்திட்ட இக்கடிதத்தில் உலகப் புகழ் பிரபலங்கள் கிளைவ் லாயிட், கிரேக் சேப்பல், ஆலன் பார்டர், உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.

அந்த கடிதம் இங்கே

We, the undersigned former captains of our national cricket teams, write with deep concern regarding the reported treatment and incarceration conditions of Imran Khan, the distinguished former Captain of Pakistan and a legendary figure in world cricket. Imran Khan’s contributions to the game are universally admired. As captain, he led Pakistan to their historic 1992 Cricket World Cup victory—a triumph built on skill, resilience, leadership, and sportsmanship that inspired generations across borders.

 

Many of us competed against him, shared the field with him, or grew up idolising his all-round brilliance, charisma, and competitive spirit. He remains one of the finest all-rounders and captains the sport has ever seen, earning respect from players, fans, and administrators alike. Beyond cricket, Imran Khan served as Prime Minister of Pakistan, leading his nation during a challenging period. Regardless of political perspectives, he holds the honour of having been democratically elected to the highest office in his country.

 

recent reports concerning his health – particularly the alarming deterioration of his vision while in custody and the conditions of his imprisonment over the past two and a half years have caused us profound concern. As fellow cricketers who understand the values of fair play, honour, and respect that transcend the boundary rope, we believe that a person of Imran Khan’s stature deserves to be treated with the dignity and basic human consideration befitting a former national leader and a global sporting icon.

 

We respectfully urge the Government of Pakistan to ensure that Imran Khan receives: Immediate, adequate and ongoing medical attention from qualified specialists of his choosing to address his reported health issues. Humane and dignified conditions of detention in line with international standards, including regular visits by close family members. Fair and transparent access to legal processes without undue delay or hindrance.

 

Cricket has long been a bridge between nations. Our shared history on the field reminds us that rivalry ends when the stumps are drawn – and respect endures. Imran Khan embodied that spirit throughout his career. We call on authorities to honour it now by upholding the principles of decency and justice. This appeal is made in the spirit of sportsmanship and common humanity, without prejudice to any legal proceedings.

இரண்டு அம்சங்களில் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்தது.

காலமெல்லாம் தங்களோடு விளையாட்டில் மோதிய ஒருவருக்கு பிரச்சினை என்று வருகிற போது நாடு மறந்து அவருக்காக குரல் கொடுக்க ஒன்று சேர்ந்தது முக்கியமான ஒன்று.

அடுத்த அணி வீரர்களுக்கு கை கொடுக்கக்கூடாது என்று வெறுப்பரசியலை இந்திய கிரிக்கெட்டை நிர்வாகம் செய்யும் பாஜகவினர் புகுத்தியுள்ள சூழலில் இம்ரான் கானிற்காக கவாஸ்கரும் கபில்தேவும் குரல் கொடுத்துள்ளது இன்றைய கிரிக்கெட் அணியினர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

நேர்மையாக, நாகரீகமாக, நட்புணர்வோடு நடந்து கொள்வதைத்தான் கிரிக்கெட்  உணர்வு என்பார்கள்.

அது இன்று அருகி வரும் நிலையில் இந்த கடிதம் கிரிக்கெட் உணர்வை புதுப்பித்துள்ளது. 


மோடியின் ஆளும் மோடி மாதிரிதானே பேசுவான்!

 


பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் விஜய்யை மட்டம் தட்டுவதாக நினைத்து த்ரிஷாவை இழிவு படுத்தி பேசினார்.

அந்த சர்ச்சை அடங்கும் முன்பே பாஜகவின் கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், ஒரு பொதுக்கூட்டத்திலேயே கரூர் காங்கிரஸ் எம்.பி செல்வி ஜோதிமணியை ஆபாசமாக பேசுகிறார்.

இவர்கள் இப்படி பேசியது எனக்கு ஆச்சர்யமாகவோ அல்லது அதிர்ச்சியாகவோ இல்லை. 

சில காலம் முன்பாக பத்திரிக்கையாளர்களை மிக மிக கேவலமான, ஆபாசமான வார்த்தையில் ஆட்டுக்காரன் பேசியது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.

இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து தைரியம் வருகிறது?

கண்டிப்பாக மோடியிடமிருந்துதான்.

பாஜக கொலைகாரர்களால் துரத்தப்பட்டு வேறு வழியின்றி இஸ்லாமியர்கள் தங்கியிருந்த அகதிகள் முகாமை "குழந்தைகள் உற்பத்தி தொழிற்சாலை" என்று நக்கல் செய்ததையும் சோனியா காந்தியை கொச்சையான வார்த்தை கொடுத்து விவரித்ததையும் மறந்து விட முடியாது.

மோடியை அப்படி பேச வைப்பது எது?

அவர்களின் டி.என்.ஏ வில் ஊறியுள்ள ஆணாதிக்க சிந்தனை. அதை அவர்களுக்கு ஊட்டி வளர்ப்பது 

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

அதுதான் 

சனாதனம் . . .

Monday, February 16, 2026

பொன்னியின் செல்வன் பாடல் சர்ச்சையும் வேறொரு அற்புதமும் . . .

 


இரண்டு நாட்களாக ஊடகங்களில் அடிப்பட்ட ஒரு செய்தி ஏ.ஆர்.ரஹ்மான் பற்றியது. ஏற்கனவே உருவான சர்ச்சையைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தாலும் அது ஏனோ கைவரவில்லை. அது அவசியம் எழுதப்பட வேண்டிய விஷயம். இரண்டு மூன்று நாட்களில் எழுதுவேன். 

இப்போதைய சர்ச்சையைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள "வீரா ராஜ வீரா" பாடல் டாகர் சகோதரர்களின் "சிவஸ்துதி" யை காப்பி அடித்த பாடல் என்ற  வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு முன்பாக ரஹ்மான் இரண்டு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு.

நன்றாக சிக்கிக் கொண்டார் என்று ரஹ்மான் என சங்கிகளும் சரி இளையராஜா வெறியர்களும் சரி  தீவிரமாக களமாடிக் கொண்டிருந்தனர். :இஸ்லாமியர் ரஹ்மான் காப்பியடித்தது இந்து மதக் கடவுள் மீதான பாட்டை " என்று சொல்லி வேறு குதூகலித்துக் கொண்டிருந்தார்கள். 

இந்த தகவல் உண்மையா என்பதை நேற்று முழுவதும் செலவழித்து ஆராய்ந்தேன்.

காப்பி அடித்ததாக சொல்லப்பட்ட பாடல் இது


சிவஸ்துதி என்று யூட்யூபில் தேடினால் முதலில் எஸ்.பி.பி பாடிய பாடல் வந்தது. அந்த பாடலுக்கும் பொன்னியின் செல்வன் பாடலுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது. 

கொஞ்சம் விரிவாக தேடிய போது கிடைத்த :சிவ ஸ்துதி" கீழே


இதனை கேட்கும் போது ஒரு விஷயம் தெளிவானது.

"வீர ராஜ வீரா" பாடலின் பல்லவியும் இந்த "சீவா சீவ சீவா" பாடலும் ஒன்றுதான். பொன்னியின் செல்வன் பாடலின் தொகையறாவும் சரணமும் வேறு. ஆனால் கண்டிப்பாக பல்லவி இங்கிருந்து எடுக்கப்பட்டதுதான். 

ஆனால் இந்த காணொளியில் குண்டேச்சா சகோதரர்கள் என்று இருந்ததே தவிர டாகர் சகோதரர்கள் என்று இல்லை. அதனால் தேடல் தொடர்ந்தது.

டாகர் சகோதரர்கள் வழங்கிய "சிவ ஸ்துதி" யும் கிடைத்தது. 

அது கீழே . . .


யார் இந்த டாகர் சகோதரர்கள் என்று தேடிய போதுதான் சில அற்புதமான விஷயங்கள் தெரிய வந்தது. 

யார்  இந்த டாகர் சகோதரர்கள்? எந்த ஊர்க்காரர்கள்?

ஹிந்துஸ்தானி இசையில் த்ரூபத் என்ற பாரம்பரிய பாணியை பின்பற்றுபவர்கள் இவர்கள். கிட்டத்தட்ட இருபது தலைமைமுறைகளாக இசைத்து வருபவர்கள். இவர்கள் தனியாக டாகர்வாணி என்ற தனியொரு பாணியை உருவாக்கியவர்கள்.

இந்த நூற்றாண்டில் புகழ்பெற்ற டாகர் சகோதரர்கள் யார் தெரியுமா? அவர்கள்தான் நீங்கள் முதல் காணொளியில் கேட்ட சிவஸ்துதியை பாடிய டாகர் சகோதரர்களின் குருமார்கள். அப்பாக்கள்.

அவர்களின் முழு பெயர் என்ன தெரியுமா?

ஜியா ஃபரிதுதீன் டாகர்

ஜியா மொஹிதுதீன் டாகர்.

இவர்கள்தான் அந்த "சிவஸ்துதி"யை முதலில் உருவாக்கி பாடியவர்கள்.

அவர்களின் வாரிசுகள் பாடிய காணொளிதான் மேலே உள்ளது.

அவர்களின் முழுப் பெயர்கள்

நசிர் ஜாஹிருதுதீன் டாகர்

நசிர் ஃபயாசுதின் டாகர்

இவர்களிடமிருந்து த்ரூபத் இசையை கற்றுக் கொள்ள வந்தவர்கள்தான் குண்டேச்சா சகோதரர்கள்.அவர்களின் முழு பெயர்

ராமகாந்த் குண்டேச்சா மற்றும் உமாந்த் குண்டேச்சா 

அவர்களிடமிருந்து டாகர் பரம்பரையைச் சேர்ந்த இளைஞர்கள் இப்போது த்ரூபத் பாணியை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் யாரோ ஒருவர் டாகர் வாணி பாணியைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மானிடம் சொல்ல, அது "வீரா ராஜ வீரா" பாடலாக உருவாகிவிட்டது.

ஏதோ அற்புதம்னு தலைப்பில் இருக்கே! அது என்ன என்றுதானே கேட்கிறீர்கள்.

இந்துக்களின் கடவுளான சிவனை வணங்குவதற்கான "சிவ ஸ்துதி"யை உருவாக்கி அதனை பல தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்றவர்கள் இஸ்லாமியர்கள். 

அந்த இஸ்லாமிய டாகர் சகோதரர்களை குருவாக தேடி வந்தவர்கள் இந்துக்களான குண்டேச்சா சகோதரர்கள்.

அவர்களிடம் மீண்டும் பயில வந்தது அதே டாகர் குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள்.

இது எவ்வளவு அழகாக இருக்கிறது!

இசைக்கு ஜாதி, மதம், இனம். மொழி என எதுவும் கிடையாது என்பதை நிரூபிக்கும் இந்த குரு சிஷ்ய பரம்பரை ஒரு அற்புதமில்லையா? இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு நல்லதொரு உதாரணமில்லையா!

இந்த பன்முகக் கலாச்சாரத்தை யாரும் சிதைக்காமல் பாதுகாப்போம்.



பிகு :அடிப்படையில் இந்த பாடல் "அடாணா" ராகத்தில் அமைந்துள்ளது. அனைவரும் அறிந்த ஒரு அடாணா ராக திரைப்பாடல் கீழே. காபிரைட் சர்ச்சை வராது என்ற நம்பிக்கையில் பதிவு செய்கிறேன், இரண்டு காரணங்கள் இருக்கிறது. இந்த பதிவில் எந்த லாப நோக்கமும் கிடையாது. இந்த பாடலை ஒரிஜினலாக எழுதியவர் காபிரைட் வழக்கு போட இப்போது இல்லை. அவர் தியாகராஜர். 




டுபாக்கூர் சமூக ஆர்வலர்கள் தொல்லை ஓவராயிடுச்சு

 


நேற்றிலிருந்து பாஜக=அதிமுக கூட்டணியினர் ரொம்ப பெருமையோடு பகிர்ந்து கொண்டிருக்கும் செய்தி கீழே . . .


இந்த மனிதனை ஒரு டுபாக்கூர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இது மகளிர்  உரிமைத் தொகை.

யாருடைய பணத்தை இவர் திருப்பி அனுப்பினார்?

தாய்?

மனைவி?

சகோதரி?

மகள்?

மற்றவர்களுக்கு உரிமையான தொகையை திருப்பி அனுப்ப இவருக்கு ஏது உரிமை?

அடுத்தவர் பணத்தை எடுத்து தனக்கு பெயர் வாங்கிக் கொள்ள நினைத்த இந்த மனிதர் ஒரு முக்கியமான உண்மையை மறந்து விட்டார்.

விண்ணப்பம் கொடுக்காமல் மகளிர் உரிமைத் தொகை வராது. ஆக இவர் குடும்பத்தில் யாரோ கொடுத்த விண்ணப்பத்தினால்தான் பணமே வந்தது என்பது கூட தெரியாத இவரை டுபாக்கூர் என்றழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

மேலும் இத்தனை நாள் வந்த பணம் என்ன ஆனது?