Sunday, June 12, 2022

போலீஸ் Vs ராணுவம். என்னாகும் ?????

 


ஆறு மாதங்களுக்கு முன்பாக இந்திய ராணுவம் பனிரெண்டு சுரங்கத் தொழிலாளர்களை நாகாலாந்தில் சுட்டுக் கொன்றது நினைவில் உள்ளதா?

நாகாலாந்து போலீஸ் ராணுவத்தினர் முப்பது பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

ராணுவம் எதிர் போலீஸ் என்ற நிலையில் ஒன்றிய அரசும் நீதிமன்றமும் யார் பக்கம் நிற்கும்?

அப்பாவித் தொழிலாளர்களை அநியாயமாக சுட்டுக் கொன்ற ராணுவத்தினருக்கு தண்டனை கிடைக்குமா/

கண்டிப்பாக கிடைக்காது.

அங்கே ராணுவத்தினருக்கு ஒரு சிறப்புக் கவசம் இருக்கிறது. அந்த கவசம் அவர்களை காப்பாற்றும்.

ARMED FORCES SPECIAL POWERS ACT எனப்படும் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் அங்கே நடைமுறையில் உள்ளது. இந்த கொடூரத்திற்குப் பின்பும் அது நீட்டிக்கப்பட்டது.

அதனால் யாரும் கேள்வி கேட்க முடியாத, எல்லையற்ற அதிகாரத்தை அளிக்கும் அராஜகச் சட்டம் உள்ளவரை அந்த அப்பாவிகளுக்கு நியாயம் கிடைக்கவே கிடைக்காது. 


No comments:

Post a Comment