Thursday, June 30, 2022

ஆம், அது ஆணவச் சிரிப்புதான்

 


இன்று காலை இந்து ஆங்கில நாளிதழில் பார்த்த புகைப்படம் கீழே உள்ளது. அதைப் பார்த்ததும் ரிக்சாக்காரன் படத்தின் "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், அது ஆணவச் சிரிப்பு" பாடல்தான் நினைவுக்கு வந்தது.


Application of Mind என்பதை சில நீதியரசர்கள் பயன்படுத்தவே மாட்டார்கள் போல. 

குதிரை பேரம் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்பது சரிதான்.

ஆனால் குதிரை பேரம் நடந்து முடிந்ததால்தான் இப்போது மகாராஷ்டிராவில் பிரச்சினையே என்பது அவர்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு கடிவாளம் கட்டிக் கொண்டு விட்டார்கள்.

அதனால்தான் உச்ச நீதிமன்ற வளாகம் இந்த ஆணவச் சிரிப்பை கண்ணுற்றுள்ளது. 

நேற்று நாற்காலிகளைப் பற்றி காவிக்கயவர்கள் ஒரு செய்தியை உலவ விட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குப் போட்ட பின்னூட்டத்தை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று அந்த ரத்தத்தின் மேல் அமர்ந்தால் அது மோடி நாற்காலி.

அம்பானிக்கும் அதானிக்கும் உலக அளவில் புரோக்கர் வேலை பார்த்து அதில் கிடைத்த பிச்சைக் காசில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கி அமர்ந்தால் அது பாஜக நாற்காலி

No comments:

Post a Comment