Tuesday, June 28, 2022

இப்போதைக்கு போதும் கிருஷ்ணா . . .

 


ஆஹா ! படிக்கவே எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது தெரியுமா?

சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பும் அளவில் உள்ளதால் ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் தேதியிலிருந்து கிருஷ்ணா நீரை அனுப்ப வேண்டாம் என்று தமிழக அரசு ஆந்திர அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இப்போதுள்ள கையிருப்பு எட்டு மாதங்கள் வரை போதுமானதாக இருக்கும் என்று சொல்லியுள்ளனர்.

இப்படிப்பட்ட நிலைமை எந்நாளும் நிலவட்டும்.

மழைக்காலம் வந்தால் உபரி நீரை சேமிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக எடுத்திட வேண்டும். 

No comments:

Post a Comment