Wednesday, July 1, 2015

கதைகளைத் தாண்டிய உண்மை



 

படைத்தலும் காத்தலும் அழித்தலும்
கடவுளின் பணியென்று
கதைகள் சொன்னதுண்டு.

கதைகளைத் தாண்டி,
உண்மையை உணர்ந்து
உரைக்கிறேன் இங்கே.
 
படைத்தலும் காத்தலும்
தீயதை அழிக்கும்
நிஜமான் சக்தி பற்றி

எல்.ஐ.சி எனும் நிறுவனத்தை
போராட்டம் மூலம் படைத்தாய்!


காப்பீடு அளிக்கும் நிறுவனத்திற்கே
காப்பீடு அளித்து காவல் அரணாய்
நிற்பது உன் போராட்டமன்றோ!

பாரதப் பிரதமர்கள் முதல்
பன்னாட்டுக் கம்பெனிகள் வரை
தீட்டிய சதிகளையெல்லாம்
அழித்திட்ட தீரமும்
உனக்குத்தானே சொந்தம்!

எல்.ஐ.சி யின் உதயம்
உந்தன் உதயத்தால்தான்
ஆனது சாத்தியம்.

எல்.ஐ.சி
இன்றும் இருப்பதும்
உன்னால்தான் என்பதும்
சத்தியம்.

அறுபத்தி ஐந்து அகவை கடந்த
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
வாழ்க, வாழ்க, வாழ்கவே என
வாழ்த்துப்பா பாட
வாரீர், வாரீர்

1 comment:

  1. இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சாதனைகள் பல படைக்க வாழ்த்துவோம்

    ReplyDelete