Thursday, May 29, 2014

அமைச்சராக கல்வித் தகுதி அவசியமில்லை, ஆனால் நேர்மை ??????



 http://tamil.oneindia.in/img/2014/05/13-smriti-irani-1-600.jpg
மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்மிர்தி இராணி யின் கல்வித்தகுதி பற்றிய சர்ச்சைகள்தான் ஊடகங்களுக்கும் இணைய தள, முக நூல், வலைப்பக்கங்களுக்கு தீனி போட்டு வருகின்றன.

அமைச்சராக இருப்பதற்கு கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டும் என்பதை நானும் ஏற்கவில்லை. முறையான கல்வி கற்காதவர்கள் எத்தனையோ பேர் அரசியல் தளத்தில் சாதனைகள் புரிந்துள்ளனர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கல்வியைத் துறந்தவர்கள் ஏராளம். சமீபத்தில் மறைந்த தலைவர் தோழர் ஆர்.உமாநாத் ஒரு உதாரணம். படித்த மேதை மன்மோகன்சிங் எந்த லட்சணத்தில் ஆட்சி செய்தார் என்பது நமக்கெல்லாம் நன்றாக தெரியும்.

கல்வி இருந்தால் மட்டுமே தன்னுடைய துறையை கவனிக்க முடியும், முன்னேற்ற முடியும் என்பதெல்லாம் வெற்றுக் கோஷங்கள். ஆர்வமும் முனைப்பும் இருந்தால் போதும். ஆகவே பனிரெண்டாவது வரை படித்த ஸ்மிர்தி இராணிக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது சரியல்ல என்ற வாதங்களை நான் ஏற்கவில்லை.

ஆனால்

தனது கல்வித் தகுதி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த முரண்பட்ட இரண்டு பிரமாண வாக்குமூலங்கள் அவரது நேர்மையை கேள்விக்குறியாக்குகிறது. முன்னர் பி.ஏ பாஸ் செய்தவர் பின்பு எப்படி முதல் வருடம் படிப்பவராக மாற முடியும்?

இந்த முரண்பாட்டிற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் பாவம் காங்கிரஸ் கட்சியின் குறி தடுமாறிப் போய் சோனியா காந்தியின் கழுத்துக்கே வந்து விட்டது

1 comment:

  1. Sir, BA- 1 st year Passed... that is the meaning....

    ReplyDelete