Friday, May 23, 2014

காய்ச்சல் வந்தால் தவறில்லை



குடையைத் தூக்கியெறி,
கோடை மழையைக் கொண்டாடு.

ஓரத்தில் ஒதுங்காதே,
சாலைக்கு வந்து விடு

துணிகள் நனைந்தால் என்ன?
உள்ளம் நனைய வேண்டாமா?

உடல் குளிர்ந்தால்
உள்ளமும் குளிர்ந்திடுமே..

வேடிக்கை பார்க்காதே.
நீயும் வந்து இணைந்திடு.

மழையில் நனைந்திடு
மகிழ்ச்சியை பெருக்கிடு

காய்ச்சல்தான் வந்தால் என்ன?
இப்படி ஒரு மழை
இனி என்று வருமோ
நம் ஊருக்கு.....

(நேற்று அலுவலகத்திலிருந்து கொட்டும் மழையில் நனைய நனைய மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன். அப்போது மழைக்கு அஞ்சி அங்கங்கே ஒதுங்கி நின்றவர்களைப் பார்த்து தோன்றியது?




2 comments:

  1. வீட்டுக்குள்ளே போனீர்களா அல்லது வெளியே மழையிலேயே உட்கார்ந்துவிட்டீர்களா?

    ReplyDelete