Tuesday, March 28, 2023

இவனை கண்டிப்பா மந்திரியாக்கிடுவாங்க

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் பகிர்ந்து கொண்ட படமும் அவரது முக நூல் பதிவும் கீழே உள்ளது.



மனிதன் என்னும் போர்வையில் மிருகம் ஒன்று மேடையில்!

ஷைலேஷ் பட் - வன்புணர்வு அயோக்கியத்தனத்திற்காக பில்கிஸ் பானு வழக்கில் தண்டிக்கப்பட்டவன்.

பாஜக எம்எல்ஏ,எம்பி கலந்துகொண்ட அரசுத்துறை நிகழ்ச்சியில் மேடையில் முன் வரிசையில்.

வெட்கங்கெட்டவர்களே,
இதுதான்
குஜராத் மாடலா?
கலாச்சார தேசியமா?

இதில் ஆச்சர்யப்படவோ, அதிர்ச்சியடையவோ எதுவும் இல்லை என்பதுதான் என் கருத்து.

ஒடிஷாவில் தொழு நோயாளிகளுக்காக சேவை செய்த கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் பாதிரியார் மற்றும் அவரது இரண்டு மகன்களை எரித்துக் கொன்ற வழக்கின் இரண்டாம் குற்றவாளியும் குரங்குப் படையான பஜ்ரங் தள்ளின் மாநிலத் தலைவராக இருந்த பிரதாப் சந்திர சாரங்கி இப்போது "வெறும் நரேந்திரா" வின் மந்திரி. (இந்த கொலைகார மந்திரியைப் பற்றி முன்னர் " சைக்கிளில் மறைத்த ரத்தக் கறை" என்ற பதிவை இணைப்பின் வழியாக படியுங்கள்

வெடிகுண்டு சாமியார் பிரக்யா தாகூர் ஒரு எம்.பி.

இந்த பாரம்பரியத்தின் படி இந்த மிருகமும் எதிர்காலத்தில் மந்திரியாக்கி அழகு பார்க்கப்படுவான். 

No comments:

Post a Comment