Saturday, September 18, 2021

ஆளுனர் அவ்வளவு வொர்த்தில்லையாமே!

 


 கனவுகள், கற்பனைகளில் மிதக்கும் சங்கிகளின் லேட்டஸ்ட் கனவு தமிழகத்திற்கு புதிதாக வரப் போகிற ஆளுனர் ரவி.



பாஜக மாநிலத் தலைவர் ஒரு ஐ.பி,எஸ், ஆளுனர் ஒரு ஐ.பி,எஸ். எனவே ரெண்டு ஐ.பி.எஸ் களும் சேர்ந்து தமிழ்நாட்டு அரசை ஒரு கை பார்த்து அடக்கி ஒடுக்கி விடுவார்கள் என்று கனவுகளில் மிதக்கத் தொடங்கி விட்டனர்.

ஒட்டு மொத்த மீடியோவையும் ஆறு மாதத்தில் ஒடுக்கி விடுவேன் என்று சவால் விட்ட ஆட்டுக்காரர் இன்று ஒரே ஒரு வீடியோவால் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து கொண்டுள்ளார்.

 வரப்போகும் ஆட்டுத்தாடி இவர்கள் தம்பட்டம் அடிப்பது போல  நாகாலாந்தில் அப்படி  ஒன்றும் கிழிக்கவில்லை.  மேலும் டெல்லி போகும் போதெல்லாம்  சுக போக வாழ்வு நடத்த முந்தைய காலத்தில் ஒதுக்கப்பட்ட பங்களாவை காலி செய்யாமல் அதற்கு ஈடாக இரண்டு விதவை ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்திய புண்ணியவான் என்றும் தெரிகிறது.

 தங்கள் மனைவிகளிடம் அடி வாங்கும்  சகலைகளான ஆர்.சுந்தரராஜனும் வடிவேலுவும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வது போன்ற காட்சி ஒன்று வி.சேகர் படமொன்றில்  வரும்.

 அது போல ஆட்டுத்தாடியும் ஆட்டுக்காரரும் பரஸ்பரம் ஆறுதல் சொல்லும் காட்சியை வேண்டுமானால் சங்கிகள் கற்பனை செய்து கொள்ளட்டும். அதற்குத்தான் வாய்ப்பு உள்ளது.

பிகு: எழுதி ஒரு வாரம் ஆனது. இன்று ஆளுனர் பதவியேற்பதை முன்னிட்டு அவரை வரவேற்கவே இந்த பதிவு.

 

2 comments:

  1. உங்களுக்கு கற்பனை கொஞ்சம் அதிகம் தான். அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா. நடக்கும் சார். Wait and See

      Delete