Monday, May 18, 2020

சூட்கேஸுக்குள் பிணங்கள்

புலம் பெயர் தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படுபவர்கள் அவர்களின் சூட்கேஸ்களை தூக்கிக் கொண்டு நடங்கள் என்று ஆணவமாக பேசியுள்ள நிர்மலா அம்மையாருக்கு தமிழ் தெரியும் என்றால் மனுஷ்ய புத்திரனின் இந்த கவிதையும் புரியும்

வெ.மா.ரோ.சூ.சொ உள்ளவராக இருந்தால் இதற்கே அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

ஆனால் அதெல்லாம் இல்லாமல் இருப்பதுதானே பாஜக உறுப்பினராக முதல் தகுதி!!!

இப்போது கவிதையைப் பாருங்கள்



அரசாங்கம் சொன்னபடியே
ஊர் திரும்பும் அகதிக்கு உதவியாக
அவனது சூட்கேஸை எடுத்துக்கொண்டு நடந்தேன்
அப்படி ஒரு கனம் கனத்தது
என் கைகள் இற்றுப்போகும்படி
' அப்படி என்ன இருக்கிறது இதில்?'
என்றேன் அகதியிடம் மூச்சு வாங்கியபடி
'இதற்குள் பிணங்கள் இருக்கின்றன
செத்துப்போன அரசாட்சியின் பிணம்
செத்துப்போன நீதியின் பிணம்
செத்துப்போன மனசாட்சியின் பிணம்'
என்றான் அகதி
வேக வேகமாக நடந்துகொண்டே

17.5.2020
இரவு 9.43
மனுஷ்ய புத்திரன்

No comments:

Post a Comment