Saturday, October 16, 2010

(வெறியேறிய) குரங்கின் கையில் பூமாலை- தமிழகம்?

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு  (இத்தனை நாளாக கலைஞர்  என்று
மரியாதையாகத்தான்  எழுதி வந்தேன். ஆனால் அவரது நடவடிக்கைகள் மூலம்
அந்த மரியாதையை அவர் அனைத்து தரப்பு மக்களிடமும் இழந்து வருகின்றார்.
நானும் மக்களில் ஒரு பகுதிதானே!)  பதட்டம்  வந்து விட்டது. இரும்புக்கரம்
வந்து விட்டது.

"தொழிலாளர் தோழன் நான்தான், பெரியார், அண்ணாவை
சந்திக்காவிட்டால் நானும் கம்யுனிஸ்டாக  இருந்திருப்பேன், மேதினத்திற்காக
விடுமுறை விட்டவன் நான்தான், மேதினப்பூங்கா அமைத்தவன் நான்தான்"
இதெல்லாம் அவர் வழக்கமாக பீற்றிக் கொள்வது. அவர் கம்யூனிஸ்டாக
மாறாமல் போனது ஒரு நல்ல விஷயம். அப்படியே இருந்திருந்தாலும் என்றோ
அவர் திருப்பூர் ஆசாமி போல ஓடிப் போயிருப்பார்.

பாக்ஸ்கான் தொழிற்சாலைப் பிரச்சினையிலும் சரி என்.எல்.சி ஒப்பந்த
ஊழியர் போராட்டத்திலும் சரி திமுகவின் தொ.மு.ச தனது கருங்காலி
குணாம்சத்தின்படியே  நடந்து கொண்டிருக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் ஆட்சிக்காலத்தில்  என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை விற்க முயற்சி நடந்தபோது  அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராடினார்கள். பங்குகளை   தொழிலாளிகளுக்கு விற்கலாம்  என ஆலோசனை வழங்கினார் கருணாநிதி.
 ஆனால் இந்த ஆலோசனையை   ஏற்கமுடியாது என்று   வெளிப்படையாகவே  என்.எல்.சி தொ.மு.ச அன்றைய தலைவர் ராஜ வன்னியன்   கூற  , போராட்டத்தில் தொ.மு.ச வும்     தொடர்ந்தது. அதன்   பின்தான்  அமைச்சரவை விலகல் என திமுக கூற  அப்பிரச்சனை   முடிவிற்கு வந்தது.
ஆனால் அடுத்து வந்த தொ.மு.ச தேர்தலில் ராஜ வன்னியன் தோற்றுப்
போவதை திமுக தலைமை உறுதி செய்தது. இது நெய்வேலி மக்கள்
அனைவரும் அறிந்த உண்மை.

 தொ.மு.ச வை ,அதன்  துரோகத்தை பாதுகாக்க  போராடிய   பாக்ஸ்கான் தொழிலாளர்களை, சி.ஐ.டி.யு வின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர்  தோழர்  அ.சவுந்தரராஜன்  உள்ளிட்ட தலைவர்களை  மீண்டும் மீண்டும்
கைது செய்கிறது பொய் வழக்கு  போடுகிறது.   இவரது தலையீட்டாலும்
தொமுச துரோக ஒப்பந்தம் செய்து கொண்டதாலும்தான்  நெய்வேலி
ஒப்பந்ந்த தொழிலாளர் போராட்டம் நீடிக்கிறது. ஆனால் இவரோ வழக்கம்
போல் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் போடுகிறார். (யாராவது   கருணாநிதியின்
கடிதங்கள் என்ற தலைப்பில்   முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்யலாம். புத்தகமாய்
வெளியிட்டால் கற்பனை  இலக்கியத்திற்கான  நோபல் பரிசு கிடைக்குமோ!
அத்தனை கடிதங்களின் எண்ணிக்கையை கூட்டிப்பார்த்தால் கின்னஸ் பரிசு கூட
கிடைக்கலாம்!)   இது என்ன இரட்டை வேடம்?

வயதாகி விட்டதாலோ, அல்லது குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவோ
குவித்து வைத்துள்ள கோடிகளை  எப்படி பாதுகாப்பது என்ற அச்சமோ அல்லது
தோல்வி பயமோ தமிழக முதல்வரை இன்று யாராவது போராட்டம் என்று
சொன்னாலே எரிச்சலூட்டுகிறது. தான் உருவாக்கி வருகின்ற மாயை கலைந்து
போகின்றதே என்று ஆத்திரம் வருகின்றது.  வார்த்தைகளில் காட்டி வந்த
கடுமை காவல்துறை  நடவடிக்கைகளிலும் இப்போது தெரிகின்றது.

வெறியேறிய குரங்கின் கைகளில் சிக்கிய பூமாலையாக தமிழகத்தின்
தொழிலாளர்கள் நிலை மாறி விட்டது.

No comments:

Post a Comment