Friday, July 16, 2010

கலைஞரே ஒரு கவிதை கேளுங்கள்

 மனு தர்மம் காக்கும் மனுநீதிச்சோழர் கலைஞரே, இந்த கவிதையை
கொஞ்சம் படியுங்கள். நூறாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட
இக்கவிதை உங்களின் அவைப்புலவர்கள் போல உங்களை துதி பாடி
எழுதப்பட்டதல்ல. ஆயினும் படியுங்களேன்.

வீழ்வோமாயினும் வெல்வோம்.

நூறாயிரம் தடவைகள் தடுமாறி இருக்கிறது,
தலைக்குப்புற விழுந்திருக்கிறது.
 சிராய்த்துக் கொண்டிருக்கிறது.
மீண்டும் எழுந்திருக்கிறது தொழிலாளர் இயக்கம்.
கழுத்து நெரிக்கப்பட்டிருக்கிறது!
மூச்சு திணறி உணர்விழுந்திருக்கிறது!
நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டு,
தாக்கப்பட்டிருக்கிறது அடியாட்களால்!
தடியடி பட்டிருக்கிறது காவல்துறையினரால்!
சுடப்பட்டிருக்கிறது இராணுவத்தால்!
அவதூறு போஜியப்பட்டிருக்கிறது பொதுமக்களால்!
மிரட்டப்பட்டிருக்கிறது மதகுருக்களால்!
திசைதிருப்பப் பட்டிருக்கிறது அரசியல்வாதிகளால்!
நிராகரிக்கப்பட்டிருக்கிறது ஒடுகாலிகளால்!
உதிரம் உறிஞ்சப் பட்டிருக்கிறது புல்லுருவிகளால்!
ஊடுருவப்பட்டிருக்கிறது உளவாளிகளால்!
காட்டிக்கொடுகப்பட்டிருக்கிறது துரோகிகளால்!
பாரம்பரியம் இழந்திருக்கிறது பச்சோந்திகளால்!
விலை பேசப்பட்டிருக்கிறது கோழைகளால்!
இததனையும் மீறி இவ்வளவும் தாண்டி 
இந்தப புவிக்கோளம் இதுநாள் வரை 
அறிந்தவற்றுள் எல்லாம் 
ஜீவனும் திறனுமுள்ள சக்தியாய்
காலங்களின் அடிமைத்தளையிலிருந்து 
பாட்டாளி வர்க்கத்தை விடுவிப்பதான - தனது
சரித்திரக் கடமையை நிறைவேற்றும்!
சூரியன் உதிக்கும் என்பது போல நிச்சயமாய்

அடங்கிப்போவதுதான் அமைதி என்று
புதிய சமூக நீதி படைத்துள்ள கலைஞரே!
பாட்டாளி வர்க்கம் உம்மை
ஒருநாளும் மன்னிக்காது.

1 comment:

  1. The Tamilnadu govt is confident on winning the next elections with the money swindled in spectrum. They do not want any one to raise not even a slight voice of dissent.

    ReplyDelete