Friday, December 26, 2014

களத்தில் ஒரு காதல் கல்யாணம்







வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த இந்த வருடமும் சென்று வந்தேன். எங்கள் சங்கத்தின் சார்பில் திருவாரூரில் நடைபெற்ற வெண்மணி சங்கம நிகழ்வில் இந்தாண்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.வெண்மணி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகிற உழைப்பாளி மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகமாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. வெண்மணி நினைவிடத்தில் இருந்து எங்கள் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாலையை அடைவது அவ்வளவு சிரமமாக இருந்தது. மானுட வெள்ளத்திலே நீந்திக் கொண்டுதான் வர வேண்டியிருந்தது.

வழக்கமாக கட்சி சார்பில் செய்யப்படும் நினைவஞ்சலிக் கூட்டத்தைத் தவிர நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் “சுய மரியாதை மாநாடு” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் தோழர் கலி.பூங்குன்றன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

அம்மாநாட்டில் ஒரு சிறப்பான சம்பவமும் நிகழ்ந்த்து.

சுதந்திர குமார் – சுகந்தி என்ற இரு தோழர்களின் சாதி மறுப்பு, காதல் திருமணம் அம்மேடையில் சுய மரியாதை முறைப்படி நடந்த்து. உறுதி மொழியேற்ற பின் கதராடைகளை மாற்றிக் கொண்டு திருமணம் நடந்த்து.

ஒரு போர்க்களத்தில் முக்கியமான ஒரு தினத்தில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மத்தியில் திருமணம். நல்லதொரு வாய்ப்பைப் பெற்ற அத்தம்பதியினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

1 comment:

  1. மணமக்களைப் போற்றுவோம்
    வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்

    ReplyDelete