Monday, December 15, 2014

வெறி பிடித்து அலையும் மோடியின் மோசடி மந்திரி

 http://d2yhexj5rb8c94.cloudfront.net/sites/default/files/styles/article_node_view/public/narendra%20modi%20and%20smriti%20irani%20-%20PTI_0.jpg

பட்டப்படிப்பு படித்ததாக பொய் சொன்ன மோடியின் கல்வி மந்திரி ஸ்ம்ர்தி இராணியம்மாவின் மற்றொரு கேவலமான நடவடிக்கை கிறிஸ்துமஸ் தினத்தன்று நவோதயா பள்ளிகளும் சி.பி,எஸ்.இ பள்ளிகளும் விடுமுறையை ரத்து செய்து விட்டு  நல்லாட்சி தினம் அனுசரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுட்டாங்க.

நாள் ஆக ஆக  மத வெறி பிடித்த பாஜக எனும் மிருகத்தின் பற்களும் கோர நகங்களும் வளர்ந்து கொண்டே போகிறது. ஒரு பெரும் கலவரத்திற்கான திட்டமிடலோடு  காய்களை நகர்த்தி வருகிறது. இந்தியாவிலிருந்து மற்ற மதத்தினரை வெளியேற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தை அமலாக்க அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது.

ஒரு புறம் சர்ச்சைகளை உருவாக்கிக்கொண்டு மறுபுறம் இன்னொரு வேலையும் செய்கிறது. 

சுஜாதாவின் வசந்த கால குற்றங்கள் என்ற கதையில் நகைக்கடையை திருட திட்டமிடும் ஒருவன் கள்ளச்சாவி தயார் செய்து ஒரு பெண்ணை அனுப்பி வைத்து விட்டு இவன் வேறு ஒரு இடத்தில் கண்ணாடியை உடைத்து தகராறு செய்து  லாக்கப்பில் பதுங்கிக் கொண்டு அலிபி உருவாக்குவான்.

அது போல சர்ச்சைகளை உருவாக்கி தேசம் அது பற்றி சூடாக பேசுகையில் வேறு பல பொருளாதார மோசடிகளை செய்கிற கிரிமினல் அரசாக மோடி அரசு செயல்படுகிறது என்பதை மறக்காதீர்கள்.

 

4 comments:

  1. தங்கள் கூற்று முற்றிலும் உண்மைதான்!

    ReplyDelete
  2. absolutely false information, still 25th is a national holiday

    ReplyDelete
  3. பல்டி அடிச்சுட்டு பேசற பேச்சைப் பாரு

    ReplyDelete
  4. சர்ச்சைகளை உருவாக்கி தேசம் அது பற்றி சூடாக பேசுகையில் வேறு பல பொருளாதார மோசடிகளை செய்கிற கிரிமினல் அரசாக மோடி அரசு செயல்படுகிறது ......Indirect agenda...

    Seshan/Dubai

    ReplyDelete