Monday, August 31, 2020

டிஸ்லைக்கை லைக்கும் தருணம்

 


ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் வார்த்தைகளை இரவல் வாங்கிக் கொள்கிறேன்.

I am beginning to like Dislike, 

பிடிக்கவில்லை என்பது இப்போது பிடிக்கிறது. 

புரியவில்லையா?

சமீபத்திய குரங்குக் குளியல் (அதாங்க மங்கி பாத்) நிகழ்வின் யூட்யூப் பகிர்விற்கு விருப்பக்குறி இட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து பதினான்காயிரம் என்றால் விருப்பமில்லை என்றவர்களின் எண்ணிக்கையோ ஏழு லட்சத்து எட்டாயிரத்தை கடந்து விட்டது.



இது சரிப்பட்டு வராது என்று புதிதாக ஒரு இணைப்பை பகிர்ந்தார்கள். அதிலும் இதே நிலைதான்.  



விருப்பக்குறி இட்டவர்களின் எண்ணிக்கை நாற்பத்தி ஆறாயிரம் என்றால் விருப்பமில்லை என்றவர்களின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து முப்பத்தி ஓராயிரத்தை கடந்து விட்டது.

அந்த குரங்குக் குளியலில் மோடி பேசியவற்றில் ஒரு முக்கியமான விஷயம் பற்றி எழுத வேண்டும். மாணவர்கள் ஏன் க்டுப்பானார்கள் என்பது அப்போது புரியும் . . .

நாளை மாலை எழுதுகிறேன்.

பிகு : இந்த பதிவிற்கும் மேலே உள்ள படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். "உள்ளத்தை அள்ளித் தா" படத்தைப் பார்த்தவர்கள் இந்த காட்சியை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். தொடர்பு புரியும். 

படம் பார்க்காதவர்கள் யூட்யூபில் இந்த படத்தைப் பாருங்கள். 2 மணி நேரம் ஆறு நிமிடத்திற்குப் பிறகு வரும் காட்சியைப் பாருங்கள். புரியும்




No comments:

Post a Comment