Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Saturday, November 29, 2025

மோடி அரசு - நேற்றைய உண்மையும் இன்றைய பொய்யும்

 


நேற்றைய ஆங்கில இந்துவின் முதல் பக்கத்தில் வெளியான செய்தி கீழே. 


பன்னாட்டு நிதி நிறுவனமான ஐ.எம்.எஃப், இந்தியாவின் கணக்கிடும் முறைகளுக்கும் புள்ளி விபரங்களை சேகரிக்கும் விபரங்களுக்கும்  'சி" தரம் அளித்துள்ளது. ஒட்டு மொத்த உற்பத்தி உட்பட பல்வேறு முக்கியமான அளவீடுகளை கணக்கிடுவதில் ஏராளமான குறைபாடுகள், தவறுகள், தில்லுமுல்லுகள் இருப்பதால்தான் இந்தியாவிற்கு "சி" தரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய முதல் பக்கத்து செய்தி நேற்றைய செய்தியுடன் தொடர்பானது. ஆமாம்.  இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் இரண்டாவது காலாண்டில் 8 % வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சொல்கிறது.


ஒட்டு மொத்த உற்பத்தியை கணக்கிடுவதில்  இந்தியா தில்லுமுல்லு செய்வதாக நேற்றைய செய்தி சொன்னது. ஒட்டு மொத்த உற்பத்தியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இன்றைய செய்தி சொல்கிறது.

மோடி அரசு எதைச் சொன்னாலும் அது டுபாக்கூர் செய்திதான். 

Sunday, November 16, 2025

விளம்பரம்னாலும் நியாயம் வேணாமாடா?


 இன்று காலையில் நாளிதழ் தாமதமாகத்தான் வந்தது. புதிதாக வெளியான திரைப்படத்தின் முதல் நாள், முதல் காட்சி பார்க்க கல்லூரி முதல்வர் கட் அடித்து விட்டு போனார் என்பது தலைப்புச்செய்தி.

இதெல்லாம் ஒரு தலைப்புச் செய்தியா என்று எரிச்சலுடன் பார்த்தால் முதல் பக்கத்தில் வந்தது ஒரு நூடுல்ஸின் விளம்பரம்  என்றும் எல்லா செய்திகளுமே கிறுக்குத்தனமான செய்திகளாகத்தான் இருந்தன.


மத்த செய்தியை எல்லாம் கூட ஏத்துக்கலாம். இந்தியாவோட ஒட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி) வரலாறு காணாத அளவு உயர்ந்தது என்ற செய்தியை மட்டும் என்னால் மன்னிக்கவே முடியவில்லை.

மோடியோட ஆட்சியில பொருளாதாரத்தின் எல்லா அளவுகோள்களிலும் வீழ்ச்சிதான் ஏற்பட்டுள்ளதே தவிர எந்நாளும் உயர்ந்ததில்லை. உயரப் போவதும் இல்லை.

விளம்பரம்னாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா?

Monday, December 23, 2024

பாப்கார்ன், பிரியாணி, ஆம்லெட் மற்றும் இன்சூரன்ஸ்

 


புதிதாக வரி போடுவதென்றால் நிர்மலா அம்மையாருக்கு ஒரே குஷி. குறைவாக இருந்த வரியை உயர்த்துவதிலும் கூட. அவருக்கு மூளை என்ற வஸ்து இருப்பது தெரிவதே இது போன்ற சந்தர்ப்பங்களில்தான்.

சாதா ஆம்லேட்டிற்கு ஒரு வரி, பெரெட் ஆம்லட்டிற்கு ஒரு வரி, தொட்டுக் கொள்ள ஸாஸ் கொடுத்தால் ஒரு வரி.

அதே போலத்தான் பாப்கார்னிற்கும் பிரியாணிக்கும் . . .

வெங்காயமே சாப்பிடாத அம்மையாருக்கு ஆம்லெட்டைப் பற்றியோ பிரியாணியைப் பற்றி என்ன தெரியப் போகிறது!  வீட்டில் தயாரித்து சாப்பிடுங்கள் என்ற இலவச உபதேசம்  வேண்டுமானால் செய்வார்!

வரிகளை உயர்த்துவதில் காண்பிக்கிற வேகத்தை குறைப்பதில் மட்டும் காண்பிப்பதில்லை.

ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியம் மற்றும் மற்றும் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரிமியத்தின் மீதான ஜி.எஸ்.டி அகற்றப்பட வேண்டும் என்ற குரல் இப்போது வலிமையாக கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் சங்கத்தின் சார்பில் 400 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தோம். அவர்களும் நிதியமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பினார்.

மோடியின் மந்திரி நிதின் கட்காரியும் கடிதம் எழுதினார். பலரும் மக்களவை, மாநிலங்களவையில் இப்பிரச்சினையை எழுப்பினார்கள். இந்தியா கூட்டணி எம்.பி க்கள் நாடாளுமன்றத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இத்தனைக்கும் பிறகே இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜி.எஸ்.டி பிரச்சினை ஜி.எஸ்.டி கவுன்டிலில் இப்பிரச்சினை முன்வைக்கப்பட்டது. அது பற்றி ஆராய கமிட்டியெல்லாம் போடப்பட்டது.

ஆனால் இன்ற வரை முடிவெடுக்கப்படவில்லை. ஆயு, மறு ஆய்வு, மேலும் ஆய்வு என்று நடந்து கொண்டிருக்கிறது.

மக்களிடமிருந்து பிடுங்குவதில் இருக்கும் வேகமும் ஆர்வமும் கொடுப்பதற்கு மட்டும் அம்மையாருக்கு இருப்பதே இல்லை.

மக்கள் என்ன அதானியா இல்லை அம்பானியா?

 

Monday, December 2, 2024

கோயில், மசூதி, பின்னே . . .

ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களிடமிருந்து சுட்ட படமும் பதிவும். (இரண்டு தனியான பதிவுகள்தான், ஆனால் ஜி.டி.பி வளர்ச்சிக்கும் இது பொருந்துகிறது.)

 


வாட்ஸாப்பில் வந்தது

1.மசூதிக்குக் கீழே கோயில் இருக்கிறது
2.கோயிலுக்குக் கீழே புத்த விகார் இருக்கிறது
3.புத்த விகாருக்குக் கீழே சமணப் பள்ளி இருக்கிறது
4.சமணப் பள்ளிக்குக் கீழே இருக்கிறது இந்தியாவின் ஜி.டி.பி ( பொருளாதார வளர்ச்சி)

Tuesday, May 7, 2024

சீன அடிமை யார்?

 


சில தினங்கள் முன்பாக இந்து ஆங்கில நாளிதழில் பார்த்த செய்தி கீழே உள்ளது.

 


கடந்த 15 வருடங்களில் சீனாவிலிருந்து செய்ய்ப்படும் இறக்குமதி 2.3 மடங்கு அதிகமாகி உள்ளது. அதிலும் கடந்த ஐந்து வருடங்களில் மிகவும் அதிகமான அளவில் இறக்குமதி நடந்துள்ளது.

 2018-19 ல் ஐந்து லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐநூறு கோடி ரூபாயாக இருந்த இறக்குமதி 2023-24 ல் எட்டு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்தி முன்னூற்றி ஐம்பது கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 இறக்குமதிக்கு ஏற்றார்போல சீனாவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதா?

 சாரி.

 அது ஐந்து வருடங்களாக ஒரு லட்சத்து முப்பத்தி மூன்றாயிரத்து அறுநூறு கோடியாக மாற்றமின்றி தேக்க நிலையில் உள்ளது.

 மின்னணு பொருட்கள் மட்டும்தான் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம் என்று நினைக்க வேண்டாம். சகலத்தையும் அங்கிருந்து இறக்குமதி செய்கிறோம்.

 அந்த விபரங்களும் இங்கே இருக்கிறது.

 இந்தியா இறக்குமதி செய்வதில் சீனாவின் பங்கு எவ்வளவு?

 மின்னணுப் பொருட்கள் (ELECTRONICS)     43.9 %

இயந்திரங்கள்                                                   39.7%

ஆடைகள், துணிகள்,                                       38.2%

ரசாயனங்கள்                                                      26.8%

மோட்டார் வாகனங்கள்                                  26 %

 ஆக இந்திய முதலாளிகளுக்கு சீனப் பொருட்கள் தேவையாக இருக்கிறது. இந்திய முதலாளிகள் இறக்குமதி செய்ய இந்திய அரசு உதவுகிறது. இறக்குமதியை குறைக்கவோ கட்டுப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதனால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் கூட.

 சீனப் பொருட்களை இந்திய சந்தைக்கு திறந்து விட்ட மகானுபாவன் வாஜ்பாய். அது மோடி காலத்தில் விஸ்வரூபமெடுத்துள்ளது.

 இந்திய முதலாளிகளின் லாபத்தை பாதுகாக்க, இந்திய அரசு அரசியல்ரீதியாகக் கூட சீனாவை எதிர்ப்பதில்லை. அருணாச்சலப் பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு செய்தால் கூட 56 இஞ்ச் மார்பு கொண்ட மோடி சீனா என்று உச்சரிக்கக்கூட நடுங்குகிறார்.

 இந்த லட்சணத்தில்

 சமூக வலைத்தளங்களில் குறிப்பாக மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் மோடி ஆட்சி பற்றி ஏதாவது பின்னூட்டம் போட்டால் உடனடியாக என்னை சீன அடிமை என்று வசை பாடுவார்கள். அப்போது நமக்கு ஆதரவாக அங்கே இருக்கிற “நல்லவர்கள் என்று நாம் நம்பியவர்கள்” யாரும்  வர மாட்டார்கள். சங்கிகள் என்றல்ல, யார் நம்மை தாக்கினாலும் யாரும் வர மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். யார் வீட்டு எழவோ என்று ஒதுங்கிப் போவார்கள், சொல்லப்போனால் சிலர் மனதில் மகிழ்ச்சி கூட அடைவார்கள். அதனால்தான் “யாரை நம்பி நான் பிறந்தேன்” என்று மன நிலையில் என் போரை நானே நடத்துவது என்று முடிவெடுத்து விட்டேன்..

 

Tuesday, April 9, 2024

அமெரிக்க வழியில் இந்தியா சரிகிறது . . .

 


2010 களில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார நெருக்கடி, அது பின்னர் உருவாக்கிய உலகப் பொருளாதார நெருக்கடி எல்லாம் நினைவில் உள்ளதா? தகுதிக்கு மீறி கடன் கொடுத்ததால் திவாலாகிப் போன அமெரிக்க வங்கிகள், யாரும் குடியேறாத வீடுகள் இவை எல்லாம் நினைவில் உள்ளதா? வாராக்கடன்களையே பத்திரமாக்கி ஊக வணிகத்தில் உலவ விட்டு நாசமாகிப் போனதெல்லாம் நினைவில் உள்ளதா? பெயில் அவுட் என்ற பெயரில் பாரக் ஒபாமா, அமெரிக்க கஜானாவை திறந்து விட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாத்ததும் நினைவில் உள்ளதா?

நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தியாவும் அதே வழியில் செல்கிறது. ஆங்கில இந்து நாளிதழின் தலைப்புச் செய்தி கொடுக்கும் அதிர்ச்சிச் செய்தி இது.

இந்தியாவின் வீட்டுச் சேமிப்புக்கள்(DOMESTIC SAVINGS) ஒட்டு மொத்த உற்பத்தியில் 5 % மட்டுமே என்ற அளவில் சுருங்கியுள்ள போது, வீட்டுக் கடன் கள் (DOMESTIC DEBTS) என்பதோ ஒட்டு மொத்த உற்பத்தியில் 40 % ஆக இருக்கிறது.

சேமிப்பு குறைவதும் கடன் அதிகரிப்பதும் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது அல்ல.

வீட்டு வசதிக் கடன் வாங்குவதால்தான் இந்நிலை என்று அரசு சால்ஜாப்பு சொல்கிறது. திருப்பி செலுத்தும் சக்தியை உரிய முறையில் ஆய்வு செய்து கடன் கொடுக்கப்படுகிறதா அல்லது கடன் கொடுக்கும் இலக்கை பூர்த்தி செய்வதற்காக கடன் கொடுக்கப்படுகிறதா?

வங்கிகளின் இலக்கு இப்போது டெபாசிட் சேகரிப்பது என்பதிலிருந்து கடன் கொடுப்பது என்று மாறி விட்டது. 

ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக்கடன் அதிகமாகிக் கொண்டேவுள்ள சூழலில் சாமானிய மக்கள் வாங்கிய கடனும் வாராக்கடனாக மாறினால் என்ன ஆகும்?

முந்தைய பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காத காரணம் பொதுத்துறை வங்கிகள். இன்று அவற்றை மோடி பலவீனமாக்கி விட்டார். நுகர்வுக் கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது. வரி விதிப்பு முறைகளில் செய்யப்படும் மாற்றம் சேமிப்பை பின்னுக்குத் தள்ளுகிறது.

மோடி ஆட்சி தொடர்ந்தால் நிலைமை கேவலமாகும். செல்லா நோட்டு, ஜி.எஸ்.டி, கொரோனா கால அவலங்களை விட இன்னும் மோசமாகும்.

எனவே நிராகரிப்பீர் மோடியை.

அதுவும் இன்று சென்னை வருகிறாராம்.

அதனால் #GoBackModi

Saturday, August 5, 2023

இறக்குமதித் தடை யாருக்காக டிமோ?

 


நேற்று காலை பார்த்த செய்தி.

லேப்டாப் கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்ய பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அந்த விதிகள் உருவாகும் வரை இறக்குமதி த்டை செய்யப்படும் என்பதுதான் அச்செய்தி.

அப்படியொன்றும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிராக செயல்படுகிற ஆள் டிமோ கிடையாதே என்று யோசனை வந்தது.

பிறகுதான் தெரிந்தது.

அம்பானி “ஜியோபுக்” என்ற பெயரில் லேப்டாப் கம்ப்யூட்டர்களை உருவாக்கி விற்பனைக்கு வந்து விட்டது.

அம்பானிக்காக பன்னாட்டுக் கம்பெனிகளைக் கூட முறைத்துக் கொள்ளலாம்.

நண்பேன்டா . . .

 

பிகு: இன்னும் ஒரு நண்பேன்டா சம்பவம் மாலை . . .

Thursday, July 6, 2023

இதுவாய்யா உங்க சாதனை???

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.  அமெரிக்கா போய் டிமோ சாதித்தார் என்று எவனாவது கதைத்தால் அவனை இதை படிக்கச் சொல்லவும். 



 சிப்(chip) வாங்க போறேன்; சிப் வாங்க போறேன்; நான் ரொம்ப புத்திசாலி டா!

ஒரு கம்பெனி ஆரம்பிக்கிறாங்க. அந்த கம்பெனியில மொத்த முதலீடு 22 , 765 கோடி .இதில் 50 சதவீதத்தை அதாவது 11,382 கோடியை ஒன்றிய அரசாங்கம் முதலீடு செய்கிறது. அடுத்து 20% குஜராத் மாநில அரசாங்கம் முதலீடு செய்கிறது .அது 4,553 கோடி ரூபாய் மீதி உள்ள 30 சதவீதத்தை அதாவது 6,830 கோடியை மைக்ரான் என்கிற அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்கிறது.

அப்படியானால் இந்த மைக்ரான் நிறுவனம் உருவாக்குகிற புதிய நிறுவனம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்வி எழும் .

50 சதவீதம் கொடுத்த ஒன்றிய அரசுக்கும் சொந்தமில்லை!
20% கொடுத்த குஜராத் அரசுக்கும் சொந்தமில்லை!
50% ,30%, 20% என்று கொடுத்தவர்களுக்கு சமமான பங்கு அல்லது கூட்டு உரிமை என்பதும் கிடையாது .

மாறாக 30 சதவீதத்தை மட்டும் முதலீடு செய்த அமெரிக்க கம்பெனி ஆன மைக்ரான் நிறுவனத்துக்கு தான் இந்த ஒட்டுமொத்த தொழிற்சாலையும் சொந்தம்.

சரி அப்படி என்ன இந்த தொழிற்சாலை அவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது?

இது சிப்ஸ் தயாரிக்கிற தொழிற்சாலை அல்ல. மாறாக வேறு நாடுகளில் தயாரிக்கிற சிப்பை இங்கு கொண்டு வந்து அசெம்பிள் செய்வது அதேபோல அதை டெஸ்ட் செய்வது ரெண்டு வேலை தான் நடக்கும் .

அதற்கான இந்த தொழிற்சாலைக்கு 70 சதவீதம் இந்திய மக்களின் வரிப்பணத்தை கொடுத்து அமெரிக்க நிறுவனத்தின் கையில் தூக்கிக் கொடுத்திருக்கிறது மோடி அரசாங்கம்.

இதைத்தான் மோடி ஆதரவாளர்கள் மோடி அமெரிக்காவுக்கு போனார் ஆகாயத்தை வளைத்தார் இந்தியாவுக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கப்போகிறது என்று கொண்டாடி வருகிறார்கள்.

மிக கேவலமானவர்கள் இவர்கள் ஒரு தோல்வியை கூட அல்லது ஒரு மிகப்பெரிய அளவிற்கு இந்தியாவின் நலனை விட்டுக் கொடுத்த ஒன்றைக் கூட அது இந்தியாவிற்கு அற்புதம் ஆகா ஓகோ என்று புகழ்வதில் இவர்களுக்கு இணை இவர்கள் தான்.

இதில் மற்றொரு விஷயம் முதலாளித்துவம் அது எப்போதுமே ஏதோ தனிப்பட்டவர்கள் கொண்டுவந்து இங்கு சாதித்து விட்டதாக கொட்டி விட்டதாக அளந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் தனியார் துறையில் துவக்கப்படுகிற ஒவ்வொரு தொழிற்சாலையும் இப்படித்தான் பொதுப்பணத்தில் துவக்கப்படுகிறது.

ஆனால் 70% என்பது இதுவரை நாம் காணாதது மோடி இன்னும் சில காலம் நீடித்தால் 100% நம்முடைய வரிப்பணத்தை தூக்கி கொடுத்துவிட்டு மிகச் சாதாரணமாக அந்த உரிமையும் வருகிற அதானி, அம்பானிக்கு, மைக்ரானுக்கு, ஆப்பிளுக்கு கொடுத்துவிட்டு அதையே தங்கள் சாதனை என்று கொண்டாடுவார்கள்.

ஆனால் மற்றொரு பக்கம் இந்தியாவில் தனியாரிடம் கொடுக்கப் போகிற 34 ரூபாய் ஒரு கிலோ அரிசி என்பதை மாநில அரசாங்கங்களுக்கு அதே விலையில் கொடு என்று கேட்டால் மோடியும் சங்பரிவாரம் நாங்கள் வியாபாரிகளுக்கு 34 ரூபாயில் கொடுத்து விடுகிறோம் உங்களுக்கு தேவை என்றால் அவர்களிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.

இவர்கள் தேசபக்தியை பற்றி பேசலாமா?

Tuesday, July 4, 2023

கண்ணா லட்டு தின்ன ஆசையா?

 தீக்கதிர் நாளிதழின் முன்னாள் பொறுப்பாசிரியர் தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களின் சுவாரஸ்யமான முகநூல் பதிவு.




கண்ணா லட்டு திண்ண ஆசையா ?

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை கொண்டாட பள்ளி தாளாளர் 1000 லட்டுகள் வாங்குவார். மாணவர்கள் 500 பேர். ஆளுக்கு ஒன்று வழங்குவார். மீதி ஐநூறை தாளாளரும் பள்ளி தலைமை ஆசிரியரும் பங்கு போட்டுக் கொள்வார்கள்.
இந்த அநீதியை ஒருவர் உரக்கப் பேசினார். அவர் கைக்கு பள்ளி நிர்வாகம் போனது.
இந்த ஆண்டு 3000 லட்டுகள் வாங்கினார்.
இரட்டிப்பு சந்தோஷம் மாணவர்களுக்கு. வழக்கமாக ஒரு லட்டு கிடைக்கும் . இந்த ஆண்டு இரண்டு லட்டாவது கிடைக்கும் என மாணவர்கள் உற்சாகமானார்கள்.
ஆனால் மாணவர்களுக்கு ஆளுக்கு அரை லட்டுதான் வழங்கப்பட்டது.
வழக்கம் போல் தாளாளரும் தலைமை ஆசிரியரும் தலா 250 எடுத்துக் கொண்டனர்.
விழாவுக்கு வந்த மூன்று விருந்தாளிகளுக்கு தலா 750 லட்டுகளை பொட்டலம் கட்டிக் கொடுத்தார்.
மாணவர்களுக்கு சராசரி ஆளுக்கு நான்கு லட்டு என தலைமை ஆசிரியர் ஆண்டறிக்கையில் வாசித்தார்.
எங்களுக்கு கிடைக்கவில்லையே ..
விடை தப்பு என்றான் ஒரு மாணவன்.
அவனுக்கு வேத கணிதம் விளங்க வில்லை என பெயிலாக்கப்பட்டான்.
சராசரி தனிநபர் வருமானம் மூன்று மடங்கு உயர்ந்திருப்பதாக நிதி அமைச்சர் கர்மலா தெரிவித்தாக தொலைகாட்சியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தனர்.
அரை லட்டை ஆயுள் முழுவதுமாக சாப்பிடுவது எப்படி ? யோகா தியான வகுப்புகளில் சொல்லித்தரப்படுமென செய்தியைத் தொடர்ந்து விளம்பரம் ஒளிபரப்பானது.
அந்த மாணவர்களில் இருபது பேர் முஸ்லீம்களாகவும் கிறுத்தவர்களாகவும் இருப்பதால்தான் இந்து மாணவர்களுக்கு அரை லட்டு என்றானது. எனவே அவர்களை பள்ளியை விட்டு துரத்த வேண்டுமென மாணவர்களிடையே செய்தி காட்டுத் தீயாய் பரவ கலவரம் வெடித்தது.
இந்து மாணவர் லட்டைப் பிடுங்கிய சிறுபான்மையோர் குறித்து ஊடகங்கள் 24x7 விவாதம் செய்தன.
அடுத்த ஆண்டு எட்டாயிரம் லட்டு இலக்கென தாளாளர் டிமோ அறிவித்தார்.
இனி ஐநூறு மாணவர்களுக்கும் ஆளுக்கு கால் லட்டு உறுதியென கோணக்கியா ஊடகம் உறுதிபட மகிழ்ச்சியுடன் தெரிவித்தது.
( இது முழுக்க முழுக்க தெனாலி ராமன் சொன்ன கதை. சத்தியமாக நாட்டு நடப்பல்ல )
சுபொஅ.
4 ஜூலை 2023.
All reactions:
You, Venpura Saravanan, Shethu Sivan and 55 others

Tuesday, May 23, 2023

டிஜிட்டலைஸேஷன் பவுசு இவ்வளவுதான் . . .

 


இந்தியாவின் முக்கியமான பொருளாதார நிபுணரான தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்களின் முகநூல் பதிவு கீழே உள்ளது.  இதைப் படிக்கும் போது இன்னொரு கேள்வி மனதில் வந்தது. அது என்ன கேள்வி என்று கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்ப்போம்.


 
"On Friday, the RBI has said the total value of these banknotes in circulation has declined from Rs 6.73 lakh crore at its peak as on March 31, 2018 (37.3 per cent of Notes in Circulation) to Rs 3.62 lakh crore constituting only 10.8 per cent of Notes in Circulation on March 31, 2023." (இந்தியன் எக்ஸ்பிரஸ், மே 22, 2023)

 

மேலே உள்ள செய்தி கூறுவது இது தான்

 

1. 2018 மார்ச் 31 இல் புழக்கத்தில் இருந்த 2000 ரூ நோட்டு களின் மொத்த மதிப்பு  ரூ 6.73  லட்சம் கோடி. இது அப்பொழுது புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தின் மதிப்பில் 37.3 %. அப்படியானால், 2018 மார்ச் 31 இல் மொத்த பணப்புழக்கம் ரூ 6.73 x 100 / 37.3 = 17.96 லட்சம் கோடி ரூபாய்.

 

2.  2023 மார்ச் 31 அன்று புழக்கத்தில் இருந்த 2000 ரூ நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ 3.62 லட்சம் கோடி. இது அன்றைய மொத்த பண புழக்கத்தில் 10.3 %. அப்படியானால் அந்த தேதியில் மொத்த பண புழக்கம் ரூ 3.62 x 100 /10.8 = 33.5 லட்சம் கோடி ரூபாய்

 

3. அதாவது, 2018-2023 ஆகிய ஐந்து  ஆண்டுகளில்  பணப்புழக்கம் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக ஆகியுள்ளது

 

ஆக, " எங்கள் ஆட்சியில் பொருளாதார பரிவர்த்தனைகள் அனைத்தும் அசுர வேகத்தில் டிஜிட்டல் மயமாகி வருகிறது, இனி ரூபாய் நோட்டுக்களே தேவை இல்லாமல் ஆகிவிடும்" என்ற சங்கி பிரச்சாரம் எவ்வளவு அபத்தமானது என்பதை இங்கே காணலாம்!