Wednesday, May 31, 2023

முட்டாப்பசங்க! முட்டாப்பசங்க!!!

 



 

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு பதிவு பார்த்தேன்.

 

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் ஒரு மண் மேட்டை அந்த ஊர் மக்கள் எச்சில் துப்பியும் செருப்பால் அடித்தும் சிறுநீர் கழித்தும் அசிங்கப் படுத்துகின்றனர். அது முகமது கோரியால் கொல்லப்பட்ட இந்து மன்னன் பிரித்விராஜ் சௌஹானின் சடலம் புதைக்கப்பட்ட இடம் என்றும் இன்னும் ஏன் பிரித்வி மீது ஆப்கான் மக்கள் கோபமாக உள்ளார்கள் எம்று சொன்ன அந்த பதிவு அதற்கு ஒரு காரணத்தையும் சொல்கிறது.

 

பிரிதிவியின் மாமனார் ஜெயச்சந்திரன் துணையோடு பிரித்வியை வென்ற முகமது கோரி பிரித்வியின் இரண்டு கண்களை நோண்டி காந்தஹார் கூட்டிச் செல்ல, கண்கள் தெரியாவிட்டாலும்  ஒலியைக் கொண்டு குறி பார்த்து அம்பு விடும் திறமை பிரித்விக்கு உண்டு  என்று அவன் நண்பர்கள் சொல்ல அதை கோரியும் பரிசோதித்து வியந்து சபாஷ் என்று பாராட்ட குரல் வந்த திசையிவ் பிரித்வி அம்பு விட கோவ்ரி காலி

 

இதிலென்ன தவறு என்று நீங்கள் நினைக்கலாம்.

 

இந்த வரலாறே டுபாக்கூர் என்பதற்கு ஒரு காரணம் போதும்.

 

பிரித்விராஜ்  இறந்தது  1192 ம் வருடம்.

 

முகமது கோரி இறந்த வருடம்  1206,

 

1206 ல் செத்துப்போன முகமது கோரியை 1192 ல் இறந்த பிரித்வி  எப்படி   அம்பு விட்டு கொன்றிருக்க முடியும்.

 

படிங்கடா, படிங்கடா முட்டாப்பசங்களா படிங்கடா என்று பவாரியா கும்பலின் மாமன் கொள்ளைக் கூட்டததிடம் சொல்வது போல சங்கிக்கூட்டத்திடமும் சொல்ல வேண்டும்.

 

ஆமாம்.

 

இவர்களும் கொள்ளைக் கூட்டத்தினர்தான்.

 

படிக்காத முட்டாப்பசங்கதான் . . .        

 

என்னமா புளுகறானுங்க!

 


"மத்யமர்  ஆட்டுக்காரன்" குழுவில் நான் இருப்பதே அங்கே சங்கிகள் அடித்து விடும் கட்டுக்கதைகளை அறிவதற்கே.

இங்கே ஒரு சங்கியின் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டும் அந்த பதிவுக்கு ஆதாரமாக கொடுத்துள்ள கல்வெட்டும்.





15, ஆகஸ்ட், 1947 அன்றே பதியப்பட்ட கல்வெட்டு என்று அவர் சாதிக்கிறார். கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்ட சீர்திருத்த தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ள நேரு, ஆதீனம் படங்களும் கம்ப்யூட்டர் டிசைன் என்பதையும் சமீபத்தில் கிரானைட் கல்லில் தயார் செய்யப்பட்டது என்பதைக் காண்பிக்கிறது. சமீபத்திய இடைச்செருகல் என்று தெளிவாக தெரிகிறது.

மேலும் மவுண்ட்பேட்டனிடம் கொடுத்ததாக சொல்லப்படுவது பொய் என்பதை தகர்க்க எந்த ஒரு வாசகமோ இந்த கல்வெட்டில் இல்லை. 

ஆனாலும் கூசாமல் புளுகிக் கொண்டே இருக்கிறார்.

பங்குனி உத்திர கோயில் குள விபத்தில் ஐவர் இறந்த போது, "அவர்கள் இறந்தது புண்ணியம்" என்று பதிவு போட்ட ஆசாமிதான் இந்தாள். அதை அந்தாளின் ஒவ்வொரு பதிவிலும் குத்திக் காட்டினாலும் துடைத்து விட்டு பொய்களை பரப்பிக் கொண்டிருக்கிறான். அதை நம்பவும் ஆட்கள் இருக்கிறார்கள். 

எல்லா சங்கிகளும் தாங்கள் அசிங்கப்படுவது பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் பொய்ப்பிரச்சாரத்தை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.  அதை நம்பும் மூடர்களின் எண்ணிக்கை அதிகம்.

இதை எப்படி சமாளிக்கப் போகிறோம்?

ஜனநாயக சக்திகள் முன் இக்கேள்வியை வைக்கிறேன்.

எப்படி? 

Tuesday, May 30, 2023

நீதி மறுக்கப்பட்ட பொக்கிஷங்கள்

 

பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் மொழி பெயர்ப்பில் நீதி மறுக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளின் சார்பாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக்கின் அறிக்கை. 



முன்குறிப்பு: பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்காமல் பாதிக்கப்பட்டவர்களையே ஒடுக்குகிறது இந்த பாஜக அரசு. அதனைக் கண்டித்து மல்யுத்த வீராங்கனைகள் வெளியிட்ட அறிக்கையின் 'மொழிபெயர்ப்பு' இது. இதனை ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக பதக்கம் வென்ற சாக்‌ஷி வெளியிட்டிருக்கிறார்.

"மே 28 ஆம் தேதியன்று என்ன நடந்தது என்பதைப் பார்த்திருப்பீர்கள். காவல்துறை எங்களை நடத்திய விதத்தையும் கொடூரமாகக் கைது செய்ததையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து அமைதியாகத்தான் நாங்கள் போராடிக்கொண்டிருந்தோம். எங்கள் போராட்டத்தை ஒடுக்கியதோடு நாங்கள் போராடிய இடத்தையும் நாசமாக்கிவிட்டு, எங்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியும்விட்டனர். மறுநாளே மிகக்கடுமையான வழக்குகளையெல்லாம் எங்களுக்கு எதிராகப் பதிவு செய்தார்கள்.

தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளை எதிர்த்து பெண்கள் போராடுவது அவ்வளவு பெரிய குற்றமா என்ன?

காவல்துறையும் இந்த அமைப்புமுறையும் எங்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துகிறார்கள். ஆனால் எங்களுக்குக் கொடுமைகள் இழைத்த குற்றவாளியோ சுதந்திரமாக பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு மேடையேறி எங்களைக் கேலிசெய்து பேசிக்கொண்டிருக்கிறார். போஸ்கோ சட்டத்தையே திருத்தவேண்டும் என்றெல்லாம் அவர் பொதுவெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்.

எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியாத அளவிற்கு எங்களுடைய மனது பாதிக்கப்பட்டிருக்கிறது. மல்யுத்த வீராங்கனைகளாகிய எங்களுக்கு இந்த தேசத்தில் எந்த உரிமையுமே இல்லையா? ஒலிம்பிக்கிலும் உலக சாம்பியம் போட்டிகளிலும் நாங்கள் பதக்கங்கள் பெற்ற தருணங்களை எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறோம்.

நாங்கள் ஏன் இப்போது வாழ்கிறோம் என்று யோசிக்கிற நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இந்தளவுக்கு மோசமான நிலைக்கு இந்த அமைப்புமுறை எங்களை இழுத்துக்கொண்டுவந்து போட்டிருக்கிறதே. அதனைப் பார்க்கவா வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்களைக் குற்றவாளியைப்போல வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். நேற்று முழுவதும் பெரும்பாலான மல்யுத்த வீராங்கனைகள் எங்கெங்கோ மறைந்து ஒளிய வேண்டியிருந்தது. ஆனால் எங்களை இந்த நிலைமைக்குத் தள்ளிய உண்மையான குற்றவாளியோ எங்களைக் கேலிசெய்தும், பாதிக்கப்பட்ட பெண்களின்மீதே குற்றம் சுமத்தியும் நிம்மதியாக வலம்வந்துகொண்டிருக்கிறார். எங்களுடைய போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார்.

எங்களுடைய கழுத்துகளை அலங்கரித்த இந்த பதக்கங்களுக்கெல்லாம் எந்தப் பொருளும் பலனும் இல்லையென்பதுபோலத்தான் இப்போது எங்களுக்குத் தோன்றுகிறது. எங்களுடைய சுயமரியாதையை அடகுவைத்து இந்த பதக்கங்களையெல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்வது? அதனால் அவற்றை திரும்பக் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்.

ஆனால் அவற்றை யாரிடம் திரும்பக் கொடுப்பது?

நம்முடைய ஜனாதிபதியிடமா? சக பெண்ணாக இருந்தும், எங்களுடைய போராட்டம் நடக்கிற இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு எதுவும் செய்யாமல் இருந்த அவரிடம் கொடுப்பது வீண் வேலைதானே.

சரி, அப்படியென்றால் பெண்களை இந்த தேசத்தின் மகள்களென்று அழைக்கும் பிரதமரிடம் பதக்கங்களைத் திருப்பிக் கொடுக்கலாமா?

அதற்கு எங்களுடைய மனசு ஒப்புக்கொள்ளவில்லை. மகள்கள் என்று வார்த்தைகளால் சொன்னாரே தவிர, இத்தனை நாட்களாக நாங்கள் நடத்தும் போராட்டங்களை என்னவென்றுகூட அவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால், புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவிற்கு எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரையே விருந்தாளியாக அழைத்து அழுக்கு நிறைந்த அந்த மனிதரோடு வெள்ளை ஆடையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார். ‘இந்த அமைப்புமுறையே எங்களுடையதுதான். உன்னால் என்ன செய்யமுடியும்’ என்று எங்களைப் பார்த்து கேலிசெய்வதாகத்தான் இது இருக்கிறது.

ஒளிரும் இந்தியாவாக பிரச்சாரம் சொல்லப்படும் இந்த தேசத்தில் எங்களுக்கான இடம் எங்கே?
இந்தியாவின் மகள்களென்று அழைக்கப்படும் நாங்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லையா?
போலி முழக்கங்களாகவும் அரசியல் அதிகாரத்தைப் பிடிப்பதற்கான வாய்வார்த்தைகளாகவும் மட்டுமேதான் எங்களைப் பயன்படுத்திக்கொள்கிறீர்களா?

இந்தப் பதக்கங்களெல்லாம் எங்களுக்கு இனியும் தேவையில்லை. எங்களை முகமூடி போல அணிந்துகொண்டு, வெறுமனே பிரச்சாரக் கருவிகளாக மட்டுமே பயன்படுத்தி, எங்களை முழுவதுமாக சுரண்டிக்கொண்டிருக்கிறீர்கள். அந்த சுரண்டலுக்கு எதிராகக் குரல் எழுப்பினாலோ, எங்களை சிறையில் அடைக்கத் தயாராகுகிறீர்கள்.

இந்தப் பதக்கங்களையெல்லாம் கங்கை ஆற்றில் வீசப்போகிறோம். கங்கை ஆறுதான் எங்கள் அன்னை. கங்கையை எந்தளவுக்குப் புனிதமாக நாம் கருதுகிறோமோ, கடினமாக உழைத்துப் பெற்ற எங்கள் பதக்கங்களையும் அதே போலத்தான் கருதுகிறோம். எங்களுக்கு மட்டுமல்லாமல், இந்த பதக்கங்களெல்லாம் ஒட்டுமொத்த தேசத்திற்குமே புனிதமானவைதான். அதனால் குற்றவாளியுடன் கைகோர்த்து நின்று எங்களை முகமூடியாகப் பயன்படுத்தும் இந்த அரசிடம் திருப்பிக் கொடுப்பதற்கு பதிலாக, புனித கங்கை அன்னையிடமே எங்களுடைய பதக்கங்களை ஒப்படைப்பதுதான் சரியென்று நினைக்கிறோம்.

இந்தப் பதக்கங்கள்தான் மல்யுத்த வீராங்கனைகளாகிய எங்களுடைய வாழ்க்கையும் உயிரும். கங்கையில் அவற்றை வீசிவிட்டு, அதன்பின்னர் வாழ்ந்தென்ன பயன்? அதனால் கங்கையில் வீசியபின்னர், இந்த தேசத்திற்காக உயிரைவிட்ட தியாகிகளின் நினைவாக எழுப்பப்பட்டிருக்கும் இந்தியா கேட் அருகே சாகும் வரையிலான உண்ணாவிரதத்தைத் துவங்கப்போகிறோம். சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும்போது, இந்தியா கேட்டில் இடம்பெற்றிருக்கும் இந்தியப் போர் வீரர்களைப் போன்ற மனநிலையில்தான் நாங்களும் பங்கெடுத்துப் பதக்கங்களை வென்றோம்.

இந்தியாவின் புனிதமற்ற அமைப்புமுறையும் அரசும் அதன் வேலையை செய்கிறது. அதற்கெதிரான போராட்டத்தை நாங்களும் எங்களுடைய வழியில் செய்கிறோம். இந்தியாவின் மகள்களாகிய எங்களுடைய பக்கமா அல்லது அந்த மகள்களைத் துன்புறுத்தும் இந்த அரசு/அமைப்புமுறையின் பக்கமா - இவர்கள் இருவரில் யார் பக்கம் நிற்கப்போகிறார்கள் என்பதை மக்களே முடிவு செய்யட்டும்.

இன்று மாலை 6 மணிக்கு நாங்கள் பெற்ற பதக்கங்களையெல்லாம் ஹரித்துவார் அருகே கங்கை ஆற்றில் வீசப்போகிறோம்.

நாங்கள் என்றைக்கும் இந்த நாட்டிற்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்."

இப்படிக்கு,
நீதி மறுக்கப்பட்ட இந்திய தேசிய மல்யுத்த வீராங்கனைகள்

பின் குறிப்பு - என்னுடையது.

பதக்கங்களை டிமோவின் முகத்தில் வீசலாமே என்று ஒரு கணம் எனக்கு தோன்றியது. அது சாக்கடையில் வீசுவதற்கு சமம் என்பதால் கங்கையை தேர்ந்தெடுத்துள்ளனர் போல. 

ஓசி ப்ளைட்டுக்கு இம்புட்டு விசுவாசமா

 


டெல்லிக்கு ஓசியில் ஏரோப்ளேனில் கூட்டிப் போனதற்கு மதுரை ஆதீனம் காண்பிக்கும் விசுவாசத்தை பாருங்கள்.


டிமோவுக்கு பிடித்த மாதிரியே நேருவை திட்டறாரு. அதுல "லடாக்கை படாக்குனு" பிடிச்சுட்டாங்கன்னு எதுகை மோனை வேற. அல்லாத்தையும் டிமோதான் மீட்டாரு.

அவரு என்ன செய்வாரு!

செஞ்சோற்றுக்கடனுக்கு எழுதிக் கொடுத்த ஸ்க்ரிப்டை பேசறாரு! இதில் ஆச்சர்யப்படவும் ஒன்றில்லை. அரசர்களை அண்டிப் பிழைப்பதுதான் சாமியார் மடங்களின் பாரம்பரியம். அதில் எப்போதாவது முரண்பாடு தோன்றினால்தான் ஜெயேந்திர, விஜயேந்திர கைதுப் படலங்கள் நிகழும். 

சீனா என்று சொன்னாலே டிமோவின் கால்கள் எல்லாம் டேன்ஸ் ஆடிடும்னும் டிமோ காலத்தில்தான் சீனா தான் ஆக்கிரமித்த இடத்துல வீடுகள் கட்டி ஊருக்கு பெயரெல்லாம் கூட வச்சிட்டாங்கன்னு பாவம் ஆதீனத்துக்கு தெரிய வாய்ப்பில்லை.

மிஸ்டர் ஆதீனம், நித்தி உங்க ஆதீனத்தைத்தான் படக்குன்னு பறிச்சிருந்தார். அது மட்டும் தொடர்ந்திருந்தா, நீர் பாய்ஸ் செந்தில் மாதிரி எந்த கோயில்ல எந்த வேளையில என்ன பிரசாதம் கிடைக்கும்னு அல்லாடிக்கிட்டு இருக்கனும். கிடைக்கிற சோத்தை தின்னுட்டு ஒழுங்கா வேலையைப் பாரும். உமக்கு எதுக்கு இந்த டிமோவுக்கு பல்லக்கு தூக்கற அரசியல்?

Monday, May 29, 2023

கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கொடூரம்

 


நேற்று தலைநகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்றம் புது இடத்திற்கு மாறுவதற்கு ஒரு கொண்டாட்டம் நடந்தது.

 

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் எப்படி பாபர் மசூதி இடிப்பதற்கான நாளாக குறிக்கப்பட்டதோ, என்ரான், யூனிட் ட்ரஸ்ட், பால்கோ போன்ற நுணுக்கமான ஊழல்களைச் செய்த வாஜ்பாயின் பிறந்த நாளை சிறந்த நிர்வாக நாளாக கொண்டாட வேண்டுமென்று கிறிஸ்துமஸ் நாள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதோ,   எப்படி  அண்ணல் காந்தியின் பிறந்த நாள் அவரது மத நல்லிணக்கம், நேர்மை, தீண்டாமை எதிர்ப்பு, கிராமப்புற முன்னேற்றம், இறையாண்மை போன்ற அம்சங்களை இருட்டடிப்பு செய்து துடைப்பம் தூக்கும் நாளாக அறிவிக்கப்பட்டதோ, அது போல இந்த திறப்பு விழாவுக்கான நாளும் காவிக்கயவர்களால் தேர்ந்தெடுக்கப்ப்பட்டது.                                                                                                                    

 

அந்தமான் சிறையிலிருந்து விடுதலையாக தொடர்ந்து மன்னிப்பு கடிதங்கள் எழுதி, இங்கிலாந்து அரசுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று உறுதிமொழி கொடுத்து அவர்களிடமிருந்து ஓவ்வொரு மாதமும் ஓய்வூதியமும் வாங்கிக் கொண்டு விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்ட ஒரு தேசத்துரோகியும் மகாத்மா காந்தியை கொலை செய்ய திட்டம் தீட்டிக் கொடுத்து துப்பாக்கியும் கொடுத்தனுப்பிய பயங்கரவாதியும்  இந்தியாவை இரண்டு நாடுகளாக மத அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்த மத வெறியனும் தனக்குத்தானே வீரன் என்று செல்ஃபியாக பட்டம் கொடுத்துக் கொண்டவனுமான சாவர்க்கர் பிறந்த நாளில் இந்த விழா நடைபெற்றதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

 

நாடாளுமன்ற திறப்பு விழாவும் வழக்கமான காமெடிக் கூத்துக்களோடு நடந்து முடிந்தது. டிமோவுக்கு போட்டி என்று சொல்லக் கூடிய விதத்தில் விதம்விதமான தலை அலங்காரங்களுடைய சாமியார்கள் காலில் விழுந்து ஆசி வாங்கினாலும் ஹோமம் வளர்த்தவர்களிடமிருந்து அந்த சாமியார்களை தள்ளி வைத்ததில் இளித்தது மனு தர்மம்.

 


இந்த கூத்து நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான் அயோக்கியன் ஒருவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளின் வீரம் செறிந்த போராட்டம் கொடூரமாக நசுக்கப் பட்டது.

 

ஒலிம்பிக்கிலும் மற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் அவர்கள் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்த போது அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு பீற்றிக் கொள்பவர் டிமோ. ஏதோ தானே அவர்களுக்கு நேரடியாக பயிற்சி கொடுத்தது போல பில்ட் அப் செய்து ட்வீட்டுவார் அவர் பெண் குழந்தைகளுக்கு தானே சிறந்த காவலர் என்றும் கூசாமல் அளப்பார். “பேட்டி பச்சாவ்” என்று விளம்பரப் பதாகைகள் அவர் முகம் தாங்கி எங்கெங்கும் காணப்படும்.

 


பாலியல் சீண்டல் செய்த மல்யுத்த ஃபெடரேஷனின் தலைவரும் பாஜக எம்.பி யுமான பிரிஜ் பூஷண் சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாதக் கணக்கில் மல்யுத்த் வீராங்கனைகளும் வீரர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். போஸ்கோ சட்டத்தின் படி அவன் மீது வழக்கு பதியப் படுகிறது. போஸ்கோ சட்டத்தின் படி வழக்கு பதியப்பட்டால் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், இழப்பீடு அளிக்கப்பட வேண்டும், கைது செய்யப்பட்டவனுக்கு பிணையும் கிடையாது.

 

ஆனால் இங்கே அந்த எம்.பி கைதும் செய்யப்படவில்லை. மல்யுத்த ஃபெடரேஷனின் தலைவராகவும் தொடர்கிறான். எம்.பி யாகவும் நீடிக்கிறான். பாஜக எம்.பி என்ற என்ன அயோக்கியதனமும் செய்யலாமா? இவனை ஏன் அமித் ஷா வும் டிமோவும் பாதுகாக்கிறார்கள்? இவர்களுக்கு இவன் ஏதாவது தரகு வேலை பார்த்தானா என்று சந்தேகம் வருகிறதே!

 

நாடாளுமன்றம் திறப்பு விழா கண்ட நேரம் தங்களுக்கு நீதி கேட்டு வந்தவர்கள் அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி ஏவல் துறை அவர்களை மடக்கியது. முன்னேற விடாமல் முடக்கியது. வன்முறையை பயன்படுத்தியது. விளையாட்டில் தங்களை இறுக்கி தடுப்பவர்களை தட்டி விட்டு முன்னேறுபவர்கள் நிஜத்தில் முரண்டு பிடிக்கவில்லை. கைதானார்கள். சீட்டுக்கட்டு கோபுரத்தை தகர்ப்பது போல போராட்டக் களம் அகற்றப்பட்டது.

 




தங்கப்பதக்கம் வென்று பெருமை தேடித்தந்தவர்களை கிரிமினல்களை விட மோசமாக நடத்தியது டிமோவின் செங்கோல்.

 

பாரதீய ஜல்சா கட்சி எனும் பெருமையை தக்க வைத்ததுதான் அரண்மனை திறப்பு விழாவின் சிறப்பம்சம்.

 

அத்தோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை.

 

கைதாகி இறுக்கமான முகத்தோடு ஏவல்துறை வேனில் சென்றவர்களின் முகத்தில் போட்டோஷாப் புன்னகை வரைந்து இழிவு படுத்தியது பாஜக. முட்டாள்தனத்தை மட்டுமே மூளையில் கொண்டுள்ள காவிக்கயவர்கள் அந்த போட்டோஷாப் படத்தை பரப்பி தங்கள் அறிவீனத்தை பறைசாற்றிக் கொண்டார்கள்.

 


அவசர நிலைக்காலத்தில் கைதான போது ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொன்னதையே சொல்ல வேண்டியுள்ளது.

 

“விநாச காலே விபரீத புத்தி”

 

அழிவுக்காலத்தில் அறிவு விபரீதமாகத்தான் செயல்படும்.

 

 

விழுந்தே விட்டானய்யா!

 


"விழுந்தே விட்டானய்யா!" என்ற இம்சை அரசன் திரைப்பட வசனம், சாமியார்களின் கால்களில் விழுந்தால் தமிழ்நாட்டு மக்களின் ஓட்டுக்களைப் பெறலாம் என்று எந்த கூமுட்டையோ (அது விஷ மூர்த்தியோ அல்லது ஆட்டுத்தாடியாகவோ இருக்கலாம்) கொடுத்த ஆலோசனையை நம்பி மோசடி வேலை செய்யும் இன்னொரு கூமுட்டைக்கும் கனகச்சிதமாக பொருந்துகிறது என்று கருதினால் நீயும் என் தோழனே!

Sunday, May 28, 2023

பிரபு, வடிவேல், டிமோ - செங்கோல்

 

எல்லோர் கையிலும் செங்கோல், எல்லாமே சும்மா ஷோவுக்குத்தான். வெட்டி உதார்.




Saturday, May 27, 2023

செங்கோல் உருட்டுகள்

 செங்கோலை வைத்து சங்கிகள் செய்யும் அரசியலில் உள்ள பொய்கள், பொய்களின் நோக்கம் குறித்து திரு ஆர்.ஷாஜஹான் அவர்கள் முகநூலில் எழுதியுள்ள விரிவான பதிவை பகிர்ந்து கொள்கிறேன். இந்த சர்ச்சையினால் ஆதீனம் பற்றிய ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. அது நாளை.



பாஜகவினர் - அது மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிற பிரதமர் ஆனாலும் சரி, உள்துறை அமைச்சர் ஆனாலும் சரி, பேஸ்புக்கில் இருக்கிற அரைவேக்காடுகள் ஆனாலும் சரி - பொய்களை கட்டுக்கட்டாக அவிழ்த்து விடுவார்கள் என்பது உலகுக்கே தெரிந்த விஷயம். எனவே, செங்கோல் விஷயத்தில் சொன்னதும் உருட்டுதான் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை. ஏன் என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் தெளிவாக்குகிறேன்.

செங்கோல் விஷயத்தில் அமித் ஷா உருட்டியது என்ன? மே மாதம் 28ஆம் தேதி நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் பிரதமர் மோடி, செங்கோலை நிறுவுவார். அந்த செங்கோல், நாட்டின் ஆட்சி அதிகார மாற்றத்தைக் குறிக்கும் புனித செங்கோல். அதிகாரத்தை மாற்றித் தரும் நிகழ்வுக்கு ஏதும் சடங்குகள் தேவையா என்று மவுன்ட்பேட்டன் நேருவிடம் கேட்டார். நேரு, ராஜாஜியிடம் கேட்டார். சோழர் காலத்தில் ஒரு மன்னனிடமிருந்து மற்றொரு மன்னனுக்கு ஆட்சி அதிகாரம் மாற்றப்படும்போது செங்கோலும் வழங்கப்படும் வழக்கத்தை நினைவுகூர்ந்த ராஜாஜி, திருவாவடுதுறை ஆதீனத் துறவிகளிடம் சொல்ல, அவர்கள் செங்கோலைத் தயாரித்து எடுத்துக் கொண்டு, மவுன்ட்பேட்டன் நேருவிடம் கொடுப்பதற்கேற்ற வகையில் விமானத்தில் தில்லிக்குச் சென்றனர். ஆகஸ்ட் 14 நள்ளிரவு சுதந்திரம் அடையும் நிகழ்வின்போது மவுன்ட்பேட்டன் அதை நேருவிடம் கொடுத்தார்.

- இதுதான் பாஜகவினர் அடுக்கிய உருட்டு.

இனி விஷயங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஆட்சி அதிகாரத்தைக் குறிக்க ஏதேனும் சடங்குகள் தேவையா என்று மவுன்ட்பேட்டன் கேட்டிருப்பாரா?

நேரு வாழ்நாள் எல்லாம் அறிவியலை முன்வைத்தவர். நாத்திகர் என பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லையே தவிர, ஆட்சியில் மத சடங்குகளை அனுமதிக்கும் சிந்தனை அவருக்கு இருந்திருக்கவே முடியாது. அவரைப் பற்றி மவுன்ட்பேட்டனுக்கு நன்றாகவே தெரியும். அவரிடம் சடங்குகள் ஏதும் தேவையா என்று மவுன்ட்பேட்டன் கேட்க வாய்ப்பே இல்லை. அதற்கான வரலாற்று ஆதாரமும் ஏதும் இல்லை. எனவே, மவுன்ட்பேட்டன்—>நேரு—>ராஜாஜி—>ஆதீனம் கதைக்கு வாய்ப்புகள் இல்லை.

சடங்குகள் ஏதும் தேவையா என்று மவுன்ட்பேட்டன் ராஜாஜியிடம் கேட்டிருப்பாரா?

இதிலும் வாய்ப்புகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், ராஜாஜி படேலைப் போன்றவர் அல்ல. மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர். அதனால்தான் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக அவரையே விரும்பினார் நேரு. ஆனால் படேலின் விருப்பம் காரணமாகவே ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவர் ஆனார். தவிர, மவுன்ட் பேட்டனுக்குப் பிறகு முதல் (கடைசி) கவர்னர் ஜெனரல் ஆக மவுன்ட்பேட்டன் தேர்வு செய்ததும் ராஜாஜியைத்தான். காரணம், படேல் நேருவின் வலது கரமாகவே இருந்தாலும் கவர்னர் ஜெனரலாக படேல் வருவதை நேரு விரும்பவும் இல்லை, படேலும் மறுத்து விட்டார். அப்படிப்பட்ட ராஜாஜியிடம் சடங்குகள் குறித்துக் கேட்டிருக்க வாய்ப்பும் இல்லை, கேட்டதற்கான ஆதாரங்களும் இல்லை. (ராஜாஜியை குடியரசுத் தலைவர் ஆக்க வேண்டும் என்ற நேருவின் விருப்பத்தை தந்திரமாக முறியடித்து ராஜேந்திர பிரசாத்தை குடியரசுத் தலைவர் ஆக்கினார் படேல். அதை எப்படிச் செய்தார் என்பது சுவாரசியான தனிக்கதை.)

ஆக, செங்கோல் விஷயமே முற்றிலும் பொய்யா?

இல்லை. செங்கோல் ஒன்று திருவாவடுதுறை ஆதீனத்தால் கொண்டு வரப்பட்டது உண்மைதான். இந்தியா விடுதலை பெற்றதையொட்டி பல்வேறு நாடுகளிலிருந்து தலைவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்கள். பல்வேறு பிரமுகர்கள் பரிசுகளும் வழங்கியிருப்பார்கள். அப்படியொரு பரிசுதான் இந்தச் செங்கோல்.

திருவாவடுதுறை ஆதீனம் எதற்காக இப்படியொரு தங்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளிச் செங்கோலை வழங்க முன்வந்தார்கள் என்பது தெரியாது. அது எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும்.

பாஜகவினரும் அரைவேக்காட்டு அடிமைகளும் பரப்பிக் கொண்டிருப்பதுபோல செங்கோல் விமானத்தில் கொண்டு செல்லப்படவும் இல்லை, மவுன்ட் பேட்டனிடம் தரப்படவும் இல்லை. சுதந்திர விழாவில் மவுன்ட்பேட்டன் நேருவிடம் அதைத் தரவும் இல்லை. இது எல்லாமே இட்டுக்கட்டி கதைகள். இதன் மூல கர்த்தா, 2000 ரூபாய் நோட்டில் சிப் வைத்திருப்பதாக நம்பிப் பரப்பிக் கொண்டிருந்த மகா அறிஞர் குருமூர்த்திதான் என்று கருதப்படுகிறது. சரி, அதுவும் இருக்கட்டும். உண்மையில் என்ன நடந்தது?

1947 ஆகஸ்ட் 11ஆம் தேதி திருவாவடுதுறை ஆதீனக் குழு ஒன்று செங்கோலுடன் சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டது என்பதை ஹிண்டு நாளிதழ் படத்துடன் வெளியிட்டுள்ளது.

தில்லி சென்ற திரு அம்பலவாணர் உள்ளிட்ட ஆதீனக் குழுவினர் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை நாதஸ்வரம் முழங்க, ஊர்வலமாகச் சென்றார்கள். ஒரு வெள்ளித் தட்டில் பீதாம்பரம் துணியையும் எடுத்துச் சென்றார்கள். நேருவின் இல்லத்தை அடைந்ததும் குழுவினர் வெளியே காத்திருந்தார்கள். அழைப்பு வந்த பிறகு வீட்டிற்குள் சென்றார்கள். ஒரு துறவி - ஆதீனம் அம்பலவாணர் - ஐந்து அடி நீளமும் இரண்டு அங்குல அகலமும் கொண்ட ஒரு தங்கச் செங்கோலை ஏந்தியிருந்தார். அவர் தஞ்சையிலிருந்து கொண்டு வந்த புனித நீரை நேருவின் மீது தெளித்தார். நேருவின் நெற்றியில் திருநீறை இட்டார். பீதாம்பரத்தை நேருவின் மீது போர்த்தினார். செங்கோலை நேருவிடம் கொடுத்தார்.

இதுதான் நடந்தது. டைம் இதழில் இது விரிவான செய்தியாக பதிவாகியுள்ளது.

இன்னும் கொஞ்சம் வரலாற்றுரீதியாகப் பார்ப்போம்.

நேரு அறிவியல் சிந்தனை கொண்டவர். திருநீறு வைப்பது போன்ற மதரீதியான சடங்கினை எப்படி ஏற்றுக் கொண்டார்?

சுதந்திரம் கிடைக்கவிருந்த நேரத்தில் நேரு மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தார். அவர் ஒருவரைத் தவிர அவரைச் சுற்றிலும் இருந்த எல்லாருமே மதப் பிடிப்புக் கொண்டிருந்தவர்கள்தான். ஒரு கட்டத்தில் நேரு சமரசங்கள் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். “சடங்குகளை அவர்கள் செய்தது அவருக்கு சலிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் வெளிக்காட்டாமல் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். தாம் எதிர்கொண்டுள்ள அச்சம் தரும் பணிகளுக்கு சாதகமாக வரும் எந்த உதவியையும் - அவரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட மூடப்பழக்கங்களிலிருந்து வந்தாலும் - முற்றாக நிராகரித்துவிடக்கூடாது என்று அந்த முற்போக்காளர் உணர்ந்து விட்டார் போலும்!”

- என்று மேற்குறிப்பிட்ட செங்கோல் நிகழ்வை டொமினிக் லேப்பியர்-லேரி காலின்ஸ் இருவரும் நள்ளிரவில் சுதந்திரம் நூலில் மிகத் தெளிவாகவே பதிவிட்டுள்ளனர். (பக்கம் 344-345). இந்த நூலாசிரியர்களுக்கு எந்த அரசியல் சாய்வும் இல்லை, தேவையும் இல்லை என்பது வரலாற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும்.

ஆக,14ஆம் நள்ளிரவில் அதிகாரம் கைமாறும் சுதந்திர தின விழாவின்போது செங்கோல் வழங்கப்பட்டது என்பதெல்லாம் மகா உருட்டு. 14ஆம் தேதி மாலையில் நேருவிடம் தனிப்பட்ட முறையில் பரிசாகத் தரப்பட்டது. செம்மையான ஆட்சியைத் தர வேண்டும் என்று வாழ்த்தித் தரப்பட்டதாக இருக்கலாம், ஆனால் ஆட்சி அதிகார மாற்றத்தின் அடையாளமாகத் தரப்பட்டது என்பது அப்பட்டமான உருட்டு.

அப்படியானால், செங்கோலுடன் நேருவும் அருகே ஆதீனமும் நிற்கும் படத்தின் கீழே ஆகஸ்ட் 15ஆம் தேதி என எழுதப்பட்டிருக்கிறதே?

ஆமாம் - இந்தியா சுதந்திரம் பெற்றது ஆகஸ்ட் 15 என எழுதப்பட்டுள்ளதே தவிர, பழைய படத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதிதான் தரப்பட்டது என எழுதப்படவில்லை. பிற்பாடு ஆள் ஆளுக்கு அதை பகிரும்போது - தவறான புரிதல்களும்கூட காரணமாக இருக்கலாம் - ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி தரப்பட்டதாக எழுதி விட்டார்கள். மக்களும் அதையே நம்பி விட்டதற்கான சாத்தியங்கள் அதிகம். பத்திரிகை ஆதாரங்களும் 14ஆம் தேதி என்றே தெளிவாகக் காட்டுகின்றன.








ஆதீனம் நேருவிடம் செங்கோல் கொடுத்தபோது என மூன்று வகையான படங்கள் உலவுகின்றன. ஒன்று கூட்டத்துடன் இருப்பது. அந்தக் கூட்டத்தைப் பார்த்தாலே, அது நாடாளுமன்ற வளாகத்துக்குள் எடுக்கப்பட்டதல்ல என்பது தெளிவாகத் தெரியும். மற்றொன்றில் நேரு பிரதானமாகத் தெரிவார், ஆதீனம் பின்னணியில் மங்கலாகத் தெரிவார். இது ஹிண்டு நாளிதழில் வெளிவந்த படம். மூன்றாவது, நேரு பீதாம்பரம் அணிந்து செங்கோலைப் பிடித்துக்கொண்டு நிற்க, பக்கத்தில் ஆதீனம் நிற்கும் படம். அந்தப் படத்தைப் பார்த்தால் உண்மையில் அது படமா, ஓவியமா என்று சந்தேகம் வரும். மூன்றையும் பதிவில் தந்திருக்கிறேன்.

அதெல்லாம் கிடையாது. ஆகஸ்ட் 14 நள்ளிரவு நிகழ்வில்தான் தரப்பட்டது. வரலாற்றைப் பதிவு செய்தவர்கள் மறைத்து விட்டார்கள் என்று சொல்கிறார்களே?

1947 ஆகஸ்ட் 14-15 என்பது ஏதோ மிகப் பழைய காலம் அல்ல. இன்றைய சங்கிகளின் முன்னோடிகளும் நேருவின் அமைச்சரவையிலேயே இருந்த காலம்தான் அது. பத்து பேர் மறைத்து விட்டாலும் வெளிப்படுத்தக்கூடிய ஒருவர்கூடவா இல்லாமல் போய்விடுவார்? அது மட்டுமல்ல. அதே காலத்தில் அரசியல் நிர்ணய சபைக்கூட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. (அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதற்கான குழுவின் பெயர்தான் அரசியல் நிர்ணய சபை. ராஜேந்திர பிரசாத் தலைவராக இருந்தார்.) அந்த சபையின் நடவடிக்கைக் குறிப்புகள் முழுக்கவும் பதிவாகியுள்ளன. அதிலும் விவாதங்கள் எல்லாம் அட்சரம் பிசகாமல் பதிவாகியுள்ளன. ஒருவர் பேசும்போது வேறொருவர் குறுக்கே பேசினால், குறுக்கிட்டுப் பேசியவர் பெயரும் அவர் பேசிய விவரமும்கூட பதிவாகியுள்ளது. இருமியது தும்மியதை எப்படி விட்டு விட்டார்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு எல்லாமே பதிவாகியுள்ளது. அதன் பெயர் Constituent Assembly Debates. அப்படிப்பட்ட தெள்ளத்தெளிவான நடவடிக்கைக் குறிப்பில், ஆகஸ்ட் 14ஆம் தேதி என்ன நடந்தது என்பதும் முழுமையாகப் பதிவாகியுள்ளது.

- இரவு 11 மணிக்கு ராஜேந்திர பிரசாத் தலைமையில் கூட்டம் துவங்குகிறது.
- சுசேதா கிருபளானி வந்தே மாதரம் பாடலின் முதல் வரிகளைப் பாடுகிறார்.
- தலைவர் உரையாற்றுகிறார்.
- விடுதலைப் போரில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்படுகிறது.
- நேரு கொண்டு வந்த தீர்மானத்தை முன்வைப்பார் என்று தலைவர் அறிவிக்கிறார்.
- tryst with destiny என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை ஆற்றுகிறார் நேரு.

- At this solemn moment when the people of India, through suffering and sacrifice, have secured freedom, I…………………………… I a member of the Constituent Assembly of India, do dedicate myself in all humility to the service of India and her people to the end that this ancient -land attain her rightful place in the world and make her full and willing contribution to the promotion of world peace and the welfare of mankind; என்கிற தீர்மானத்தை முன்மொழிகிறார் நேரு.

- சவுத்ரி காலிக்உஸ்ஸமான் அதை வரவேற்றுப் பேசுகிறார்.
- டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.
- எச்.வி. காமத் தான் முன்வைத்த திருத்தங்கள் தேவையில்லை என்று சொல்கிறார்.
- தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுகிறது.
- ஒருமனதாக ஏற்கப்படுகிறது.

- 12 மணி அடித்ததும் “At this solemn moment when the people of India, through suffering and sacrifice, have secured freedom, I………. a member of the Constituent Assembly of India, do dedicate myself in all humility to the service of India and her people to the end that this ancient land attain her rightful and honoured place in the world and make her full and willing contribution to the promotion of world peace and the welfare mankind.” என உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

- அரசியல் நிர்ணய சபை அதிகாரத்தை எடுத்துக் கொண்டது என்றும், மவுன்ட்பேட்டன் கவர்னர் ஜெனரலாகத் தொடர வேண்டும் என்றும் மவுன்ட் பேட்டனுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறார் தலைவர்.

- சரோஜினி நாயுடுவின் சார்பாக திருமதி ஹன்ஸா மேத்தா தேசியக் கொடியை வழங்குகிறார். சிறு உரையாற்றுகிறார்.

- தேசியப் பாடல்கள் பாடப்படுகின்றன - ஸாரே ஜஹான் சே அச்சாவின் முதல் சில அடிகள், ஜன கண மன பாடலின் முதல் சில அடிகள் (அப்போது தேசிய கீதம் கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.)

- அவை மறுநாளுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. (மறுநாள் காலை 10 மணிக்குத்தான் அவை மீண்டும் கூடுகிறது. )

ஆக, இதில் எந்த இடத்திலும் ஆதீனமோ செங்கோலோ இடம்பெறவே இல்லை. சரிபார்க்க விரும்புவோர் constitutionofindia . net தளத்தில் பார்க்கலாம்.
ஆக, ஆட்சி அதிகார மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதெல்லாம் மகா உருட்டு.

ஏன், எதற்காக இந்த உருட்டு?

இதுதான் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி.

எல்லா மாநிலங்களிலும் மோடிக்கு ஆதரவு இருக்கும்போது தமிழ் நாடு மட்டும் மோடியை முற்றிலும் புறக்கணிப்பது ஏன், தமிழ் சமூக ஊடகங்களில் மோடி கேலி செய்யப்படுவது ஏன் என்று ஆராய்வதற்கெனவே ஒரு குழு உருவாக்கப்பட்டது, ஊடகங்களின் செய்திகள் அலசப்பட்டன என்பது உள்வட்டாரச் செய்திகள். தமிழையோ தமிழர்களையோ திட்டிக் கொண்டிருந்தால் இன்னும் அசிங்கப்படத்தான் சாத்தியம் என்று அந்தக் குழு சொல்லியிருக்க வேண்டும்.

2024 தேர்தலில் தமிழ் நாட்டில் ஐந்து இடங்களையாவது பிடித்துவிட வேண்டும் என்பது பாஜக தலைமையின் திட்டம். காசி தமிழ் சங்கமம் என்ற நாடகம் நடந்ததும், அடுத்து சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நடந்ததும் இதனை முன்னிட்டுத்தான். தேர்தலுக்குள் இன்னும் சில சங்கமங்கள் நடக்கலாம்.

மோடி எங்கே பேசினாலும் தமிழ் பழமையான மொழி என்று தவறாமல் பேசுவதும் இதனை ஒட்டித்தான். பப்புவா நியூ கினியில் திருக்குறள் மொழியாக்க நூலை வெளியிடுவதும் அதற்குத்தான். இளையராஜாவை விட்டு மோடியைப் புகழ வைப்பதும் அதற்குத்தான். இளையராஜாவுக்கு மாநிலங்களவையில் பதவி கொடுத்ததும் அதற்குத்தான். சோழர்களைப் போற்றிப் பேசுவதும், ராஜராஜ சோழனை தூக்கிப் பிடிப்பதும் அதற்குத்தான். அதன் இன்னொரு வடிவம்தான் இந்த செங்கோலும். இன்னும் வரக்கூடிய நாட்களில் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவார். தமிழ்ப் புகழ் பாடுவார். தமிழ் மக்கள் என் சகோதரர்கள் என்பார். ஆனாலும் எல்லாவற்றிலும் தமிழுடன் மதத்தையும் இணைத்தே அரசியல் செய்வார். தமிழ்ப் பண்பாடு என்பதே இந்துப் பண்பாடு மட்டுமே என்று முன்வைக்க முனைவார்கள். அதற்கான ஒத்திகைகள்தான் இவை என்பதே என் உறுதியான கருத்து.

செங்கோலில் எந்த புண்ணாக்கு பெருமையுமில்லை


 தமிழ்நாட்டின் கலாச்சார பெருமையாக செங்கோல் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்படும் என்று சங்கிகள் பில்ட் அப் செய்து கொண்டு இருக்கிறார்கள். 

ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் மவுண்ட் பேட்டனால் நேருவிடம் கொடுக்கப்பட்டது என்ற கட்டுக்கதை ஆட்டுத்தாடி ரவி தொடங்கி அமித் ஷா வரை பரப்பப்பட்டுள்ளது. அந்த கதை ஒரு பொய் என்பதை ஆதாரங்களோடு வெளியான ஒரு கட்டுரையை மாலையில் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த செங்கோல் என்பது ஆட்சி மாற்றத்தின் அடையாளம் என்பதே ஒரு மிகப் பெரிய பொய்.

மன்னராட்சியின் தொடர்ச்சியின் அடையாளம்தான் மகுடம், செங்கோல் போன்றவைகள்.

முடியாட்சியின் அடையாளத்தை குடியாட்சியின் அடையாளம் என்று சொல்வதே வழக்கமான டிமோ பாணி பித்தலாட்டம்தான். 

தான் இந்தியாவின் மன்னன் என்று காண்பிக்கும்  டிமோ அற்பத்தனமான ஆசை மட்டுமே.

அதனால் இதில் எந்த புண்ணாக்கு பெருமையுமில்லை. 

பிகு: மேலே உள்ள படம் புரியாதவர்கள், யூட்யூபில் ரஜினிகாந்த் நடித்த தில்லுமுல்லு படத்தின் இண்டர்வியூ காட்சியை பார்க்கவும். 

Friday, May 26, 2023

டிமோ கைய வச்சா????

 


'டிமோ கைய வச்சா அது நாசமா போகுமடா" 

என்று வந்தே பாரத் விபத்துக்களின் போது பாட்டாகவே பாடினார்கள். அது உண்மைதான் போலிருக்கிறது.

டிமோவின் பிறந்த நாள் கொண்டாட்டமாக ஓவர் பில்ட் அப், ஓவர் சீனோடு நபியாவிலிருந்து சிறுத்தைகளைக் கொண்டு வந்து மத்தியப் பிரதேசக் காட்டில் விட்டார்கள்.

புறாக்களை பறக்க விட்ட நாட்டில் இப்போது சிறுத்தைகளை திறந்து விட்டிருக்கிறோம்  என்று பஞ்ச் டயலாக்கு கண்றாவி வேறு.

இப்போது வந்துள்ள செய்தி

மூன்று சிறுத்தைகள் இறந்து விட்டன. இரண்டு கவலைக்கிடம். மற்றவை பலவீனத்தின் உச்ச கட்டத்தில்.

காரணம்...

இந்தியக் காடுகள் அதற்கு ஒத்து வரவில்லை. அவற்றுக்கான உணவு கிடைக்கவில்லை. வெயிலும் தாங்க முடியவில்லை. 

ஆக இதனைப் பற்றிய சிந்தனை எதுவும் இல்லாமல் டிமோ வுக்கு ஒரு வெற்று பில்ட் அப் கொடுக்க நமீபிய சிறுத்தைகளை சித்திரவதை செய்துள்ளார்கள்.

ஆமாம் மேனகா காந்தி, பீடா ராதா ராஜன் ஆகியோரெல்லாம்  இந்த கொடுமைக்கு எதிராக  பேசுவார்களா? 

Thursday, May 25, 2023

நாடாளுமன்றக் காவலர்கள்

 


கடந்த ஒன்பது வருடங்களாக நாடாளுமன்றத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது.

பிரதமராக உள்ளவர் நாடாளுமன்றத்தை எச்.ராசாவின் ஹைகோர்ட்டாகவே மதிக்கிறார் என்பதை முந்தைய பதிவு சொல்லும்.

எந்த ஒரு மசோதாவும் விவாதிக்கப்படுவதில்லை.
எந்த ஒரு பிரச்சினையும் எழுப்ப அனுமதிக்கப்படுவதில்லை.
அரசுக்கு எதிரான பேச்சுக்கள் எல்லாம் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்.
எந்த ஒரு மசோதாவும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு செல்லாது.

மொத்தத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது டிமோவின் ஆட்சிக் காலத்தில் உயிரிழந்து விட்டது.

காந்தி கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த பயங்கரவாதி கோழை சாவர்க்கரின் பிறந்த நாளன்று திறக்கப்படும் கட்டிடம் என்பது நாடாளுமன்றக் கட்டிடம் அல்ல.

உயிரற்ற ஓர் எலும்புக்கூடு.

அதன் திறப்பு விழாவை புறக்கணிப்பவர்களே நிஜமான நாடாளுமன்றக் காவலர்கள்.  

Wednesday, May 24, 2023

புதன் 5 நிமிடம், வியாழன் 5 நிமிடம்

 



"பாலாற்றை பாதுகாப்போம், மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்"  என்ற முழக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் பத்து முதல் பதினான்கு  வரை இரு சக்கர வாகனப் பிரச்சாரம் நடத்தியது.  

அந்தப் பிரச்சாரத்தின் நிறைவாக ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் டி.கே.ரங்கராஜன் அக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் தகவல் சொன்னார்.

பிரதமராக உள்ள நரேந்திர மோடி 

ஒவ்வொரு புதன் கிழமையும் சரியாக மாலை ஐந்து மணிக்கு மக்களவைக்கு வருவார். ஐந்தே ஐந்து நிமிடம் மட்டும் இருக்கையில் அமர்ந்து விட்டு போய் விடுவார்.

அது போல ஒவ்வொரு வியாழக் கிழமையன்றும் மாலை ஐந்து மணிக்கு மாநிலங்களவைக்கு வருவார். அங்கும் வெறும் ஐந்து நிமிடம் அமர்ந்து விட்டு புறப்பட்டு விடுவார்.

மக்களவை மாநிலங்களவை என்ற பேதம் அவருக்குக் கிடையாது. ஒரு வாரத்துக்கு நாடாளுமன்றத்திற்காக அவர் ஒதுக்குவது வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே.

இதுதான் அவர் நாடாளுமன்றத்திற்கு அளிக்கும் ம்ரியாதை. இந்த லட்சணத்தில் அவை நடந்தால் என்ன, முடங்கினால் என்ன?

மேலே உள்ளது 18.05.2015 அன்று எழுதிய பதிவு. நிலைமையில் எட்டு வருடங்களாகியும் மாறவில்லை.

அதனால் மிஸ்டர் டிமோ, 

உமக்கு பிடிக்காத ஒரு இடம், 

நீர் போகாத ஒரு இடம், 

அதற்கு எதற்கய்யா புதுக் கட்டிடம்?