Thursday, August 13, 2020

BSNL ஐ அழிக்கும் துரோகிகள் யார்?

 



அனந்த குமார் ஹெக்டே என்றொரு பாஜக வெறியன் பி.எஸ்.என்/எல் ஊழியர்கள் மீது விஷம் கக்கியுள்ளான்.

அரசாங்கம் எவ்வளவோ நிதி ஒதுக்கியும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வேலை செய்யாமல் அதை பாழடிக்கிறார்கள், துரோகிகள், அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு தனியார்மயமாக்குவோம் என்றெல்லாம் பிதற்றியுள்ளான இந்த முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.பி.

பி.எஸ்.என்.எல்லை முடக்கிப் போட்டு அம்பானியின் ஜியோவுக்கு சேவகம் செய்வது இந்த துரோகிகள்தான்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கென்று நிதி ஒதுக்குவதாக பீற்றிக் கொண்டு ஒரு பைசா கூட கொடுக்காமல் ஏமாற்றி வருவது மோடி அரசுதான்.

விருப்ப ஓய்வில் போன 88,000 ஊழியர்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய தொகையை கொடுக்காமல் ஏய்த்து வருவதும் மோடி அரசுதான்.

4 ஜி சேவைக்கான டெண்டரை நிறுத்தி வைத்து பழி வாங்குவதும் இந்த துரோகிகள்தான்.

ஒப்பந்த ஊழியர்களை தற்கொலை செய்ய வைப்பதும் இந்த துரோக அரசுதான். 

ஜியோவுக்கு எடுபிடியாக செயல்பட பி.எஸ்.என்.எல் ஐ அழிக்கும் ஆட்சியை நடத்திக் கொண்டே ஊழியர்களை துரோகிகள் என்று தூற்றுகிறான் இந்த மானங்கெட்டவன்.

குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல தனியார்மயத்துக்கு முன்னோட்டமாக இவனை பேச வைத்துள்ளது மோடி அரசு.

இப்படிப் பட்ட பொய்ப்பிரச்சாரத்தை பி.எஸ்.என்.எல் ஊழியர் அமைப்புக்களின் கூட்டுக் குழு மிகச் சரியாக கண்டித்துள்ளது.

இந்த வெறியனை மட்டுமல்ல, இவனை தூண்டி விட்ட துரோகிகளையும் ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டும்.

No comments:

Post a Comment