Showing posts with label தமிழிசை. Show all posts
Showing posts with label தமிழிசை. Show all posts

Saturday, February 7, 2026

மார்க்ஸை நாங்கள் மறக்கவில்லை, இந்தி இசையையும்

 


சென்னையில் பேராசான் காரல் மார்க்ஸின் சிலை கம்பீரமாக எழுந்துள்ளது.


காரல் மார்க்ஸின் சிலை சங்கிகளுக்கு பதற்றத்தையும் எரிச்சலையும் அளித்திருக்கிறது.கண்ட இடம் எல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலே இந்தி இசை அம்மையாரின் ஒப்பாரி ரொம்பவே அதிகமாக இருக்கிறது. 


அந்த அறிவு கெட்ட அம்மையாருக்கெல்லாம் விளக்கமாக பதில் சொல்வது வீண்.

தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேறு சில அமைப்புக்களும் கார்ல் மார்க்ஸை மறக்காத காரணத்தால்தான் அவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். 

ஆனால் இந்தியிசை அம்மையார்தான் கலைஞர் ஆட்சியில் தமிழறிஞர்களுக்கான இட ஒதுக்கீட்டில்  எம்.பி.பி.எஸ் படித்தார் என்பதை மறந்து விட்டார்.

அடுத்தவர் தயவில் வாழும் அளவிற்கு தன் வாழ்க்கைக்கு காரணமான தந்தையையே மறந்து விட்டார்.

குமரி அனந்தனின் கௌரவத்தை மீட்டெடுக்க திமுக அரசுதான் அவருக்கு வீடு கொடுத்தது என்பதையும் மறந்து விட்டார். 

பாவம்!

அப்புறம் முருகனை கும்பிட முடியவில்லையா? அறுபடை வீடுகளை மூடி விட்டார்களா என்ன? கோயில்களில் எப்போதும் பக்தர்கள் எப்போதும் போல வழிபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

முருகனை வைத்து கலவரம் செய்த நினைத்த சங்கிகள்தான் அசிங்கமாக நிற்கிறார்கள், முருகன் அணிந்த அந்த ஒற்றை ஆடை கூட இல்லாமல் . . .

Wednesday, March 5, 2025

தமிழிசையின் வாழ்த்து சில்லறைத்தனமானது . . .

 


தமிழக முதல்வ மு,க.ஸ்டாலினுக்கு டமில்மூயூசிக் மும்மொழியில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் அவரது பிறந்த நாள் வாழ்த்து அமைந்துள்ளது.


எனக்கு தெலுங்கு தெரியாது. தெலுங்கானா ஆளுனராக இருந்ததால் தமிழிசை குறைந்த காலத்தில் தெலுங்கு கற்றுக் கொண்டுள்ளார் என்று பெருந்தன்மையாக ஸ்டாலின் பதில் சொல்லியுள்ளார்.

தமிழிசையின் மும்மொழி வாழ்த்து பாஜகவின் மும்மொழி அரசியலை வெளிப்படுத்துகிறது என்று மேம்போக்காக கருதக் கூடாது.

ஸ்டாலினின் பூர்வீகம் ஆந்திரா என்று சங்கிகள் பல ஆண்டுகளாக கட்டமைத்துக் கொண்டிருக்கிற ஒரு கதையைத்தான் டமில்மூயூசிக் தெலுங்கு வாழ்த்தின் மூலம் சொல்லியுள்ளார். இது சில்லறைத்தனமான செயல். . . .


Tuesday, March 19, 2024

ஆழ்ந்த அனுதாபங்கள் தமிழிசை

 


தோற்றுப் போன ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் ஜாக்பாட் பரிசு கவர்னர் பதவி. உங்களுக்கும் சந்திரசேகர் ராவிற்கும் பிரச்சினை என்பதால்”தாமரை மலர்ந்தே தீரும்” என்று தொண்டை வறண்டு போகும் அளவு கத்தியதால் பாண்டிச்சேரி கவர்னராக எக்ஸ்ட்ரா போஸ்டிங் வேறு கொடுத்தார்கள்.

ஆனால்  நீங்கள் அதையெல்லாம் ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்க தயாராகி விட்டீர்கள்?

எங்கே நிற்கப் போகிறீர்கள் தமிழிசை மேடம்?

ஸ்டெரிலைட் வேதாந்தா முதலாளி அனில் அகர்வாலிடம் வாங்கிய எலும்புத்துண்டுக்காக  பனிரெண்டு பேரை சுட்டுக் கொன்றீர்களே அந்த தூத்துக்குடியிலா? போன முறை கனிமொழி அவர்களிடம் தோற்றுப் போன அதே தொகுதியிலா? ஊரே மூழ்கிப் போனாலும் மோடி எட்டிக்கூடப் பார்க்காத அந்த தூத்துக்குடியிலா?

நீலகிரித் தொகுதியின் கன்பர்ம்ட் வேட்பாளர் என்று சொல்லப்பட்டு வந்த எல்.முருகன், ஆட்டுக்காரனின் அளப்பை நம்பாமல், துண்டைக் காணோ, துணியைக் காணோம் என்று தலை தெறிக்க ஓடி மத்தியப் பிரதேசத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினரானதை பார்த்துமா ரிஸ்க் எடுத்துள்ளீர்கள்?

பாண்டிச்சேரி தொகுதியில் நிற்பீர்களோ?

பாண்டியைப் பொறுத்தவரை நீங்கள் வெளியாள். உங்கள் கட்சி ஆட்களே உங்களுக்கு சீட் கிடைக்க விட மாட்டார்கள். அப்படியே மேலிடச் செல்வாக்கு மூலம் கிடைத்தாலும் உங்கள் கட்சி ஆட்களும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்களுமே உங்களை தோற்கடித்து விடுவார்கள்.

இந்த முறை தோற்றுப் போனால் இன்னொரு முறை கவர்னர் பதவி தர மோடியே ஜெயிக்கப்போவதில்லை.

ஆக உள்ளதையும் எதிர்காலத்தையும் இழந்து நொந்து போகப்போவதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

ரோட் ஷோ - என்ன ஆட்டுக்காரா இதெல்லாம்?

 


மோடி நேற்று நடத்திய சாலைக் காட்சி அதாங்க ரோட் ஷோ பற்றி சங்கிகள் ஆஹா, ஓஹோ என்று பீற்றிக் கொண்டிருந்தார்கள்.

அது வழக்கம் போல வெற்று பீற்றல் என்பதை இரண்டு தோழர்களின் முகநூல் பதிவுகள் அம்பலப்படுத்தியது.

வங்கி ஊழியர் சங்கத்தலைவரும் எழுத்தாளருமான தோழர் ஜா.மாதவராஜ்

கோயம்புத்தூர் ‘Road Show'வை கொஞ்ச நேரம் பார்த்தேன். வாங்கிக் கொடுத்த பூக்களை வாரியிறைத்துக் கொண்டும், மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டும், தேமே என்றும் இரண்டு கரையோரங்களிலும் ஒற்றை வரிசையில் மெலிதாய் கூட்டம் நிற்க, அவர்களுக்குப் பின்னால் ஒரு கூட்டம் எதோ மாரத்தான் போல கூடவே ஓடிக்கொண்டே வந்தார்கள். இரு கரையோரமும் அடர்த்தியாய் கூட்டம் இருப்பது போல காட்டுவதற்காக ஆரம்பத்திலிருந்து கடைசி வரை இரண்டரை கி.மீ தூரமும் விதியே என்று ஓடிக்கொண்டிருந்தார்கள். வெறும் show.
இதைத்தான் ஆங்கில ஊடகங்கள் Mega show என்றும், stunning crowd என்றும் ஊதிக்கொண்டிருந்தன.

வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள்

மோடி வருகைக்கு நான் நினைத்த அளவுக்கு கூட்டத்தை காணோம். பெரும்பாலும் ஆர் எஸ் புரம் வட இந்தியர்கள், திருப்பூரில் இருந்து அழைத்து வரப் பட்ட மக்கள். ஜெயலலிதா கோவை விவசாய கல்லூரிக்கு வரும் போது கூடும் மாபெரும் கூட்டங்களை பார்த்த கண்களுக்கு இது ஒன்றுமே இல்லை.

இவ்வளவு நாள் அதிமுக தான் பிஜேபியை பெரிய கட்சி போல காட்டிக் கொண்டு இருந்திருக்கிறது.

ஒரு பிரதமர் எவ்வளவு விஷயங்கள் பேச வேண்டி இருக்கும். Voc மைதானத்தில் கூட்டம் நடத்தி இருந்தால் நானெல்லாம் கூட போய் பார்த்து இருப்பேன். ரோடு ஷோ என்று அவர் பேசவே இல்லை. பெரும்பாலும் வீடுகள் இல்லாத வணிக பகுதிகள் வழியே காரில் செல்வது என்ன உத்தி என்று தெரியவில்லை.

கோவையில் ஆளாளுக்கு பிஜேபி என்று சுற்றுவது போலத் தெரிந்தாலும் உண்மை நிலை வேறு போலிருக்கிறது.

இத்தனை தடவை கோயம்பத்தூர் வந்த மோடிக்கு வெடிகுண்டுல இறந்தவங்களுக்கு அஞ்சலி செலுத்தனும்னு இப்போதான் ஞானோதயம் வந்ததா என்று கேட்டு வேற மானத்தை வாங்கறாங்க.

இதெல்லாம் பரவாயில்லை ஆட்டுக்காரா! மோடிக்கு என்ன வண்டி ஏற்பாடு செஞ்சிருந்த? அதில என்ன மாதிரி அலங்காரம் செஞ்சிருந்த?


தமிழ்நாட்டில் இந்த மாதிரி அலங்காரத்தை வண்டிகளில் எந்த சந்தர்ப்பங்களில் செய்வாங்கன்னு உனக்கும் தெரியலை. உன் அல்லக்கைகளுக்கும் தெரியலை. அந்த எழவை எதுக்கு என் வாயால சொல்லனும்!

நீ முட்டாள்னு நிரூபிச்சிக்கிட்டே இருக்க! இதுல உன்னை நம்பி தமிழிசை அக்கா வேற கவர்னர் பதவிகளை ராஜினாமா செஞ்சுட்டாங்க!

Tuesday, February 27, 2024

கவர்னர் - ஸ்பீக்கர் சண்டை, இங்கல்ல, எங்கே?

 


இரண்டு மூன்று நாட்கள் முன்பாக நாளிதழில் படித்த செய்தி.



புதிய சட்டப்பேரவை கட்டுவதற்கான கோப்பினை மத்தியரசுக்கு அனுப்பாமல் துணை நிலை ஆளுனரே கிடப்பில் போட்டு வைத்துள்ளார். புதுச்சேரி அரசின் செயல்பாடுகளை அவர் முடக்கி வைத்துள்ளார் என்று புதுவையின் சபாநாயகர் செல்வம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குற்றம் சுமத்துகிறார். இவர் பாஜக கட்சிக்காரர்.

சட்டப்பேரவைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக இவர் கொடுத்த மதிப்பீடு மிக மிக அதிகம். முப்பது சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டப் பேரவைக்கு புது டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கான தொகையை விட அதிகம் செலவாகும் என்று சொல்கிறார்கள். இந்த ஊழலுக்கு எப்படி ஒப்புதல் தர முடியும் என்று திருப்பிக் கேட்கிறார் தமிழிசை அம்மையார்.

ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லுங்கள் என்று பாஜக மேலிடம் இருவரிடமும் சொல்லியுள்ளது என்றும் அந்த செய்தி சொல்கிறது.

சரி, தமிழிசைக்கு பாஜக மேலிடம் அறிவுரை வழங்க வேண்டும்? அவர் இப்போது அரசியல் சாசனப்பதவியான ஆளுனர் பதவியில் உள்ளாரா அல்லது பாஜக உறுப்பினராக தொடர்கிறாரா?

இரண்டில் ஏதாவது ஒன்றில்தானே இருக்க முடியும்!