Thursday, August 27, 2020

வாத்து ராஜா - அரசியல் பதிவு அல்ல

 வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் ஏ.ஏ.கரீம் ஒரு குழந்தைகளுக்கான நூலை முக நூலில் அறிமுகம் செய்திருந்தார். அதை சுட்டு உங்களுக்காக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 தோழர் கரீம் சொன்னது போல இது வெறும் நூல் அறிமுகம் மட்டுமே. உயிருடன் இருப்பவர் யாரையும் குறிப்பதாக நீங்கள் எடுத்துக் கொண்டால் அதற்கு  அப்படி  உங்களை நினைப்பவர்தான் பொறுப்பு. நானோ, தோழர் கரீமோ அல்லது நூலாசிரியர் விஷ்ணுபுரம் சரவணனோ, ஏன் நீங்களே கூட பொறுப்பல்ல,

 வாத்து ராஜா – நூல் அறிமுகம்



ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்... அந்த ராஜா செய்யறது எல்லாமே முட்டாள் தானமாகத் தான் இருக்கும்...

 ஒருமுறை அந்த பருவத்தில் நல்ல மழை வந்ததால் அதிகமான நெல் விளைச்சல் வந்தது.. அதை கொண்டாட மக்கள் அரசனிடம் அனுமதி கேட்ட போது "அதிகம் விளைந்தால்  திரும்ப வயலிலேயே கொட்ட வேண்டியது தானே... தேவை படும் போது எடுத்து கொள்ளலாம்" என்றார். இதை கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 இன்னொரு முறை ஒரு குடிமகன் தனது மகளுக்கு தாலி செய்ய நகை செய்பவரிடம் பணம் கொடுத்தார்... அவன் செய்து கொடுக்கவில்லை அரசனிடம் பிராது போனது விசாரிக்கிறார். அந்த பணத்தை  வாங்கிய பொற்கொல்லன் அதனை செலவு செய்து விட்டதாக கூறுகிறான்." செலவு செய்துவிட்டால் எப்படி நகை வாங்கி தாலி செய்ய முடியும். அதனால் இன்னொரு முறை பணம் கொடுத்து நகை செய்து கொள் என்று தீர்ப்பு கொடுக்கிறார்..

 மன்னரின் பல முட்டாள்தனமான செயல்பாடுகளை பார்த்த மக்கள் அவனுக்கு ஒரு பெயர் வைக்க முடிவு செய்தார்கள். அதன்படி பறவை இனத்திலையே முட்டாள் பறவை வாத்து அதனால் 

 " வாத்து ராஜா" என்று அவரை அழைத்தார்கள்.

 அருமை Vishnupuram Saravanan உங்கள் ஞான திருஷ்டியை கொண்டாடுகிறேன்... இது எந்த ராஜா என்று கேட்க மாட்டேன். நான் ஒன்றும் ராஜாவை போல முட்டாள் இல்லை

 இது அரசியல் பதிவு அல்ல

.. புத்தக அறிமுகம் மட்டுமே.

No comments:

Post a Comment