Showing posts with label விவாதம். Show all posts
Showing posts with label விவாதம். Show all posts

Saturday, December 13, 2025

மோடியும் நேருவின் கொள்ளு பேத்தியும்

 


உருப்படியாக எதையும் செய்ய இயலாத மோடி, நாடாளுமன்றத்தில் நடத்திய ஒரு வெட்டி விவாதம்தான் "வந்தே மாதரம்" 150 வது ஆண்டு.

அதையும் ஜவஹர்லால் நேருவை வசை பாடத்தான் பயன்படுத்திக் கொண்டார்.

அதற்கு பதிலளித்து நேருவின் கொள்ளுப் பேத்தி பிரியங்கா கொடுத்த பதிலடி சிறப்பாகவே இருந்தது. 

அந்த காணொளி கீழே


ஆமாம். நேரு பற்றி ஒரு விவாதம் வைத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு மோடியும் அவர் அல்லக்கைகளும் பதில் சொல்லவே இல்லையே! 

ஏற்கனவே பட்ட அசிங்கம் போதும் என்ற அறிவு கூட மோடிக்கு கிடையாதா என்ன!

Wednesday, July 22, 2020

இதையும் இழிவென்று சொல்வீரோ?


ஓவியர் தோழர் ஸ்ரீரசா அவர்களின் முக நூல் பக்கத்தில் படித்தது இந்த கேள்வி பதில். 

கேள்வி: சைவர்கள் வைணவக் கோயிலுக்கு உதவுவதுபோல சைவ ஸ்தல பணிகளுக்கு வைணவர்கள் ஏன் உதவுவது இல்லை? நீங்கள் சிவன் கோயில் திருப் பணிகளுக்கு உதவி செய்வீர்களா?

ஜீயர் பதில்: நான் சிவன் கோயிலுக்கு உதவி செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா ஸ்ரீமத் நாராயணன்தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன்தன் நாபியிலிருந்து படைத்தான். அந்தப் பிரம்மா சங்கரனைப் படைத்தான் என்று கதையிருக்கு. அதுபடி பார்த்தால் சங்கரனுக்கும் (சிவ பெருமானுக்கு) நாராயணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளை ஆகணும். அவங்களும் தெய்வம்தான் தபஸ் பண்ணி அந்த பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும் அதேபோல, சிவன் எத்தனையோ யாகம் பண்ணி கடைசியில் தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றாருன்னும் சாஸ்திரம் இருக்கு. இவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தவஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். 

ஆனால், நாராயணன் எப்போதும் உள்ளவர் பாக்கிப் பேருக்குப் பலன் கொடுக்கிறவர், அவரை வழிபடற நாங்களும் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். நாராயணனைத் தெய்வமாக கொண்டு வழிபட்டு, மோட்சத்துக்குப் போக வழி செய்து கொண்டவர்கள், நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். அதனாலே சிவன் கோயில் திருப்பணிக்குப் பணம் இருந்தாலும் தர மாட்டேன்”


(‘கல்கி’ - 11.4.1982)


இவ்வளவையும் சொல்லியிருப்பவர் வைணவக் குருவான ஜீயர் - பேட்டி கண்டு வெளியிட்டதோ ‘கல்கி’ இதழ்!

இது ஏதோ முப்பத்தி எட்டு வருடத்திற்கு முந்தைய கருத்து என்று கருத வேண்டாம். 

எங்கள் நிறுவனத்தில் பணி புரிகிற ஒருவர் இதே கருத்தை இன்னும் அழுத்தமாக "நாராயணனை துதித்த வாயால் வேறு யாரையும் கடவுள் என்று சொல்ல மாட்டேன்" என்று சொல்லியிருந்தார். அதற்கு சான்றாக ஏதோ பாசுரம் எல்லாம் வேறு போட்டிருந்தார். "உங்களுக்கு நாராயணனைத் தவிர வேறு யாரும் கடவுள் கிடையாது. எங்களுக்கு நாராயணனும் கடவுள் கிடையாது. அவ்வளவுதான் வித்தியாசம். அப்படி இருக்கையில் ஏன் நாத்திகர்களை  எப்போதும் திட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்" என்று கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை.

நான் பக்தர்களை மட்டுமே (சங்கிகளை அல்ல) ஒரே ஒரு கேள்விதான் கேட்க விரும்புகிறேன்.

சிவன் கோயிலுக்கு போனா புத்தி கெட்டுப் போகும் என்று ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் சொன்னது சரி என்று ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது அவர் சிவனையும் மற்ற கடவுள்களையும் இழிவு படுத்தி விட்டார் என்று குற்றம் சொல்வீர்களா?

பிகு: ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தைக் கட்டியவர்தான் அந்த ஜீயர். அவரது படத்தை இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை.

சின்ன ஜீயர் என்று ஒருவரது படம் கிடைத்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ரௌடி மாணவர் அணியான ஏ.பி.வி.பி மூலமாக பக்தியை வளர்க்கும் பணியில் ஈடுபடுகிறார் என்று தகவல் வந்தது. 

ரைட்டு, இது ரிஸ்கு என்று  தசாவதாரம் திரைப்படக் காட்சியை முகப்பில் வைத்து விட்டேன்.


Thursday, April 30, 2015

திருமணம் புனிதமானதாக இருக்கலாம், பாலியல் வன் கொடுமையுமா?



கணவனே ஆனாலும் மனைhttp://being-her.com/wp-content/uploads/2015/01/marital-rape-poster.jpgவியின் விருப்பமின்றி கட்டாயம் செய்தால் அதுவும் பாலியல் வன் கொடுமைதான் என்று உலகின் பல நாடுகளின் சட்டம் சொல்கிறது. இந்தியாவும் அது போல சட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பரிந்துரை செய்துள்ளது. அரசு என்ன செய்யப் போகிறது என்று திமுக எம்.பி திருமதி கனிமொழி கேட்ட கடிதத்திற்கு பாஜக அரசு அனுப்பியுள்ள பதில் வினோதமானது.

இந்தியாவில் அது சாத்தியமில்லை என்பதற்கு மோடி அரசாங்கத்தின் அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சௌத்ரி “இந்தியாவில் திருமணங்கள் புனிதமாக கருதப்படுகிறது. குறைந்த கல்வியறிவு, அறியாமை, மத நம்பிக்கைகள், ஏராளமான சமூக பழக்கவழக்கங்கள், வறுமை, சமூகத்தின் மனப்பாங்கு ஆகிய காரணங்களால் திருமணத்திற்கு மக்கள் புனிதத்தன்மை அளித்து விட்டனர். ஆகவே திருமண பாலியல் வன் கொடுமைகளுக்கு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள விலக்கை திரும்பப் பெற முடியாது” என்று தெளிவாக சொல்லி விட்டார்.

மனைவி கணவனின் அடிமை என்ற காவிக்கூட்ட கொள்கையை அவர் வெளிப்படையாக சொல்வதற்குப் பதிலாக பூசி மெழுகுகிறார். இதற்கு ஒரு புனிதப் பூச்சு வேறு. பொதுவாக “நம்பிக்கை” என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்து விளையாடுவார்கள். இப்போது “குறைந்த கல்வியறிவு, அறியாமை, வறுமை” போன்ற வார்த்தைகளை இணைத்துள்ளதன் மூலம் ஏதோ சமூகத்தின் அடித்தட்டு மக்கள் மட்டுமே பெண்களின் உணர்வுகளை மதிக்காமல் திருமண பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது போன்ற தோற்றத்தை உருவாக்கி மேல் தட்டு மக்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் முயற்சியும் தெரிகிறது.

விருப்பமில்லாத மனைவியை துன்புறுத்தும் கணவர்களுக்கு புனிதம் என்ற போர்வையில் பாதுகாப்புக் கவசம் தருவது நியாயம்தானா?  பெண்களின் உணர்வுகளுக்கு மரியாதையே கிடையாதா? பாலியல் வன் கொடுமை யார் செய்தாலும் தவறுதான். அது கணவன் மனைவியை என்றாலும் கூட.